Monetize Your Website or Blog

Showing posts with label சென்னை. Show all posts
Showing posts with label சென்னை. Show all posts

Friday, 26 August 2016

ப்ளீஸ் ஹெல்ப்!' நில நடுக்க மணிப்பூரிலிருந்து இசையமைப்பாளர் ஜிப்ரான்


சென்னை 2 சிங்கப்பூர் என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார் ஜிப்ரான். படத்தின் தலைப்பிற்கு ஏற்றவாறு படத்தில் இருக்கும் ஆறு பாடல்களையும் காரில் பயணித்தவாறே வெளியிட திட்டமிட்டு இருந்தார்கள்.அதன்படி சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில் இருக்கும் வங்காளதேசம், மியான்மர்,தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் காரில் பயணித்தவாறு பாடல்களை வெளியிட இருக்கிறார்கள்.



ஆகஸ்டு மாதம் ஆரம்பித்த பயணத்தில், தற்போது மணிப்பூர் தலைநகர் இம்பாலில் ஜிப்ரான் குழு இருக்கிறது. கடந்த 23-ம் தேதி மணிப்பூரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நில அதிர்வுகள் தொடர்ந்து அங்கு இருப்பதால், மணிப்பூரில் சிக்கிக் கொண்டுள்ளார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.

அது பற்றி ஜிப்ரான் தனது ஃபேஸ்புக் தளத்தில் வீதியில் நடந்தபடி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியதாவது "மணிப்பூரில் நாங்கள் சிக்கிக்கொண்டோம்.மியான்மர் செல்வதற்கு நாங்கள் மோரே பார்டரை கடக்க வேண்டியுள்ளது.சில முறை அங்கு செல்ல முயன்ற போது, எங்களது பெர்மிட்டை ரத்து செய்துவிட்டதாக அறிவித்து இருக்கிறார்கள்.அங்கே நிகழ்ந்த நிலநடுக்கத்தில் , நிலச்சரிவுகள் ஏற்பட்டு இருக்கிறது.ஒவ்வொரு நாட்டிற்கும் காரில் செல்ல, கார்னெட் என்னும் பெர்மிட் அவசியம்.எங்களிடம் அந்த பெர்மிட் இருந்தாலும், மியான்மர் அரசு அதற்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டார்கள். சென்னைக்கு திரும்பி விடுங்கள் என பலர் அழைப்பு விடுக்கிறார்கள். ஆனால், அடுத்த பாடலான 'போகாதே'வை எப்படியும் வெளியிடும் திட்டத்தில் இருக்கிறோம். எவ்வளவு முயன்றாலும் செப்டம்பர் 2-ம் தேதி தான் மியான்மருக்குள் நுழைய அனுமதி கிடைக்கும் என்கிறார்கள். ஆனால், எங்களது விசா செப்டம்பர் 5-ம் தேதியுடன் முடிவடைகிறது. இன்னும் 3 நாட்களில் 1800 கிலோமீட்டர்களை நாங்கள் கடக்க வேண்டும். பல இடங்களில் உதவிகள் கேட்டு வருகிறோம். நாகாலாந்து பழங்குடியினருக்கும் , மியான்மர் ராணுவத்தினருக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது.அதனால் , மோரே பார்டர் வழியாக மீண்டும் பயணிக்க முயற்சிக்காதீர்கள் என சொல்கிறார்கள்.ஒவ்வொரு நாட்டிற்குள்ளும், எங்கள் கார் நுழையும் போதும் பாடல் வெளியாகும் என உறுதியளித்துவிட்டோம். அதனால், இதை தொடரப் போகிறோம்.இங்குள்ள சூழ்நிலை மோசமானதாக இருக்கிறது.ஆனால், உதவிகள் கிடைக்கும் என நம்புகிறோம்" என்றார்




சசிகலா புஷ்பாவுக்கு உச்ச நீதிமன்றம் 'செக்'..! மதுரை உயர்நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

பாலியல் புகாரில் நேரில் ஆஜராக வேண்டும் என்ற உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவை எதிர்த்து சசிகலா புஷ்பா தாக்கல் செய்த மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், வரும் 29ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவின் வீட்டில் வேலை செய்த சகோதரிகள் பானுமதி, ஜான்சிராணி என்ற இருவரும் சசிகலா புஷ்பா குடும்பத்தினர் தங்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வரன், மகன் பிரதீப்ராஜா, சசிகலா புஷ்பாவின் தாயார் கௌரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த வழக்கில், முன்ஜாமீன் கோரி சசிகலா புஷ்பா அவரது கணவர் மற்றும் மகன் ஆகிய மூவரும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி வி.எம்.வேலுமணி முன்பு கடந்த 23ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெ.அன்னத்தாயின் ஆட்சேப மனுவை அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் பி.புகழேந்தி தாக்கல் செய்தார்.
அதில், மனுதாரரின் வழக்கறிஞர் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. முன்ஜாமீன் கோரிய மூவரும் வழக்கறிஞர் முன்னிலையில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி நேரில் ஆஜராகி கையெழுத்திட்டதாகத் தெரிவித்து உள்ளனர். ஆனால், ஆகஸ்ட் 17 ஆம் தேதி மூவரும் சிங்கப்பூரில் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. தற்போதும் அவர்கள் வெளிநாட்டில் தான் உள்ளனர். முன்ஜாமீன் பெறுவதற்கான சில வழிமுறைகளை சென்னை உயர் நீதிமன்றம் வகுத்துள்ளது. அதன்படி, முன்ஜாமீன் மனுவில் சம்பந்தப்பட்டவர்கள் கையெழுத்திட்டிருக்க வேண்டும், அவ்வாறு கையெழுத்திட வர முடியாத பட்சத்தில் அதற்கென தனி மனு தாக்கல் செய்யப்படுவது அவசியம், இல்லையெனில் அதற்கான அதிகாரப்பூர்வ கடிதத்தையாவது தாக்கல் செய்திருக்க வேண்டும்.  இந்த விதிமுறைகள் பின்பற்றப்படாத காரணத்தால் இது போலியான மனு என்ற எண்ணம் எழுகிறது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.


இதையடுத்து மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், சசிகலா புஷ்பாவின் அறிவுறுத்தலின்படியே மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பான விவரங்களைப் பெற்றுத் தெரிவிக்க கூடுதல் அவகாசம் வேண்டும். இல்லையெனில் மனுவை திரும்ப பெற்றுக்கொள்கிறோம் என்றார். இதை ஏற்க மறுத்த நீதிபதி வேலுமணி, வெளிநாட்டில் இருந்ததாகக் கூறப்படும் தேதியில் முன்ஜாமீன் மனுவில் கையெழுத்திட்டது எப்படி என்று ஆகஸ்ட் 29 ஆம் தேதி நேரில் ஆஜராகி மனுதாரர்கள் விளக்கம் அளிக்க வேண்டும். தவறினால் தகுதி அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உத்தரவிட்டார்.
இந்த நிலையில், ஆகஸ்ட் 29ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவை எதிர்த்து சசிகலா புஷ்பா உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், சசிகலா புஷ்பா மனுவை நிராகரித்ததோடு, வரும் 29ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.


தற்போது, சிங்கப்பூரில் இருக்கும் சசிகலா புஷ்பா, தமிழகம் வந்தால் என்னை கொன்றுவிடுவார்கள் என்று ஏற்கனவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ரஜினி, கமலுக்கிடையே விஜயகாந்த் வல்லரசானது எப்படி?

விஜயகாந்திற்கு இன்று 65-வது பிறந்தநாள். சினிமா, அரசியல் என தனி மனிதனாக அவரது அசுர வளர்ச்சி எல்லோருக்கும் ஆச்சர்யமூட்டும் ஒன்று. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நாராயணனாகப் பிறந்த இவரை வீட்டில் எல்லாரும் விஜயராஜ் என்றே அழைத்துவந்தனர். சிறுவயதிலேயே சினிமா மீது கொண்ட மோகத்தால், படிப்பில் ஆர்வம் காட்டவில்லை. பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு தனது அப்பாவின் அரிசி ஆலை நிர்வாகத்தைக் கவனித்து வந்தார். 'இனிக்கும் இளமை' என்ற திரைப்படத்தின் மூலம் 1978-ம் ஆண்டு திரையுலகில் அறிமுகமான இவருக்கு, அப்படத்தின் இயக்குநர் எம்.ஏ.காஜா வைத்த பெயர்தான் விஜயகாந்த்.


