Monetize Your Website or Blog

Showing posts with label கோழி வளர்ப்பு. Show all posts
Showing posts with label கோழி வளர்ப்பு. Show all posts

Friday, 8 April 2016

வாழ வைக்கும் பால் மாடு.. வழிகாட்டிய நபார்டு…

தங்கம் செய்யாததை சங்கம் செய்யும் என்று கிராமங்களில் சொல்வார்கள். இந்தப் பழமொழியை உண்மையாக்கி இருக்கிறது, கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், பெரும்பதி கிராமத்தில் செயல்பட்டுவரும் ‘பசுமை உழவர் மன்றம்’. நபார்டு வங்கியின் கீழ் செயல்பட்டுவரும் இந்த மன்றம், தேசிய அளவில் சிறந்த உழவர் மன்றமாக மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறது.

மன்றத்தின் தலைவர் திருவேங்கடத்தை வாழ்த்துக்களோடு சந்தித்த போது, மகிழ்ச்சியின் உச்சியில் நிற்பவராக நம்மிடம் பேசினார். “இந்த ஊரில் 500 குடும்பங்கள் இருக்கு. முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பித்தான் ஜீவனம். கொஞ்சம் பேர், கறவை மாடுகளையும் வைச்சிருக்காங்க. ஆனாலும், பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை.
 இளவட்டங்கள் வேலை தேடி டவுன் பக்கம் போயிட்டாங்க. கிடைக்கும் பருவமழையை வைத்து, நிலக்கடலை, தக்காளி, சோளம், கம்பு என்று நடுவோம்.




ஒரு தடவை, நபார்டுகாரங்க எங்க ஊரில் வந்து மீட்டிங் போட்டாங்க. அதில் பால் உற்பத்தி மூலமாக விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று சொன்னாங்க. எங்க ஊர் விவசாயிகள் கொஞ்சம் பேரை ஒரு குழுவா குஜராத்திற்கும் கூட்டிட்டுப் போய் அங்கே, இருக்கும் ஆனந்த் பால் பண்ணையை சுற்றிக் காட்டி… பால் தொழிலில் ஜெயிக்கும் வழிமுறைகளை சொல்லிக் கொடுத்தாங்க. அதன்பிறகு தான் ஒவ்வொருத்தராக போய் பார்த்து பேசி, கறவை மாடுகளை வாங்குவதற்கு ஏற்பாடு செய்தோம்.

அந்த சமயத்தில் பால் விலை ரொம்ப குறைவாக இருந்ததால் நிறைய பேர் விரக்தியாகத்தான் பேசினாங்க. கறவை மாடு வாங்குவதற்கு நிறைய பேரிடம் பணமும் இல்லை. அதன் பிறகுதான் ‘நபார்டு’ பேங்க் அதிகாரிகள் உழவர் மன்றம் ஆரம்பிக்க சொன்னாங்க. அதன்படி 25 பேர் சேர்ந்து, ‘பசுமை உழவர் மன்றம் என்று ஆரம்பித்தோம். நபார்டு மூலமாக.. 25 பேருக்கும், ஆளுக்கு 2 கறவை மாடுகள் என்ற கணக்கில் தலைக்கு 50 ஆயிரம் ரூபாய் என்று பேங்கில் கடன் வாங்கிக் கொடுத்தாங்க. அதன் மூலமாக வந்த 50 கறவை மாடுகள்தான் இன்றைக்கு எங்க ஊரின் போக்கையே மாற்றிப் போட்டிருக்கிறது. 

