Monetize Your Website or Blog

Wednesday, 11 May 2016

காளான் வளர்ப்பு தொழில் தொடங்க முழு விவரம்

குறைந்த இடவசதியே போதும்.  ஒரு படுகையில் இருந்து ஒன்றரை கிலோ.  மாதம்ரூ.10 ஆயிரம் வருமானம். 

''
விவசாயம்தான் எங்க பரம்பரைத் தொழில்ஆனாலும்அதுல தொடர் நஷ்டம்ஏற்படவேவிவசாயத்தை உதறிட்டு வேற வேலைக்குப் போயிட்டேன்அதுக்குப் பிறகு,ஒரு யோசனையோட நண்பர் மோகன்தாஸோட சேர்ந்து மறுபடியும் விவசாயத்துலகால் வெச்சேன்... இன்னிக்கு நல்ல வருமானம் பாக்குறேன்இதுக்கெல்லாம் காரணம்...பசுமை விகடன் கொடுத்த நம்பிக்கையும்வழிகாட்டுதலும்தைரியமும்தான்'' என்றுநெகிழ்ந்து போய்ச் சொல்கிறார் திண்டுக்கல் மாவட்டம்சாணார்பட்டி அருகேயுள்ளகன்னியாபுரத்தைச் சேர்ந்த ராமசாமி. 

நண்பர் மோகன்தாஸோடுதோட்டத்திலிருக்கும் காளான் பண்ணையை நமக்குச் சுற்றிக்காட்டியபடியே பேச்சைத் தொடர்ந்த ராமசாமி, ''விவசாயத்தைக் கை விட்டதும்துபாய்லடிரைவர் வேலைக்குப் போயிட்டேன்இருந்தாலும் அவ்வளவு லேசுல விவசாயஅனுபவத்தையும்அதன் மூலமா கிடைச்ச மனநிம்மதியையும் மறக்க முடியல.துபாய்ல இருந்து ஊருக்குத் திரும்பின சமயத்துல, 'பசுமை விகடன்படிக்கறதுக்குவாய்ப்பு கிடைச்சுதுஅதைப் படிக்கபடிக்க எனக்குள்ள ஏகப்பட்ட நம்பிக்கை ஏற்பட்டுச்சி.திரும்பவும் துபாய் போற முயற்சியைக் கைவிட்டுட்டுவிவசாயத்துலயே மறுபடியும்இறங்கிட்டேன். 
இணைந்த கைகள்! 
என்னோட ரெண்டரை ஏக்கர் நிலத்துலஅரை ஏக்கர்ல மட்டும் ஜீவாமிர்தம் கொடுத்துகத்திரிக்காய் போட்டேன்காரல் இல்லாதபசுமை மாறாத காயா விளைஞ்சு வந்ததால,மார்க்கெட்டுல என் தோட்டத்துக் காய்களுக்கு நல்ல மவுசுகொண்டு போனதுமேமொத்தமும் வித்துத் தீர்ந்து போற அளவுக்கு எனக்கு பேரு கிடைச்சுதுஅதைத்தொடர்ந்துவிவசாயத்துல தீவிரமா கவனத்தைத் திருப்பினேன். 
ஸ்பின்னிங் மில்லுல வேலை பார்த்துட்டிருந்த நண்பர் மோகன்தாஸ்அடிக்கடி என்தோட்டத்துக்கு வருவார்அவருக்கும் என்னைப் போலவே விவசாயத்துல ஆர்வம்அதிகம்அவரும் 'பசுமை விகடன்இதழை தொடர்ந்து படிச்சுட்டே இருப்பார்அதுலஇருக்கற விஷயங்களையெல்லாம் ரெண்டு பேரும் விவாதிப்போம்அதையெல்லாம்வெச்சுமேற்கொண்டு ஏதாவது செய்யலாமானு பேசிட்டே இருப்போம்ஒரு தடவைகாளான் வளர்ப்புப் பற்றி கட்டுரை வந்துதுஅதிக முதலீடு இல்லாமகுறைஞ்சஇடத்துலயே நல்ல வருமானம் பாக்கலாம்னு படிச்சதும்... எங்களுக்கு ஆச்சர்யமாபோச்சுஅந்த நிமிஷமே காளான் பண்ணை வைக்கலாம்னு முடிவெடுத்தோம். 
காளான் பண்ணை வெச்சிருக்கற விவசாயிகளோட பண்ணைகளுக்குப் போயி பாத்துட்டுவந்தோம்எங்களுக்கு நம்பிக்கை வந்ததும்... 'இதுதான் நமக்கான தொழில்’னு முடிவுசெஞ்சு சிப்பிக்காளான் வளர்ப்புல இறங்கிட்டோம்முதல்ல என்னோட தோட்டத்துலசின்னதா ஒரு குடிசை போட்டு உற்பத்தி செஞ்சிப் பாத்தோம்அக்கம்பக்கத்துலஇருக்குறவங்களே தேடி வந்து வாங்கிட்டு போகவே... நம்ம முயற்சி வெற்றிதான்னுரெண்டு பேருக்கும் ஒரே சந்தோஷம்' என்று ராமசாமி குஷியோடு சொல்லிநிறுத்தினார். 
கிடைத்த இடைவெளியில் பேச ஆரம்பித்த மோகன்தாஸ், ''இதன் மூலமாநம்மளாலகாளானை நல்லபடியா வளர்த்து லாபம் பார்க்க முடியும்னு எங்களுக்கு நம்பிக்கைவந்துச்சுஉடனே வேலையை விட்டுட்டுநானும் ராமசாமியோட கைகோத்தேன்எங்கவீடு இருக்கறது திண்டுக்கல்உழவர் சந்தைக்கு பின்னாலதான்வீட்டுக்கு முன்னகொஞ்சம் காலி இடம் உண்டுஅதுல ஒரு குடிசையைப் போட்டு காளான் வளர்க்கஆரம்பிச்சோம்அக்கம்பக்கம் இருக்குறவங்களுக்கு அதைக் கொடுத்து பழக்கினோம்.இப்ப மூணு குடிசை போட்டு வளர்க்கிறோம்அப்படியிருந்தும்கூட சப்ளை செய்யமுடியலஅந்தளவுக்கு கிராக்கி இருக்கு'' என்று தானும் சந்தோஷம் பொங்கினார். 
அடுத்துநண்பர்கள் இருவரும் காளான் வளர்ப்பு முறை பற்றி பாடமே நடத்தஅதற்குசெவிமடுத்தோம்... 
குளுகுளுனு இருக்கணும் குடிசை! 