1980-ல் வெளியான 'தூரத்து இடி முழக்கம்' திரைப்படத்தின் மூலம் தமிழக ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார் விஜயகாந்த். ஆனால் ஓர் அதிரடி நாயகனாக விஜயகாந்த் அறியப்பட்டது 1981-ல் வெளிவந்த 'சட்டம் ஒரு இருட்டறை' படத்தில் இருந்துதான். இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் முதல் படமான இது மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படம் இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வெற்றி கண்டது. இதன் இந்திப் பதிப்பில் ரஜினிகாந்தும், தெலுங்குப் பதிப்பில் சிரஞ்சீவியும் நடித்தனர். விஜயகாந்த்-எஸ்.ஏ.சந்திரசேகர் கூட்டணி இணைந்து அதே ஆண்டில் 'சாதிக்கொரு நீதி', 'நெஞ்சிலே துணிவிருந்தால்', 'நீதி பிழைத்தது' என மூன்று திரைப்படங்களை வெளியிட்டது. ரஜினிகாந்திற்கு ஒரு எஸ்.பி.முத்துராமன் என்பதுபோல், விஜயகாந்திற்கு ஒரு எஸ்.ஏ.சந்திரசேகர் என்று சொல்லலாம். இவரது இயக்கத்தில் மட்டும் விஜயகாந்த் 17 படங்களில் நடித்திருக்கிறார். இதே போல் 'சிவப்பு மல்லி' தந்த வெற்றியால் ராம நாராயணன் இயக்கத்திலும் இவர் 17 படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் கதாநாயகனாக நடித்து 1984-ல் மொத்தம் 18 படங்களும், 1985-ல் 17 படங்களும் வெளியாகின. இன்றுவரை இது அசைக்க முடியாத சாதனையாக உள்ளது. தொடர்ந்து புரட்சிகரமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துவந்ததால் 1985-ம் ஆண்டு முதல் அவருடைய ரசிகர்களால் 'புரட்சிக்கலைஞர்' என அழைக்கப்பட்டார்.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டவர் பின்நாட்களில் தமிழைத் தவிர வேறு எந்த மொழித் திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. இத்தனைக்கும் இவரது படங்கள் சில தெலுங்கில் டப்பாகி ஆந்திர தேசத்தில் கணிசமான வெற்றியைப் பெற்றிருந்தன. அங்கிருந்து வாய்ப்புகள் வந்தபோதும் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
ரஜினி-கமல் போட்டிக்கு நடுவே தனக்கென ஓர் இடத்தை உருவாக்கி வெற்றி கண்டவர் விஜயகாந்த். 'பி' மற்றும் 'சி' சென்டர்களில் விஜயகாந்த் படம் என்றாலே அது ஆக்ஷன் படமாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை ஒரு காலத்தில் இருந்தது. இவரது சண்டைக் காட்சிகளுக்கு ரசிகர்கள் பெருகியதாலோ என்னவோ... அதன்பின்பு பல திரைப்படங்களிலும் சண்டைக்காட்சிகளில்தான் விஜயகாந்தின் அறிமுகமே இருக்கும். சுவரில் கால்களை ஊன்றி எம்பிக்குதித்து எதிரிகளை தனது கால்களால் பந்தாடுவது இவரது ட்ரேட் மார்க்காகவே இருந்தது. கிராமங்களின் ஊர்த் திருவிழாக்களில் ரஜினி-கமல் படங்களைத் திரையிட பெரிய சண்டையே நடக்கும். அந்த நேரத்தில் விஜயகாந்த் திரைப்படம் எதாவது ஒன்றைத் திரையிட்டு கிராமத்தின் மொத்தக் கூட்டத்தையும் சண்டையின்றி உட்கார வைப்பது ஒரு ட்ரிக்காகவே பயன்பட்டு வந்தது. கிராமப்புறங்களில் 'ஜ' உச்சரிப்பு சரியாக வராததால் இன்றளவும் பலருக்கு அவர் விசயகாந்த் தான்.
புதுமுக இயக்குநர்கள் பலருக்கு வாய்ப்பளித்தது மட்டுமின்றி, திரைப்படக் கல்லூரி மாணவர்கள் பலரையும் இயக்குநராக அறிமுகப்படுத்திய பெருமையும் விஜயகாந்தையே சேரும். ஆபாவானன் - ஆர்.அரவிந்தராஜ் கூட்டணியில் 'ஊமை விழிகள்', 'உழவன் மகன்' போன்ற திரைப்படங்களும், ஆர்.கே.செல்வமணியின் இயக்கத்தில் 'புலன் விசாரணை', 'கேப்டன் பிரபாகரன்' போன்ற வெற்றிப்படங்களை அளித்தவர் விஜயகாந்த். ஒருகாலத்தில் திரைப்படக் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் நேராகக் கதை சொல்லும் இடமாக விஜயகாந்தின் அலுவலகம்தான் திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்காமல் ஆக்ஷன் ஹீரோ ஆக முடியாது என்பது கோலிவுட்டில் எழுதப்படாத விதி. அந்த வகையில் போலீஸ், ராணுவம் என யூனிஃபார்ம் அணிந்து நியாயத்திற்காகப் போராடும் கதாபாத்திரத்தில் அதிகம் நடித்தவர் விஜயகாந்த் தான். இன்றும் போலீஸ் வேடமென்றால் தமிழ் ரசிகர்களின் மனதில் முதலில் வந்து நிற்பது விஜயகாந்தாகத்தான் இருக்கும். தனது 100-வது படமான 'கேப்டன் பிரபாகரன்' மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து ரசிகர்கள் மத்தியில் 'கேப்டன்' ஆக ப்ரோமோசன் கிடைத்தது. ரஜினியின் 100-வது படமான 'ராகவேந்திரா', கமலின் 100-வது திரைப்படமான 'ராஜபார்வை' போன்ற திரைப்படங்கள் அனைத்தும் தோல்வி கண்டிருந்த நிலையில், அந்தக் காலகட்டத்தில் நடித்த நடிகர்களில் 100-வது படம் வெற்றிப்படமாக அமைந்ததும் இவருக்குத்தான். 'ஊமை விழிகள்', 'புலன் விசாரணை', 'செந்தூரப் பூவே', 'சத்ரியன்' போன்ற படங்களில், தனது நிஜ வயதைவிட அதிகமான வயதுடைய கதாபாத்திரங்களில் நடித்தார்.


க்ளைமாக்ஸ் காட்சியில் சூப்பர் ஹீரோ சாவதையெல்லாம் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றிருந்த காலகட்டத்திலேயே 'செந்தூரப் பூவே', 'வைதேகி காத்திருந்தாள்', 'ரமணா' மற்றும் பல திரைப்படங்களில் அப்படி நடித்து அந்த நம்பிக்கையைத் தகர்த்தெறிந்தார்.
நடிகர் சங்கத் தலைவர்:
சூப்பர்ஸ்டார், உலகநாயகன் உட்பட திரைப்படத் துறையினர் இன்றும் விஜயகாந்தை 'விஜி' என்றுதான் அழைப்பார்கள்.  1999-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை அவர் நடிகர் சங்கத் தலைவராகப் பதவி வகித்தார். அனைத்து நடிகர்களையும் ஒன்றிணைத்து சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் கலைநிகழ்ச்சிகள் நடத்தி அப்போது கடனில் இருந்த நடிகர் சங்கத்தை மீட்டெடுத்தது இவரின் நிர்வாகத் திறமைக்கு மிகப்பெரிய உதாரணம்.
அரசியல் அவதாரம்:
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மீது கொண்ட ஈர்ப்பு காரணமாக தனது மூத்த மகனுக்கு விஜய பிரபாகரன் என்று பெயர் சூட்டியவர் விஜயகாந்த். 2000-ம் ஆண்டில் தனது ரசிகர் மன்றத்திற்கென கொடியை அறிமுகப்படுத்தி பல படங்களில் அதைப் பயன்படுத்தவும் செய்தார். அரசியலுக்கு வருவேன் என சொன்னதோடு நிக்காமல் 2005-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ம் தேதி தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். தனது ரசிகர்மன்றக் கொடியையே கட்சிக் கொடியாகவும் அறிவித்தார். அடுத்து வந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் தனி ஆளாகத் தன் கட்சியின் சார்பாக சட்டமன்றம் சென்றார். 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து 41 இடங்களில் போட்டியிட்டு 29 சட்டமன்றத் தொகுதிகளை வென்றது. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக கம்பீரமாக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார் விஜயகாந்த்.
சினிமா, அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல வெற்றிகளைப் பெற்ற விஜயகாந்த் தனது முன்கோபத்தாலும், உள்ளதை உள்ளபடிப் பேசிவிடுவதாலும் இழந்தவை அதிகம். இதையெல்லாம் விட இன்று 'மீம்ஸ்' விஜயகாந்தாய் சித்தரிக்கப்படுவது காலத்தின் சோகமான நீட்சி.


ஆனாலும் அழுத்தமாகச் சொல்வோம்... பிறந்தநாள் வாழ்த்துகள் கேப்டன்! 


விஜயகாந்துக்கு கேக் ஊட்டிய வைகோ..! கலகலத்த பிறந்தநாள்

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, விஜயகாந்துக்கு, வைகோ, திருமாவளவன் ஆகியோர் கேக் ஊட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு இன்று 65வது பிறந்தநாள். அவரது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் தேமுதிக நிர்வாகிகள் அன்னதானம், மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், மக்கள் நலக்கூட்டணி தலைவர்களான மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் முத்தரசன் மற்றும் மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் இன்று கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரவேற்றார். பின்னர் விஜயகாந்துக்கு அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சால்வைகள் அணிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, திறந்தவெளியில் கட்சி வளாகத்தில் வைகோ, திருமாவளவன், முத்தரசன் ஆகியோர் முன்னிலையில் விஜயகாந்த் கேக் வெட்டினார். அப்போது, விஜயகாந்துக்கு வைகோ, திருமாவளவன், முத்தரசன் ஆகியோர் கேக் ஊட்டினர். பதிலுக்கு விஜயகாந்தும் அவர்களுக்கும் கேக் ஊட்டினார். மேலும், விஜயகாந்த் மைத்துனர் சுதீஷுக்கு திருமாவளவன் கேக் ஊட்டினார். பதிலுக்கு அவரும் கேக் ஊட்டினார்.


விஜயகாந்துக்கு மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் நேரில் வந்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க வந்ததால் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகம் கலகலப்புடன் காணப்பட்டது.
இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்கள் நலக்கூட்டியக்கம் இணைந்து உள்ளாட்சி தேர்தலை சந்திக்கும் என்றும்,
மாவட்ட வாரியாக உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் நடந்து வருகிறது என்றும் கூறினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்து உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது குறித்து தேமுதிகதான் முடிவு செய்ய வேண்டும். விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு தமிழக முதல்வர் வர வேண்டும் என்றார்.