பக்கத்தில் இருக்கும் முத்துகவுண்டன்புதூர் விவசாயிகளைச் சேர்ந்து மன்றம் ஆரம்பித்து, அவங்களுக்கும் கறவை மாடுகளை வாங்கினோம். இப்போது, எங்க இரண்டு கிராமத்தில் மட்டும் 150 கறவை மாடுகள் இருக்கு, இதன் மூலமாக 75 விவசாயிகள் வருமானம் பார்த்துக்கிட்டுருங்காங்க. தினமும் 1,500 லிட்டர் அளவுக்கு பாலை உற்பத்தி செய்கிறோம்.
ஆரம்பத்தில் தமிழ்நாட்டில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் லிட்டருக்கு 17 ரூபாய் கொடுத்து எங்க பாலை கொள்முதல் செய்து கொண்டிருந்தாங்க. ஆனால், எங்க ஊரிலிருந்து கூப்பிடு தூரத்தில் இருக்கும் கேரளா பால்பண்ணை நிறுவனம், லிட்டருக்கு 23 ரூபாய் வரை விலை கொடுத்து எங்க ஊருக்கே வந்து பாலை எடுத்துக்கிறாங்க. அதனால், கேரளா கம்பெனிக்குத்தான் பால் ஊற்றுகிறோம். தினமும் சராசரியாக 30 லிட்டர் பால் உற்பத்தி செய்யும் விவசாயிக்கு, கேரள கம்பெனிக்கு பால் ஊற்றும் போது, 180 ரூபாய் கூடுதலாக கிடைக்கிறது.

முறையான பயிற்சி கிடைத்தப்பிறகு, எல்லாரும் ரொம்ப அக்கறைய கால்நடைகளை வளர்க்கிறாங்க. இந்த வெற்றிதான், எங்க பசுமை உழவர் மன்றத்திற்கு தேசிய விருதை வாங்கிக் கொடுத்திருக்கு. நபார்டு பேங்க் செய்து கொடுத்த கடன் உதவியும், கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் கால்நடைப் பல்கலைக் கழக ஆராய்ச்சி மையம் கொடுத்த தொழில்நுட்ப உதவியினாலும் தான்
  இதெல்லாம் சாத்தியமானது என்றார்.

இக்கிராமத்தைச் சேர்ந்த ரங்கதுரை, வறட்சியில் வாடும் விவசாயிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம் தான் கறவைமாடுகள். வெளி வேலைக்கும்
  போக முடியாமல், விவசாயமும் பார்க்க முடியாமல், என்னை மாதிரி நடுத்தர விவசாயிகள் படும் கஷ்டம் ரொம்பக் கொடுமைங்க. நபார்டு வங்கி புண்ணியத்தில் இப்ப என்னிடம் இரண்டு கறவை மாடுகள் இருக்கு. தினமும் 25 லிட்டர் பால் கிடைக்கிறது. பேங்கில் வாங்கிய கடனுக்கு தவணையை ஒழுங்காக கட்டிக்கொண்டிருக்கிறேன். இப்ப எனக்கு மனக்கஷ்டமும் இல்லை, பணக் கஷ்டமும் இல்லை என்றார் நன்றியுடன்.


முறையான வளாப்பு.. நிறைவான லாபம்..
பெரும்பதி கிராமம், பால் உற்பத்தியில் சிறந்து விளங்குவதற்கு முக்கிய காரணம் முறையான பராமரிப்பு, தீவன மேலாண்மை மற்றும் நோய்தடுப்பு யுகத்திகள்தான். ஊருக்கே வந்து ஆலோசனையும், மருத்துவ உதவியும் செய்து வருகிறது. கோயம்புத்தூரில் இயங்கி வரும் தமிழ்நாடு கால்நடை அறிவியில் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மையம்.

