Monetize Your Website or Blog

Showing posts with label அறிவியல். Show all posts
Showing posts with label அறிவியல். Show all posts

Friday, 26 August 2016

கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் தவிர்ப்போம்: கண்களைக் காக்கும் 10 கட்டளைகள்

'கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்' என்பது நாள்தோறும் அதிகரித்து வரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. தினமும் 6-8 மணி நேரத்துக்கு மேல் கம்ப்யூட்டர், டேப்லெட், மொபைல் பயன்படுத்துபவர்களுக்கு கண்களில் ஏற்படும் பிரச்னைகளை 'கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்' என்கிறோம். பார்வைக்குறைபாடு, கண்களில் நீர்வடிதல், அரிப்பு, எரிச்சல் உட்பட பல்வேறு பாதிப்புகள் இதனால் ஏற்படுகின்றன.


1.போதுமான வெளிச்சம் இருக்கட்டும்
கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அறையில் போதுமான வெளிச்சம் இருப்பது அவசியம். இருட்டான, வெளிச்சம் அற்ற அறையிலோ அதிக வெளிச்சமான அறையிலோ கம்ப்யூட்டரைப் பயன்படுத்த வேண்டாம். கம்ப்யூட்டர் திரைக்குப் பக்கவாட்டில் இருந்து வெளிச்சம் வரும்படியாக இருப்பது நல்லது. தலைக்கு நேர் மேலே இருந்து வெளிச்சம் விழும்படியாக அமர்வதை இயன்றவரை தவிர்க்க வேண்டும். அளவான வெளிச்சம் உள்ள ஃப்ளோரோசன்ட், எல்.இ.டி பல்புகளைப் பயன்படுத்தலாம்.


2.கிளாரைத் தவிர்க்கவும்
கம்ப்யூட்டர் திரையில் கிளார் விழுவதைத் தவிர்ப்பது மிகவும் முக்கியம். கம்ப்யூட்டர் திரைக்குப் பின்புறம் ஜன்னல், கதவு, லைட் இருந்தால், அதிக வெளிச்சம் காரணமாகத் திரையில் கிளார் அடிக்கும். இப்படி கிளார் அடிக்கும் மானிட்டரைத் தொடர்ந்து பார்க்கும்போது, கண்கள் பாதிக்கப்படுகின்றன. மேலும், கண்ணாடி பயன்படுத்துபவர்கள்​`ஆன்டிரிஃப்ளெக்டிவ்​'​ கண்ணாடிகள் அணிவது கிளாரைத் தடுக்க உதவும்.
3.எல்.சி.டி/எல்.இ.டி மானிட்டரைப் பயன்படுத்துங்கள்
பழைய சி.ஆர்.டி (கேத்தோட் ரே ட்யூப்) மானிட்டர்களில் பெரும்பாலும் ஆன்டிரிஃப்ளெக்டிவ் கோட்டிங் இருக்காது. இதனாலும் கண்கள் பாதிக்கப்படலாம். எனவே, எல்.சி.டி/ எல்.இ.டி மானிட்டர்களைப் பயன்படுத்துங்கள். ரெசல்யூஷன் அதிகமாக உள்ள மானிட்டர்களைப் பயன்படுத்துவது கண்களுக்கு நல்லது. ரெசல்யூஷன் என்பது `டாட்பிட்ச்’ எனப்படும் ஒளிப்புள்ளிகளின் எண்ணிக்கையால் தீர்மானிக்கப்படுகிறது. பொதுவாக, குறைவான ஒளிப்புள்ளிகள் துல்லியமான உருவங்களை உருவாக்குகின்றன. டிஸ்ப்ளேவில் 0.28 மி.மீட்டருக்குக் குறைவான ஒளிப்புள்ளிகள் இருப்பது நல்லது.
4.கான்டாக்ட் லென்ஸ்
கான்டாக்ட் லென்ஸ் உபயோகிப்பவர்கள், தொடர்ந்து கம்ப்யூட்டரைப் பார்க்கும்போது மற்றவர்களைவிட கண் எரிச்சல் போன்ற பிரச்னையால் பாதிக்கப்பட நான்கு மடங்கு வாய்ப்பு அதிகம் என்கிறார்கள். சாதரண கான்டாக்ட் லென்ஸ்களைவிட சிலிக்கான் ஹைட்ரோஜெல் கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவது ஓரளவு நல்ல பலனைத் தரும்.
5.டிஸ்ப்ளே செட்டிங்ஸ்
டிஸ்ப்ளே செட்டிங்ஸை சீராக்குவது ஓரளவுக்கு நல்ல பலனைத் தரும். மானிட்டரின் பிரைட்னெஸ் எப்போதும் உங்களைச் சுற்றி உள்ள சூழலின் வெளிச்சம் எவ்வளவு உள்ளதோ அதே அளவு இருக்கட்டும். கண்களை உறுத்தாத, கண்களைச் சுருக்கிப் பார்க்கச் செய்யாத இயல்பான வெளிச்சமே நல்லது.
​'​டெக்ஸ்ட் சைஸ்​'​ எப்போதும் கான்ட்ராஸ்ட்டுக்கு இயல்பாக இருக்கட்டும். குறிப்பாக, நீளமான டாக்குமென்ட் ஃபைல்களில் வேலை செய்யும்போதும் படிக்கும்போதும் வெள்ளைப் பின்புறத்தில் கறுப்பு எழுத்துக்களாக இருப்பது நல்லது.​ படிக்கும்போது எழுத்துக்களை பெரிய அளவில் வைத்து படித்துவிட்டு, பிறகு நார்மலான அளவுக்கு மாற்றிக்கொள்ளலாம்.​
`கலர் டெம்ப்பரேச்சர்’ என்று ஒரு ஆப்ஷன் உண்டு. இது, கணிப்பொறித் திரையில் இருந்து வெளிப்படும்  ஒளிக்கற்றைகளின் அளவைக் குறிக்கும். நீல வண்ண வெளிச்சம் என்பது குறைந்த அலை நீளம் உடையது. எனவே, கண்களை அதிகம் சிரமப்படுத்தும். சிவப்பு, ஆரஞ்சு போன்றவற்றின் அலை நீளம் அதிகம் என்பதால், அவை ஓரளவு குறைவாகவே கண்களைப் பாதிக்கும். கலர் டெம்ப்பரேச்சரைக் குறைப்பதன் மூலம், நீள அலைக்கற்றைகளைக் குறைத்து, கண்களைப் பாதுகாக்கலாம்.
6.கண்களைச் சிமிட்டுங்கள்
பொதுவாக, கண்களைச் சிமிட்டும் பழக்கம் என்பது, கண்களை உலர்வின்றி ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும். கணிப்பொறியைப் பயன்படுத்தும்போது கண் சிமிட்டுவது பாதிக்கப்படுகிறது. மேலும், சில சிமிட்டல்கள் முழுமையற்றதாக அரைச் சிமிட்டல்களாகிவிடுகின்றன. கண்களில் உள்ள நீர் இதனால் வேகமாக ஆவியாகிறது. உலர்ந்த கண் பிரச்னை இருப்பவர்கள் மருத்துவரிடம் ஆலோசித்து, 'செயற்கை கண்ணீர்த் துளிகளை' விட்டுக்கொள்ளலாம். கண் சிவப்பை நீக்குவதற்காகத் தரப்படும் கண் சொட்டு மருந்துடன் இதனைக் குழப்பிக்கொள்ள வேண்டாம். கண் சொட்டு மருந்துகளில் கண் சிவப்பை நீக்குவதற்காக ரத்தநாளங்களைச் சுருக்கும் வேதிப்பொருட்கள் இருக்கும். இவை, கண் உலர்தலையோ அரிப்பையோ போக்கும் என்று சொல்வதற்கு இல்லை. ஒவ்வொரு 20 நிமிடங்களுக்குப் பிறகும் 10 முறை கண்களைச் சிமிட்டலாம்.
7.கண் பயிற்சிகள்
தொடர்ந்து உலர்வான கண்களோடு கணிப்பொறியை வெறிப்பது,​ கண்களுக்கும் நரம்புகளுக்கும் சோர்வைத் தரும். இதைப் போக்க 20:20:20 என்று ஓர் எளிய பயிற்சி உள்ளது. அதாவது 20 நிமிடங்களுக்கு ஒருமுறை 20 அடி தொலைவில் உள்ள ஒரு பொருளை (அது பச்சை வண்ணத்தில் இருப்பது நல்லது) 20 விநாடிகள் இமைக்காமல் பார்க்க வேண்டும். இப்படிச் செய்வதால் தூரப்பார்வை, கிட்டப்பார்வை தொந்தரவுகள் ஏற்படாது.​ கம்ப்யூட்டர் அருகில், இண்டோர் செடிகளை வளர்ப்பதன் மூலம், செடியின் பச்சை நிறம் கண்களுக்கு சற்று ஓய்வை தரும்.​