'
சிப்பிக்காளான் வளர்க்க 10 அடி அகலம், 20 அடி நீளம், 6 அடி உயரத்தில் தென்னைஓலை கொண்டு குடிசை அமைக்கவேண்டும்தரைப்பகுதியில் சிமென்ட் மூலம் தளம்அமைத்துஅதற்கு மேல் ஒரு அடி உயரத்துக்கு ஆற்று மணலைப் பரப்ப வேண்டும்.இதன்மூலம் அறையின் ஈரப்பதம் ஒரே அளவில் இருப்பதோடுதண்ணீரும் குறைவாகச்செலவாகும்குடிசைக்குள் 20 முதல் 28 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும்காற்றின்ஈரப்பதம் 85 சதவிகித அளவுக்குக்குக் குறையாமலும் இருப்பது போல் பராமரிக்கவேண்டும்இதற்காக அடிக்கடி தண்ணீர் தெளித்துக் கொண்டே இருக்க வேண்டும்நூல்சாக்குகளை கட்டித் தொங்கவிட்டுஅதை அடிக்கடி ஈரமாக்கிக் கொண்டிருப்பதும் நல்லபலன் தரும்காற்றோட்டத்தை நன்கு பராமரிப்பதும் முக்கியம்அது இல்லாவிட்டால்,அறைக்குள் கரியமில வாயுவின் அடர்த்தி அதிகமாகி காளானின் வளர்ச்சிபாதிக்கப்படும். 

200 
கிராம் விதை...3 கிலோ வைக்கோல்! 
அறை தயாரானதும்காளான் படுகைகளை தயார் செய்ய வேண்டும்அதற்கு முன்பாக,காளான் உற்பத்தியாளர்களிடம் இருந்து விதைப்புட்டிகளை (தாய்விதை)வாங்கவேண்டும்காய்ந்த வைக்கோலைத் துண்டுகளாக்கி வேகவைத்து உலரவைக்கவேண்டும்இதை பிளாஸ்டிக் பைகளில் (காளான் வளர்ப்புக்கென்றே பிளாஸ்டிக் பைகள்கடைகளில் கிடைக்கின்றனஒரு சுற்று வைக்கோல்அதற்கு மேல் காளான் விதை,மறுபடியும் வைக்கோல்மறுபடியும் விதை என மாற்றி மாற்றி போட்டு உருளைவடிவப்படுகைகளாகத் தயாரிக்க வேண்டும்ஒரு படுகை தயாரிக்க, 

200 
கிராம் விதைப்புட்டிமூன்று கிலோ வைக்கோல் ஆகியவை தேவைப்படும்மேலேசொன்ன அளவுள்ள அறையில் 450 படுகைகள் வரை தொங்க விடலாம்அதாவது ஒருகுடிசையில்அனைத்துப் படுகைகளையும் மொத்தமாகத் தயாரிக்கக் கூடாதுதினமும்பத்துபத்து படுகைகளாகத்தான் தயாரிக்க வேண்டும்அப்போதுதான் சுழற்சி முறையில்தினமும் காளான் மகசூல் கிடைக்கும். 