பச்சமுத்துவை விசாரித்தால் மதனை பிடித்துவிடலாம்..! - போத்ராவின் பகீர்!

மதன் ஓடிவிட்டாரா, ஒளித்து வைக்கப்பட்டு இருக்கிறாரா என்பது குறித்து பச்சமுத்துவிடம் விசாரணை செய்தால் உண்மை நிலவரம் தெரியும் என்று  ஃபைனான்ஷியர் போத்ரா கூறினார்.


ஏழாண்டுகளுக்கு முன்னாள் நடிகை ரோஜாவுக்கு பணம் கொடுத்து வழக்கு தொடுத்தவர் ஃபைனான்ஷியர் போத்ரா. அடுத்து இயக்குநர் கஸ்தூரி ராஜாவுக்கு படம் தயாரிக்க பணம் கொடுத்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் பச்சமுத்து பலகோடி ரூபாய் ஏமாற்றி விட்டதாக பகீர் புகார் கொடுத்துள்ள ஃபைனான்ஷியர் போத்ராவிடம் பேசினோம், ''நான் 25 ஆண்டுகளுக்கு முன்பே  பச்சமுத்துவுக்கு ஒரு லட்சம் பணம் கொடுத்தேன். மாதம் இருபதாயிரம் வீதம் ஐந்து மாதம் பணம் கட்டினார். அப்போது செக் மோசடி பிரச்னை வந்தபோது அவரது ஆடிட்டரை மாட்டிவிட, ஆடிட்டர் ஆறுமாசம் சிறைவாசம் அனுபவித்தார். அன்று ஆடிட்டர், இன்று மதன். எய்த பச்சமுத்துவை விட்டுவிட்டு, அம்பு மதனை போலீஸ் தேடி வருகிறது.
வேந்தர் ஃபிலிம்ஸ் மதனை காவல்துறை மாதக்கணக்கில் தேடி வருகிறது, இதுவரை அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. உண்மையில் மதன் வெறும் கருவிதான். அவரை முழுக்க முழுக்க இயக்கியது பச்சமுத்துதான். கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு மதனை எனக்கு அறிமுகம் செய்தார் பச்சைமுத்து. 'மதன் என் மகன் போன்றவர். வேந்தர்டிவி, வேந்தர் ஃபிலிம்ஸ் இரண்டும் வெவ்வேறு அல்ல. மதன் ஒழுக்கமானவர். நேர்மையானவர்' என்று என்னிடம் மதனுக்கு சர்டிஃபிகேட் கொடுத்தார். பச்சமுத்து முன்னிலையிலேயே, வேந்தர் ஃபிலிம்ஸ் தயாரித்து வரும் 'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்துக்கு ஆறுகோடி ரூபாய் பணம் கொடுத்தேன். இதுவரை திருப்பித் தரவில்லை.


நான் மதனிடம் கொடுத்த பணத்தை அவர் பச்சமுத்துவிடம் கொடுத்து விட்டார். நான் பச்சமுத்துவிடம் போன் செய்து பணம் கேட்டேன். 'ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு அமைக்கும்  அமராவதி நகரத்தில் ஒரு காலேஜ் கட்டப்போகிறேன். அதற்கு உங்கள் பணத்தை செலவு செய்துவிட்டேன். இப்போதைக்கு தர இயலாது' என்று சொல்லி விட்டார். அதன்பின் அவர் மீது பணம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். கடந்த 3 நாட்களாக வழக்கை வாபஸ் வாங்கச் சொல்லி அடியாட்களை வைத்து கொலைமிரட்டல் விடுத்து வருகிறார்.
மதன் முழுக்க முழுக்க பச்சமுத்துவின் ஆள். இப்போது மதன் எங்கே இருக்கிறார் என்கிற உண்மை பச்சமுத்துவுக்கு மட்டுமே தெரியும். மதன் ஓடிவிட்டாரா, பச்சமுத்துவால் ஒளித்து வைக்கப்பட்டு இருக்கிறாரா அல்லது தலைமறைவாக இருக்கிறாரா, மாதக்கணக்கில் மதனை தேடிவரும் போலீஸ், ஒருமுறை பச்சமுத்துவிடம் விசாரணை செய்தால் மதன் ஒளிந்திருக்கும் உண்மை நிலவரம் புரியும். மதன் கிடைக்காவிட்டால், ஐந்து வருஷம் ஆகியும் ஆறு கோடி பணம் கொடுத்த எனக்கு என்ன பதில். பச்சமுத்துவின் கல்லூரியில் கோடிக்கணக்கில் பணம் கட்டியிருக்கும் 104 மாணவர்களின் கதி என்ன?" என்று பச்சமுத்து மீது பகீர் புகார் பட்டியல்களை அடுக்குகிறார்.
போத்ராவின் புகாருக்கு பச்சமுத்து பதில் அளித்தால்தான் உண்மை வெளியே தெரியவரும்.



கிருஷ்ணனும் என்னுடைய முப்பாட்டன்தான்...!' - சீமான்

சென்னை முழுவதும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ' நம் இனத்தின் முப்பாட்டன் என்று கிருஷ்ணனைக் குறிப்பிடுகிறார் சீமான். அப்படியானால் முருகனைக் கைவிட்டுவிட்டாரா?' என சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் கிளம்பியுள்ளன. 
' ஆயர் குலத் தலைவனே போற்றி; எங்கள் மூதாதை மாயோன் பெரும் புகழ் போற்றி' என கிருஷ்ணர் படத்துடன் சீமான் இருக்கும் சுவரொட்டிகளால்தான், இவ்வளவு விவாதமும். ' முல்லை நிலத்தையும் குறிஞ்சி நிலத்தையும் இணைத்து சுவரொட்டி அச்சடிப்பது சீமானால் மட்டும்தான் முடியும்' என சிலர் பதிவுகளுக்கு, நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் பதில் கொடுத்து வருகின்றனர். சீமானிடம் பேசினோம். 


கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்து சொல்வதன் மூலம் எதை நிறுவ விரும்புகிறீர்கள்? 
"கிருஷ்ணருக்கு என்ன வாழ்த்துச் சொல்வது? அவரும் நம்முடைய மூதாதையர்தான். கண்ணன் என்ற பெயரே கிருஷ்ணராக மருவிவிட்டது. குறிஞ்சி நிலத் தலைவனாக முருகன் போற்றப்படுவது போல, முல்லை நிலத் தலைவனாக கண்ணன் போற்றப்படுகிறார். ' மாயோன் மேய காடுறை உலகு' என்று தொல்காப்பியம் போற்றுகிறது. மருத நிலத் தலைவனாக இந்திரனும் நெய்தல் நிலத் தலைவனாக வருணனும் பாலை நிலத் தலைவியாக கொற்றவையும் போற்றப்படுகிறார்கள். ஐந்து நிலங்களில் பரவி வாழ்ந்த மக்கள் நாம். குறிஞ்சி நிலத் தலைவனைப் போற்றுவது போலத்தான், முல்லை நிலத் தலைவனையும் போற்றுகிறோம்.
மால் என்றால் கருப்பு. அது மரியாதைக்காக திருமால் என்று அழைக்கப்படுகிறது. பெரிய கருப்பன் என்று நாம் சொல்வதை அவர்கள் பெருமாள் என்கிறார்கள். முல்லை நில மக்கள் ஆடு, மாடு வளர்ப்போடு வேளாண்மையை முக்கியத் தொழிலாகக் கொண்டவர்கள். மழைதான் அவர்களுக்கு அடிப்படையாக இருந்தது. எனவே, கருப்பு மேகத்தை மாயோன் என்று அழைத்தார்கள். இதில் கருப்பு என்பது கண்ணன் என்று மாறிவிட்டது. கண்ணன் என்ற பெயரே காலப் போக்கில் கிருஷ்ணராக மாறியது. 
ஆரிய பிராமணர்கள் இங்கு வரும்போது அவர்களுக்கு என எந்தக் கடவுளுமே இல்லை. இந்த நிலத்தில் இருந்துதான் அவர்களுக்கான கடவுள்களை எடுத்துக் கொண்டார்கள். விருமாண்டி படத்தைப் பற்றி தனியார் தொலைக்காட்சியில் பேசிய கமல்ஹாசன், ' தமிழ்க் கடவுள்கள் ஆரியமயமாக்கப்பட்டுவிட்டார்கள்' என்கிறார். அதுதான் உண்மை. சிவன் கைலாய நாதர் ஆனதும் கொற்றவை பார்வதி ஆனதும் முருகன் சிவனுக்கு மகன் ஆனதும் இப்படித்தான். 'மாயோன் பெருவிழா' என்ற பெயரில் செஞ்சியில் கடந்த ஆண்டு விழா நடத்தினோம். பண்பாட்டை மீட்கும் போராட்டங்களை முன்னெடுக்கும்போது, இந்தப் பாதையில்தான் பயணித்துத் தீர வேண்டியிருக்கிறது. தொல்குடி சமூகம் வணங்கிய தலைவனுக்கு நாங்கள் விழாவாகக் கொண்டாடுகிறோம். வழிவழியாக போற்றப்பட்டு வந்த ஒரு மரபைக் கொண்டாடாமல் இருந்தால்தான் தவறு. கிருஷ்ணர் என்று சமஸ்கிருதமாகப் பேசாமல், மாயோன் என்று தமிழில் சொல்லுங்கள். மாயாண்டி என்ற பெயர் மாயோன் என்ற வார்த்தையில் இருந்துதான் வருகிறது. நானும் மாயாண்டி குடும்பத்து மகன்தான். 