8.கண்களுக்கு ஓய்வு கொடுங்கள்
கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம், கழுத்துவலி, தோள்பட்டை வலி போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தவிர்க்க, தொடர்ந்து கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதற்கு இடையே போதுமான ஓய்வு கொடுங்கள். நாள் முழுதும் அமர்ந்து வேலை செய்துகொண்டிராமல், குறைந்தது இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை எழுந்து ஒரு நடைவிடுங்கள். கை, கால், கழுத்தை ஸ்ட்ரெச் செய்யுங்கள், கண்களைச் மேலும், கீழும், இடது வலதுபுறங்களில் வட்டமாகவும் சுழற்றிப் பயிற்சி கொடுங்கள்.
9.வேலைச் சூழலை கண்களுக்கு ஏற்ப ​மாற்றுங்கள்
அச்சடிக்கப்பட்ட காகிதத்தையோ புத்தகத்தையோ பார்த்து டைப் செய்யும்போது, கணிப்பொறித் திரையையும் காகிதத்தையும் மாறி மாறி பார்ப்பதால் கண்கள் பாதிக்கப்படுகின்றன. இதைத் தவிர்க்க புத்தகத்தையோ தாளையோ மானிட்டரின் அருகில் ஒரு ஸ்டாண்டு வைத்து அதில் பொருத்தலாம். அதேபோல, அந்தத் தாளின் மீது போதுமான வெளிச்சம் இருப்பதும் முக்கியம். கணிப்பொறித் திரை கண் மட்டத்திலிருந்து 40 டிகிரி சாய்வாக இருப்பது நல்லது. கண்களுக்கும் கணிப்பொறி திரைக்கும் இடையே அரைமீட்டர் இடைவெளியாவது இருப்பது நன்று. எர்கோனாமிக் நாற்காலியில் அமர்ந்து பணிபுரிவது உடலின் போஸ்ச்சரைப் பாதுகாக்கும். கழுத்துவலி, கைவலி, முதுகுவலி, இடுப்புவலி என உடல்வலிகளில் இருந்து காக்கும்.


10.கண் பரிசோதனை
வருடத்துக்கு ஒருமுறை கண் மருத்துவரைச் சந்தித்து கண்களைப் பரிசோதியுங்கள். கம்ப்யூட்டரை நீங்கள் பயன்படுத்தும் விதம், நேரம் போன்ற தகவல்களை அவரிடம் தெரிவியுங்கள்.

இந்தியா ஏழாவது பணக்கார நாடு! எப்படி தெரியுமா..?

மீபத்திய நாடுகளின் சொத்து மதிப்பு கணக்கிடப்பட்டது. அதில், இந்தியா 5,600 பில்லியன் டாலருடன் ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்கா 48,900 பில்லியன் டாலருடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது, மூன்றாவது இடங்களில் சீனாவும், ஜப்பானும் உள்ளன. கனடா, ஆஸ்திரேலியா மற்றும் இத்தாலியை முந்தி இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது.


டாப் 10 பணக்கார நாடுகள்!

1. அமெரிக்கா  (48,900 பில்லியன் டாலர்) 2. சீனா (17,400 பில்லியன் டாலர்) 3. ஜப்பான் (15,100 பில்லியன் டாலர்) 4. இங்கிலாந்து (9,200 பில்லியன் டாலர்), 5. ஜெர்மனி (9,100 பில்லியன் டாலர்) 6. பிரான்ஸ் (6,600 பில்லியன் டாலர்) 7. இந்தியா (5,600 பில்லியன் டாலர்) 8. கனடா (4,700 பில்லியன் டாலர்) 9. ஆஸ்திரேலியா (4,500 பில்லியன் டாலர்) 10. இத்தாலி (4,400 பில்லியன் டாலர்).

