Monetize Your Website or Blog

Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

Friday, 26 August 2016

கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் தவிர்ப்போம்: கண்களைக் காக்கும் 10 கட்டளைகள்

'கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்' என்பது நாள்தோறும் அதிகரித்து வரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. தினமும் 6-8 மணி நேரத்துக்கு மேல் கம்ப்யூட்டர், டேப்லெட், மொபைல் பயன்படுத்துபவர்களுக்கு கண்களில் ஏற்படும் பிரச்னைகளை 'கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்' என்கிறோம். பார்வைக்குறைபாடு, கண்களில் நீர்வடிதல், அரிப்பு, எரிச்சல் உட்பட பல்வேறு பாதிப்புகள் இதனால் ஏற்படுகின்றன.


1.போதுமான வெளிச்சம் இருக்கட்டும்
கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அறையில் போதுமான வெளிச்சம் இருப்பது அவசியம். இருட்டான, வெளிச்சம் அற்ற அறையிலோ அதிக வெளிச்சமான அறையிலோ கம்ப்யூட்டரைப் பயன்படுத்த வேண்டாம். கம்ப்யூட்டர் திரைக்குப் பக்கவாட்டில் இருந்து வெளிச்சம் வரும்படியாக இருப்பது நல்லது. தலைக்கு நேர் மேலே இருந்து வெளிச்சம் விழும்படியாக அமர்வதை இயன்றவரை தவிர்க்க வேண்டும். அளவான வெளிச்சம் உள்ள ஃப்ளோரோசன்ட், எல்.இ.டி பல்புகளைப் பயன்படுத்தலாம்.


2.கிளாரைத் தவிர்க்கவும்
கம்ப்யூட்டர் திரையில் கிளார் விழுவதைத் தவிர்ப்பது மிகவும் முக்கியம். கம்ப்யூட்டர் திரைக்குப் பின்புறம் ஜன்னல், கதவு, லைட் இருந்தால், அதிக வெளிச்சம் காரணமாகத் திரையில் கிளார் அடிக்கும். இப்படி கிளார் அடிக்கும் மானிட்டரைத் தொடர்ந்து பார்க்கும்போது, கண்கள் பாதிக்கப்படுகின்றன. மேலும், கண்ணாடி பயன்படுத்துபவர்கள்​`ஆன்டிரிஃப்ளெக்டிவ்​'​ கண்ணாடிகள் அணிவது கிளாரைத் தடுக்க உதவும்.
3.எல்.சி.டி/எல்.இ.டி மானிட்டரைப் பயன்படுத்துங்கள்
பழைய சி.ஆர்.டி (கேத்தோட் ரே ட்யூப்) மானிட்டர்களில் பெரும்பாலும் ஆன்டிரிஃப்ளெக்டிவ் கோட்டிங் இருக்காது. இதனாலும் கண்கள் பாதிக்கப்படலாம். எனவே, எல்.சி.டி/ எல்.இ.டி மானிட்டர்களைப் பயன்படுத்துங்கள். ரெசல்யூஷன் அதிகமாக உள்ள மானிட்டர்களைப் பயன்படுத்துவது கண்களுக்கு நல்லது. ரெசல்யூஷன் என்பது `டாட்பிட்ச்’ எனப்படும் ஒளிப்புள்ளிகளின் எண்ணிக்கையால் தீர்மானிக்கப்படுகிறது. பொதுவாக, குறைவான ஒளிப்புள்ளிகள் துல்லியமான உருவங்களை உருவாக்குகின்றன. டிஸ்ப்ளேவில் 0.28 மி.மீட்டருக்குக் குறைவான ஒளிப்புள்ளிகள் இருப்பது நல்லது.
4.கான்டாக்ட் லென்ஸ்
கான்டாக்ட் லென்ஸ் உபயோகிப்பவர்கள், தொடர்ந்து கம்ப்யூட்டரைப் பார்க்கும்போது மற்றவர்களைவிட கண் எரிச்சல் போன்ற பிரச்னையால் பாதிக்கப்பட நான்கு மடங்கு வாய்ப்பு அதிகம் என்கிறார்கள். சாதரண கான்டாக்ட் லென்ஸ்களைவிட சிலிக்கான் ஹைட்ரோஜெல் கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவது ஓரளவு நல்ல பலனைத் தரும்.
5.டிஸ்ப்ளே செட்டிங்ஸ்
டிஸ்ப்ளே செட்டிங்ஸை சீராக்குவது ஓரளவுக்கு நல்ல பலனைத் தரும். மானிட்டரின் பிரைட்னெஸ் எப்போதும் உங்களைச் சுற்றி உள்ள சூழலின் வெளிச்சம் எவ்வளவு உள்ளதோ அதே அளவு இருக்கட்டும். கண்களை உறுத்தாத, கண்களைச் சுருக்கிப் பார்க்கச் செய்யாத இயல்பான வெளிச்சமே நல்லது.
​'​டெக்ஸ்ட் சைஸ்​'​ எப்போதும் கான்ட்ராஸ்ட்டுக்கு இயல்பாக இருக்கட்டும். குறிப்பாக, நீளமான டாக்குமென்ட் ஃபைல்களில் வேலை செய்யும்போதும் படிக்கும்போதும் வெள்ளைப் பின்புறத்தில் கறுப்பு எழுத்துக்களாக இருப்பது நல்லது.​ படிக்கும்போது எழுத்துக்களை பெரிய அளவில் வைத்து படித்துவிட்டு, பிறகு நார்மலான அளவுக்கு மாற்றிக்கொள்ளலாம்.​
`கலர் டெம்ப்பரேச்சர்’ என்று ஒரு ஆப்ஷன் உண்டு. இது, கணிப்பொறித் திரையில் இருந்து வெளிப்படும்  ஒளிக்கற்றைகளின் அளவைக் குறிக்கும். நீல வண்ண வெளிச்சம் என்பது குறைந்த அலை நீளம் உடையது. எனவே, கண்களை அதிகம் சிரமப்படுத்தும். சிவப்பு, ஆரஞ்சு போன்றவற்றின் அலை நீளம் அதிகம் என்பதால், அவை ஓரளவு குறைவாகவே கண்களைப் பாதிக்கும். கலர் டெம்ப்பரேச்சரைக் குறைப்பதன் மூலம், நீள அலைக்கற்றைகளைக் குறைத்து, கண்களைப் பாதுகாக்கலாம்.
6.கண்களைச் சிமிட்டுங்கள்
பொதுவாக, கண்களைச் சிமிட்டும் பழக்கம் என்பது, கண்களை உலர்வின்றி ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும். கணிப்பொறியைப் பயன்படுத்தும்போது கண் சிமிட்டுவது பாதிக்கப்படுகிறது. மேலும், சில சிமிட்டல்கள் முழுமையற்றதாக அரைச் சிமிட்டல்களாகிவிடுகின்றன. கண்களில் உள்ள நீர் இதனால் வேகமாக ஆவியாகிறது. உலர்ந்த கண் பிரச்னை இருப்பவர்கள் மருத்துவரிடம் ஆலோசித்து, 'செயற்கை கண்ணீர்த் துளிகளை' விட்டுக்கொள்ளலாம். கண் சிவப்பை நீக்குவதற்காகத் தரப்படும் கண் சொட்டு மருந்துடன் இதனைக் குழப்பிக்கொள்ள வேண்டாம். கண் சொட்டு மருந்துகளில் கண் சிவப்பை நீக்குவதற்காக ரத்தநாளங்களைச் சுருக்கும் வேதிப்பொருட்கள் இருக்கும். இவை, கண் உலர்தலையோ அரிப்பையோ போக்கும் என்று சொல்வதற்கு இல்லை. ஒவ்வொரு 20 நிமிடங்களுக்குப் பிறகும் 10 முறை கண்களைச் சிமிட்டலாம்.
7.கண் பயிற்சிகள்
தொடர்ந்து உலர்வான கண்களோடு கணிப்பொறியை வெறிப்பது,​ கண்களுக்கும் நரம்புகளுக்கும் சோர்வைத் தரும். இதைப் போக்க 20:20:20 என்று ஓர் எளிய பயிற்சி உள்ளது. அதாவது 20 நிமிடங்களுக்கு ஒருமுறை 20 அடி தொலைவில் உள்ள ஒரு பொருளை (அது பச்சை வண்ணத்தில் இருப்பது நல்லது) 20 விநாடிகள் இமைக்காமல் பார்க்க வேண்டும். இப்படிச் செய்வதால் தூரப்பார்வை, கிட்டப்பார்வை தொந்தரவுகள் ஏற்படாது.​ கம்ப்யூட்டர் அருகில், இண்டோர் செடிகளை வளர்ப்பதன் மூலம், செடியின் பச்சை நிறம் கண்களுக்கு சற்று ஓய்வை தரும்.​


8.கண்களுக்கு ஓய்வு கொடுங்கள்
கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம், கழுத்துவலி, தோள்பட்டை வலி போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தவிர்க்க, தொடர்ந்து கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதற்கு இடையே போதுமான ஓய்வு கொடுங்கள். நாள் முழுதும் அமர்ந்து வேலை செய்துகொண்டிராமல், குறைந்தது இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை எழுந்து ஒரு நடைவிடுங்கள். கை, கால், கழுத்தை ஸ்ட்ரெச் செய்யுங்கள், கண்களைச் மேலும், கீழும், இடது வலதுபுறங்களில் வட்டமாகவும் சுழற்றிப் பயிற்சி கொடுங்கள்.
9.வேலைச் சூழலை கண்களுக்கு ஏற்ப ​மாற்றுங்கள்
அச்சடிக்கப்பட்ட காகிதத்தையோ புத்தகத்தையோ பார்த்து டைப் செய்யும்போது, கணிப்பொறித் திரையையும் காகிதத்தையும் மாறி மாறி பார்ப்பதால் கண்கள் பாதிக்கப்படுகின்றன. இதைத் தவிர்க்க புத்தகத்தையோ தாளையோ மானிட்டரின் அருகில் ஒரு ஸ்டாண்டு வைத்து அதில் பொருத்தலாம். அதேபோல, அந்தத் தாளின் மீது போதுமான வெளிச்சம் இருப்பதும் முக்கியம். கணிப்பொறித் திரை கண் மட்டத்திலிருந்து 40 டிகிரி சாய்வாக இருப்பது நல்லது. கண்களுக்கும் கணிப்பொறி திரைக்கும் இடையே அரைமீட்டர் இடைவெளியாவது இருப்பது நன்று. எர்கோனாமிக் நாற்காலியில் அமர்ந்து பணிபுரிவது உடலின் போஸ்ச்சரைப் பாதுகாக்கும். கழுத்துவலி, கைவலி, முதுகுவலி, இடுப்புவலி என உடல்வலிகளில் இருந்து காக்கும்.


10.கண் பரிசோதனை
வருடத்துக்கு ஒருமுறை கண் மருத்துவரைச் சந்தித்து கண்களைப் பரிசோதியுங்கள். கம்ப்யூட்டரை நீங்கள் பயன்படுத்தும் விதம், நேரம் போன்ற தகவல்களை அவரிடம் தெரிவியுங்கள்.

Thursday, 25 August 2016

குழந்தைகளின் பல் பராமரிப்பிற்கு முத்தான 10 டிப்ஸ்!