அதன் தலைவர் டாக்டர் சிவக்குமாரிடம் பேசியபோது, கறவை மாடுகளைப் பொருத்தவரை தீவன மேலாண்மையும் ரொம்ப முக்கியம். கோ – 4 , கம்பு, நேப்பியர் சாகுபடி செய்து கொள்ள
  வேண்டும். பெரும்பகுதியைப் பொருத்தமட்டில்  தென்னையில் ஊடுபயிராகவும், தனிப்பியராகவும் அனைவரும் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்கிறார்கள். சொட்டுநீர்  மற்றும் ரெயின்கன் பாசனக்கருவிகளைப் பொருத்தியிருக்கிறார்கள். தொழுவுரம், கோழி எரு, ஆட்டுப்புழுக்கை போன்ற இயற்கை உரங்களையே பெரும்பாலும் பயன்படுத்தி வருவதால் பசுந்தீவன உற்பத்தியுடன் தென்னையின் காய்ப்புத்திறனும் நன்றாக இருக்கிறது. தவிர, புல் வெட்டும் கருவி, தீவனம் நறுக்கும் இயந்திரம் ஆகியவற்றையும் மானிய விலையில் பெற்று பயன்படுத்தி வருகிறார்கள். மாதம் இருமுறை கால்நடை வல்லுநர்கள் குழு இந்த ஊருக்கு வந்து கால்நடை முகாம் நடத்தி வருவதால், மாடுகள் நிறைவாக பால் கொடுக்கின்றன என்றார்.


தொடர்புக்கு
 
திருவேங்கடம், செல்போன் : 94861 34531



Wednesday, 6 April 2016

நாட்டுக்கோழி இனங்கள்

நம் இந்தியாவில் மட்டும் 18 கோழி இனங்கள் உள்ளனஅவற்றில் தமிழகத்தில் 7 கோழியினங்கள் உள்ளன.

குருவுக்கோழி,
பெருவிடைக்கோழி,
சண்டைக்கோழி அசில்கோழி,
கடக்நாத் என்னும் கருங்கால் கோழி,

கழுகுக்கோழி அல்லது கிராப்புக்கோழி என்னும் நேக்கட் நெக்,

கொண்டைக்கோழி,

குட்டைக்கால் கோழி.

உயர்ரக நாட்டுக்கோழி இனம்

நந்தனம்கோழி ஆராய்ச்சி நிலையத்தில் நந்தனம் ஒன்று மற்றும் நந்தனம் இரண்டு என்ற இருவகை உயரினக்கோழிகள் உற்பத்தி செய்தனர்ஆந்திர மாநிலத்தில் வனராஜா என்ற உயரினக்கோழியை உற்பத்தி செய்தனர்.பெங்களூரு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் கிரிராஜா மற்றும் சுவர்ணதாரா என்னும் உயரினக் கோழிகளைஉற்பத்தி செய்து புறக்கடை முறையில்கோழி வளர்ப்பதற்காக நமக்கு கொடுத்துள்ளனர்.

நல்ல ஆரோக்கியமான கோழிகள் மற்றும் சேவல்கள் மிடுக்காகவும் தன்னைச் சுற்றி நடக்கும் காரியங்களில்கவனமுள்ளவையாகவும் இருக்கும் வேகமான நடைவேகமான ஓட்டம்தேவைக்கேற்ப சில மீட்டர்கள் தூரம்பறத்தல்சில நேரங்களில் கொக்கரித்தல்கூவுதலுமாக இருக்க வேண்டும்பொதுவாகச் சேவல்கள் இனச்சேர்க்கையில்பிரியமுள்ளவைகளாய் இருக்கும்நல்ல அகலமான நெஞ்சம்நீண்ட உடலமைப்பும் நல்ல சேவலுக்கு உதாரணமாகும்.கோழியின் சுகத்தை கொண்டைல் பார் என்பார்கள்நல்ல சிவந்த பளிச்சென்ற கொண்டை நல்ல சுக தேகத்தைக்குறிக்கும்கால்கள் மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்துடன் இருக்க வேண்டும்நம் நாட்டு சூழலுக்கேற்ப வளரக்கூடிய ப்ரம்மாரகக்கோழிகளை தேர்ந்தெடுப்பது நல்லதுதேவையான அனைத்து உணவுச்சத்துக்களும் அடங்கிய சரிவிகிதத்தீவனத்தையே எப்பொழுதும் உபயோகிக்க வேண்டும்தீவனத் தொட்டியில் போதுமான இடவசதிகோழிகளுக்குக்கிடைக்கும் வண்ணம் தேவையான எண்ணிக்கையில்தீவனத் தொட்டிகளை வைக்க வேண்டும்தீவனத் தொட்டியின்மேற்புற விளிம்புகோழிகளின் முதுகுப்புறத்திற்கு இணையான நேர்கோட்டில் இருக்கும்படி வயதுக்கு ஏற்பதீவனத்தொட்டியின் உயரத்தை மாற்றி அமைத்துவர வேண்டும்சரிவர அமைக்கப்பட்ட தீவனத் தொட்டிகளை மட்டுமேஉபயோகிக்க வேண்டும்அரைக்கப்பட்ட தீவனத்தைத் தொடர்ந்து பல நாட்களுக்குச் சேமித்து வைக்கக்கூடாதுதீவனமூடைகளை ஒரு அடி உயரம் உள்ள மரச்சட்ட அமைப்புகளின் மீது சுற்றுப்புறச் சுவரிலிருந்து ஒரு அடி உயரம் உள்ளமரச்சட்ட அமைப்புகளின் மீது சுற்றுப்புறச் சுவரிலிருந்து ஒரு அடி தள்ளி இருக்கும்படிதான் அடுக்கி சேமிக்க வேண்டும்.