நம்முடைய முன்னோர்கள் முழுமையாக ஆய்வு செய்துவிட்டுத்தான் இதைக் குறிப்பிடுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட சாதி சமூகத்திற்கானவர் அல்ல மாயோன். அப்படித்தான் நம்முடைய தொல்குடிகளால் போற்றப்பட்டு வந்திருக்கிறார். கிருஷ்ண ஜெயந்தியாக பார்க்காமல் மாயோனாகப் பார்க்கிறோம். திருமுருகப் பெருவிழா நடத்துவது போலவே, மாயோன் பெருவிழாவை நடத்தி வருகிறோம். இதன்பின்னர், இந்திரன் பெருவிழா, கொற்றவையைக் கொண்டாடுவோம் என வரிசையாக நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். கொற்றவையும் நம்முடைய பாட்டிதான். பாட்டி கொற்றவையையும் வேலுநாச்சியாரையும் மறந்துவிட்டு ஜான்சிராணியைப் பிடித்துக் கொண்டு சுற்றுகிறார்கள்.
திலகரைப் படித்துவிட்டு வ.உ.சியை மறந்துவிட்டோம். பண்பாட்டுத் தளத்திலும் தமிழனை மீட்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. ' தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை அளிக்கப்பட வேண்டும்' என்று நான் சொன்னபோது, ' திருமலை நாயக்கரும் அதேநாளில்தான் பிறந்தார்' என்றார் ஜெயலலிதா. ' சரி... கொண்டாடிவிட்டுப் போங்கள்' என்று சொல்லிவிட்டோம். முருகன் நம் முப்பாட்டன் என்று நான் சொன்னபோது கேலி செய்தார்கள். அதுவே, ' கொஞ்சம் தேநீர் நிறைய வானம்' கவிதைத் தொகுதியில் முருகனை முப்பாட்டனாகச் சொல்கிறார் வைரமுத்து. அவரை யாரும் கேலி செய்யவில்லையே? எல்லாவற்றையும் வேண்டாம் என்று விட்டுவிட்டால் நான் யார் என்பதே தெரியாமல் போய்விடும். வேரை இழந்த மரமும் வரலாற்றை மறந்த இனமும் வாழாது என்பதுதான் எதார்த்தமான உண்மை" எனச் சீற்றத்தோடு முடித்தார் சீமான்.  



Thursday, 25 August 2016

கீழே கிடப்பது குழந்தை அல்ல; என் இதயம்!



பணிக்குச் செல்லும் பெண்களின் இரட்டைச் சுமை பற்றி எவ்வளவு பேசினாலும்தீர்வுகள் தென்படுவதில்லை.அவர்கள் சந்திக்கும் பல அசௌகரியங்களில் ஒன்றுகுழந்தை சம்பந்தப்பட்ட பொறுப்பும் முக்கிய அலுவலும் ஒரே நாள் நேர்கோட்டில் வந்து நிற்பதுஅப்படித்தான் அன்று ஸ்வாதி சிதால்கரும் ஸ்தம்பித்தார்

.

புனேயில் வங்கி ஒன்றில் பணிபுரியும் ஸ்வாதியின் மகனுக்கு அன்று கடுமையான காய்ச்சல்யாருடனும் இருக்காமல் தாயைத் தேடிய தன் மகனுக்காக அன்று விடுப்பு எடுக்க முடியாத அளவுக்குஸ்வாதிக்கு அன்று வங்கியில் முடிக்கப்பட வேண்டிய முக்கிய வேலை ஒன்று இருந்ததுகாய்ச்சலில் கொதித்த மேனியுடன் இருந்த தன் மகனை அலுவலகம் வரச்செய்து,  தன் இருக்கைக்கு அருகே கீழே படுக்கவைத்துமூளை வேலையிலும்,இதயம் மகனிடமுமாக இருந்து தன் பணியைச் செய்தார்தன்னுடைய அந்தத் தவிப்பை புகைப்படத்துடன்,

‘‘தரையில் படுத்திருப்பது குழந்தை அல்லஎன் இதயம் தரையில் கிடக்கிறதுஅவனுக்குக் கடுமையான காய்ச்சல்யாருடனும் இருக்க மறுத்த அவனுக்கு அம்மாவாக இன்றைய தேவையாக இருக்கிறேன்பாதி நாள் முடிந்துவிட்ட நிலையில்ஒரு லோன் சம்பந்தப்பட்ட அலுவலால் என்னால் விடுப்பு எடுக்க முடியாத சூழலில்,கண் முன்னே இருக்கும் என் இரு பொறுப்புகளிலும் கவனத்தை செலுத்தி சூழலை கையாண்டுவிட்டேன்இந்தத் தகவலைஅசெம்பிளியில் தூங்கும் அமைச்சர்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன்’’

என தன் ஃபேஸ்புக் பக்கத்தில் ஸ்வாதி பதியபணிக்குச் செல்லும் பெண்களின் பொறுப்பையும் தவிப்பையும் சொல்லுவிதமாக அமைந்த அந்த போஸ்ட் வைரலானதுதொடர்ந்து கவனம் பெற்றுவருகிறது.

ஸ்வாதியைத் தொடர்புகொண்டோம்.

‘‘அந்தப் பதிவு பற்றி..?’’

அன்று என் மகனுக்கு அதிக காய்ச்சல்அம்மாவிடம் செல்ல வேண்டும் என்று அழுதுகொண்டே இருப்பதாக,என் கணவர் போனில் சொன்னார்என்னால் வீட்டுக்குச் செல்ல முடியாத நிலையில்அவனை அலுவலகத்தில் கொண்டுவந்து விடுமாறு கூறினேன்மகன் என்னைப் பார்த்ததும் சாமாதானமானான்அவனுக்குப் புட்டியில் பால்கொடுத்துஎன் இருக்கைக்குப் பின்னால் இருந்த இடத்தில்தரையில் படுக்க வைத்தேன்என் பணியையும் முடித்தேன்அந்தச் சூழலை ஃபேஸ்புக்கில் பதிவிட்டேன்சொல்லப்போனால்அலுவலக இருக்கைக்கு அருகில் குழந்தையைப் படுக்கவைக்கும் இந்தச் சூழல்கூட கிடைக்காத பெண்கள் பலர்.





என் பதிவைப் பார்த்துவிட்டுதான், ‘பெண்களுக்கு இப்படியெல்லாம் பிரச்னை இருக்கிறதா?’ என்று பலரும் அறிந்துகொள்கிறார்கள் என்பது கிடையாதுமனைவிதங்கைஅக்காதோழிசக ஊழியர்கள் என நம்மைச் சூழ்ந்திருக்கும் தாய்மார்கள் சந்திக்கும் இந்தச் சிக்கலைகவனித்தும் கவனிக்காமல் கடக்கிறோம்என் பதிவு,ஒரு நொடி நிறுத்தி அவர்களை அதுபற்றிச் சிந்திக்கவைத்திருக்கலாம்.’’

‘‘இந்தப் பதிவுக்கு உங்கள் அலுவலகத்தின் வினை என்ன?’’

‘‘எந்த எதிர்மறை விளைவும் இல்லைஎன் பணியில் நான் நேர்மையாக இருக்கிறேன்வேலையை சரியான நேரத்தில் முடிகிறேன்இது அலுவலகத்தில் அனைவருக்கும் தெரியும்மேலும்இதில் நான் யாரையும் குற்றம் சொல்லவில்லைஎன் நிலையைத்தான் பதிவு செய்தேன்.’’

‘‘அரசாங்கம் என்ன செய்யவேண்டும்?’’

‘‘இந்த விசயத்தில் நான் அரசாங்கத்தை குறை சொல்ல மாட்டேன். 6 மாதங்களாக இருந்த பேறுகால விடுப்பை 9மாதங்களாக மாற்றிய அரசுக்கு நாம் நன்றிதான் சொல்ல வேண்டும்இன்னும் பல சலுகைகளையும் கொடுத்திருக்கிறதுபெண் ஊழியர்களின் சிக்கலைப் புரிந்துகொண்டு உதவ சக ஊழியர்கள்மேல் அதிகாரிகள்தான் முன்வர வேண்டும்.’’

‘‘அசெம்பிளியில் தூங்கும் அமைச்சர்களைக் குறிப்பிட்டது ஏன்?’’

‘‘ஒரு வங்கி ஊழியரான நான்தவிக்கும் தாய்மைக்கும் இடையிலும் என் பொறுப்பை குறித்த நேரத்தில் முடிக்கவேண்டும் என்ற அக்கறையுடன் இயங்குகிறேன்ஆனால்பெரிய பெரிய பொறுப்புகளும் பதவிகளும் அமைச்சர்களின் வசமிருக்கஅவர்கள் அசெம்பிளியில் தூங்குவது என்பது எவ்வளவு கொடுமையானது?நம்மைப்போலமக்கள் பணிகளுக்கான உயர் பொறுப்புகளிலும் அரசியல் அவைகளிலும் உள்ளவர்களும் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து முடித்தால்நம் நாடு எவ்வளவு பயனடையும்காரில் நான் என் குழந்தையுடன் செல்லும்போதுகாரின் வெளியே சாலை ஓரத்தில் வசிக்கும் குழந்தைகளை கடந்தபடி போகும்போதெல்லாம் என் இதயம் நொறுங்கும்அவர்களுக்கான நல்லதை ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள்தானே செய்ய முடியும்டிஜிட்டல் இந்தியாகிளீன் இந்தியா போன்ற திட்டங்களை நானும் வரவேற்கிறேன்ஆனால்குழந்தை பிச்சைக்காரர்கள் இல்லாத இந்தியாவை... “பெக்கர்ஸ் ஃபீரி இந்தியாவை (Beggars free india)” மோடியால் கொடுக்க முடியுமாஇதுப்போன்ற திட்டங்கள் தான் நாட்டின் பிரதான தேவையாக இருக்கிறது.இதுப் போன்ற திட்டத்துக்கு  ஏன் முன்னுரிமை கொடுக்க கூடாது?! அதுவேஅவர்களை நான் குறிப்பிடக் காரணம். ’’

‘‘இந்தப் பதிவுக்குக் கிடைந்த வரவேற்பு பற்றி?’’