மழலைகளின் புன்னகை.... அனைவருக்குமே மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுப்பவை. குழந்தைகளின் முத்துப்போன்ற பற்களை பராமரிக்கத் தேவையான ஆலோசனைகளை கொடுக்கிறார், சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் டாக்டர் உமாராணி ராமேஸ்வரன்.
* பிறந்த நாளில் இருந்தே குழந்தையின் பல் பராமரிப்பில், பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். பால் பற்கள் முளைத்திராத குழந்தைகள் பால் குடித்து முடித்த ஒவ்வொரு முறையுமே, நம் விரலில் தூய்மையான துணியை சுற்றி குழந்தையின் ஈறுகளை நன்றாக சுத்தம் செய்துவிடவேண்டும்.


* குழந்தைகளுக்கு பால் பற்கள் முளைத்ததும், அவர்களுக்கென இருக்கும் பிரத்தியேக டூத் பிரஷ், பேஸ்ட்(பற்பசை) கொண்டு தினமும் காலை, இரவு என இரு வேளைகளிலும் பல் துலக்கிவிடவும். பின்னர் பெரியவர்கள் பயன்படுத்தும் டங்க் க்ளீனரை பயன்படுத்தாமல், தூய்மையான  துணியாலோ அல்லது குழந்தைக்கு பல் துலக்கப் பயன்படுத்தும் பிரஷ் கொண்டோ நாக்கினை சுத்தம் செய்துவிடலாம்.
* பெரும்பாலான அம்மாகள், இரவு நேரத்தில் பால் புட்டியை வாயில் வைத்தபடியே குழந்தைகளை தூங்க வைப்பார்கள். அதனால் இரவு முழுக்க குழந்தையின் பற்களில் பாலில் இருக்கும் இனிப்பு, பாக்டீரியாக்களுடன் வினைபுரிய வாய்ப்பிருக்கிறது. இச்செயல்பாடு தொடர்ந்தால், சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு பல் சொத்தை உள்ளிட்ட பிரச்சனைகள் வர வாய்ப்பிருக்கிறது. மேலும் அனைவருமே இனிப்பு சார்ந்த எந்த பொருட்களை சாப்பிட்ட பின்னரும் தண்ணீரால் வாயை கொப்பளித்து மற்றும் தண்ணீர் குடிப்பதன் மூலம் இனிப்பானது ஓராளவாவது பற்களில் தங்குவதை தவிர்க்க முடியும்.


* பால் பல் பிரச்சனை தானே; நிரந்த பற்கள் முளைக்கும்போது சரியாகிவிடும் என குழந்தைகளின் பல் பராமரிப்பில் பல பெற்றோர்களும் போதிய கவனமின்மை மற்றும் விழிப்புணர்வின்மையுடன் இருப்பார்கள். பால் பற்கள், நிரந்தர பற்களின் சக்தியையும் தாங்கி வளர்கின்றன என்பதால், பால் பல் பிரச்சனை நிரந்தர பற்களும் ஏற்பட்டுவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.  
* குழந்தைகளின் 7-12 வயதிற்குள் பால் பற்கள் விழுந்து நிரந்தர பற்கள் முளைத்திருக்க வேண்டும். இதில் எதாவது பிரச்சனைகள் இருப்பின், கட்டாயமாக பல் மருத்துவரை அணுக வேண்டும்.

* வாயில் விரல் வைத்து சூப்புவது, நாக்கினை இரண்டு பற்களுக்கு இடைபட்ட பகுதியில் அடிக்கடி வைத்துக்கொள்வது போன்ற செயல்பாடுகளை பெரும்பாலான குழந்தைகள் செய்வார்கள். இதனால் அவர்கள் பல் வரிசை சீரற்றதாகவும், முக அமைப்பு மாறவும் வாய்ப்பிருக்கிறது. குழந்தைகளுக்கு தொடர்ந்து விரல் சூப்பும் பழக்கம் இருந்தால், விரல்களில் வேப்பம் எண்ணெய்யை(Neem Oil) தடவி விடலாம். பல குழந்தைகள் விரலில் தடவிய எண்ணெய்யை துடைத்துவிட்டு, மீண்டும் விரல் சூப்புவார்கள். இப்படி தவிர்க்க முடியாத சூழலில் பல் மருத்துவரை அணுகி, பிரச்சனையை தீர்க்கும் வழிமுறைகளை செய்யலாம்.
* குழந்தைகளின் தாடை அமைப்பு, பல் வரிசை ஆகியவை சரியாக இருக்கின்றதா என அவ்வபோது கவனிக்க வேண்டும். பல் வரிசை சீரற்ற தன்மையில் இருந்தால் எந்த வயதில் க்ளிப் அணிய வேண்டும், எந்த வகையான க்ளிப் அணிய வேண்டும் என்பது போன்ற விபரங்களை பல் மருத்துவரின் ஆலோசனை பெற்று செய்யலாம்.
* குழந்தைகளை தினமும் இரு வேளைகளிலும் பல் துலக்க வேண்டும் என சொன்னால், நீ இரண்டு வேளைகளிலும் பல் துலக்குகிறாயா? என நம்மையே எதிர்கேள்வி கேட்பார்கள். ஆக பெற்றோர்களாகிய நாமும் தினமும் இருவேளைகளிலும் பல் துலக்குவதை கட்டாயமாக செய்தால்தான், நாம் சொல்வதை குழந்தைகளும் கேட்பார்கள்.
* சிறு வயதிலேயே ஐஸ்கிரீம், சாக்லேட், பிஸ்கட் சாப்பிட்டால் பல் பிரச்சனைகள் வரும் என பல பெற்றோர்களும் குழந்தைகளை கண்டிப்புடன் வளர்ப்பதுண்டு. சிறு வயதில் இதுபோன்ற உணவுப் பொருட்களை மகிழ்ச்சியுடன் சாப்பிடுவதை தவிர்க்காமல், கட்டுப்பாடுடன் சாப்பிடச் சொல்லுங்கள். ஆனால், சாப்பிட்டதும் அவர்களாகவே வாய் கொப்பளித்துக் கொள்ள பழக்கப்படுத்துங்கள்.


* சிறு வயதிலேயே பல் சொத்தை, இடைவிடாத பல் கூச்சமும், பல் வலியும், சீரற்ற பல்வரிசை என எத்தகைய பல் சார்ந்த பிரச்சனைகளாக இருந்தாலும் அருகிலுள்ள மெடிக்கல், பல் சாராத மருத்துவர்களை அணுகி மாத்திரை வாங்கிச் சாப்பிடுவதை தவிர்த்து, பல் மருத்துவரை அணுகி பிரச்சனையை ஆரம்ப கட்டத்திலேயே சரிசெய்து கொள்வது சிறந்தது.

புற்றுநோயைத் தடுக்கும் 5 சமையல் பொருட்கள் !


பலமானவரையும் உருக்கிப்போட்டுவிடும் அசுரபலம் கொண்டது புற்றுநோய். வந்த பிறகு அவஸ்தைப்படுவதைவிட, வருமுன் காப்பதே புத்திசாலித்தனம். புகைபிடிப்பது, புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவது, உடல் உழைப்பில்லாமல் இருப்பது, ஆரோக்கியமற்ற உணவுகளைச் சாப்பிடுவது, ஊட்டச்சத்துக் குறைபாடு, மனஅழுத்தம், மனச்சோர்வு, காஸ்மெட்டிக் பொருட்களை அதிகம் உபயோகிப்பது, பிளாஸ்டிக் பயன்பாடு... எனப் புற்றுநோய்க்கான காரணிகள் ஏராளம். இவற்றைத் தவிர்ப்பது ஒருபுறம் இருக்கட்டும். இயற்கையாகவே புற்றுநோயை எதிர்த்துப் போராடும் சக்திகொண்ட சில சமையல் பொருட்களும் மூலிகைகளும் இருக்கின்றன. அவற்றை நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தினாலே போதும்; புற்றுநோயை அண்டவிடாமல் பார்த்துக்கொள்ளலாம். அவை...


                                          
இஞ்சி
நாட்டுவைத்தியத்தில் இஞ்சியின் பயன்பாடு மிக முக்கியமானது. நம் முன்னோர்கள் சளித் தொந்தரவில் இருந்து மூலநோய் வரைக்கும் இஞ்சியை மருந்தாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இஞ்சியை அப்படியே ஃபிரெஷ்ஷாகவோ பௌடராகவோகூடப் பயன்படுத்தலாம். சமைக்கும்போது மட்டும், அளவில் கவனம் தேவை. ஒரு டீஸ்பூன் நறுக்கிய இஞ்சி என்பது, 1/8 டீஸ்பூன் இஞ்சி பௌடருக்குச் சமம். சமையலில் இஞ்சி சேர்ப்பது சுவையைக் கூட்டும்; சமைத்த பொருள் சீக்கிரம் கெட்டுப்போகாமல் பாதுகாக்கும்; ஆரோக்கியத்துக்கு உதவும்; குடல், வயிறு ஆகியவற்றைப் புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும்.
                                       
மஞ்சள்
உணவின் நிறத்துக்காகப் பயன்படுகிறது என நாம் நினைக்கும் மஞ்சள் மகத்தானது. மஞ்சளில் இருக்கும் மஞ்சள் நிறம் அபாரமாகச் செயல்புரியும் தன்மை கொண்டது. இது, ஆன்டிஆக்ஸிடன்ட்டாகச் செயல்படுகிறது. குர்குமின் (Curcumin) என்ற சத்து, புற்றுநோய் வளராமல் பாதுகாக்கிறது. தினமும் கால் டீஸ்பூன் அளவு உணவில் சேர்த்து கொள்வது நல்லது. குடல், ப்ராஸ்டேட், மார்பகம் மற்றும் தோல் தொடர்பான புற்றுநோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் மஞ்சளுக்கு உண்டு.
                                           
சிவப்பு மிளகாய்
நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் சிவப்பு மிளகாயேதான்... அதன் ஆற்றலோ அபாரம். இதில் இருக்கும் காரத்தன்மையில் உள்ள சேர்மானம் வலியில் இருந்து நிவாரணம் தரக்கூடியது; தோலுக்குப் பாதுகாப்பு தரக்கூடியது; செரிமானக்கோளாறுகளைச் சரி செய்யக்கூடியது. சிவப்பு மிளகாயை அளவோடு சமையலில் சேர்த்துக்கொள்வது தோல் தொடர்பான புற்றுநோயில் இருந்து பாதுகாப்பளிக்கும்.


                                                       
பூண்டு
மருத்துவக் குணம் கொண்ட பூண்டு உடலில் சேரும் நச்சுக்களை முறிக்க வல்லது. இதை, அன்றாடம் சமையலில் சேர்த்துக்கொள்வது நல்லது. பூண்டில் இருக்கும் சல்ஃபர், ஆர்ஜினைன், ஃப்ளேவனாய்ட்ஸ் மற்றும் செலினியம் எல்லாமே உடல் ஆரோக்கியத்துக்கு உதவுபவை. பூண்டை நசுக்கும்போது அதிலிருந்து கிளம்பும் மணத்துக்குக் காரணம், பூண்டில் இருக்கும் ஆலிசின் (Allicin) என்ற சேர்மானம்தான். பூண்டு உடலில் சேரும் கொழுப்பைத் தடுக்க உதவுகிறது. மார்பகம், குடல், வயிறு, உணவுக்குழாய், கணையம் ஆகியவற்றில் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது. ’லுகூமியா’ எனும் ரத்தப் புற்றுச் செல்களை அழிப்பதில் துணைபுரிகிறது. பூண்டுக்கு ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் தன்மையும், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கும் ஆற்றலும் உண்டு.
                                                      
புதினா
பல நூற்றாண்டுகளாக நாம் பயன்படுத்தி வரும் புதினா ஓர் அருமருந்து. வாயுக்கோளாறு, செரிமானமின்மை, முதுகுப்பிடிப்பு, மூட்டுவலி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இர்ரிடபிள் பௌல் சிண்ட்ரோம் மற்றும் ஃபுட் பாய்ஸன் போன்ற பிரச்னைகளின்போது உதவக்கூடியது. வயிற்றுப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் புதினாவுக்கு உண்டு.