எப்படி என்கிறீர்களா?
இந்தச் சொத்துக் கணக்கானது, அசையாத சொத்துக்கள், இருப்புப் பணம், பங்குகள் என அனைத்தையும் உள்ளடக்கித்தான் கணக்கிடப்பட்டு உள்ளது. மொத்தத் தொகையில் இருந்து கடன் மதிப்பு கழிக்கப்பட்ட பிறகு வரும் மதிப்புகள்தான் இவை. அது சரி, ஏழாவது இடத்தை இந்தியா எப்படிப் பிடித்தது? ஒரே காரணம், மனிதவளம்.
இந்தியாவின் மனிதவளம்தான் இந்த வளர்ச்சிக்கான மூலதனம். நகரமயமாதலும் உலகமயமாதலும் புதுப்புது தொழில்களைச் செய்வதற்கான கதவுகளை இந்தியாவுக்குத் திறந்துவிட்டன. வெளிநாட்டினர் இங்கு எளிதில் தொழில் செய்வதற்கான சூழல்களை அரசு ஏற்படுத்திக் கொடுத்ததன் மூலம் முதலீடுகள் குவிந்தன. அதுவரை விவசாயத்தில்தான் 70 சதவிகித வேலை வாய்ப்புகள் இருந்தன. ஆனால், மெல்ல அது சேவைத் துறைக்கு மாறியது.
புதிதாய் முளைத்த துறைகள்!

குறைந்த ஊதியத்தில் அதிக அளவிலான பணியாளர்கள் கிடைத்ததால் இந்தியாவில் இருந்து பல நாடுகளுக்கும் தொழில்நுட்பமும், சேவையும் கொண்டு செல்லப்பட்டன. மனிதவளத்தை மட்டுமல்லாமல் மின்சாரம், தண்ணீர், கனிமங்கள் என அனைத்து வளங்களையும் கார்ப்பரேட்கள் முழுமையாகப் பயன்படுத்தத் தொடங்கின. இதனால் இந்தியத் தொழில் துறை வேகமாக வளர்ந்தது... இந்திய மக்களிடையே பணப்புழக்கம் அதிகரித்தது. அதே நேரத்தில், நுகர்வுத் தன்மையும் அதிகரித்தது. மக்களின் வாழ்க்கை முறை வெகுவாக மாறத் தொடங்கின. செல்போன், மல்டி ஃப்ளெக்ஸ், ஆன்லைன் ஷாப்பிங் என இந்தியாவே டிஜிட்டல் மயமானது. இதனால் அனைத்துத் தொழில்களிலும் இ-காமர்ஸ் என்ற இணைய வணிகம் அதிகரித்தது. மிக இளம் வயதிலேயே ஏராளமானோர் பணக்காரர்களாக விஸ்வரூபம் எடுத்தார்கள்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மிக இளம் வயதிலேயே தொழில்நுட்பத்தை மட்டுமேவைத்து பில்லியனர் ஆனவர்களில் ஓலா நிறுவனத்தின் நிறுவனர்கள் அங்கித் பாட்டி, பாவிஷ் அகர்வால், ஸ்னாப்டீல் நிறுவனர் குனால் பால் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் நிறுவனர்கள் பின்னி மற்றும் சச்சின் பன்சால் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களின் வயது 28 - 32-க்குள்தான். அம்பானிகளும், பியானிகளும் ஆண்டாண்டுகளாய் சேர்த்த பணத்தை, ஐந்தே ஆண்டுகளில் இவர்களால் சேர்க்க முடிந்ததுதான் தொழில்நுட்ப வளர்ச்சியின் சக்திக்குச் சான்று.
இந்தியாவில் மில்லியனர்களின் எண்ணிக்கை!

2011 - 62,000
2012 - 81,000
2013 - 1,00,900
2014 - 1,17,000
2015 - 1,37,100

இங்கு எல்லோரும் பணக்காரர்களா?

இந்தியா ஏழாவது பணக்கார நாடு என்ற இடத்தைப் பிடித்துள்ளது. மொத்த சொத்து மதிப்பு இந்திய ரூபாயில் 375 லட்சம் கோடி. இந்தியாவில் 2015 கணக்கெடுப்பின்படி 1,37,100 மில்லியனர்கள் இருக்கிறார்கள். இவர்களில் டாப் 10 இடங்களைப் பிடித்துள்ள பணக்காரர்கள் மட்டுமே 8.5 லட்சம் கோடிக்குச் சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள். எனில், மிச்சமுள்ள 1,37,090 மில்லியனர்களின் மொத்த சொத்து மதிப்பு என்னவாக இருக்கும்? 130 கோடி பேரில் இவர்கள் தவிர, மிச்சமுள்ள நபர்களின் மொத்த சொத்து மதிப்பு என்னவாக இருக்கும்?


புள்ளிவிவரங்களின்படி 130 கோடி பேர் கொண்ட இந்த நாட்டில் 1.6 கோடி பேர் மட்டுமே வருடத்துக்கு ரூ.17 லட்சத்துக்கும் மேல் வருமானம் ஈட்டுகிறார்கள். 16 கோடி பேர் வருடத்துக்கு 3 லட்சத்துக்கும் மேல் வருவாய் பார்க்கும் மிடில் க்ளாஸ் மக்கள். 36 கோடி பேர் வருடத்துக்கு 1.5 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டுபவர்கள். 70 கோடி பேர் 1.5 லட்சத்துக்கும் குறைவாக வருவாய் ஈட்டுபவர்கள். மீதமுள்ள 5 கோடி பேர் கணக்கிலேயே எடுத்துக்கொள்ள முடியாத நிலையில் இருப்பவர்கள்.
காணி நிலம் வேண்டும்!