‘‘பின்னூட்டங்களிலே ஒருவர், ‘என் மனைவியும் இதுபோல்தான் கஷ்டப்படுக்கிறாள்’ என்று சொல்லி வேதனைப்பட்டிருந்தார்அவர் மனதில் ஏதோ ஒரு மாற்றம் வந்திருந்தது புரிந்ததுஅது எனக்கு நிறைவாக இருந்ததுஇது ஓர் ஆரம்பம்தான்இதனால் மாற்றம் வந்துவிடுமா என்றால்நிச்சயம் இல்லைஇதுபோல மற்ற பெண் ஊழியர்களும் பணியிடத்தில் அவர்கள் சந்திக்கும் சிக்கல்களை பொதுவெளியில் தொடர்ந்து பதிவு செய்துகொண்டே வரும்போதுநிச்சயம் ஒருநாள் ஆண்கள் மனதிலும்அரசியல் அமைப்பிலும் மாற்றம் வரும் என்பது என் நம்பிக்கை.’’


சபாஷ்!


எனக்குப் பதவி கொடுத்தது கடவுள்தான்; ஜெயலலிதா அல்ல!' -சசிகலா புஷ்பாவின் அடுத்த அதிரடி


சசிகலா புஷ்பா முன்ஜாமீன் மீதான வழக்கில் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது மதுரை உயர்நீதிமன்றம். ' மதுரைக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதும் தெரியும். உச்ச நீதிமன்றம் வரையில் சென்றாவது ஜாமீன் வாங்குவேன்' எனக் கொதிக்கிறார் சசிகலா. 


அ.தி.மு.க தலைமையுடன் ஏற்பட்ட மோதலை அடுத்து, தொடர் வழக்குகளால் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறார் சசிகலா புஷ்பா எம்.பி. பணிப்பெண்கள் கொடுத்த பாலியல் புகார் வழக்கில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் முன்ஜாமீன் கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். நேற்று நடந்த வழக்கு விசாரணையில் மனுத் தாக்கலில் நடந்துள்ள குளறுபடிகள் குறித்து, அரசுத் தரப்பில் அடுக்கடுக்கான கேள்விகள் தொடுக்கப்பட்டன. குறிப்பாக, ' முன்ஜாமீன் மனுவில் சம்பந்தப்பட்டவர் கையெழுத்திட்டிருக்க வேண்டும். ஆகஸ்ட் 17-ம் தேதி சிங்கப்பூருக்குச் சென்றார் சசிகலா. ஆனால், ஆகஸ்ட் 17-ம் தேதி மதுரையில் வழக்கறிஞர்கள் முன்னிலையில் ஆஜராகி கையெழுத்திட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது வரையில் அவர் வெளிநாட்டில்தான் இருக்கிறார். அவரது சார்பில் வழக்கறிஞர் ஆஜராகும்போது, 'இம்மனுவை தாக்கல் செய்ய நான் அறிவுறுத்தினேன்' என ஜாமீன் கோருபவரின் ஒப்புதல் கடிதம் அளிக்கப்பட வேண்டும். இவை அனைத்தும் மீறப்பட்டுள்ளன' என அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் புகழேந்தி முன்வைத்த வாதங்களை அடுத்து, ' ஆகஸ்ட் 29-ம் தேதி சசிகலா புஷ்பா நேரில் ஆஜராக வேண்டும்' என உத்தரவிட்டார் நீதியரசர். 


மதுரை உயர்நீதிமன்றத்தில் நடந்த விஷயங்கள் அனைத்தும் உடனுக்குடன் சசிகலா பார்வைக்குக் கொண்டு சென்றனர் அவரது வழக்கறிஞர்கள். அவர்களிடம் பேசியவர், " கையெழுத்து என்னுடையதுதானா என்ற சந்தேகத்தை தெளிவுபடுத்த வேண்டும் என்றுதான் கேட்டுள்ளனர். இதற்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று அவசியம் இல்லை. அதே நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். ஒருவேளை ஜாமீன் கிடைக்கவில்லையென்றால், உச்ச நீதிமன்றம் வரையில் சென்றாவது வாங்குவோம். ஜாமீன் வாங்காமல் தமிழ்நாட்டிற்குள் கால் வைக்க மாட்டேன்" என்றவர், " கார்டனுக்குள் நடந்த கொடுமைகளை நான் மறக்கவில்லை. அவர்கள் என்னை அடித்தது மட்டுமல்ல, கார்டன் போலீஸ்காரர்கள் கையில் லத்தியைக் கொடுத்து அடிக்கச் சொன்னார்கள். காலில் ரத்தம் வரும் அளவுக்கு அடித்தார்கள். இதற்கு மேலும் பொறுத்துக் கொள்ளக் கூடாது என்றுதான் மேல்-சபையில் பேசினேன். இப்போது சமரசம் என்ற பெயரில் பேசுகிறார்கள். அவர்களின் சமரசத்திற்கு உடன்பட்டால், நான் அடி வாங்கியதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். கட்சியில் இந்தளவுக்கு நான் உயர்ந்ததற்கும் பதவிகள் பெற்றதற்கும் கடவுள்தான் காரணம். ஜெயலலிதா அல்ல. முன்ஜாமீன் வாங்குவதற்காக மதுரைக்குள் வந்தால், என்ன செய்வார்கள் என்பதும் தெரியும். அதற்கு இடம் கொடுக்க எனக்கு விருப்பமில்லை. சட்டரீதியாகவே போராடுவோம்" எனப் பேசியிருக்கிறார். 


ஆகஸ்ட் 29 அன்று நீதிமன்றம் பிறப்பிக்கப் போகும் உத்தரவை அடுத்தே, சட்டரீதியான போராட்டத்தின் அடுத்தகட்டத்தை நகர்த்த இருக்கிறார் சசிகலா புஷ்பா. அ.தி.மு.க தலைமைக்கு எதிரான ஆட்டத்தையும் அவர் கைவிடுவதாக இல்லை. 


வண்டலூர் ராஜநாகம் உயிரிழந்தது ஏன்?

ண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இரண்டு இராஜநாகங்கள் பாதுகாக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் கடந்த 19-ம் தேதி, அதில் ஒரு ஆண் ராஜநாகம் உயிரிழந்தது. மிகவும் அருகிவரும் உயிரினங்களுள் ஒன்றான இராஜநாகம் உயிரிழந்தது, விலங்குகள் ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. என்ன நடந்தது என வண்டலூர் பூங்கா நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டோம்.



"இறந்த ஆண் இராஜநாகம், 2015 அக்டோபர் மாதம், கர்நாடகாவின் பிலிக்குலா பூங்காவில் இருந்து இங்கு கொண்டுவரப்பட்டது. இரண்டு இராஜநாகங்கள் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்தன. அதில் ஒன்றுதான் தற்போது இறந்துள்ளது. பாம்புகள் வளரும் போது, தோலுரிப்பது இயல்பு. பாம்புகள் வளர, வளர தோல் உரிப்பதும் கூடும். இது இயற்கையாக நடக்கும் நிகழ்வு. ஆனால் இந்த இராஜநாகம் இப்படி தோல் உரிக்கவில்லை. இதனால் தலையின், கண் பகுதியையும் சேர்த்து தோல் மூடியது. எனவே பாம்பினால், இரையை எடுத்துக் கொள்ள முடியவில்லை. இதுதான் பாம்பின் இறப்பிற்கு காரணம். தோலுரிப்பது என்பது இயற்கையாக நிகழ வேண்டும். ஆனால், இந்த இராஜநாகத்திற்கு தோல் உரியவில்லை. எனவே அதற்கு உதவுவதற்காக அதன் மீது வெந்நீர் தெளிப்பது போன்ற விஷயங்களை செய்து வந்தோம். ஆனாலும் அவை பலனளிக்கவில்லை. தோல் உரியவில்லை என்பதற்காக நாம் செயற்கையாக அதைச் செய்யவும் முடியாது. மற்ற பாம்புகளைப் போல, ராஜநாகங்களை கையில் எடுத்தெல்லாம் கையாளவும் முடியாது. மிகவும் விஷம் அதிகமான பாம்பு இராஜநாகம். அதற்கு விஷமுறிவு மருந்தே கிடையாது.
ஒருவேளை தலைப் பகுதியில், தோல் உரிந்து, உடல்முழுக்க நிகழாமல் இருந்தால் கூட , மீதித் தோலை உரிப்பதற்காக நாம் உதவ முடியும். ஆனால் இந்த இராஜநாகத்திற்கு தலையிலும் அது நிகழவில்லை. எனவே நாம் செயற்கையாக அதைச் செய்யும் போது, அதன் கண்களும் சேர்ந்து உரிந்திட வாய்ப்புண்டு. அது மேலும் பாம்பிற்கு சிக்கலை ஏற்படுத்தும். எனவே இந்த மரணம் இயற்கையாக நடந்த ஒரு விஷயம்தான்.  தகுந்த காலநிலை, உணவு, பராமரிப்பு இல்லாமல் எந்த விலங்காவது இணை சேருமா? ஆனால் இங்கே எத்தனையோ மான்கள், உயிரினங்கள் புதிதாகப் பிறக்கின்றன. பூங்காவைப் பொறுத்தவரை இதுதான் பெரிய விஷயம். ஆனால் இராஜநாகம் என்பது அரிதான விலங்குகளில் ஒன்று என்பதால் இது மட்டும் அதிக கவனம் பெறுகிறது" எனக் கூறினர்.
இராஜநாகங்கள் மிகவும், குளிர்ந்த இடங்களில் மட்டுமே இருக்கும். பசுமை மாறாக் காடுகள்தான் இவற்றின் முக்கியமான வாழ்விடம். ஒரு காலத்தில், அதிகம் வேட்டையாடப்பட்ட இனம் என்பதால், தற்போது வன உயிரினங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வைத்து பாதுகாக்கப்படுகிறது. இந்த இராஜநாகங்களின் சிறப்பு குறித்து, கோவை 'ஓசை' அமைப்பைச் சேர்ந்த திரு.காளிதாஸ் அவர்களிடம் பேசினோம்.