Wednesday, 24 August 2016

பெண் அரசியல்வாதிகள் சொல்லும் மன அமைதி மந்திரம்...!

ட்சி மேலிடம், பத்திரிகையாளர்கள், மக்கள், சக அரசியல்வாதிகள் என பலமுனைகளிலும் விமர்சனங்களை எதிர்கொள்பவர்கள் அரசியல்வாதிகள். குறிப்பாக பெண் அரசியல்வாதிகள்! பரபரப்பான அரசியல் களத்தில் கூடுதல் மன அழுத்தங்களையும் விமர்சனங்களையும் நாள்தோறும் எதிர்கொள்ள வேண்டியதிருக்கிறது அவர்கள். இதனால் ஏற்படும் மனச் சோர்வினை பெண் அரசியல் தலைவர்கள் எப்படி வென்றெடுக்கிறார்கள்...?

இந்திய அளவில் பெண் அரசியல்வாதிகளுக்கு முன்னுதாரணம் தமிழக முதல்வர் ஜெயலலிதா. தனிமை விரும்பியான அவரும் தனக்கான துணையாக தேர்ந்தெடுப்பது புத்தகங்களைத்தான். இளம் வயதிலிருந்தே புத்தகம் படிக்கும் பழக்கத்தை  வளர்த்து  கொண்ட அவர், 'புத்தக வாசிப்பு என்பது பலநேரங்களில் தேவையற்றவர்களிடம் தேவையற்று பேசுவதை தவிர்க்கவும் உதவும்' என குறிப்பிட்டிருக்கிறார் தம் ஒரு பேட்டியில். பரபரப்பான அரசியல்வாதியாக அவர் மாறியபின் மக்கள் கூட்டங்களை கண்டுதான் தனக்கான நெருக்கடிகளிலிருந்து மீண்டார் என்பார்கள்.



எத்தனை டென்ஷன் ஆனாலும்,  தொண்டர்களை கண்டுவிட்டால் அவரது பேச்சில் உற்சாகமும் முகத்தில் மென்மையான  சிரிப்பும் குடிகொள்ளும். இப்படி வலிமையான   பெண்களையும்  ஏதோ ஒன்றை தேட வைக்கும்  அந்த  மன அழுத்தை  இன்றைய பெண் அரசியல்வாதிகள் எப்படி கையாளுகிறார்கள்...  அவர்கள்  மேற்கொள்ளும்  பயிற்சிகள்   என்ன  என்பது குறித்து அவர்களிடம் நேரிடையாக  உரையாடினோம்.   

"சிரித்து விடுவேன்..."!- தமிழிசை சவுந்தரராஜன், பாஜக, தமிழ்நாடு மாநிலத் தலைவர்

"உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டால் உடல் நிலையில் மிக மோசமான விளைவுகளை ஏற்படும் என்பது ஒரு மருத்துவராக எனக்குத் தெரியும் என்பதால் மன அழுத்தத்தை கையாள்வதில் மிகவும் விழிப்புணர்வோடு இருப்பேன். சில உணர்வுகளைக் கையாள வேண்டிய அணுகுமுறைகளை நாம் அறிந்திருக்க வேண்டும். சட்டென்று கோபப்படுவது குறித்து நாம் ஆராய வேண்டும். எனக்கு டென்ஷனோ அல்லது மன அழுத்தமோ ஏற்பட்டால் சில நிமிடங்கள் கழித்து சிரித்து விடுவேன் . நன்றாக வாய்விட்டு சிரித்து விடுவேன். விமர்சனங்களை பற்றி நான் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன். என்னை நான் வலிமை உள்ளவளாக நிலை நிறுத்திக் கொள்வேன்.

எந்த விஷயத்தையும் நேர்மையுடன் அணுகும்போது எதற்கு விமர்சனங்களைக் கண்டு அஞ்ச வேண்டும். என் எதிரில் நின்று என்னை யார் திட்டினாலும் அதை நான் மனதில் ஏற்றிக்கொள்ள மாட்டேன். நான் அதை ஏற்றுக்கொண்டால் அவர்கள் வெற்றி பெற்று விடுவார்கள் என்பதால் விமர்சனங்களையோ, கோபங்களையோ நான் என்னிடம் நெருங்க விட்டதில்லை.

சமூக வலைத்தளங்களில் வரும் விமர்சனங்களை சில பெண்கள் பெரிதாக எடுத்துக் கொள்கிறார்கள். என் உருவத்தைப் பலரும் கிண்டல் செய்துள்ளார்கள். அதையெல்லாம் நான் ஒருபொருட்டாக எடுத்துக் கொண்டதில்லை. விமர்சனங்களைக் கண்டு கவலைகொள்ளும்போது தான் பெண்களுக்கு அரசியலில் சறுக்கல்கள் ஏற்படும். விமர்சனங்களை பெரிதாக எடுத்துக் கொண்டு இன்றைய பெண்கள் அரசியலுக்கு வரத் தயங்குகிறார்கள். அது தவறான கண்ணோட்டம். இந்த விமர்சனங்களையும், வசைகளையும் பொருட்படுத்திக் கொண்டே இருந்தால், பெண்களால் ஒன்றுமே செய்ய முடியாது. விமர்சனம் என்பது எல்லா இடத்திலும் உள்ளது. அதை ஏற்றுக்கொள்ளாமல் புறம் தள்ள வேண்டும்"

தியானமும் புத்தக வாசிப்பும்! - ஜோதிமணி காங்கிரஸ்
"அரசியல் என்பது கார்பரேட் நிறுவனம் அல்ல. சவாலான இடத்தில்தான் இயங்க வேண்டியுள்ளது. பொதுவாக குடும்பத் தளத்தில் உள்ள பெண்களாக இருந்தால் குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு கொண்டு ஒரு சலுகையாகத்தான் அரசியல் பணிகளைக் கவனிக்க விடுவார்கள். அரசியலைப் புரிந்து கொள்ளாத குடும்பத்தில் இருந்து வரும் பெண்களுக்கு பெரும்பாலும் அரசியல்களம் என்பது பெரும் சிக்கல்தான். கொள்கை அடிப்படையிலோ அல்லது பிரச்னைகளின் அடிப்படையிலோ இயங்கும் பெண்களுக்கு அழுத்தங்கள் இருக்கும். அத்தகையப் பெண்களுக்கு மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் நிறைய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

நான் கோபத்தை குறைக்க தியானம் செய்கின்றேன். இதனால், அழுத்தமான அரசியல் நெருக்கடியான சமயங்களில் எனக்குள் எழும் கோபங்களை கட்டுப்படுத்த முடிகிறது.கோபப்பட்டால்தான் வேலை நடக்கும் என்ற நிலை வந்தால் அந்த இடத்தில், கொஞ்சம் குரலை உயர்த்திப் பேசுவேன். கோபப்படவில்லை என்றால் நம் உடல் நிலை சீராக இருக்கும். மன அழுத்தமாக உள்ள தருணங்களில் நிறையப் புத்தகங்களைப் படிப்பேன். எவ்வளவு டென்ஷனாக இருந்தாலும் ,குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் அன்பும் ஆதரவும் என்னை அதில் இருந்து வெளியில் கொண்டு வந்துவிடும்.



நேர்மையாகவும் , தீவிரமாகவும் எதையும் கையாளும் போது தடைகள் இருக்கும் . அந்தத் தடைகள் என்பது எல்லா நாட்களிலும் தொடராது. என்றாவது ஒரு நாள் உடைத்தெறியப்படும் என்ற நம்பிக்கையைப் பெண்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். நேர்மையாக இருந்தால் போதும் எந்த சிக்கல்களிலிருந்தும் மீண்டு வர முடியும். பெரும்பாலும் நெருக்கடியான தருணங்களில் குடும்பத்துடனும், புத்தகங்களுடன், இயற்கையுடனும் என்னுடைய நேரத்தைக் கழித்துள்ளேன்"

"நேர்மையாக, தைரியமாக ...!”- பாலபாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

எங்கள் இயக்கத்தில் கருத்துக்களைச் சொல்வதற்கான ஜனநாயகம் உள்ளது. என்னைப் பற்றி கோபமூட்டுகிற கருத்தையோ யாராவது சொன்னால், அதற்கான விளக்கத்தைக் கொடுக்க எங்களுடைய கட்சிக்குள் அனுமதி உள்ளது. அப்போது நான் கோபமாகப் பேசினாலும் கட்சியில் உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள். கட்சிக்குள் நான் என்ன சொல்ல வருகிறேனோ அந்தக் கருத்தைச் சொல்லி விடுவேன். யாருக்காகவும் எதற்காகவும் தயங்க மாட்டேன். மற்றவர்கள் சொல்கிற, தனிநபர்கள் சொல்கின்ற விமர்சனங்கள் உண்மைக்கு மாறாக இருந்து, அது தொடர்பாக நான் விளக்கம் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றால் அது மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.
வேறு என்ன செய்ய முடியும் என்று யோசிப்பேன். அதை மற்றவர்கள் மீது எந்த நேரத்திலும் காட்டிவிடக்கூடாது என்று கவனமாக இருப்பேன். அப்படியெல்லாம் நம்மை நாம் தேற்றிக் கொண்டால் கூட அந்தப் பிரச்னையின் அழுத்தம் அப்படியேதான் இருக்கும். அடுத்த செயல்பாட்டுக்குச் செல்லவிடாமல் நம்மைத் தடுக்கும். இந்த மாதிரியான நேரத்தில் எனக்கு இலக்கியம்தான் கைகொடுக்கும். வேறறொரு தளத்துக்குச் சென்று அங்கே உட்கார்ந்து இயற்கை பற்றிய கவிதையோ அல்லது சமூகத்தில் பார்த்த விஷயங்களையோ நான் எழுதிவிடுவேன். அப்போது எனக்கு ஒரு பதில் கிடைக்கும்.

எதையும் மனதுக்குள் அடைத்து புழுங்கினால் பிரச்னைதான். அதனை வெளிப்படுத்தி விட்டால் எந்தப் பிரச்னையும் இல்லை. எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும் என்பதில்தான் நாம் கவனம் கொள்ள வேண்டும். பொதுவாக அரசியலில், கருத்துக்களை மனம்விட்டுச் சொல்லாமல் தந்திர அரசியலைக் கையாளக்கூடியவர்கள் அதிகப் பிரச்னைளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தத் தந்திர அரசியலுக்குள் நான் செல்வது கிடையாது. நேர்மையாக, தைரியமாக கருத்துக்களைச் சொல்கிறவர்கள் கலங்குவதில்லை.