கிரெடிட் சூயிஸி சொத்து அறிக்கை 2014-ன்படி இந்தியாவில் மொத்த மக்கள்தொகையில் 1 சதவிகிதத்தினர், 49 சதவிகித இந்திய நிலத்துக்குச் சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள். 9 சதவிகிதத்தினர், 25 சதவிகித நிலத்தையும், 40 சதவிகிதத்தினர், 21.5 சதவிகித நிலத்தையும் பகிர்ந்துகொண்டிருக்கும் நிலையில், கிட்டத்தட்ட 50 சதவிகிதம் இந்திய மக்கள் வெறும் 4.5 சதவிகித நிலங்களுக்கு மட்டுமே சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள். இப்படித்தான் இந்தியாவில் சொத்துக்களின் பரவல், பணப்புழக்கத்தின் அளவு இருக்கிறது. இந்தியாவின் 80 சதவிகிதச் சொத்துக்கள் 20 சதவிகித மக்களிடம் இருக்கிறது. மிச்சமுள்ள 20 சதவிகிதச் சொத்துக்களைத்தான் 80 சதவிகித மக்கள் பகிர்ந்துகொள்கிறார்கள்.
உணவின்றி உயிர் போகிறது!

மொத்த மதிப்பீட்டில் இந்தியா வளர்ந்து இருப்பது வெளிநாட்டினரிடம் பெருமையடித்துக்கொள்ள பயன்படலாம். ஆனால், உள்நாட்டில் நிலை என்ன? நேஷ்னல் சர்வே புள்ளிவிவரத்தின்படி இந்தியாவில், நகரங்களில் சராசரியாக ஒருநாளைக்கு ஒருவர் செய்யும் செலவு ரூ.88, கிராமங்களில் ரூ.48. இன்றைய விலைவாசியில் இந்தத் தொகையில் ஆரோக்கியமான உணவுகளை உண்ண முடியுமா? இந்தியாவில் மொத்த உயிரிழப்புகளில் 53 சதவிகிதம் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் நடக்கும் உயிரிழப்புகள் ஆகும்.
ஆரோக்கியமான ஊட்டச்சத்துமிக்க உணவு இல்லாததால் எந்த நோய் எதிர்ப்புத் திறனும் இன்றி நோய்வாய்ப்பட்டு உயிரிழப்புகள் நடக்கின்றன. இவற்றில் 70 சதவிகிதத்துக்கும் மேலான உயிரிழப்புகள் 10 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள். மொத்தத்தில், ‘இந்தியா உலக அரங்கில் அனைத்து வசதிகளையும் கொண்ட ஏழாவது அழகான பங்களா’ என்ற அந்தஸ்தைப் பெற்றிருக்கிறது. ஆனால், வீட்டுக்குள் இருப்பவர்கள்தான் பட்டினியில் கிடக்கிறார்கள். அது வெளியே நின்று வேடிக்கைப் பார்ப்பவர்களுக்குத் தெரியுமா என்ன?
இங்கு என்ன வளம் இல்லை, ஆனால் ஏன் இந்த நிலை?

வளங்களின் அடிப்படையில் ஒப்பிடும்போது இந்தியாவும், சீனாவும் கிட்டத்தட்ட ஒன்றுதான். ஆனால், சீனாவால் மட்டும் எப்படி உலகில் இரண்டாவது பணக்கார நாடு என்ற இடத்தைப் பிடிக்க முடிந்தது. கடந்த 5 ஆண்டுகளில் மற்ற நாடுகளைக் காட்டிலும் மிக வேகமாக சீனா வளர்ந்துள்ளது. அதற்குக் காரணம், சீனா தனக்கென தனி வியாபாரக் கொள்கைகளை வகுத்தது. எந்தவொரு நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்களுக்கும் போட்டியாகத் தனது நாட்டிலேயே பொருட்களை உற்பத்தி செய்தது. உலகில் உள்ள மேல்தட்டு மக்களுக்கான சந்தையை அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள் பிடித்த நிலையில், நடுத்தர மற்றும் கீழ்தட்டு மக்களுக்கான சந்தையைச் சீனா பிடித்தது. வால்யூம் அடிப்படையிலான ஓட்டத்தில் சீனா மற்ற நாடுகளைக் காட்டிலும் நீண்ட இடைவெளியில் ஓடி வென்றது.


சீனப் பொருட்கள் இல்லாத நாடுகளே இல்லை. ஆனால், இந்தியாவில் இல்லாத நாடுகளின் பொருட்களே இல்லை. இந்தியா வெளிநாட்டினரின் கூடாரம். பிராண்டுகள் என்று நாம் மயங்கும் அனைத்தும் வெளிநாட்டு இறக்குமதிகள். இந்தியா இறக்குமதி செய்யும் நாடாக இருப்பதே நம்முடைய வளர்ச்சிக் குறைவாக இருக்கக் காரணம். மேலும் இங்கு ஈட்டப்படும் பெரும்பாலான வருவாய் வெளிநாட்டு முதலீடுகளால் வருபவை என்பதால், அவை இங்கே தங்குவதில்லை. கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்வதன் மூலம் கிடைக்கும் ஊதியம் மட்டும்தான் மிச்சம்.

ஆனால், வெளிநாட்டினரை நுழையவிடாமல் இருந்திருந்தால், நமது அரசியல்வாதிகளால் நமக்கு இந்த வளர்ச்சிகூடக் கிடைத்திருக்காதோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது?


Thursday, 25 August 2016

புற்றுநோயைத் தடுக்கும் 5 சமையல் பொருட்கள் !


பலமானவரையும் உருக்கிப்போட்டுவிடும் அசுரபலம் கொண்டது புற்றுநோய். வந்த பிறகு அவஸ்தைப்படுவதைவிட, வருமுன் காப்பதே புத்திசாலித்தனம். புகைபிடிப்பது, புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவது, உடல் உழைப்பில்லாமல் இருப்பது, ஆரோக்கியமற்ற உணவுகளைச் சாப்பிடுவது, ஊட்டச்சத்துக் குறைபாடு, மனஅழுத்தம், மனச்சோர்வு, காஸ்மெட்டிக் பொருட்களை அதிகம் உபயோகிப்பது, பிளாஸ்டிக் பயன்பாடு... எனப் புற்றுநோய்க்கான காரணிகள் ஏராளம். இவற்றைத் தவிர்ப்பது ஒருபுறம் இருக்கட்டும். இயற்கையாகவே புற்றுநோயை எதிர்த்துப் போராடும் சக்திகொண்ட சில சமையல் பொருட்களும் மூலிகைகளும் இருக்கின்றன. அவற்றை நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தினாலே போதும்; புற்றுநோயை அண்டவிடாமல் பார்த்துக்கொள்ளலாம். அவை...