மேய்ச்சல் முறை / புறக்கடை வளர்ப்பு
ஒரு சென்ட் பரப்பளவில் 200 கோழிகள் வளர்கலாம்போதுமான நிழல்பசுந்தீவனம்தீவனம்தண்ணீர்கிடைக்கப் பெறுமாறு செய்திடல் வேண்டும்.
மித தீவிர முறை
கொட்டில் கலந்த மேய்ச்சல் முறையில் வளர்க்கும் போது ஒரு சென்ட் பரப்பளவில் 700 கோழிகள் வளர்க்கலாம்.கோழிகள் புழு , பூச்சி , தானியங்கள் , இலைதழைகளை உண்டு வாழும்.
தீவிர முறை
கோழிகளை தரை கூண்டு அல்லது பரண் மேல் விட்டு வளர்ப்பது.
கூண்டு முறை
கம்பிகள் பின்னப்பட்ட கூண்டுகளில் குஞ்சுகள் முதல் கோழிகள் வரை வளர்ப்பது.


 "மெய்ச்சல்ல வளர்ந்தாதான் அது நாட்டுக் கோழி "


"பிராய்லர் கோழிகளைத் தவிர்த்துவிட்டுநாட்டுக் கோழிகளை வளர்க்குற விஷயம் கேக்குறதுக்கு நல்லாத்தான் இருக்குஆனாலேயர்பிராய்லர் தீவனத்தைக்கொடுத்து நாட்டுக் கோழிகளை மொத்தமா அடைச்சு வெச்சு வளக்குறப்போ பிராய்லருக்கும் நாட்டுக் கோழிக்கும்வித்தியாசமே இல்லாமப் போயிடும்
நாட்டுக்கோழி பராமரிப்பு
இளம் நாட்டுகோழி குஞ்சுகள் பராமரிப்பு ( 1 - 7 வாரம்)
குஞ்சுகளை பெறுவதற்கு முன் கொட்டகைகளில் அடைப்பான்களை அமைக்க வேண்டும்ஒருஅடைகாப்பானில் அதிகபட்சமாக 250 300 குஞ்சுகளை வைத்து வளர்க்கலாம்முதல் வாரத்தில் 95 பாரன்கீட்என்றளவில் வெப்பம்பிறகு ஒவ்வொரு வாரமும் 5 பாரன்கீட் என்றளவில் வெப்பத்தை குறைத்து கொடுக்க வேண்டும்.குஞ்சு பருவ தீவனத்தை கொடுத்து வளர்க்க வேண்டும்சுடவைத்து ஆற வைத்த தண்ணீரை குஞ்சுகளுக்கு கொடுக்கவேண்டும்நியோ மைசின்டாக்சி சைக்லின்செபலேக்சின் போன்ற கோழி குஞ்சுகளுக்கு நோய் பாதிப்பை தடுக்ககொடுக்கப்பட வேண்டும்.