Monday, 22 August 2016

உடல் எடையைக் குறைக்கும் 5 உணவுகள்!​

தினமும் ​அரை மணி நேரம் ஓடுவது, பிறகு யோகா​,​ டயட் என உட​ல் எடையை குறைக்க பாடுபவர்கள்​,​ கண்டுகொள்ளாத விஷயம் அவர்கள் உண்ணும் உணவு. ஆம், டயட்​டில்​ இருப்பதோடு நாம் சில​ உணவுகளை உண்டால்​, உடலிலுள்ள கெட்ட கொழுப்பு​ விரைவில்​ கரைந்து விடும். 'ஃபேட் பர்னிங்'​ ​(Fat burning) காய்​ மற்றும் க​​னி​ வகைகளை அன்றாடம் நம் உணவு பட்டியலில் சேர்த்து கொள்வது நல்லது.
br />
1. எலுமிச்சை
இந்த பட்டியலில் முதல் இடம்​,​ எலுமிச்சைக்குதான். எலுமிச்சையில்  ​'​வைட்டமின் சி​'​ ​  சத்துக்கள் நிறைந்துள்ளன. வைட்டமின் சி நி​றைந்த அனைத்து உணவுகளுமே, கொழுப்பைக் கரைக்க கூடியவை. காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில்​,​ எலுமிச்சை ஜூஸ்​ கலந்து​ குடித்தால், உடலிலுள்ள ​கழிவுகளை அகற்றும்​.​ வைட்டமின் சி​ சத்து,​ கொழுப்பை கரைக்கும் வேலையை செய்யும்.  இது​ ​மட்டுமல்லாமல், தொடர்ந்து எலுமிச்சை சாறு அருந்தி வந்தால், இருமல், ​சளி, தலைவலி, அஜீரண கோளாறு ஆகியவை ​வராமல் தடுக்கும்.
2. சோம்பு
சோம்பில் ​தாதுக்கள் நிறைந்துள்ளன. ​மேலும், இதில் கலோரி​களும்​ குறைவு​தான்​. ​உடலில் ​செரிமான சக்தியை அதிகப்படுத்து​ம்​. இரவு உறங்குவதற்கு முன்பு​,​ சோம்பை வெதுவெதுப்பான நீரில் ஊர வை​த்து, காலையில்​ அந்த நீரைக் குடிக்க​ வேண்டும். அதேபோல, ​​ஹெவியான உணவுகளை சாப்பிட்ட பிறகு சிறிதளவு சோம்பை மென்று திண்ணலாம்.
3. கிரீன் டீ
கிரீன் டீயில், வேறு எந்த உணவிலும் காண முடியாத அளவு ஆண்டிஆக்ஸிடண்ட்​ சத்துக்களை​ காணலாம். இதில்​ பாலிஃபினால்​ ​(​polyphenol​)​ ​ ​எனப்படும் ​சத்துக்களும் நிறைந்துள்ள​ன. சர்க்கரை இல்லாமல் தினமும் கிரீன் டீ பருகி வருவது உடலிலுள்ள கொழுப்பை உருக செய்யும். இதிலுள்ள ​இதர சத்துக்கள்​ ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தக் கூடியது. தினமும் கிரீன் டீ பருகுவதால்,  கொழுப்பைக் கரைப்பதோடு, நம் உடலையும் பாதுகாக்கும்.
br />
4. தர்பூசணி
தர்பூசணி முழுக்க முழுக்க நீர்ச்சத்து நிரம்பியது. இதுதவிர, தர்பூசணியில் ஏராளமான அளவு வைட்டமின்களும் ​தாதுக்களும் உள்ளன. இது உடல் எடையைக் குறைக்க உதவும். தர்பூசணி கொழுப்பை நம் உடலில் சேர விடாமல் ​தடுக்கும்​.​ தொப்பையைக் குறைக்க விரும்புபவர்கள்​,​ உடற்பயிற்சி​,​ டயட்டோடு​ அவசியம்​ சேர்த்து​ கொள்ள வேண்டிய உணவு​ தர்பூசணி​.​
5.​ குறுக்காக வெட்டி பயன்படுத்த கூடிய​  காய்கறிகள்
இதை ஆங்கிலத்தில்​ க்ருசிஃபெரஸ் (cruciferous vegetables​)​ என்று அழைப்​பர்​. அதாவது, குறுக்காக வெட்டினால்​ இந்த  காய்கறி வகைகளைப் பயன்படுத்த முடியும்.​ ​ காலிஃபிளவர், முட்டைக்கோஸ், பிராக்கோலி போன்ற ​காய்கறிகள் இவ்வகையை சேர்ந்தது. இதில் ​நார்ச்சத்து​களும் அதிகம். இதிலுள்ள ஆண்டிஆக்ஸிடண்ட்​,​ கொழுப்பைக் குறைப்பதோடு​,​ நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்​கும்.​
இனிமேல், உங்கள் உணவில் ​இந்த ஐந்து உணவுகளும் இடம் பெறட்டும்!​
br />



Saturday, 20 August 2016

நான் குற்றவாளி என்றால், என்னை தூக்கிலிடுங்கள்! - நர்சிங் யாதவ் உருக்கம்

ரியோ டி ஜெனிரோ: நான் குற்றவாளி என்றால், என்னை தூக்கிலிடுங்கள், அதற்கு தயாராகவே உள்ளேன் என்று இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.


இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ், 2015 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் (74 கிலோ) வெண்கலம் வென்று ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றார். கடந்த ஜூன் 25-ம் தேதி இவருக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. அதில், தடை செய்யப்பட்ட 'மெட்டாடியனன்' என்ற ஊக்க மருந்தை பயன்படுத்தியது உறுதியானது. இதனால் ரியோ ஒலிம்பிக் போட்டியில் நர்சிங் யாதவ் கலந்து கொள்வது கேள்விக்குறியானது.
இதற்கிடையே, தேசிய ஊக்க மருந்து சோதனை அமைப்பின் ஆணையம் நர்சிங் யாதவ் பிரச்னை குறித்து விசாரணை நடத்தி, நரசிங் யாதவ் ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளலாம். அவர் மீது எந்த தவறும் இல்லை. விடுதியில் வழங்கப்பட்ட உணவில்தான் ஊக்க மருந்து கலந்துள்ளது. அவர் தெரியாமலேயே இதை பயன்படுத்தியுள்ளா என்று தெரிவித்திருந்தது.
இந்தியாவின் தேசிய ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு (NADA) நர்சிங் யாதவிற்கு வழங்கிய தடையில்லா சான்றிதழை எதிர்த்து உலக ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு (WADA) முறையீடு செய்தது. இதனையடுத்து, உலக ஊக்க மருந்து தடுப்பு அமைப்பின் முறையீட்டு மனுவை விசாரித்த சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் நர்சிங் யாதவ் ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை விதித்ததுடன், நான்கு ஆண்டுகளுக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்கும் தடை விதித்துள்ளது.


இந்நிலையில், இது குறித்து இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் கூறும்போது, ''என்னுடைய பெயர் களங்கப்படுத்தப்பட்டுள்ளது. இது எனக்கு மட்டுமல்ல, இந்த தடை இந்தியா மீதான கறை ஆகும். நீதியுடன் திரும்பாவிட்டால், என்னை தூக்கில் தொங்க அனுமதியுங்கள், இதனை நான் உயர்மட்ட நீதிமன்றங்களுக்கு எடுத்துச் செல்வேன்.

இந்த விவகாரம் குறித்து முழு விசாரணை நடத்த பிரதமர் மோடியிடம் முறையிடுவேன். உண்மை வெளிவர வேண்டும். தேவையென்றால் சி.பி.ஐ. விசாரணை நடத்துங்கள். நான் குற்றவாளி என்றால் என்னை தூக்கில் இடுங்கள். அதற்கு நான் தயாராகவே உள்ளேன். எனக்கு நீதி கிடைக்கவில்லை என்றால், விளையாட்டின் எதிர்காலம் இருண்டதாகி விடும்" என்று தெரிவித்துள்ளார்.




Thursday, 18 August 2016

வெகுநேரம் அமர்ந்து பணி புரிந்தால், ஆயுள் குறையாது.. ஆனால்...?!

ஒரு நாளில் அதிக நேரம் உட்கார்ந்திருந்தால் இடுப்புவலி, முதுகுவலி வருவதோடு மட்டுமல்லாமல் வாழ்நாளைக் குறைக்கும் என்ற ஆராய்ச்சி முடிவு சில  மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்தின்  நேஷனல் ஹெல்த் சர்வீஸ் (NHS) மருத்துவமனை ஆராய்ச்சியாளர்களால் வெளியானது. அது அப்போது சமூக வலை தளங்களில் வைரலாகப் பரவ, அலுவலகத்தில் பல மணிநேரம் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள் மனதில் பயம் பரவியது. ஆனால் தற்போது எஸ்சிடர் பல்கலைக்கழகமும், லண்டன் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆராய்ச்சியில் ஓர் உண்மை வெளியாகியுள்ளது. உலகில் நீண்டகாலம் (16 வருடங்கள்)  நடைபெற்ற ஆராய்ச்சிகளில் இதுவும் ஒன்று. இதற்காக 5000 பேர் தேர்வு செய்யப்பட்டனர். 'NHS- இன் முடிவுகள் தவறானது. நெடுநேரம் உக்கார்ந்திருப்பதால் உடலில் கொழுப்பு சேர்ந்து சர்க்கரை நோய் வர சாத்தியக்கூறுகள் உள்ளன. ஆனால் ஆயுள் குறையாது’ என தெரிவித்துள்ளனர். எபிடெர்மியாலஜி சர்வதேச மருத்துவ இதழில் இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.


லண்டன் பல்கலைக்கழக பேராசிரியர் மெல்வின் ஹில்சிடன் கூறுகையில், 'நெடுநேரம் அசையாமல் ஒரே நிலையில் இருப்பது உடற்பருமன் , டைப் 2 சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், திடீர் மாரடைப்பு, கல்லீரல் பாதிப்பு உள்ளிட்ட பல உடல் உபாதைகளைத் தரக்கூடியது என கூறுகிறார். அமர்ந்திருப்பது மட்டுமல்லாமல் நிற்பதோ, படுப்பதோ எதுவாக இருந்தாலும் பலமணிநேரம் ஒரே நிலையில் இருக்கக் கூடாது. நிலையை குறைந்தது அரை மணி நேரத்துக்கொருமுறை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். ஆனால் மனிதனின் சராசரி ஆயுள் குறைவதற்கும், அதிகரிப்பதற்கும், ஒரே நிலையில் அமர்ந்திருப்பதற்கும் சம்பந்தம் இல்லை என இந்த ஆராய்ச்சி மூலம் நிரூபணமாகிறது. சாப்பிட்டு விட்டு நெடுநேரம் நிற்கும்போது 30 சதவிகித உடல் கொழுப்பை இழக்க வாய்ப்புள்ளது. அதுவே அமர்ந்திருக்கும்போது கொழுப்பு கரைய தாமதமாகிறது.
பொதுவாக அலுவலகத்தில் குறைந்தது 8 மணிநேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அவ்வப்போது எழுந்து நிற்கவோ, நடக்கவோ செய்ய வேண்டும். அப்படிச் செய்யாமல் தொடர்ந்து பலமணிநேரம் உட்கார்ந்துவிட்டு , தினமும் காலையில் மட்டும் கடுமையான உடற்பயிற்சி செய்வதால் எந்தவித பயனும் இல்லை,