                                          
இஞ்சி
நாட்டுவைத்தியத்தில் இஞ்சியின் பயன்பாடு மிக முக்கியமானது. நம் முன்னோர்கள் சளித் தொந்தரவில் இருந்து மூலநோய் வரைக்கும் இஞ்சியை மருந்தாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இஞ்சியை அப்படியே ஃபிரெஷ்ஷாகவோ பௌடராகவோகூடப் பயன்படுத்தலாம். சமைக்கும்போது மட்டும், அளவில் கவனம் தேவை. ஒரு டீஸ்பூன் நறுக்கிய இஞ்சி என்பது, 1/8 டீஸ்பூன் இஞ்சி பௌடருக்குச் சமம். சமையலில் இஞ்சி சேர்ப்பது சுவையைக் கூட்டும்; சமைத்த பொருள் சீக்கிரம் கெட்டுப்போகாமல் பாதுகாக்கும்; ஆரோக்கியத்துக்கு உதவும்; குடல், வயிறு ஆகியவற்றைப் புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும்.
                                       
மஞ்சள்
உணவின் நிறத்துக்காகப் பயன்படுகிறது என நாம் நினைக்கும் மஞ்சள் மகத்தானது. மஞ்சளில் இருக்கும் மஞ்சள் நிறம் அபாரமாகச் செயல்புரியும் தன்மை கொண்டது. இது, ஆன்டிஆக்ஸிடன்ட்டாகச் செயல்படுகிறது. குர்குமின் (Curcumin) என்ற சத்து, புற்றுநோய் வளராமல் பாதுகாக்கிறது. தினமும் கால் டீஸ்பூன் அளவு உணவில் சேர்த்து கொள்வது நல்லது. குடல், ப்ராஸ்டேட், மார்பகம் மற்றும் தோல் தொடர்பான புற்றுநோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் மஞ்சளுக்கு உண்டு.
                                           
சிவப்பு மிளகாய்
நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் சிவப்பு மிளகாயேதான்... அதன் ஆற்றலோ அபாரம். இதில் இருக்கும் காரத்தன்மையில் உள்ள சேர்மானம் வலியில் இருந்து நிவாரணம் தரக்கூடியது; தோலுக்குப் பாதுகாப்பு தரக்கூடியது; செரிமானக்கோளாறுகளைச் சரி செய்யக்கூடியது. சிவப்பு மிளகாயை அளவோடு சமையலில் சேர்த்துக்கொள்வது தோல் தொடர்பான புற்றுநோயில் இருந்து பாதுகாப்பளிக்கும்.


                                                       
பூண்டு
மருத்துவக் குணம் கொண்ட பூண்டு உடலில் சேரும் நச்சுக்களை முறிக்க வல்லது. இதை, அன்றாடம் சமையலில் சேர்த்துக்கொள்வது நல்லது. பூண்டில் இருக்கும் சல்ஃபர், ஆர்ஜினைன், ஃப்ளேவனாய்ட்ஸ் மற்றும் செலினியம் எல்லாமே உடல் ஆரோக்கியத்துக்கு உதவுபவை. பூண்டை நசுக்கும்போது அதிலிருந்து கிளம்பும் மணத்துக்குக் காரணம், பூண்டில் இருக்கும் ஆலிசின் (Allicin) என்ற சேர்மானம்தான். பூண்டு உடலில் சேரும் கொழுப்பைத் தடுக்க உதவுகிறது. மார்பகம், குடல், வயிறு, உணவுக்குழாய், கணையம் ஆகியவற்றில் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது. ’லுகூமியா’ எனும் ரத்தப் புற்றுச் செல்களை அழிப்பதில் துணைபுரிகிறது. பூண்டுக்கு ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் தன்மையும், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கும் ஆற்றலும் உண்டு.
                                                      
புதினா
பல நூற்றாண்டுகளாக நாம் பயன்படுத்தி வரும் புதினா ஓர் அருமருந்து. வாயுக்கோளாறு, செரிமானமின்மை, முதுகுப்பிடிப்பு, மூட்டுவலி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இர்ரிடபிள் பௌல் சிண்ட்ரோம் மற்றும் ஃபுட் பாய்ஸன் போன்ற பிரச்னைகளின்போது உதவக்கூடியது. வயிற்றுப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் புதினாவுக்கு உண்டு.




உங்கள் குழந்தைக்கான உரிமையை வீட்டில் கொடுக்கிறீர்களா?

குழந்தைகளுக்கான உரிமைகள் என்றதுமே பள்ளிக்கூடத்தில்,பொதுஇடத்தில் என்றுதான் யோசனை வரும்ஆனால் குழந்தைகளுக்கன உரிமைகள் அது கருவாக அம்மாவின் வயிற்றுக்குள் இருக்கும்போதிருந்தே தொடங்கிவிடுகிறது.  அவைப் பற்றிதோழமை குழந்தைகள் உரிமைகளுக்கான அமைப்பின் இயக்குநர் அ.தேவநேயன் கூறுகிறார்.

1. கர்ப்பத்தில் இருப்பது ஆண் குழந்தையாபெண் குழந்தையாமாற்றுத் திறனாளியா எனப் பார்த்து இனம் கண்டறிந்து கருக்கலைப்பு செய்துவிடாமல் காப்பது.

2. கர்ப்பக் காலத்தில் தாய்க்கு சரிவிகித உணவு

தேவையான தடுப்பூசிகள்
,மனதைப் பாதிக்காத சூழல் ஆகியவையும் அவசியம்.

3. குழந்தைப் பிறந்ததும் தாய்ப்பால் தரப்படுவதும் குறிப்பாக சீம் பால் கொடுக்கப்பதும் குழந்தையின் அடிப்படை உரிமை.

4. குழந்தைப் பிறந்த குறிப்பிட்ட தினங்களில் பிறப்புச் சான்றிதழ் பெறுவது மிக முக்கியமானதுதவறும்போது எதிர்காலத்தில் அதன்பொருட்டு ஏராளமான சிக்கல்களை குழந்தை எதிர்கொள்ளவேண்டிருக்கும்.

5. குழந்தையின் ஆரம்ப கால பராமரிப்பு கவனத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டும்தேவையான எடையுடன் தடுப்பூசிசத்தான உணவுகள் தரப்பட வேண்டும்.