வளர் நாட்டுகோழி பராமரிப்பு (8 - 18 வாரம்)

இப்பருவத்தில் கோழிகளுக்கு கொடுக்கப்படும் தீவனத்தில் புரதசத்தின் அளவு சதவீதம் இருக்க வேண்டும்.எரிசக்தியின் அளவு 2700 கிலோ கலோரியாகவும் , நார் சத்தின் அளவு 8 சதவீதத்திற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். 17 வது வார துவக்கத்தில் பேன்செல் போன்ற வெளிப்புற ஒட்டுண்ணிகள் காணப்பட்டால் அதை ஒழிப்பதற்கு.
1-2 மி.லி டெல்டா மெத்திரின் என்ற மருந்தை (பியுட்டாக்ஸ்லிட்டர் தண்ணீர் கலந்து
 கோழிகளின் தலைப்பகுதிதவிர முக்கி எடுத்தல் வேண்டும்மேலும் கொட்டகைகளிலும் தெளித்து விட வேண்டும்இந்த மருந்து கோழிகளைவெயில் அடிக்கும் மதிய வேளையில் மேற்கொள்ள வேண்டும்பருவநிலை மாற்றத்தின் போது கோழிகளின் சுவாசகோளாறு ஏற்ப்பட்டால் என்ரோ பிலாக்சசின் மில்லி /கோழி என்ற அளவு தண்ணீரில் கொடுக்க வேண்டும்.

முட்டையிடும் நாட்டுக்கோழி பராமரிப்பு ( 18 வாரம் முதல் )

ஒரு கோழி ஒரு வருடத்தில் சுமார் 60 முதல் 80 முட்டைகள் வரை இடும்ஒரு பருவத்தில் 12 – 18 முட்டைகள்இடும்கலப்பின நாட்டுக் கோழியான நாமக்கள் கோழி 1 240 - 280 முட்டைகள் வரை இடும்இப்பருவத்தில் 18 சதவீதபுரதமும், 2700 கிலோ கலோரி எரிசக்தி தீவனம் அளித்தல் வேண்டும்ஒரு முட்டை கோழி தினமும் 240 – 300 மி.லிட்டர்தண்ணீர் குடிக்கும்.
கோடைகால பராமரிப்பு
கோழிகள் தீவனம் இல்லாமல் பல நாட்களுக்கு உயிர்வாழும்ஆனால் தண்ணீர் இல்லாமல் அவற்றால்உயிர்வாழ முடியாதுகோழிகளைப் பொறுத்தமட்டில் தண்ணீர் இன்றியமையாப் பொருளாகும்கோடை காலங்களில்சுற்றுப்புற வெப்பத்தை குறைப்பதில் தண்ணீர் பெரும்பங்காற்றுகிறதுவணிக அளவில் வளர்க்கப் படும்இறைச்சிக்கோழிகளுக்கு அவை உண்ணும் தீவனத்தைப் போல இரு மடங்கு தண்ணீர் தேவைகோடையில்கோழிகளின் உடலிலிருந்து கூடுதலாக வெப்பம்அவை விடும் மூச்சுக் காற்றின் மூலமே வெளியேறுகிறது.பறவைகளைப் பொறுத்தமட்டில் வியர்வைச் சுரப்பிகள் இல்லாத காரணத்தால் கூடுதலாக உண்டாகும்உடல்வெப்பத்தை வியர்வை மூலம் வெளியேற்ற இயலாதுஎனவே கோழிகளால் சுவாசக் காற்று மூலம்தான் உடல்சூட்டினை தணித்துக் கொள்ள முடியும்.