"நச்சுபாம்புகளிலேயே மிகவும் பெரிய பாம்பு, இந்த இராஜநாகம். இந்தியாவில் பல விஷப்பாம்புகள் இருந்தாலும் கூட, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் மற்றும் நாகப்பாம்பு ஆகிய நான்கு வகைப் பாம்புகளால்தான் 95% உயிரிழப்புகள் நிகழ்கின்றன. இந்த நான்கு வகைப் பாம்புகளுக்கும் விஷமுறிவு மருந்து உண்டு. ஆனால் அதைவிடப் பல மடங்கு விஷமுள்ள, இராஜநாகத்திற்கு விஷமுறிவு மருந்தே கிடையாது. அதற்குக் காரணம் கண்டுபிடிக்க முடியாதது அல்ல. கடந்த 50 ஆண்டுகளில் ஒருவர் கூட, ராஜநாகம் கடித்து இறந்ததாக வரலாறு இல்லை. இதனை 'Gentle Man Snake' என்பார்கள். இதுதான் நிஜமான நல்லபாம்பு! அதுமட்டுமில்லாமல் பாம்புகளை மட்டுமே, உணவாகக் கொள்ளக் கூடிய ஒரு பாம்பு இது. அதே போல கூடுகட்டி, முட்டையிட்டு, அடைகாக்கும் ஒரே பாம்பு இந்த இராஜநாகம்தான்.  
பெண் இராஜநாகம், முட்டையிட்டு 100 நாட்கள் வரை அடைகாக்கும். அதுவும் உணவு எதுவும் உட்கொள்ளாமல் அடைகாக்கும். பெண் ராஜநாகம், முட்டையில் இருந்து நாளை குட்டிகள் வெளிவரும் என்ற நிலையில், இன்று கூட்டை விட்டு வெளியேறிவிடும். அதன்பிறகு அது கூட்டிற்கு திரும்பாது. காரணம் என்ன தெரியுமா? ஒருவேளை பசியில், தனக்கே தெரியாமல் தனது குட்டிகளையே உண்டுவிடக் கூடாதே என்பதற்காகத்தான். அந்த அளவிற்கு தாய்மை உணர்வு நிறைந்த உயிரினமும் கூட! இவை மழைக் காடுகளில் அதிக அளவில் காணப்படும். கர்நாடாகாவில் ஆகும்பே என்ற இடத்தில் இவை அதிகளவில் காணப்படுகின்றன" எனக் கூறினார்.



தொடர்ந்து கண்டனங்களுக்கு ஆளாகும் தமிழக அரசு!

‘‘நீங்கள் பொது வாழ்வில் ஈடுபட்டிருக்கும் நபர். விமர்சனங்களை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்’’ என்று ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் ஒருமுறை நினைவூட்டி இருக்கிறது. தமிழக அவதூறு வழக்குகளைத் தடை செய்யக்கோரிய தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இவ்வாறு தெரிவித்து இருக்கிறார்கள்.


கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் திருப்பூரில் பிரசாரம் மேற்கொண்ட தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், ‘‘மக்கள் இங்கு கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும்போது, முதல்வர் மட்டும் கொடநாட்டுக்கு ஓய்வெடுக்கச் சென்றுவிடுகிறார்’’ என்று பேசினார். இதற்காகத் தமிழக அரசு வழக்கறிஞர்கள் சார்பில் அவதூறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இதனை எதிர்த்து விஜயகாந்த் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில், அவதூறு வழக்குகளைத் தடை செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஒவ்வொரு முறை இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போதும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

‘‘விமர்சனங்களைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்!’’
இந்தநிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி நாகப்பன் மற்றும் நீதிபதி பிரபுல்லா சி.பன்ட் அமர்வு இந்த வழக்கினை விசாரித்தது. அப்போது, ‘‘பொது வாழ்வில் ஈடுபட்டிருக்கும் நபர் விமர்சனங்களை எதிர்கொள்ளத்தான் வேண்டும். தமிழ்நாடு அரசைப்போல வேறு எந்த அரசும் மாநில அரசு இயந்திரத்தை, இதுபோல தேவையில்லாத விஷயங்களில் தவறாகப் பயன்படுத்துவதில்லை’’ என்று கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.
இதுபோல நீதிமன்ற கண்டனத்துக்குத் தமிழக அரசு ஆளாவது முதல்முறை கிடையாது. கடந்த மாதம்கூட, “இத்தனை அவதூறு வழக்குகள் எல்லாம் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானவை. விமர்சனங்களைப் பொறுத்துக்கொள்ள வேண்டும். அரசியல் பழிவாங்கும் கருவியாக அவதூறு வழக்குகளைப் பயன்படுத்தக் கூடாது” என்று கூறி இருந்தது உச்ச நீதிமன்றம்.
கடந்த ஐந்து ஆண்டு ஆட்சியின்போது, பலமுறை சென்னை உயர் நீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றம்,  உச்ச நீதிமன்றம் என வரிசையாகப் பல இடங்களில் தமிழக அரசு குட்டு வாங்கி இருக்கிறது. இருந்தாலும், அதைப்பற்றி எல்லாம் கொஞ்சம்கூடக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. நீதிமன்றம் கண்டித்துக்கொண்டே இருந்தாலும், ‘டோண்ட் வொரி.. பீ ஹேப்பி’ பாணியில் இருந்து வருகிறது தமிழக அரசு.

இதற்குமுன் எத்தனை முறை தமிழக அரசு கண்டனத்துக்கு ஆளாகி இருக்கிறது தெரியுமா?
கண்டனம்-1:
கடந்த முறை 2011-ல் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன், தி.மு.க கொண்டு வந்த சமச்சீர் கல்விமுறையை நடைமுறைப்படுத்த முடியாது என்று தமிழக அரசின் நிபுணர் குழு அறிக்கை அளித்தது. இதில், பதிலளித்த உயர் நீதிமன்றம், ‘‘ ‘சமச்சீர் கல்விச் சட்டம் செல்லும்’ என்று ஏற்கெனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. தற்போது தமிழக அரசின் இந்த நடவடிக்கை கல்வி பெறும் உரிமையைப் பாதுகாக்கும் அரசியல் சாசன சட்டத்துக்கு எதிரானது’’ என்று சொல்லியது.
கண்டனம்-2:
தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட அண்ணா நூலகத்தைக் குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றத் தமிழக அரசு உத்தரவிட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதற்குப் பதில் சொல்ல அரசு ஆறு மாதம் காலம் அவகாசம் கேட்டு இழுத்தடித்தது. ‘‘நூலகத்தை மாற்ற, ஒரு நொடியில் முடிவெடுத்த உங்களுக்குப் பதில் மனுத்தாக்கல் செய்ய ஆறு மாத கால அவகாசமா?’’ என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நூலகத்தை மாற்றவதற்கு அரசு பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்து உத்தரவிட்டனர்.
கண்டனம்-3:
‘‘2014 மவுலிவாக்கம் விபத்து குறித்து சி.பி.ஐ விசாரணை கோரியும், நீதிபதி ரெகுபதி விசாரணை கமிஷனின் அறிக்கையையும் வெளியிட வேண்டும்’’ எனவும் ஸ்டாலின் பொதுநல வழக்குத் தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், ‘‘விசாரணை கமிஷன் அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்ய காலதாமதம் செய்தால், சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டியது வரும்’’ என்று எச்சரித்தது.
கண்டனம்-4:
மின்வாரியத்தில் பணியாற்றிய நபர் ஒருவர் இறந்தபோது, அவரது பெண்ணுக்குத் திருமணம் ஆகிவிட்டது என்கிற காரணத்தைச் சொல்லி வாரிசு வேலை தர மறுத்தனர் அதிகாரிகள். இதை விசாரித்த நீதிபதி பரந்தாமன், ‘‘ ‘வயதான காலத்தில் பெற்றோரை மகன், மகள் பாதுகாக்க வேண்டும்’ என்று மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்சட்டம் சொல்கிறது. பெற்றோரைப் பாதுகாக்கும் கடமையில், பாலினப் பாகுபாடு பார்க்கப்படவில்லை. ஆகவே, பெற்றோர் மூலம் கிடைக்கும் உரிமையிலும் பாலினப் பாகுபாடு பார்க்க முடியாது. எனவே, அந்தப் பெண்ணுக்கு வேலை வழங்கவேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.