6. குழந்தை பிறந்த 1000 நாட்களுக்குள்வழக்கமான உடல் திறனோடு இருக்கிறதா அல்லது ஏதேனும் குறைகள் இருக்கிறதா என்பதை இனம் கண்டு அதற்கு தகுந்த மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

7. குழந்தையைப் பராமரிப்பு மையத்தில் விடுவோர்குழந்தையின் பாதுகாப்பு குறித்து நூறு சதவிகிதம் திருப்தி அடைந்தால் மட்டுமே அங்கு குழந்தையை விட வேண்டும்.


8. குழந்தைகள் வீட்டில் தங்கள் கருத்துகளை அச்சமற்று பகிர்ந்துகொள்ள்ளும் சூழலும் கல்விஉடைத் தேர்வு உள்ளிட்டவற்றில் குழந்தையின் கருத்துகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

9. ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்திறன் இருக்கும்அதை இனம் கண்டு அங்கீகரிப்பதும் மற்றவரோடு ஒப்பிட்டு குறை சொல்லவும் கூடாது.

10. சிறு குறைகள் இருக்கும் (பேசும்போது திக்குவது போன்ற)குழந்தைகளைஎந்தச் சூழலிலும் புறக்கணிக்காமல் வளர்ப்பதும் அவர்களுக்கான வாய்ப்புகளைத் தவிர்த்துவிடாமல் ஊக்கப்படுத்தவும் வேண்டும்.

11. குழந்தைகளில் ஆண்பெண்மாற்றுத்திறனாளி எனப் பேதம் பார்க்காமல் சமத்துவத்துடன் நடத்தப்பட வேண்டும்அவர்களின் விருப்பங்களை நிராகரிக்கவோ புண் படுத்தவோ கூடாது.

12. குழந்தைகளின் முகத் தோற்றம்பழகும் இயல்பு ஆகியவற்றை வைத்து திட்டவோகுறைக்கூறவோ கூடாது.

(குரங்கு சேட்டையெல்லாம் செய்யறான் என்பதுபோல)

13. பெற்றோர்களே குழந்தைகளின் ரோல் மாடல் என்பதால் அவர்களின் முன் தகாத சொற்கள் பேசுவதுசண்டைப் போடுவது என்பதை தவிர்த்து குடும்பத்தில் ஜனநாயகத் தன்மை நிலவுவதை குழந்தைகள் உணரும் விதத்தில் குடும்பச் சூழலை உருவாக்கி தர வேண்டும்.

சின்ன விஷயங்களும் குழந்தைகளின் மனதில் பெரும் மாற்றங்களைத் தந்துவிடும்அந்த மாற்றம் நல்லதுகெட்டது என இரண்டு வகைகளிலும் அமைந்துவிடும்மேலே உள்ளவற்றை அவர்களின் உரிமைகள் என்பதாக நினைக்காமல் பெற்றோரின் கடமையாக நினைத்தாலே எந்தச் சிக்கலும் வராது.


Wednesday, 24 August 2016

எனக்கான விலையை இன்பாக்ஸில் சொல்லாதீர்கள்!- நெட்டிசன்களை தலை குனியவைத்த இளம்பெண்

பெண்ணை 14 வினாடிகள் உற்றுப்பார்ப்பது தொடர்பாக கேரள காவல்துறை அதிகாரி ஒருவர் வெளியிட்ட சர்ச்சை கருத்துக்கு கேரள இளம் பெண் எழுத்தாளர் ஒருவர் தனது முகநுாலில் கருத்து தெரிவித்திருந்தார். நெட்டிசன்கள் இதற்கு மோசமான எதிர்வினையாற்ற, அதற்கு இந்த இளம்பெண் அளித்த துணிச்சலான பதில் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிக்கொண்டிருக்கிறது.


கொச்சியில் கடந்த சில வாரங்களுக்கு முன் மாணவர்கள் அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கேரள கலால் வரித்துறை ஆணையர், ரிஷிராஜ் சிங் பங்கேற்றார். நிகழ்ச்சியில் நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்து வருவது  வருத்தம் அளிப்பதாக கருத்து தெரிவித்த அவர், 'பெண்கள் பாதுகாக்கப்பட  வேண்டியவர்கள். ஒரு பெண்ணை வெறும் 14 விநாடிகள் ஒருவர் முறைத்துப் பார்த்தாலோ அல்லது உற்று நோக்கினாலோ அவர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய சட்டத்தில் இடம் இருக்கிறது. இப்படி ஒரு சட்டம் இருப்பதே நாட்டில் பலருக்கும் தெரியவில்லை. ஒருவர் தரக்குறைவாக பேசினாலோ அல்லது தகாத முறையில் நடந்தாலோ பெண்கள் பொறுத்துக் கொள்ளக் கூடாது. சம்பந்தப்பட்ட நபர் மீது தீவிர நடவடிக்கை எடுக்க பெண்கள் சரியான சட்ட நுணுக்கங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்'' என பேசினார்.

இது கேரளா மட்டுமின்றி இந்தியா முழுவதும் சலசலப்பை உண்டுபண்ணியது. இந்த கருத்துக்கு ஆண்கள் மத்தியில் சமூக வலைத்தளங்களில் பரபரப்பு கருத்துக்கள் பரிமாறப்பட்டன. நெட்டிசன்கள்  ரிஷிராஜ் சிங்கின் கருத்துக்கு மீம்ஸ், அனல் தெறிக்கும் கண்டனம் என தங்கள் எதிர்ப்பை பல வழிகளிலும் தெரிவித்தனர்.
''ஒரு பெண்ணை 13 விநாடிகள் மட்டும் பார்த்து விட்டு முகத்தை திருப்பிக் கொள்கிறோம். பின்னர்  மீண்டும் 13 விநாடிகள் பார்க்கிறோம்.  அப்போ சட்டம் என்ன சொல்லுது' எனவும், 'ஆண்கள் கூலிங்கிளாஸ் கண்ணாடி அணிந்திருந்தால் எப்படி கண்டுபிடிக்க முடியும்'' என்றும் அவரிடம் கேள்வி கேட்டுள்ளனர். ''அடுத்த முறை ஒரு பெண்ணிடம் பேசும்போது டைமர் வைத்துக் கொண்டு பேசுகிறேன். இல்லையென்றால், எனக்கு சிக்கல்கள் வரும்'' என இன்னொரு நெட்டிசன் ரிஷிராஜ் சிங்கை கலாய்த்தார். இப்படி கலால் வரித்துறை ஆணையரின் பேச்சு கேரளாவில் விவாதப் பொருளானதோடு அந்த வாரத்தில் வைரலானது.