 குளிர்கால பராமரிப்பு
சிமென்ட் தரை கொண்ட கோழி வீட்டில் மரத்தூள்மரஇழைப்பு சுருள்நெல் உமிநிலக்கடலைத் தோல்கரும்புசக்கைதுண்டிக்கப்பட்ட மக்காச் சோளத் தக்கை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை உபயோகித்து கோழிகளைவளர்க்கலாம்ஆழ்கூளமாக உபயோகப்படுத்தும் பொருட்கள் நன்றாக ஈரத்தை உறிஞ்சக்கூடியதாக இருக்க வேண்டும்.மலிவு விலையில் உள்ளூரிலேயே கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும்மற்றும் ஆழ்கூளத்தை கிளறிவிடும் போதுகாற்றில் எளிதில் உலரக் கூடியதாக இருக்க வேண்டும்கோழி வளர்ப்பில் ஆழ்கூளப் பராமரிப்பு மிகவும் முக்கியமானதாகும்கூளத்தை தினமும் நன்கு கிளறிவிட வேண்டும்கோழி வீட்டின் காற்றோட்டம்கோழிகளின் வயதுஎண்ணிக்கை,எடை மற்றும் தட்பவெப்ப நிலை ஆகியவற்றினை பொருத்து ஆழ் கூளத்தில் ஈரப்பதம் அதிகமாகி கெட்டியாகிவிடும்.மேலும் அமோனியா வாயு உற்பத்தி ஆகி கோழிகளுக்கு கண் எரிச்சல்சுவாச நோய்கள் பாதிப்பு ஆகியவைஏற்படுவதோடு அல்லாமல் ரத்த கழிச்சல் நோயும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு

தீவன கலவைக்கு (100 கிலோ கிராம்)  தேவையான மூலப்பொருட்களும் அளவுகளும்
 1 மக்காச்சோளம் 40 கிலோ
 2 சோளம் 7 கிலோ
 3 அறிசிகுருணை 15 கிலோ
சோயா புண்ணாக்கு 8 கிலோ
 5 மீன் தூள் 8 கிலோ
கோதுமை 5 கிலோ
அரிசித் தவிடு 12.5 கிலோ
தாது உப்புக் கலவை 2.5 கிலோ
கிளிஞ்சல் 2 கிலோ
மொத்தம் 100 கிலோ
புறக்கடையில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகளுக்கு புரத சத்து மிகக் குறைவாகவே கிடைக்கிறதுஇதனை ஈடுசெய்வதற்கு புரதச்சத்து நிறைந்த பானைக் கரையானும்அசோலாவும் கொடுத்து வளர்க்கும் பொழுது தீவன செலவுவெகுவாக குறைய வாய்ப்புள்ளதுசிறு வெங்காயம் மற்றும் கீரைகளை நறுக்கி நாட்டுக் கோழிகளுக்கு உணவாககொடுக்கலாம்.

கோழிகளுக்கு சிறந்த தீவனம் அசோலா

அசோலா ஓர் உன்னத கால்நடை மற்றும் கோழித்தீவனமாக பயன்படுத்தப்பட்டு வருகிறதுவிவசாயிகள்அசோலாவைத் தங்கள் தோட்டங்களிலேயே வளர்த்து கால்நடை மற்றும் கோழிகளுக்கு தீவனமாக வழங்குவதன் மூலம்நல்ல உற்பத்தி பெறலாம்இதுகுறித்து விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் சுப்பிரமணியன்மற்றும் உதவிப் பேராசிரியர் வெதனுஷ்கோடி கூறியது