கண்டனம்-5:
தர்மபுரி பேருந்து தீ வைப்பு வழக்கில் கைதாகி 2 வருடம் சிறைத் தண்டனை பெற்ற டி.கே.ராஜேந்திரன், தர்மபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாடு கூட்டுறவுச் சட்டத்தின்படி, ஜெயில் தண்டனை பெற்றவர்கள் கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினராகக்கூடப் பதவி வகிக்க முடியாது. இதை விசாரித்த நீதிபதி மணிக்குமார், ‘‘சிறைத் தண்டனை பெற்றவர் எப்படிக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராகப் பதவி வகிக்க அனுமதிக்கப்பட்டார்?’’ என்று தமிழக அரசுக்குக் கண்டனம் தெரிவித்தார்.
கண்டனம்-6:
அரசுத் துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவிகித இடஒதுக்கீடு கோரி வழக்குத் தொடரப்பட்டது. இதற்குப் பதில் கேட்டு பள்ளிக்கல்வித் துறை, உயர்கல்வித் துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பதில் வரவில்லை. இதற்கு நீதிமன்றம், கண்டனம் தெரிவித்ததோடு 2 துறைகளுக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது. அடுத்தமுறையும் பதில் தாக்கல் செய்யப்படவில்லை. மீண்டும் பள்ளிக்கல்வித் துறைக்குக் கண்டனத்தோடு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
கண்டனம்-7:
சென்னையில் விதிகளை மீறி பேனர் வைப்பதற்கு எதிராக டிராஃபிக் ராமசாமி வழக்குத் தொடர்ந்திருந்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘‘விதிகளை மீறி பேனர் வைப்போர் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்குத் தைரியம் இல்லை. அதனால்தான் அந்தத் தவறு தொடர்கிறது’’ என்று கண்டனம் தெரிவித்தது.
கண்டனம்-8:
பள்ளி வாகனத்தின் ஓட்டையில் இருந்து விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் பள்ளி வாகனங்களின் பாதுகாப்புக் குறித்து புதிய விதிமுறைகளை உருவாக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக அரசு பதில் மனுத்தாக்கல் செய்யாமல் தாமதித்து வந்தது. இதற்கு நீதிபதிகள், ‘‘பள்ளி வாகனப் பாதுகாப்பு விதிமுறைகளை உருவாக்குவதில் தமிழக அரசு அதிக மெத்தனம் காட்டுகிறது. இது முக்கிய விஷயமாகத் தமிழக அரசுக்குத் தெரியவில்லையா?’’ என்று கண்டனம் தெரிவித்தனர்.
கண்டனம்-9:
சட்டவிரோதமாகக் கழிவுநீர் இணைப்புகள் வைத்திருப்பவர்களுக்கு எவ்வளவு அபராதம் என்று நீதிமன்றம் ஒரு வழக்கில் கேள்வி எழுப்பியது. அதற்கு அதிகாரிகள், ‘‘ரூ.100 முதல் 2 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது’’ என்று பதிலளித்தனர். இதற்குக் கண்டனம் தெரிவித்த நீதிமன்றம் அபராதத் தொகையை அதிகரிக்கச் சொல்லி உத்தரவிட்டது.
கண்டனம்-10:
மருத்துவக் கவுன்சிலின் விதிப்படி, மருத்துவக் கல்லூரிகளில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறதா என்று அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இதற்குக் கால அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘‘எத்தனை முறை அவகாசம் வழங்குவது? ஒவ்வொரு முறையும் இதுபோன்ற கால அவகாசம் கேட்பது சரியானது அல்ல’’ என்று அரசுக்குக் கண்டனம் தெரிவித்தனர். அத்துடன், தமிழக சுகாதாரத் துறை செயலர், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர், இந்திய மருத்துவ கவுன்சில் செயலாளர் ஆகியோருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.
கண்டனம்-11:
மதுரை சிறார் சிறைச்சாலை வசதி குறைவாக இருக்கிறது என்பதை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது சென்னை உயர் நீதிமன்றம். இதற்கு சமூகநலத் துறை, ‘திருச்சி சிறார் காப்பகம் சிறந்த முறையில் கட்டப்பட்டு இருக்கிறது’ என்று பதிலளித்தது. இதற்கு நீதிபதிகள், ‘‘மதுரையைப் பற்றிக் கேட்டால் திருச்சி பற்றித் தகவல் தருகிறீர்கள். இதைக்கூடச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை’’ என்று கண்டனம் தெரிவித்தனர்.
கண்டனம்-12:
ஆறாவது சம்பள கமிஷன்படி, சம்பளம் தரசொல்லி சேலம் கூட்டுறவுச் சர்க்கரை ஆலை மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கில், ஆசிரியர்களுக்கு சாதகமாகத் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இருந்தும் சம்பளம் வழங்காததால், ஆசிரியர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் போட்டனர். அப்போது, ‘நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகள் இனி சிறைக்கு அனுப்பபடுவார்கள்’ என்று கண்டித்தனர்.
கண்டனம்-13:
மழலையர் பள்ளி விதிமுறைகளை மீறிய பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், புதிய விதிமுறைகளை உருவாக்கக் கோரியும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கும் கால அவகாசம் கேட்டனர் அதிகாரிகள். அதற்கு அடுத்த முறை விசாரணையின்போது, பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் சபீதா நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
கண்டனம்-14:
‘‘நெடுஞ்சாலை பணிகளின்போது, 200 ஆண்டுகள் பழமையான மரங்களை வேறொரு இடத்தில் நடவேண்டும்’’ என்று வழக்கு ஒன்றில் நீதிபதிகள் தெரிவித்தனர். அதற்குத் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இருந்த புகைப்படங்களைப் பார்த்து நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர். ‘‘புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரங்களை வேரோடும், வேரடி மண்ணோடும் எடுத்து வேறு இடங்களில் நடவேண்டும். ஆனால், தமிழக அரசு ஜே.சி.பி வாகனத்தைப் பயன்படுத்தி, மரத்தை வெட்டிச் சாய்த்து, வேறு ஓர் இடத்தில் நட்டுள்ளனர். இதுவா தொழில்நுட்பம்? தமிழக அரசு அதிகாரிகள் டெல்லி சென்று, அங்குள்ள மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் மரங்களை எப்படி வேறு இடங்களில் நட்டனர் என்ற புதிய தொழில்நுட்பத்தைப் படித்துவந்து, அந்த முறையை இங்கு பயன்படுத்துங்கள்’’ என்று உத்தரவிட்டனர்.
கண்டனம்-15:
காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்பவர்களைத் தாக்குவது தொடர்பான சி.சி.டி.வி கேமரா வைக்கக்கோரிய வழக்கில், நான்கு வார கால அவகாசம் கொடுத்தது நீதிமன்றம். வழக்கம்போல பதில் மனுத் தாக்கல் செய்யவில்லை அரசு. அதற்காகக் கண்டனத்தோடு உள்துறைச் செயலருக்கும், டி.ஜி.பி-க்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


கண்டனம்-16:
கிரானைட் கொள்ளை குறித்து விசாரணை செய்ய சகாயம் தலைமையில் குழு அமைத்தது உயர் நீதிமன்றம். அதை எதிர்த்துத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய, அது தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் மறுசீராய்வு மனுப் போட்டது தமிழக அரசு. அதை விசாரித்த நீதிபதிகள், ‘‘சகாயம் விசாரித்தால் உங்களுக்கு என்ன பயம்? நீங்கள் ஏன் விசாரிக்கவில்லை’’ என்றதோடு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து வழக்கைத் தள்ளுபடி செய்தனர். இதுமட்டுமில்லாமல், பொது இடங்களில் இருக்கும் மதுக்கடைகள் தொடர்பான வழக்கு, மாநகராட்சி மீது தொடரப்பட்ட வழக்கு, பார்வையற்றோருக்குப் பணி தராது தொடர்பான வழக்கு எனப் பலமுறை நீதிமன்ற கண்டனத்துக்கு ஆளாகி இருக்கிறது தமிழக அரசு. இதுவரை வேறு எந்த அரசும் இந்த அளவுக்குக் கண்டனங்களைச் சந்தித்தது இல்லை.
‘‘விமர்சனம் என்பது ஜனநாயகத்தின் ஒரு வழி!’’
இதுதொடர்பாக வழக்கறிஞர் ரமேஷிடம் பேசினோம், ‘‘இதுவரை தமிழக அரசின் சார்பில் 213-க்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருக்கின்றன. இவை அனைத்துமே கிரிமினல் சட்டத்துக்கு உட்பட்டவை. கிரிமினல் சட்டத்தின் 499-வது பிரிவின்படி, பொதுவாழ்வில் இருப்பவர்களின் செயல்பாடுகள் பற்றி விமர்சிப்பது அவதூறு வழக்கு ஆகாது என்று சொல்லப்பட்டிருக்கிறது. இருப்பினும், இந்த அரசு அவதூறு வழக்குகளை கவனித்துக்கொள்வதற்காகவே தனியே ஒரு சிறப்பு வழக்கறிஞரை நியமித்து இருப்பதன்மூலம் அனைவரையும் மிரட்டப் பார்க்கிறது. விமர்சனம் என்பதும் ஜனநாயகத்தின் ஒரு வழிதான். அதன்மூலம் தன் தவறுகளை ஓர் அரசு திருத்திக்கொள்ள முடியும். ஆனால், அ.தி.மு.க அரசு தனக்கு எதிராக யாரும் வாயை திறக்கக் கூடாது என்கிற முடிவில் இருப்பது பத்திரிகைகளின் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளின் எண்ணிக்கையிலேயே தெரிகிறது. நீதிமன்றத்தின் கண்டனத்தைக் கருத்தில்கொண்டாவது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.
இதுகுறித்து அ.தி.மு.க வழக்கறிஞர் ஜெகனிடம் பேசினோம். ‘‘அவதூறு வழக்கை நாங்கள் எங்கள் இஷ்டத்துக்குப் பயன்படுத்துவதுபோல ஒரு தோற்றம் உருவாகி இருக்கிறது. நாங்கள் ஒருபோதும் அவ்வாறு செய்தது இல்லை. பதியப்பட்ட வழக்குகள் அனைத்திலும் வலுவான ஆதாரங்கள் இருக்கின்றன. நடவடிக்கைகளை விமர்சிக்கலாம் என்று சொல்கிறார்கள். துணைவேந்தர்கள் நியமனத்தில் முதல்வர் லஞ்சம் வாங்கிவிட்டார், அரசு செயல்படாமல் இருக்குகிறது என்று எழும் விமர்சனங்களை எப்படி ஏற்றுக்கொள்வது? கருத்துச் சுதந்திரம் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்று ஆகிவிடாது. சட்டசபைக்குள் ஆக்கபூர்வமான விஷயங்களை விவாதிக்கலாம். ஆனால், வெளியே நின்றுகொண்டு மைக் கிடைத்துவிட்டது என்பதற்காக, தவறாகப் பேசுபவர்களின் மீதுதான் நாங்கள் அவதூறு வழக்குகள் போட்டிருக்கிறோம்’’ என்றார்.