இதனிடையே இந்த கருத்து தொடர்பாக கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த வனஜா வாசுதேவ் என்ற இளம் பெண் எழுத்தாளர், தனது முகநூலில் ஒரு கருத்தை பதிவு செய்தார்.

‘’ஆணும் பெண்ணும் எதிர்பாலினத்தவரை உற்றுப்பார்ப்பது சகஜமான ஒன்றே.. நான்கூட அழகால் கவரப்பட்டு ஆண்களை பார்த்து ரசித்திருக்கேன். ஒரு ஆண் ஒரு பெண்ணை உற்றுப்பார்ப்பது ஒன்றும் துன்புறுத்தலோ அல்லது வேறு எதுவோ அல்ல. உண்மையில் அப்படி ஒரு பார்வை பெண்களுக்கு தங்கள் மீது தன்னம்பிக்கையையே ஏற்படுத்தும்.’’ - இதுதான் அந்த பதிவின் சுருக்கம்.

கொஞ்ச நேரத்தில் கலாச்சார துாதுவர்களாக பல ஆண்கள் வனஜாவின் பதிவுக்கு எதிர்வினையாற்றத் துவங்கினார்கள். சீறிவந்தன கண்டனக்கணைகள். அந்த பதிவிற்கு வந்த கமெண்ட்கள் மட்டுமே 1100. அதில் வனஜாவை கொச்சையாக விமர்சித்துவந்த கமெண்ட்கள் பாதிக்கும்மேல்.

''நீயும் ஒரு பெண்ணா, கலாச்சாரத்தை சீரழிக்கிற ************என்ன? ' என மவுஸ் கூசும்படியான வார்த்தைகளால் அவரை அர்ச்சிக்க துவங்கினர். பலர் அவரது இன்பாக்ஸில் அவரது விலை என்னவென்று அருவருப்பான கேள்விகளை எழுப்பியிருந்தனர்.

எழுத்தாளர் என்பதால் இந்த பதிவுகளுக்கு அவர் ஆத்திரப்படாமல் நிதானமாகவே விரிவான பதிலை அவர்களுக்கு தந்தார் வனஜா தன் முகநுாலில்.



''5 வயதில் தந்தையை இழந்த என்னையும் என் சகோதரனையும் தாய் வறுமையுடன் போராடி காப்பாற்றினார். நாங்கள் பசியோடு கழித்த நாட்கள் ஏராளம்… காரணங்களின்றி பகலில் என் தாய் என்னை அடிப்பார். பின் இரவில் தலையை கோதிவிட்டு கண்ணீர் சிந்துவதும் வாடிக்கை. இளம் வயதில் கணவனை இழந்த அவரை வாட்டி வதைத்த தனிமையின் கொடுமையே அது என்று பின்னர் புரிய வந்தது. உறவினர்கள் நண்பர்கள் வட்டாரம் அந்த ஏழைத்தாயின் நடத்தையை கொச்சையான வார்த்தைகளால் பேசியது. இரத்த உறவினர்களும் கூட. பண்பான என் தாயாரின் நடத்தையை பற்றியும் கூச்சமே இல்லாமல் பல கதைகள் கட்டிவிட்டனர்.

அப்படிப்பட்ட சூழலிலே உழன்றுதான் பாலிடெக்னிக் முடித்தேன். கேரளாவில் பல நிறுவனங்களில் பணிபுரிந்தேன். கூடவே முதுநிலை பட்டப்படிப்பும் சிரமத்துடன் முடித்தேன்....கலாச்சாரத்தை நான் சீரழித்துவிட்டதாகக் கூறி என் அந்தரங்கத்தை கொச்சைப்படுத்தும் நீங்கள், என்னை *********கண்ணியம் பற்றியும் ஏன் பாடம் எடுக்கக்கூடாது.?

ஆம், நான் ஆண்களை ரசித்துப் பார்க்கிறேன். ஆனால் ஒரு ஆணை நான் பார்ப்பதாலேயே அவர்கள் விருப்பப்பட்ட இடத்தில் ஒதுங்கி அவர்களுக்கு ஒத்துழைக்கத் தயாராகிவிடுவேன் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளாதீர்கள்...வறுமையோடு போராடி குடும்பத்தை காப்பாற்றிய ஒரு விதவைத்தாயின் மகளான எனக்கு உங்கள் வசவுகள் எள்ளளவும் காயப்படுத்தாது. இந்த பதிவை பார்த்து என் பெண்மைக்கு நீங்களே ஒரு விலை நிர்ணயம் செய்ய உங்களுக்கு தைரியம் உள்ளதா? அப்படியே உங்களுக்கு தைரியம் இருந்தால் அதை வெளிப்படையாக கமெண்ட்டில் போடுங்கள். இன்பாக்சுக்குள் வந்து சொல்லாதீர்கள்…''

வனஜாவின் இந்த தெளிவான உருக்கமான பதில் அவரை காயப்படுத்தியவர்களை சிந்திக்கவைத்திருக்கிறது. அதன் எதிரொலியாக பலர் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளனர். அதேசமயம் சிலர் வசவுகளை தொடர்ந்தபடி உள்ளனர்.

வனஜாவின் இந்த பதிவு முகநுாலில் பதிவிடப்பட்ட அன்றே 2300 முறை பகிரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  அதுமட்டுமின்றி தன்னை ஒழுக்கக்கேடான பெண்ணாக சித்திரித்தவர்களை கண்ணியமாக அதே நேரத்தில் சாட்டையடியான பதிலால் சிந்திக்கவைத்த வனஜாவின் பதிவை கேரளாவின் முன்னணி நடிகர்கள், பிரமுகர்களும் ஷேர் செய்து வைரலாக்கிக்கொண்டிருக்கின்றனர்.



Tuesday, 23 August 2016

பொண்டாட்டிடா’ டப்ஸ்மாஷ் பெண்ணைச் சந்தித்த ரஜினி!