சர்க்கரை அளவு மதியம் சாப்பிட்டு விட்டு பலமணிநேரம் அமர்ந்து வேலை செய்வதால் அதிகரிக்கும் என்கிறார், பேராசிரியர் ரிச்சர்ட் பல்ஸ்போர்ட்.  10 மணிநேரம் தொடர்ந்து உட்கார்ந்து வேலை செய்வதால் 50 வயதுக்கு மேற்பட்ட பருமனான ஆண்களுக்கு இதயக்குழாய் அடைப்பு ஏற்படலாம். மேலும் முதுகு தண்டுவடத்திற்கு இடையே உள்ள டிஸ்க் அழுத்தப்பட்டு தேய்மானம் அல்லது வீக்கம் உண்டாகலாம். மெனோபாஸ் முடிந்த 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஸ்பாண்டிலைடிஸ் என்னும் எலும்பு வலு இழக்கும் தன்மை உண்டாகலாம்.
4 முதல் 5 மணி நேரம் வரை நின்று வேலை செய்பவர்கள் (லிஃப்ட் ஆபரேட்டர்கள், வாட்ச்மேன்)  அவ்வப்போது நடக்கவோ, உட்காரவோ வேண்டும். சிலர் படுத்தவுடன் களைப்பு மேலிட ஆழ்ந்த தூக்கத்துக்கு சென்று விடுவார். இதனால் மல்லாந்த நிலையிலேயே பலமணிநேரம் தூங்குவார். இதனால் பின்மண்டை, முதுகு, தொடை அழுத்தப்பட்டு உடற்பாகங்களில் ரத்த ஓட்டம் நின்று மரத்துப் போகலாம். ஆகவே அவ்வப்போது படுத்திருக்கும் நிலையை மாற்றப் பழக வேண்டும். துவக்கத்தில் சிரமமாக இருந்தாலும் போகப் போக பழகிவிடும்.



நெல்லிலிருந்து பூவுக்கு... அரை ஏக்கர் நிலத்தில் 60 ஆயிரம் ரூபாய்... செழிப்பான லாபம் கொடுக்கும் செண்டுமல்லி..!

பணியில் இருக்கும், ஐம்பது வயதை நெருங்கிய பெரும்பாலானோரின் கவலை... பணி ஓய்வுக்குப் பிறகான வாழ்க்கையைப் பற்றித்தான் இருக்கும். ஆனால், முறையாகத் திட்டமிட்டால், ஓய்வுக்குப் பிறகும் நிறைவான வாழ்க்கை வாழ முடியும் என்பதை பலர் நிரூபித்துள்ளனர். அந்த வகையில், தனது செயல்பாடுகளால் மனநிறைவான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார், புதுக்கோட்டை மாவட்டம், பூங்குடி கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன். தமிழக காவல்துறையில் துணை ஆணையராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், தற்போது முழு நேர விவசாயி.


பசுமை வயல்களுக்கு இடையில் மண்புழு உரத்தை சலித்துக் கொண்டிருந்த பாலகிருஷ்ணனைச் சந்தித்தோம். புன்னகையைப் பூச்செண்டாக்கி வரவேற்றவர், ''ஓய்வுக்குப் பிறகு என்னை ஆரோக்கியமா வாழ வெச்சுட்டு இருக்குறது விவசாயம்தான்.
'பசுமை விகடன்' படிச்ச பிறகுதான் விவசாயத்து மேல, குறிப்பா இயற்கை விவசாயத்து மேல ஆர்வம் வந்துச்சு.
இந்த எட்டு ஏக்கர் நிலத்துல நாலு வருஷமா விவசாயம் பாக்குறேன். நாலு ஏக்கர்ல தென்னை இருக்கு. ஒரு ஏக்கர் தென்னையில மட்டும் ஊடுபயிரா மா இருக்கு. தனியா மூணு ஏக்கர்ல கரும்பு இருக்கு. கரும்பைத் தவிர, மத்த பயிருக்கெல்லாம் இயற்கை உரங்களைத்தான் கொடுக்குறோம். ஒரு ஏக்கர் நிலத்துல வழக்கமா நெல் போடுவேன்.  
நெல் சாகுபடியில பெருசா லாபம் இல்ல. கரன்ட் இல்லாத காலத்துலயும் கஷ்டப்பட்டு, பராமரிச்சாலும்... அறுவடை செஞ்ச பிறகு, ஏக்கருக்கு 5 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைச்சாலே பெரிய விஷயம். அதனால இந்த வருஷம் வேற பயிரைப் போட்டு பாக்கலாம்னு முடிவு செஞ்சு... நெல்லுக்கு பதிலா செண்டுமல்லி சாகுபடி செஞ்சுருக்கேன். குறைவான தண்ணி, பராமரிப்புலயே இதுல நல்ல லாபம் கிடைக்குது.


தோட்டக்கலைதுறை உதவி இயக்குநர் குருமணியும், வேளாண் அலுவலர் அண்ணாமலையும்தான் இந்த செண்டிப்பூவைப் பத்தி சொன்னாங்க. ஆனா, எங்க பகுதியில யாருமே இதை சாகுபடி செஞ்சது இல்ல.
'இது சரியா விளையாது நஷ்டம்தான் வரும்’னு மத்த விவசாயிக பயமுறுத்தினாங்க. ஆனாலும் துணிச்சலா அரை ஏக்கர் நிலத்துல மட்டும் சாகுபடி பண்ணினேன்'' என மாற்றுப்பயிருக்கு மாறிய கதை சொன்ன பாலகிருஷ்ணன், அரை ஏக்கர் நிலத்தில் செண்டுமல்லி சாகுபடி  செய்யும் முறையைச் சொன்னார்.
அது இங்கே பாடமாக...
ஒரு விதை... ஒரு நாற்று!
செண்டு மல்லியின் வயது 120 நாட்கள். அரை ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்ய 2 ஆயிரத்து 500 விதைகள் தேவைப்படும்.
ஒரு விதையில் இருந்து ஒரு நாற்றுதான் உற்பத்தி செய்ய முடியும். நாற்று தயாரிப்புக்காக உள்ள பிரத்யேகமான பிளாஸ்டிக் குழித்தட்டில் ஒவ்வொரு குழியிலும் முக்கால் பகுதிக்கு, தென்னைநார்க் கழிவை நிரப்பி ஒவ்வொரு விதையை வைத்து... ஈரமான நார்க்கழிவைப் போட்டு குழியை நிரப்ப வேண்டும் (குழித்தட்டு கிடைக்காதவர்கள், சிறிய பிளாஸ்டிக் டீ கப்பை பயன்படுத்தலாம்).
எப்போதும் ஈரம் இருக்குமளவுக்கு தண்ணீர் தெளித்து வந்தால், 23-ம் நாள், நாற்று நடவுக்கு தயாராகி விடும். சாகுபடி நிலத்தில், ஒன்றரை டன் அளவுக்கு மண்புழு உரம் அல்லது குப்பை எருவை இட்டு, இரண்டு சால் புழுதி உழவு ஓட்டி, ஒன்றே கால் அடி அகலம், முக்கால் அடி உயரத்துக்கு இரண்டு அடி இடைவெளியில் பார் அமைக்க வேண்டும். நிலத்தின் அமைப்புக்கு ஏற்ப, பாரின் நீளத்தை அமைத்துக் கொள்ளலாம்.
2 அடி இடைவெளி !
நிலத்தில் தண்ணீர் விட்டு, எல்லா பார்களிலுமே ஒரே சீராக இடது அல்லது வலது ஓரத்தில் மட்டும், 2 அடி இடைவெளியில் நாற்றுகளை நடவு செய்து 3-ம் நாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பிறகு, நான்கு நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்ய வேண்டும். 7-ம் நாள் அரை அடி உயரத்துக்கு செடி வளர்ந்திருக்கும். 8 மற்றும் 30-ம் நாட்களில் களையெடுத்து, ஒவ்வொரு செடிக்கும் தலா ஒரு கையளவு மண்புழு உரத்தை வேர்பகுதியில் வைத்து, மண் அணைக்க வேண்டும்.
பதினெட்டாம் நாளில் இருந்து அறுவடை !
18-ம் நாளில் இருந்து தினமும் பூவை அறுவடை செய்யலாம். 25-ம் நாள் பூண்டு-பச்சைமிளகாய் கரைசலை, 1:40 என்ற விகிதத்தில் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும் (தலா ஒரு கிலோ பூண்டு, பச்சைமிளகாய், வேப்பம்பிண்ணாக்கு ஆகியவற்றை ஒன்றாக உரலில் இட்டு இடித்து... பானையில் இட்டு ஒன்றரை லிட்டர் தண்ணீர் ஊற்றி இறுக்கமாக வேடு கட்டி விட வேண்டும். 3 நாட்கள் கழித்து, இக்கலவையை எடுத்துப் பயன்படுத்தலாம்). இதனால் பூச்சிகள் தாக்காது.
50-ம் நாள், 100 கிலோ மண்புழு உரம், மண்புழு உரம் சலித்து எடுக்கப்பட்ட 100 கிலோ குப்பை எரு ஆகியவற்றைக் கலந்து, ஒவ்வொரு செடியின் வேர்ப்பகுதியிலும் பகிர்ந்து போட வேண்டும். நிலத்தை இரண்டாகப் பிரித்து சுழற்சி முறையில் அறுவடை செய்ய வேண்டும்.
சாகுபடிப் பாடம் முடித்த பாலகிருஷ்ணன், ''இது வீரிய ரக செண்டி. பாக்குறதுக்கு அழகா, மஞ்சள் நிறத்துல பளிச்சுனு கண்ணைப் பறிக்கும். இயற்கை இடுபொருள்களை மட்டும் கொடுக்கறதுனால, இங்க விளையுற செண்டி பூ, பறிச்ச பிறகும் மூணு நாளைக்கு வாடாம இருக்கு. சுழற்சி முறையில பறிக்கிறதால தினமும் சராசரியா 20 கிலோ அளவுக்கு பூ கிடைக்குது. பறிக்கறதுக்கு ரெண்டு ஆளுங்களே போதும். பூ நல்லா பெருசா இருக்கறதுனால, பறிக்கவும் சுலபமா இருக்கு. வேலைக்கு ஆளுங்க கிடைக்கலைனாலும் நாமளே பறிச்சுடலாம்.
என்கிட்ட ஒரு மாடுதான் இருக்கு. வெளியில ஒரு டன் சாணத்தை 700 ரூபாய்னு வாங்குவேன். அதோட மெஷின்ல போட்டு தூளாக்குன மா, தேக்கு சருகுகள், கரும்புத் தோகைகள் எல்லாத்தையும் கலந்து மண்புழு உரம் தயாரிப்பேன். இப்படிக் கிடைக்கிற மண்புழு உரத்தை ஒரு கிலோ 10 ரூபாய்னு வித்துடுவேன். மாசத்துக்கு 600 கிலோ அளவுக்கு விற்பனை ஆகுது. மண்புழு உரத்தை சலிச்சதுக்குப் பிறகு கிடைக்குற குப்பை எருவை, பயிர்களுக்குப் போட்டுடுவேன்'' என்று போகிற போக்கில் அசத்தலான தொழில்நுட்பம் ஒன்றை அள்ளிவிட்டதோடு...
40 ஆயிரம் லாபம் !
''நடவுல இருந்து இப்ப 48 நாளைக்கு மேல ஆகுது. இதுவரைக்கும் 600 கிலோ அளவுக்கு மகசூல் கிடைச்சிருக்கு. புதுக்கோட்டை பூ மார்க்கெட்டுல ஒரு கிலோவுக்கு சராசரியா 50 ரூபாய் அளவுக்கு விலை கிடைக்குது. இன்னும் 50 நாளைக்கு பூ பறிக்கலாம். எப்படிப் பார்த்தாலும், இன்னும் 600 கிலோ அளவுக்குக் கிடைக்கும்.
நடவு செஞ்ச ரெண்டாவது வாரத்துல கடுமையான புயல், மழையடிச்சதுல பெரும்பாலான செடிக கீழ சாஞ்சிடுச்சு. தேங்கியிருந்த தண்ணியை வடிகட்டி, மறுபடியும் செடிகளை நிமித்தி வெச்சோம். இனிமே பொழைச்சி வருமானு பயந்துக்கிட்டுதான் இருந்தேன். ஆனாலும் தாக்குப்புடிச்சி வந்துடுச்சு.