நாட்டுக் கோழிகளுக்கு கரையான் தீவனம்

கரையானின் தீமைகள் குறித்தே அறிந்த பலருக்கு கரையான் தீவனமாகப் பயன்படும் என்றால்ஆச்சரியமாகத்தானே இருக்கும்நாட்டுக் கோழி வளர்ப்பவர்களுக்கு கரையான் சிறந்த உணவாக பயன்படுகிறது.கரையான் உற்பத்தி செய்து கோழிக் குஞ்சுகளுக்குத் தீனியாகக் கொடுத்தால்கரையான் சாப்பிட்ட குஞ்சுகள் மற்றகுஞ்சுகளைவிட இருமடங்காக வளர்ச்சியடையும்தேவையான பொருட்கள் 1. ஒரு பழைய பானை 2. கிழிந்த கோணி/சாக்கு 3. காய்ந்த சாணம் 4. கந்தல் துணிஇற்றுப்போன கட்டைமட்டைகாய்ந்த இலைஓலை போன்ற நார்ப்பொருட்கள்கரையான் உற்பத்தி செய்முறை மேற்கண்டவற்றை பழைய பானையினுள் திணித்து சிறிது நீர் தெளித்து வீட்டிற்குவெளியே தரையில் கவிழ்த்து வைத்துவிட வேண்டும்முதல் நாள் மாலை கவிழ்த்து வைத்தால் மறுநாள் காலை திறந்துபார்த்தால் தேவையான கரையான் சேர்ந்திருக்கும்தாய்க்கோழி உதவியுடன் குஞ்சுகள் உடனடியாக எல்லாகரையானையும் தின்று விடும்கரையான் தின்று அரை மணி நேரத்திற்கு தண்ணீர் கொடுக்கக்கூடாதுஒரு பானையில்சேரும் கரையான் 10-15 குஞ்சுகளுக்கு போதுமானது

செயற்கை முறை குஞ்சு பொரிப்பகம்

குஞ்சு பொரிப்பகம் உபயோகித்தும் நாட்டு முட்டைகளைப் பொரிக்கலாம்கோழியில் அடை வைப்பதைவிட இதுஇலகுவானதுகோழிகள் வருடத்திற்கு 4 முறை குஞ்சுகள் பொரிக்கும்ஆனால் செயற்கை முறை குஞ்சு பொரிப்பகம்அதை உபயோகிப்பவரின் திறமையைப் பொறுத்து 12 முறை குஞ்சுகள் பொரிக்கலாம்இவற்றின் மூலம் அதிகமாகக்குஞ்சு பொரிக்க முடியும்குஞ்சுப் பொரிப்பகமானதுசெயற்கை முறையில் தேவையான வெப்பம் மற்றும் ஈரப்பதம்முட்டைகளுக்கு கொடுத்து குஞ்சு பொரிக்க உதவும் ஒரு இயந்திரமாகும்இதில் இரண்டு பிரிவுகள் உள்ளனஒன்றுஅடை காப்பான் (Setter) மற்றொன்று பொரிப்பன் (Hatcher) ஆகும்.

 நாட்டுகோழிகளின் நல மேலாண்மை

நாட்டு கோழிகளை தாக்கும் பொதுவான நோய்கள்

1) இராணிகெட் நோய் (வெள்ளை கழிச்சல்)
2) அம்மை நோய்
3) கோழி காலரா
4) சளி நோய்
5) ரத்த கழிச்சல் மற்றும் மஞ்சள் - ஈரல் நோய்
6) தலை வீக்க நோய்
7) ஒட்டுண்ணி பாதிப்புக்கள்

கோழிகளை தாக்கும் நோய்களில் வெள்ளை கழிச்சல் நோய் மிகவும் முக்கியமானது.இந்த நோய் கோழிகளைகோடை கால மற்றும் குளிர்கால பருவ மாற்றத்தின்போது அதிகமாக பாதிக்கும் இதை கொக்கு நோய் என்றும் கூறலாம்.இந்த நோய் தாக்கப்பட்ட கோழிகளின் குடலும் நரம்பு மண்டலமும் பாதிக்கப்படும்.இந்த நோய் தாக்கப்பட்ட கோழிகள்தீவனம் எடுக்காது தண்ணீர் குடிக்காது வெள்ளையாகவும் பச்சையாகவும் கழியும் எச்சம் இடும் பொது ஒரு காலைதூக்கிகொல்லும் ஒரு இறக்கை மட்டும் செயல் இழந்து தொங்கும் தலையை முறுக்கி கொள்ளும் இறந்த கோழிகளைபரிசோதனை செய்து பார்த்தால் இரைப்பையில் ரத்த கசிவு இருக்கும்வெள்ளை கழிச்சல் நோய் வராமல் தடுக்க தடுப்பூசிஅவசியம் போட வேண்டும்