'தர்மதுரை'யில் ராதிகாவை அவமானப்படுத்தவில்லை... சீனு ராமசாமி விளக்கம்!

மீபத்தில் ராதிகா நடித்த 'தர்மதுரை' திரைப்படத்தைப் பார்த்த சரத்குமார் கோபமானார். 'தமிழ் சினிமாவின் சீனியர் நடிகையான ராதிகாவுக்கு டைட்டில் கார்டில் உரிய மரியாதை தராமல் அவமானப்படுத்தி விட்டனர் 'என்று கொந்தளித்து இருக்கிறார், சரத்குமார். 'தர்மதுரை' படத்தின் இயக்குநரான சீனு ராமசாமியிடம் சரத்குமார் கோபம் குறித்து விளக்கம் கேட்டோம். 


''ராதிகா மேடத்தை நான் எந்தளவுக்கு மதிக்கிறேன் என்பதை 'தர்மதுரை' படத்தில் அவர் நடித்திருக்கும் கதாபாத்திரத்தை பார்த்தாலே புரியும். இந்தப்படம் அந்தம்மாவின் மரியாதையில் மணிமகுடம் சூட்டும். ராதிகா மேடத்தோடு பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய கனவு.
'தென்மேற்கு பருவக்காற்று' படத்துக்கு கதை எழுதிவிட்டு அம்மா கேரக்டரில் மேடம் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு ராதிகா மேடத்தின் ராடன்டிவி ஆபீஸுக்கு ஒரு வருஷம் அலையாய் அலைந்தேன்.  அவரை என்னால்  பார்க்கமுடியாமலே போய்விட்டது.  அதன்பின் 'தென்மேற்கு பருவக்காற்று' ரிலீஸாகி சரண்யாவுக்கு தேசீயவிருது கிடைத்தது. அப்போது ஒருமுறை ராதிகா மேடத்தை சந்தித்தேன். 'மேடம் சரண்யா நடிச்ச கேரக்டர்ல நீங்க நடிக்க வேண்டியது. உங்களைத்தேடி ராடன்டிவி ஆபீஸுக்கு வந்தேன் பார்க்க முடியலை' என்கிற தகவலை சொன்னேன். 
'தர்மதுரை' படத்துக்காக 25-நாட்கள் அவுட்டோர் ஷுட்டிங்கில் மேடம் கலந்து கொண்டார். அப்போது ஐந்து நாட்கள் மட்டுமே அவர்கள் நடிக்கும்காட்சிகளை படமாக்கினேன்.  அதன்பின் சென்னைக்கு அனுப்பி விடுவேன். அப்புறம் இடைவெளிவிட்டு ஐந்து ஐந்து நாட்களாகத்தன் படம்பிடித்தேன். ஏனென்றால் அவர்கள் ஒரு  இல்லத்து அரசி ராடன்டிவி தயாரிப்பு நிறுவனத்தின் தலைவி என்கிற நிலைகளை எல்லாம் உணர்ந்துதான் அவர்களுக்கு உரிய மாரியாதையை படப்பிடிப்பில் கொடுத்தேன்.


என்னுடைய உதவி டைரக்டர்களிடம் சீனியர் நடிகரான ராஜேஷ் பெயருடன் ராதிகா மேடத்தின் பெயரை போடச் சொன்னேன்.  தனித்து டைட்டில் கார்ட்யில் போட்டு இருக்க வேண்டும் என்பது சரத்சாரின் விருப்பம் முன்பே சொல்லி இருந்தால் செய்து இருப்போம்.  நானே ராதிகா மேடத்துக்கு ' இது இப்போ பேச வேண்டிய விஷயமே கிடையாது. ஏதோ கவனக்குறைவால் நடந்துவிட்ட ஒன்று. சரத்சார் இப்படி கருத்து தெரிவித்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை' என்று மெசேஜ் அனுப்பினேன்" என்று  தனது தரப்பைச் சொன்னார்.

உங்கள் குழந்தைக்கான உரிமையை வீட்டில் கொடுக்கிறீர்களா?

குழந்தைகளுக்கான உரிமைகள் என்றதுமே பள்ளிக்கூடத்தில்,பொதுஇடத்தில் என்றுதான் யோசனை வரும்ஆனால் குழந்தைகளுக்கன உரிமைகள் அது கருவாக அம்மாவின் வயிற்றுக்குள் இருக்கும்போதிருந்தே தொடங்கிவிடுகிறது.  அவைப் பற்றிதோழமை குழந்தைகள் உரிமைகளுக்கான அமைப்பின் இயக்குநர் அ.தேவநேயன் கூறுகிறார்.

1. கர்ப்பத்தில் இருப்பது ஆண் குழந்தையாபெண் குழந்தையாமாற்றுத் திறனாளியா எனப் பார்த்து இனம் கண்டறிந்து கருக்கலைப்பு செய்துவிடாமல் காப்பது.

2. கர்ப்பக் காலத்தில் தாய்க்கு சரிவிகித உணவு

தேவையான தடுப்பூசிகள்
,மனதைப் பாதிக்காத சூழல் ஆகியவையும் அவசியம்.

3. குழந்தைப் பிறந்ததும் தாய்ப்பால் தரப்படுவதும் குறிப்பாக சீம் பால் கொடுக்கப்பதும் குழந்தையின் அடிப்படை உரிமை.

4. குழந்தைப் பிறந்த குறிப்பிட்ட தினங்களில் பிறப்புச் சான்றிதழ் பெறுவது மிக முக்கியமானதுதவறும்போது எதிர்காலத்தில் அதன்பொருட்டு ஏராளமான சிக்கல்களை குழந்தை எதிர்கொள்ளவேண்டிருக்கும்.

5. குழந்தையின் ஆரம்ப கால பராமரிப்பு கவனத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டும்தேவையான எடையுடன் தடுப்பூசிசத்தான உணவுகள் தரப்பட வேண்டும்.

6. குழந்தை பிறந்த 1000 நாட்களுக்குள்வழக்கமான உடல் திறனோடு இருக்கிறதா அல்லது ஏதேனும் குறைகள் இருக்கிறதா என்பதை இனம் கண்டு அதற்கு தகுந்த மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

7. குழந்தையைப் பராமரிப்பு மையத்தில் விடுவோர்குழந்தையின் பாதுகாப்பு குறித்து நூறு சதவிகிதம் திருப்தி அடைந்தால் மட்டுமே அங்கு குழந்தையை விட வேண்டும்.


8. குழந்தைகள் வீட்டில் தங்கள் கருத்துகளை அச்சமற்று பகிர்ந்துகொள்ள்ளும் சூழலும் கல்விஉடைத் தேர்வு உள்ளிட்டவற்றில் குழந்தையின் கருத்துகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

9. ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்திறன் இருக்கும்அதை இனம் கண்டு அங்கீகரிப்பதும் மற்றவரோடு ஒப்பிட்டு குறை சொல்லவும் கூடாது.

10. சிறு குறைகள் இருக்கும் (பேசும்போது திக்குவது போன்ற)குழந்தைகளைஎந்தச் சூழலிலும் புறக்கணிக்காமல் வளர்ப்பதும் அவர்களுக்கான வாய்ப்புகளைத் தவிர்த்துவிடாமல் ஊக்கப்படுத்தவும் வேண்டும்.

11. குழந்தைகளில் ஆண்பெண்மாற்றுத்திறனாளி எனப் பேதம் பார்க்காமல் சமத்துவத்துடன் நடத்தப்பட வேண்டும்அவர்களின் விருப்பங்களை நிராகரிக்கவோ புண் படுத்தவோ கூடாது.

12. குழந்தைகளின் முகத் தோற்றம்பழகும் இயல்பு ஆகியவற்றை வைத்து திட்டவோகுறைக்கூறவோ கூடாது.

(குரங்கு சேட்டையெல்லாம் செய்யறான் என்பதுபோல)

13. பெற்றோர்களே குழந்தைகளின் ரோல் மாடல் என்பதால் அவர்களின் முன் தகாத சொற்கள் பேசுவதுசண்டைப் போடுவது என்பதை தவிர்த்து குடும்பத்தில் ஜனநாயகத் தன்மை நிலவுவதை குழந்தைகள் உணரும் விதத்தில் குடும்பச் சூழலை உருவாக்கி தர வேண்டும்.

சின்ன விஷயங்களும் குழந்தைகளின் மனதில் பெரும் மாற்றங்களைத் தந்துவிடும்அந்த மாற்றம் நல்லதுகெட்டது என இரண்டு வகைகளிலும் அமைந்துவிடும்மேலே உள்ளவற்றை அவர்களின் உரிமைகள் என்பதாக நினைக்காமல் பெற்றோரின் கடமையாக நினைத்தாலே எந்தச் சிக்கலும் வராது.