வளர்ச்சி வேகம் குறைஞ்சதால எதிர்பார்த்த அளவுக்கு மகசூல் கிடைக்கல. அப்படியிருந்தும் இந்த அரை ஏக்கர்ல இது வரை 30 ஆயிரம் ரூபாய் கிடைச்சுருக்கு. இன்னும் 30 ஆயிரம் ரூபாய்க்கு பூ கிடைக்கும். மொத்தம் 60 ஆயிரம் ரூபாய். செலவு போக, 40 ஆயிரம் ரூபாய் லாபமா மிஞ்சும்.
புயல் அடிக்காம இருந்துருந்தா, இன்னும் கூடுதலா லாபம் கிடைச்சுருக்கும். எப்படிப் பார்த்தாலும்... நெல்லோட ஒப்பிடும்போது, இதுல பல மடங்கு கூடுதல் லாபம். அதனால, இன்னும் அதிகமான நிலத்துல இதை சாகுபடி பண்ணப் போறேன்'' என்று தெம்பாகச் சொன்ன பாலகிருஷ்ணன்,
''வருமானம் ஒரு பக்கம் இருந்தாலும், பரபரப்பா வேலை செஞ்சுட்டு ரிட்டயர்டு ஆன பிறகும், என்னை உற்சாகமா வெச்சுருக்குறது விவசாயம்தான்'' என்று சொல்லி மகிழ்ச்சியாக விடைகொடுத்தார்.
 தொடர்புக்கு,பாலகிருஷ்ணன், அலைபேசி: 98659-38452.



Saturday, 6 August 2016

கலவர காஷ்மீரில் தமிழக மருத்துவரின் நேரடி அனுபவம்!



டந்த ஜூலை மாதம், காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகீதின் இயக்க கமாண்டர் புர்ஹான் வானி, இந்திய பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து அம்மாநிலத்தில் வன்முறை வெடித்தது. 

போராட்டக்காரர்கள் மீது ஏர் கன் தாக்குதல் நடத்தப்பட்டது.
நூற்றுக்கணக்கான பேர் இதில் காயமடைந்தனர். காயமடைந்தவர்களின் உடலில் பாய்ந்த குண்டுகள் உயிரைப் பறிக்கும் குண்டுகள் இல்லை என்பதும், காயம் உண்டாக்கும் கண்பார்வை பறிக்கும் குண்டுகள் என்பதும் கவனிக்கத்தத்தக்க விஷயம். ஏன் எனில் அந்தக் குண்டுகள் ‘non-lethal’ pellet எனப்படும் வகையைச் சார்ந்தவை.

இந்த அசாதாரணமான சூழ்நிலையில்,  தாக்குதலில் பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்டவர்களுக்கு கண் அறுவை சிகிச்சை செய்து காஷ்மீர் முதல்வரிடமும் மருத்துவர்களிடமும் நேரடிப் பாராட்டுகளை நிறைய பெற்றுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த கண் மருத்துவர்  நடராஜன்.
அகில இந்திய கண் மருத்துவர்கள் சங்கத்தின் தலைவரான டாக்டர் நடராஜன், கலவரச்சூழலில் காஷ்மீரில் தங்கியிருந்த அனுபவம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தது குறித்து நமக்களித்த சிறப்பு பேட்டி இங்கே...

" ஜூலை மாதம் 8 ம் தேதி காஷ்மீரில் கலவரம் ஆரம்பித்தது. அதில் நிறைய அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டு இருந்தனர். மூன்று, நான்கு நாட்களுக்கும் மேலாக காஷ்மீர் மாநிலத்தில் இயல்பு நிலை இல்லை. அன்றாட வாழ்க்கைப் பாதிக்கப்பட்ட சூழலில், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியிருந்தனர். ஊடகங்களுக்கும் கூட செய்திகள் வெளியிடவேண்டாம் என்று மத்திய அரசு வலியுறுத்தியிருந்த நேரம். காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகருக்கும் கூட, இந்தியாவின் பிற மாநிலத்தவர் செல்ல அச்சமுற்று இருந்தார்கள்.

புர்ஹான் வானி மரணத்தையடுத்து காஷ்மீரில் நடந்த நிகழ்வுகள் அந்த அளவுக்குப் பதற்றத்தை ஏற்படுத்தி இருருந்தன. மருந்து மாத்திரை வாங்க கூட துப்பாக்கிகளைத் தாண்டிச் செல்லவேண்டும் என்ற ஒரு அசாத்திய சூழல் நிலவுகிறது காஷ்மீர் மாநிலத்தில். ஆனாலும் மருத்துவ சிகிச்சை செய்ய போர்க்களம், பாதுகாப்பான மருத்துவமனை என்று இடம் பார்க்க முடியாது. அதிலும் கண்கள் விஷயத்தில் மிகுந்த விழிப்பாக இருக்கவேண்டும். ஏன் எனில் பார்வை இழந்தால் மீண்டும் பெறுவது பெரிய அத்தனை சுலபமில்லையே.

கலவரத்தை தொடர்ந்து, துப்பாக்கிச் சூட்டில் கண் பார்வை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ இந்திய அரசும், மருத்துவர்களும் முன்வர  வேண்டும் என்று  வேண்டுகோள் விடுத்து, காஷ்மீர் மருத்துவர் அப்துல், பத்திரிகைகளில் எழுதியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, இந்திய உள்துறை அமைச்சகம் சார்பில் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டாக்டர்கள், காஷ்மீருக்கு அனுப்பப்பட்டு, நிலவரத்தை தெரிவிக்க பணிக்கப்பட்டனர். அவர்கள் அரசுக்கு அறிக்கையும் அளித்தனர். அதன் பிறகு மாநில அரசின்,  ஸ்ரீ மகராஜ் ஹரிசிங் மருத்துவமனையில் இருந்தும் மருத்துவர்கள் இதே கோரிக்கையை விடுத்திருந்தனர். அதேபோல 'பார்டர் லெஸ் வேர்ல்டு பவுண்டேஷன்' கொடுத்த தகவலின்படி  வாட்ஸ் அப்  குரூப்பில்,  " காஷ்மீர் கலவரத்தின்போது நிறையபேர் துப்பாக்கி தாக்குதலில் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை செய்ய  வேண்டும். இதற்கு உதவிட மருத்துவர்கள் முன்வரவேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இதனையடுத்து,  மும்பையில் உள்ள எங்கள் மருத்துவமனை மற்றும் என்னிடம் பயிற்சி பெற்ற கண் மருத்துவர்களிடம், " காஷ்மீர் செல்ல யாருக்கு  விருப்பம்" என்று விசாரித்தேன். இதையடுத்து என்னுடன் 3 டாக்டர்கள் வர விருப்பம் தெரிவித்தனர். இதனையடுத்து மும்பையில் இருந்து டெல்லிக்கும், டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கும்  விமானத்தில் பயணித்தோம். பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீ மகராஜ் ஹரிசிங் மருத்துவமனைக்குச் சென்றோம். வழியெங்கும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ரோடுகளில் மக்கள் நடமாட்டம்  இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு வெறிச்சோடிக் கிடந்தன சாலைகள்.



எங்களுடன் வர இயலாமல்,  பின்னர் வந்த விமானத்தில் டெல்லிவந்து, அங்கிருந்து கார் மூலம் ஸ்ரீநகர் வந்த எங்களின் குழுவைச் சேர்ந்த இன்னொரு டாக்டர், சென்னையைச் சேர்ந்தவர். அவர் வந்த காரை செங்கல்களைக் காட்டி,  ஆர்ப்பாட்டக்காரர்கள் நடுவழியில் நிறுத்தியுள்ளனர். காரை சோதனை செய்த பிறகு இவர் டாக்டர் என்பதை அறிந்துகொண்டு, பின்னர் செல்ல அனுமதித்துள்ளனர்.இதை அவர் எங்களிடம் ஸ்ரீநகர் வந்த பிறகு தெரிவித்தார் கண்களில் பயம் மின்ன.

நாங்கள் அந்த மருத்துவமனையை அடையும் முன்பே, போன் மூலம் மருத்தவர்களை முன் தயாரிப்பு செய்து இருந்தேன். அங்கு நாங்கள் நுழைந்ததும்,  அறுவைச் சிகிச்சை செய்ய ஆரம்பித்தோம். இரண்டரை நாளில் 46 பேருக்கு கண்களில் அறுவை சிகிச்சை செய்தேன். மருத்துவ உலகைப் பொறுத்தவரை இது பெரிய விஷயம்தான். காலை முதல் இரவு ஒரு மணி வரையில் அறுவைச் சிகிச்சை  செய்தோம். எல்லோரும் அசந்துவிட்டார்கள்.

பின்னர்  காஷ்மீர் மாநில முதல்வர் மெகபூபா அழைப்பின்பேரில், நானும் எமது டாக்டர்கள் குழுவும் சென்றோம். எங்களின் விரைவான சேவையைப் பாராட்டிய அவர், இது போன்ற மருத்துவ வளர்ச்சிக்கு  ஸ்ரீநகரில் என்னென்ன  செய்யவேண்டும் என்று கேட்டார். லேப் வசதி, மருத்துவர்களுக்கு தேவையான விஷயங்கள் குறித்து அவரிடம் விளக்கினேன். என்னை விசிட்டிங் பேராசிரியராக இருக்கவும் மெகபூபா பணித்துள்ளார். மேலும்  எனது தலைமையிலேயே காஷ்மீர் மருத்துவர்களுக்குப்  பயிற்சி அளிக்க வலியுறுத்தினார். மொத்தம் 4 நாட்கள் அங்கிருந்து மருத்துவச் சேவை செய்தோம்.

சமூக வலைதளங்களில்  காஷ்மீர் மக்களுக்கு நிறைய சேவை செய்யவேண்டும் என்று எழுதி வருகிறார்கள். ஆனால் நான் எழுதவில்லை. நேரில் சென்று செய்துவிட்டு வந்தேன். அம்மாநில அரசு கேட்டுக்கொண்டதின் பேரில் மீண்டும் அங்கு இம்மாதத்தில் செல்லவுள்ளேன்.



காஷ்மீர் கலவரத்தின்போது,  ராணுவத்தின் துப்பாக்கித் தாக்குதலுக்கு ஆளாகும் நபர்கள் பெரும்பாலும், கண்களில் 'ரெட்டினா' பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.  'ரெட்டினா' பாதிப்பை சரி செய்யும் வசதிகள் காஷ்மீரில் இல்லை என்பதே இப்போதைய நிலைமை. அதனால் என் போன்ற டாக்டர்களின் செயல்பாடு அங்கே மிகுந்த முக்கியத்துவம் பெற்றதாக இருக்கிறது." என்றார் பெருமிதத்தோடு கண் மருத்துவர்  நடராஜன்.