25 
நாளில் அறுவடை! 
படுகை தயாரித்து முடித்ததும் விதைகளுக்கு நேராக பென்சில் அளவில் ஓட்டை போடவேண்டும்ஒரு படுகையில் அதிகபட்சம் 12 ஓட்டைக்கு மேல் போடக்கூடாது.படுகைகளை உறி மாதிரி கட்டித் தொங்கவிட வேண்டும்ஒரு கயிற்றில் நான்கு படுகைதொங்கவிடலாம்பூஞ்சண இழைகள் படுகையில் பரவ பதினைந்து நாட்களாகும்அதுபரவியதும்படுகை முழுக்க வெள்ளை நிறமாக மாறிவிடும்மேல்பக்கம் நனையும்படிதினமும் தண்ணீர் தெளித்து வந்தால், 18 முதல் 20-ம் நாளில் மொட்டு வரும்.அதிலிருந்து நான்காவது நாளில் காளான் நன்றாக மலர்ந்து முழுவளர்ச்சிஅடைந்துவிடும்இதைப் பறித்து சுத்தம் செய்து விற்பனை செய்யலாம். 

முதல் அறுவடைக்கு 22 முதல் 25 நாட்களாகும்ஒரு அறுவடை முடிந்த பிறகு,தொடர்ந்து தண்ணீர் தெளித்து வந்தால்அடுத்த பத்து நாளில் இரண்டாவது அறுவடைசெய்யலாம்இதுபோல ஒரு படுகையிலிருந்து மூன்று முதல் நான்கு தடவைஅறுவடை செய்யலாம்ஒரு படுகையின் ஆயுள் அதிகபட்சம் 60 நாட்கள்தான்இந்த 60நாட்களில் ஒரு படுகையிலிருந்து ஒன்றரை கிலோ காளான் வரை கிடைக்கும்ஒருபடுகை தயார் செய்ய 50 ரூபாய் செலவாகும். 150 ரூபாய்க்கு காளான் கிடைக்கும்.கிட்டத்தட்ட 100 ரூபாய் லாபம் கிடைக்கும்பெரிய அளவில் இடவசதிஇல்லாதவர்கள்கூட இதைச் செய்யலாம்கணக்குப் போட்டுப் பார்த்தால்ஒருகுடிசையில் இருக்கும் 450 படுகைகள் மூலம் ஒரு மாதத்துக்கு குறைந்தபட்சம் 10ஆயிரம் ரூபாய் லாபம் பார்க்க முடியும். 
நிறைவாக பேசிய ராமசாமி மற்றும் மோகன்தாஸ், 'இன்னிக்கு இறைச்சியோட விலைஅதிகமாயிருக்குறதாலகாளான் பக்கம் மக்களோட கவனம் அதிகமா திரும்பியிருக்கு.முன்னைவிட நல்ல வரவேற்பு இருக்குநகரம்கிராமம்னு கணக்கில்லாம எங்கயும்காளான் பண்ணை ஆரம்பிக்கலாம்அடுத்ததா காளான் சூப் தயாரிச்சு விக்கலாம்னுஇருக்கோம்அதோடஜீவாமிர்தம் கொடுத்து காய்கறிகளையும் தயார் செஞ்சிகிட்டுஇருக்கோம். 40 சென்ட்ல கோ-4 தீவனப் புல் சாகுபடி செஞ்சிருக்கோம்அடுத்ததா பால்மாடுகளை வாங்கி பால் உற்பத்தி செஞ்சிநேரடியா மக்கள்கிட்ட விற்பனைபண்ணலாம்னும் முடிவு செஞ்சுருக்கோம்'' என்றவர்கள், 
தொடர்புக்கு : ராமசாமி: 96882-16058, 
மோகன்தாஸ்: 97889-44907 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சென்னை நகர்ப்புறத் தோட்டக்கலை வளர்ச்சி மையத்தில் “காளான் வளர்ப்பு” பற்றிய ஒரு நாள் பயிற்சி டிசம்பர் மாதம் 15ம்நாள் (புதன் கிழமை) 15.12.2010 அன்று நடைபெறவுள்ளது.இப்பயிற்சியானது வீட்டிலிருப்போர்,மாணவர்கள், தொழில் முனைவோர், வியாபாரிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும். பயிற்சி நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை. பயிற்சி பற்றிய குறிப்பேடு,கையேடு, மதிய உணவு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சியில் கலந்துக் கொள்ள விருப்பமுள்ளவர்கள், பயிற்சி பற்றிய தகவல்கள் மற்றும் பயிற்சி கட்டணத்தை கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளவும்.

For contact:
The Professor and Head,
Urban Horticulture Development Centre,
Tamil Nadu 0Agricultural 0University,

New No. P-44, (Old No. P-37), 6th Avenue, (Behind K- 4 police station),
Anna Nagar, 0Chennai-40.
Phone: 044 -2626 3484 / 044 – 42170506.


Training Programme on “Mushroom Cultivation”

No comments:

Post a Comment