Friday, 5 August 2016

தாய்ப்பாலூட்டும் சரியான பொசிஷன் என்ன?!: உலக தாய்ப்பால் வார ஸ்பெஷல்

உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு அது குறித்த பரவலான விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில், தாய்ப்பாலின் மகத்துவம், பாலூட்டுவதால் தாய்க்கு நேரும் நன்மைகள் மற்றும் அவர் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள், தாய்ப்பாலூட்டும் சரியா பொசிஷன் பற்றி விரிவாகச் சொல்கிறார், மகப்பேறு மருத்துவர் பிரேமலதா.


சீம்பால்... சிறப்புகள்!
குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் ஊட்டப்படும்போது, உலகம் முழுக்க ஒரு மில்லியன் சிசு இறப்பைத் தவிர்க்க முடியும் என்கிறது ஒரு ஆய்வு. காரணம், குழந்தை பிறந்ததும் பழுப்பு நிறத்தில் தாய்க்குச் சுரக்கும் முதல் பாலான சீம்பாலில் இருக்கும் கொலஸ்ட்ரம். அதிக ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கவல்ல இந்த சீம்பால்தான், குழந்தைக்கு இயற்கை அளிக்கும் முதல் நோய்த்தடுப்பு மருந்து. அதை அவசியம் குழந்தைக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும்.
குழந்தைக்கு முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும், தண்ணீர்கூடத் தேவையில்லை. ஏழாவது மாதத்தில் இருந்து தாய்ப்பாலுடன் சேர்த்து இணை உணவுகள் கொடுக்க ஆரம்பிக்கலாம்.
தாய்ப்பாலின் மகத்துவம்!
தாய்ப்பாலால் குழந்தைகளுக்குக் கிடைக்கும் பலன்கள், புட்டிப்பால், பசும்பால் போன்றவற்றால் ஈடுகொடுக்க முடியாதவை.
* தாய்ப்பாலில் உள்ள இம்யூனோகுளோபுளின்என்ற நோய் எதிர்ப்பு சக்தி, குழந்தை பிறந்த முதல் 10 நாட்களில் தாய்க்குச் சுரக்கும் பாலில் அதிகளவு இருக்கும். அது பல்வேறு விதமான அடிப்படை நோய்களில் இருந்து குழந்தையைப் பாதுகாக்கும்; தொற்று, நிமோனியா, குடல் சார்ந்த நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளைத் தவிர்க்கும்.
* தாய்ப்பால் ஊட்டப்படும் குழந்தைகளுக்குக் காதுகளில் தொற்று ஏற்படும் வாய்ப்பு இரண்டு வயதுவரை 43% குறைக்கப்படும்.
* பிறந்த மூன்று மாதங்களில், குழந்தையின் எடையை இரண்டு மடங்கு அதிகரிக்கும் தனிச்சிறப்பு தாய்ப்பாலுக்கு மட்டுமே உண்டு.
* தாய்ப்பால் குடித்த குழந்தைகளுக்கு சர்க்கரை நோய், இதய நோய், ஆஸ்துமா, புற்றுநோய் உள்ளிட்ட நாள்பட்ட நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு.
* ‘லான்சர்’ மருத்துவ இதழின்படி, தாய்ப்பால் புகட்டுவதினால் 5 வயதுக்குட்பட்ட குழந்தை மரணங்கள் 13% தடுக்கப்படுகின்றன.
* புட்டிப்பால் குடித்த குழந்தைகளைவிட தாய்ப்பால் குடித்த குழந்தைகள் 5% & 8% வரை அதிக
அறிவாற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள். குழந்தைப் பருவத்திலும், வளரிளம் பருவத்திலும் அறிவுசார் தேர்வுகளில் தாய்ப்பால் குடிக்காத குழந்தைகளைவிட தாய்ப்பால் குடித்த குழந்தைகள் திறனுடன் செயல்படுகிறார்கள் என்கின்றன ஆய்வு முடிவுகள்.


தாய்ப்பால், தாய்க்குத் தரும் பலன்களும் அதிகம்!
* பாலூட்டும் தாய்மார்களுக்கு பிரசவத்துக்குப் பின்னர் ஏற்படும் ரத்தப்போக்கு குறையும்.
* தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு, கர்ப்பகாலத்தில் அதிகரித்த உடல் எடை இயற்கையாகவே இயல்புநிலைக்குத் திரும்பும்.
* குழந்தைக்குப் பாலூட்டும் காலம்வரை, அடுத்த கர்ப்பம் இயற்கையாகவே தவிர்க்கப்படும். இது ஒவ்வொரு பெண்ணைப் பொருத்து மாறுபடலாம்.
* தாய்ப்பால் ஊட்டுவது மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பைப் புற்றுநோய், இரண்டாம் வகை சர்க்கரை நோய் ஆகிய நோய்கள் பின்னாளில் அந்தப் பெண்களைத் தாக்கும் வாய்ப்புகளைக் குறைக்கிறது.
* தாய்க்கும் குழந்தைக்குமான அற்புத உறவை வலுப்படுத்தும்.
பாலூட்டும் தாய்க்கான சிறப்பு உணவுகள்!
பொதுவாக தாய்க்கு ஒரு நாளைக்குக் குறைந்தது 850 மிலி பால் சுரக்கும். அதற்காக அவருக்கு 600 கலோரி எனர்ஜி, இயல்பைவிட அதிகமாகத் தேவைப்படும். அதை ஈடுகட்டக்கூடிய சிறப்பு உணவுகள் இவை...
பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகள்
பழங்கள்
பால்
வேர்க்கடலை மற்றும் நாட்டுச் சர்க்கரை
பேரீச்சம்பழம், உலர் பழங்கள், நட்ஸ்
மீன், கோழி, ஆட்டு இறைச்சி
நாட்டுக்கோழி முட்டை
முளைகட்டிய தானியம் மற்றும் பருப்பு-, பயறு வகைகள்
தாய்ப்பால் புகட்டும் சரியான பொசிஷன் எது?
குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும்போது, மார்பகக்காம்பும் அதைச் சுற்றியுள்ள கருவட்டப் பகுதியும் குழந்தையின் வாய்க்குள் இருக்கும்படி புகட்ட வேண்டும். அப்போதுதான் குழந்தையால் தாய்ப்பாலை முழு ஆற்றலுடன் உறிஞ்சிப் பெற முடியும். மார்பகக்காம்பில் மட்டும் வாயைவைத்துக் குடிக்கும்போது குழந்தைக்கு பாலை உறிஞ்சுவது சிரமமாக இருக்கும் என்பதுடன், தாய்க்கும் அது வலி, புண்ணை ஏற்படுத்தலாம்.
குழந்தையின் கழுத்தும் தலையும் நேராகவோ, அல்லது கழுத்து சற்று பின்புறம் வளைந்தோ இருக்க வேண்டும்.
குழந்தையின் உடம்பு, தாயை நோக்கி உடலோடு உடல் அணைத்தவாறு இருக்க வேண்டும்.
தாய் குழந்தையின் உடல் முழுவதையும் தன் கரங்களால் தாங்கிப் பிடித்து, அதற்கு கதகதப்பான பாதுகாப்பு உணர்வைக் கொடுக்க வேண்டும்.
குழந்தை மற்றும் தாய் இருவரின் கண்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். அப்போது சரியான முறையில் பால் புகட்டப்படுவதுடன், குழந்தைக்குப் போதுமான பால் கிடைக்கப்பெற்றதா என்பதை தாயால் உணர முடியும்.


தாய்ப்பால்... உலக நாடுகளில் இந்தியாவின் இடம்.?!
உலகிலேயே தாய்ப்பால் ஊட்டுவதில் முதல் இடம் வகிக்கிறது, ருவாண்டா. அந்நாட்டில் சுமார் 90% தாய்மார்கள் தாய்ப்பால் ஊட்டுகிறார்கள். இலங்கை 76% பெற்று இரண்டாவது இடத்திலும், கம்போடியா மற்றும் நேபாள நாடுகள் 74% பெற்று மூன்றாவது இடத்திலும் உள்ளன. தாய்ப்பால் ஊட்டுவதில் 25% பெற்று இந்தியா 31வது இடத்தில் இருப்பது வருத்தமான செய்தி. வரும் ஆண்டுகளில் இளம் தாய்மார்கள் இந்நிலை மாற்றுவார்கள் என்று நம்புவோம்!

Monday, 1 August 2016

மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளை உட்கொள்ளாதீர்கள்! - மோடி அறிவுரை

டெங்கு போன்ற நோய்கள் பரவி வருவதால், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்து, மாத்திரைகளை மட்டுமே மக்கள் உட்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அறிவுரை கூறி உள்ளார்.

அகில இந்திய வானொலியில் தனது மாதாந்திர உரையான 'மனதின் குரல்' (மன் கீ பாத்) நிகழ்ச்சியில் நேற்று பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, ''நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்போது வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிறிது காலத்துக்கு முன்பு நாம் வறட்சி குறித்து கவலைப்பட்டோம். ஆனால், தற்போது பெய்து வரும் மழையால் நாம் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். சில மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. இதைச் சமாளிக்க மாநில அரசுகளும், மத்திய அரசும் நெருங்கிப் பணியாற்றி வருகின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்.







இளைஞர்கள் தாங்கள் பார்க்கும் பிரச்னைகள் குறித்து ஆராய்ச்சி செய்து, அவற்றுக்குத் தீர்வு காண வேண்டும். அவ்வாறு பிரச்னைகளுக்குத் தீர்வு காண உருவாக்கப்படும் தொழில்நுட்பங்களுக்கு விருது வழங்க அரசு விரும்புகிறது. இதுவே மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமுக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாக இருக்கும்.

இந்தியா தற்போது பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது. நாம் அன்றாட வாழ்வில் பிரச்னைகளைச் சந்தித்து வருகிறோம். தற்போது அந்தப் பிரச்னைகளுக்கான தீர்வுகளை நாம் ஆராய வேண்டும். இதுபோன்ற பிரச்னைகளுக்கு தொழில்நுட்ப ரீதியிலான தீர்வுகளைக் கண்டறிவதற்காக இளைஞர்கள் ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும். அடல் புதுமைப் படைத்தல் திட்டத்தை (அடல் இன்னோவேஷன் மிஷன் - 'எய்ம்') மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் புதுமைப் படைத்தல், பரிசோதனை, தொழில் முனைவு என்ற கட்டமைப்பை உருவாக்கவும், வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவும் அரசு விரும்புகிறது.

அடுத்த தலைமுறை புதுமை படைப்போரை நாம் உருவாக்க வேண்டுமானால், 'எய்ம்' திட்டத்துடன் நமது குழந்தைகளை இணைக்க வேண்டும். அதனால்தான் அடல் ஆராய்ச்சிக் கூடங்களை அமைக்கும் முன்முயற்சியை மத்திய அரசு எடுத்துள்ளது. இந்த ஆய்வகங்களை அமைக்கும் பள்ளிகளுக்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கப்படும். மேலும் அவற்றை ஐந்து ஆண்டுகளுக்குப் பராமரிப்பதற்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும்.

ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் பிரசாரம் ஒன்றை மக்கள் தொடங்க வேண்டும். வெற்றி-தோல்வி எப்படி இருந்தாலும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பது மிகவும் அவசியமாகும். இப்போட்டியில் பங்கேற்கும் வீரர்-வீராங்கனைகளுக்கு நாட்டு மக்கள் வாழ்த்து தெரிவிக்க வேண்டும். அவற்றைக் கொண்டு சேர்ப்பதற்கு நான் தபால்காரராக சேவை செய்யத் தயாராக இருக்கிறேன்.

நாட்டின் 70வது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் தொடங்க உள்ளன. மேலும் 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின் 75-வது ஆண்டு விழாவையும் வரும் ஆகஸ்ட் 9 ல் நாடு கொண்டாட வேண்டும். தேசியவாதச் சூழலை உருவாக்குவதன் மூலம் நாட்டு மக்கள் இந்த நிகழ்ச்சிகளை பண்டிகை போல் கொண்டாட வேண்டும். இது அரசு நிகழ்ச்சியாக இல்லாமல் நாட்டு மக்களின் கொண்டாட்டமாக இருக்க வேண்டும்.

தீபாவளியைப்போல், அது நமது சொந்தப் பண்டிகையாக இருக்க வேண்டும். அது தொடர்பான படங்களை மக்கள் எனது செல்லிடப்பேசி செயலிக்கு (ஆப்) அனுப்புவார்கள் என்று நம்புகிறேன். எதிர்வரும் சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் நான் ஆற்றவுள்ள உரையில் சேர்க்க வேண்டிய விஷயங்கள் குறித்து நாட்டு மக்கள் தங்கள் ஆலோசனைகளை எனக்கு அனுப்பி வைக்கலாம்.



குழந்தை பிறப்பின்போது இறப்புகள் ஏற்படுவதைத் தடுக்க வேண்டியது அவசியம். உலக வங்கி வெளியிட்ட தகவல்களின்படி, இந்தியாவில் பிரசவத்தின்போது தாய்மார்கள் இறக்கும் விகிதம் கடந்த 1990-ம் ஆண்டில் 556 ஆக இருந்தது. அது தற்போது 174 ஆகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கர்ப்பிணிகளின் நலனுக்காக 'பிரதம மந்திரி சுரக்ஷித் மாத்ருத்வ அபியான்' திட்டத்தை நாம் தொடங்கியுள்ளோம். அத்திட்டத்தின்கீழ் அரசு மருத்துவமனைகள்,  ஒவ்வொரு மாதமும் 9ம் தேதியன்று ஏழை கர்ப்பிணிகளுக்கு இலவசமாக மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளும் வசதிகளை அளிக்கும்.


மருத்துவமனைகளில் பணிபுரியாத மகப்பேறியல் மருத்துவர்கள் மாதம்தோறும் தங்களின் ஒரு நாளை இதற்காக ஒதுக்க வேண்டும். இதுபோன்ற பணிகளுக்கு லட்சக்கணக்கான மருத்துவர்கள் இத்திட்டத்தில் இணைய வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மகப்பேறியல் மருத்துவர்கள் மாதம்தோறும் தங்களின் ஒரு நாளை இதற்காக ஒதுக்கிப் பணியாற்ற வேண்டும். 

டெங்கு போன்ற நோய்கள் பரவி வருகின்றன. எனினும், நோய் எதிர்ப்பு மருந்துகளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதை மக்கள் தவிர்க்க வேண்டும். டாக்டர்கள் பரிந்துரைக்கும் மருந்து, மாத்திரைகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும்" என்றார்





Saturday, 30 July 2016

சித்த மருத்துவத்தின் அருமையை உலகம் உணரத்தொடங்கி உள்ளது!'



சென்னை, லயோலா கல்லூரியில் உள்ள தாவரவியல் மற்றும் உயிர் தொழில் நுட்பவியல் துறை மற்றும் பூச்சியியல் ஆய்வு நிறுவனம் சார்பில் பேராசிரியர் ச.இன்னாசி முத்து , பெ.பாண்டிக்குமார் மற்றும் சு.முத்தீசுவரன் ஆகியோர் இணைந்து எழுதிய 'அனுபவ சித்த மருத்துவ முறைகள்' நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. லயோலா கல்லூரியின் முதல்வர் ஆரோக்கியசாமி முன்னிலையில், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழும தலைமை இயக்குநர் இராமசுவாமி, நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.


பேராசிரியர் இராமசுவாமி பேசும்போது,"  'உணவே மருந்து மருந்தே உணவு' என்று வாழ்ந்தவர்கள் நாம். இதை மறந்து போனதால், இன்று நோய்களின் பிடியில் சிக்கித் தவிக்கிறோம். பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் தங்களது வணிக நலனுக்காக, 'ஆங்கில மருந்துகள்தான் சிறந்தவை' என்ற மாயத் தோற்றத்தை மக்களிடையே  ஏற்படுத்தியுள்ளன. நமது சித்தமருத்துவ முறை ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையானது. இதில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருக்கின்றன. நாம்தான் அதன் பெருமையை உணராமல் இருக்கிறோம். மூட்டில் வலியோ, கழுத்தில் சுளுக்கோ இருந்தால் மருத்துவமனை சென்று ஆயிரக்கணக்கில் செலவு செய்யத் தேவையில்லை. சித்தமுறையில் வலி உள்ள இடத்தில் வர்ம சிகிச்சை மூலம் கைகளால் பிடித்துவிட்டாலே போதும், சில நிமிடங்களில் வலி குணமாகும்.


அலோபதி மருத்துவம், நோயாளியாக மனிதனைப் பார்க்கும். சித்த மருத்துவம் மனிதனை மனிதனாக பார்த்து நோயைக் குணப்படுத்த தீர்வை சொல்லும். இதனால்தான் சித்த மருத்துவம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆனாலும் மண்ணில் உயிர்ப்போடு இருக்கிறது. தமிழகத்தில் பாளையங்கோட்டையில்தான் சித்த மருத்துவக்கல்லூரி முதன்முதலாக தொடங்கப்பட்டது.  சித்த மருத்துவத்தில் தாதுக்கள், சிறிய உயிரினங்கள் கடலில் கிடைக்க கூடிய முத்து, சிப்பி, பவளம், கடல் நுரை உள்ளிட்டவை கூட  மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. அனுபவம் வாய்ந்த சித்த மருத்துவர்கள் தமிழ்நாட்டில் இன்னும் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் உள்ள சித்த மருத்துவ ஞானத்தை ஆவணப்படுத்தும் நோக்கில், எங்கள் அமைப்பும் செயல்பட்டு வருகிறது. அண்டை நாடான இலங்கையில், சித்த மருத்துவம் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது. பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வு பெருகிவருகிறது. உலகம் முழுக்கவே சித்த மருத்துவத்தின் அருமை, பெருமையை உணரத் தொடங்கியுள்ளார்கள்"  என்றார்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்களும், உயிர் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களும் பங்கேற்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த சித்த மருத்துவர்களுக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன. கலந்து கொண்ட அனைவருக்கும் உயிரி பூச்சியியல் துறை சார்பில் இயற்கை உணவு பரிமாறப்பட்டது.




லுட்விக்: நோயாளிகளுக்கு உதவும் சுட்டிப் பையன்!


ல்சைமர் என்னும் நரம்புச்சிதைவு நோய் ஏற்பட்டால் நினைவு தவறும், வாய் குழறும், கை, கால்களை உபயோகிக்க இயலாது. தினசரி வேலைகளைச் செய்து கொள்ள முடியாது. அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அபேசியா என்னும் மூளை பாதிப்பு நோயும் உடனிருக்கும். அதேபோல் டிமென்சியா என்னும் மனநலக் கோளாறு  ஏற்பட்டால், நினைவுப் பிரச்னை, அதிகரிக்கும்  குழப்பநிலை, ஆர்வமின்மை, மனச்சோர்வு  ஆகியன ஏற்படும். 2050 களில் இந்நோயின் தீவிரம் அதிகரிக்கலாம் என எச்சரிக்கிறது மருத்துவ உலகம்.இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவே வரமாய் வருகை தந்திருக்கிறான் லுட்விக்.
 
முள்ளம்பன்றித் தலையும், பச்சைக் கண்களுமாய் சிறுசிறு முக பாவனைகளுடன் 102 செ.மீ உயரமுள்ள குட்டி ரோபோ பையன்தான் லுட்விக். லுட்விக் விட்ஜென்ஸ்டீன் எனும் தத்துவ ஞானியின் நினைவாக  லுட்விக் என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது இவனுக்கு. கனடாவின் டொரன்டோ பல்கலைக்கழகமும் மிட்டாக்ஸ் என்ற தன்னார்வ அமைப்பும் இணைந்து இந்த ரோபோவை உருவாக்கியுள்ளனர்.



நார்த் யார்க்  நகரத்திலுள்ள அல்சைமர் மற்றும் டிமென்சியா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுவரும் ஒன் கென்டில் என்ற சிறப்பு இல்லத்தில் லுட்விக் முதல் முறையாக களமிறக்கப்பட்டான். அவனை வைத்துச் செயல் விளக்கம் அளித்தனர். விநாடிக்கு 28 செ.மீ வரை நடக்கும் வல்லமை கொண்ட இவனுடன்  இரண்டு கேமராக்கள் இருக்கும்.
 
நோயின் ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் பத்து நோயாளிகளுடன் இவனை வைத்துப் பரிசோதனை மேற்கொண்டனர். ஆரம்பத்தில் லுட்விக் அவர்களுக்கு வீட்டு வேலைகளைச் செய்து கொடுத்தும், அவனால் பேச்சுக்களைச் சரியாய் உணர முடியவில்லை. எனவே மேலும் சில முன்னேற்றங்களுக்குப் பிறகு பேசுவதைப் புரிந்து கொள்வது, அதற்குப் பதிலளிப்பது போன்ற திறன்களை அவனுள் உட்புகுத்தினர்.

அவனை ரிமோட் உதவியுடனும் கட்டுப்படுத்திக் கொள்ளலாம். எதிரே இருப்பவர்கள் பேசும் விதத்தை வைத்தே அவர்கள் எந்த மனநிலையில் இருக்கிறார்கள், என்பதை கணித்துவிடுவான். உரையாடலை எழுத்துக்களாய் மாற்றும் திறமையிலும் லுட்விக் வல்லவன். இப்போது லுட்விக் அல்சைமர் நோயாளிகளின் உற்ற நண்பனாகி இருக்கிறான்.


லுட்விக்கைப் பற்றி அதன் தயாரிப்புக்குழுவினைச் சேர்ந்த விஞ்ஞானி Dr. பிராங்க் ரூட்சி கூறும்போது, "தற்சமயம் கனடாவில் கணிசமான மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் சில வருடங்களில் இது இன்னும் உயரும். எனவே லுட்விக்கின் சேவை நமக்குத் தேவை என்றாகி விடும். எங்கள் பல வருட ஆராய்ச்சியின் முதல் படியே இந்தச் சுட்டிப் பையன்" என்கிறார்.
 
இந்த லுட்விக் ரோபோவை ரோபோகிண்ட் என்னும் நிறுவனம்,  3000 டாலர் மதிப்பில் விற்பனைக்குக் கொண்டு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

லுட்விக்கின் வருகைக்குக் காத்திருக்கிறது கனடா...