'கபாலிடா..."  என்று 'கபாலி' டீஸரில்  ரஜினி பேசிய வசனத்தை உலகம் முழுக்க 3-கோடி மக்கள் பார்த்து ரசித்தனர். டப்ஸ்மாஷிலும்  வைரலடித்தது அந்த வசனம். பலரும் தங்கள் மேனேஜருக்கு, பாஸுக்கு, நண்பனுக்கு, எதிரிக்கு என்று டப்ஸ்மாஷ் கிளப்ப, தமிழில் ஒரு பெண்   'பொண்டாட்டிடா..'  என்று பேசி நெட்டில் பரவவிட்ட ஒரு டப்ஸ்மாஷ் டரியல் வைரலானது. தன் பார்வைக்கு வந்த அந்த வீடியோவை  ரஜினியும் பார்த்து ரசித்தார். அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய உடனே அந்த  பெண்ணை சந்திக்க ஆசைப்பட்டார். சோ விரும்பியதின் பேரில்  'கபாலி'  ப்ரிவ்யூ காட்சியில் கலந்து கொண்ட ரஜினியை, உடல்நிலையைக் காரணம் காட்டி மருத்துவர்கள் கடிந்து கொண்டனர்.  ஆகவே வெளியுலக சந்திப்பை தவிர்த்து வந்தார் ரஜினி.
நேற்று  'கபாலிடா' டயலாக் பேசிய அந்தப் பெண்ணை  நேரில் பார்க்க ஆசைப்பட்டார், ரஜினி. அதன்படி  திடீரென  அந்த பெண்ணுக்கு ரஜினி வீட்டிலிருந்து போன் வர, எதிர்முனையில் இருந்த பெண்ணுக்கு சந்தோஷம் தாங்கமுடியவில்லை. ரஜினியே லைனில் வந்து  நேரில் பார்க்க விரும்புவதாகச் சொல்ல ஆனந்தத்தில் திக்குமுக்காடி விட்டார்.  அதன்படி  சென்னை சேமியர்ஸ் சாலையில் இருக்கும்  தனுஷ் வீட்டில்  அந்த பெண்மணி ரஜினியை சந்தித்தார்.  ரஜினியை சந்தித்து போட்டோ எடுத்துக்கொள்ள லட்சம்பேர் போட்டி போட்டுக் கொண்டிருக்க ரஜினி ஆர்வமாக அந்த பெண்ணுடன் போட்டோ எடுத்துக் கொண்டார்
'கபாலிடா...' டயலாக்கை மாற்றி 'பொண்டாட்டிடா...' என்று பேசும் எண்ணம் எப்படி வந்தது.. இந்த டயலாக்கைக் கேட்டுவிட்டு உங்கள்  உறவினர், நண்பர்கள் என்ன சொன்னார்கள் என்று ஆர்வமாக கேட்டார், ரஜினி.  வைரல் வீடியோ டயலாக்கில் கணவர்கள் சமூகத்தை  கண்டபடி சகட்டுமேனிக்கு வெளுத்துக்கட்டிய அந்த பெண்மணி வெட்கத்தோடு தலைகுனிந்து ரஜினிக்கு பதில் சொன்னதை  பார்த்து ரஜினிமகள் ஐஸ்வர்யா ரசித்தார்.




அட... 49 ரூபாய்க்கு லேண்ட் லைன் தொலைபேசி சேவை! - யார் கொடுப்பது?

வாடிக்கையாளர்களை கவரும் வகையில் 49 ரூபாய்க்குத் தரைவழித் தொலைபேசி சேவையைத் தொடங்கி உள்ளது பி.எஸ்.என்.எல். நிறுவனம்.



தன்னை விட்டுச் சென்ற வாடிக்கையாளர்களைத் திரும்ப வரவழைக்கும் விதமாக பல அதிரடி அறிவிப்புக்களை வெளியிட்டு வருகிறது பி.எஸ்.என்.எல். நிறுவனம். கடந்த ஜூன் 15-ம் தேதி முதல் ரோமிங் கட்டணத்தை ரத்து செய்தது. மேலும், தரைவழித் தொலைபேசி சேவையில் தினந்தோறும் இரவு 9 மணி முதல் காலை 7 வரை பேசிக்கொள்ள இலவசம் என்று அறிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பொதுமேலாளர் கலாவதி, ''சில குறைபாடுகள் காரணமாக பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை விட்டுச் சென்ற வாடிக்கையாளர்களைத் திரும்ப வரவழைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாகப் பல்வேறு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் ஒன்றாக, மாத கட்டணம் 49 ரூபாய்க்கு தரைவழித் தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த தரைவழித் தொலைபேசி சேவையில், தினந்தோறும் இரவு 9 மணி முதல் காலை 7 வரை இலவசமாகப் பேசிக் கொள்ளலாம்.
மேலும், பி.எஸ்.என்.எல். லேண்ட் லைன் இணைப்பு வாயிலாக நாட்டில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு இணைப்புகளுக்கும் இனி ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யும் உள்நாட்டு அழைப்புகள் இலவசம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சலுகையும், தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 49 ரூபாய்க்கு தரைவழித் தொலைபேசி சேவைக்கும் பொருந்தும்.



பி.எஸ்.என்.எல் சேவையை அதிகப்படுத்தும் வகையில், விரைவில் 300 தொலைத்தொடர்பு கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன. தற்போதைய சூழலுக்கு ஏற்றபடி அதிநவீன வசதி கொண்ட பிராட்பேண்ட் சேவை அளிக்கப்பட உள்ளது" என்றார்.

Monday, 22 August 2016

உடல் எடையைக் குறைக்கும் 5 உணவுகள்!​

தினமும் ​அரை மணி நேரம் ஓடுவது, பிறகு யோகா​,​ டயட் என உட​ல் எடையை குறைக்க பாடுபவர்கள்​,​ கண்டுகொள்ளாத விஷயம் அவர்கள் உண்ணும் உணவு. ஆம், டயட்​டில்​ இருப்பதோடு நாம் சில​ உணவுகளை உண்டால்​, உடலிலுள்ள கெட்ட கொழுப்பு​ விரைவில்​ கரைந்து விடும். 'ஃபேட் பர்னிங்'​ ​(Fat burning) காய்​ மற்றும் க​​னி​ வகைகளை அன்றாடம் நம் உணவு பட்டியலில் சேர்த்து கொள்வது நல்லது.
br />
1. எலுமிச்சை
இந்த பட்டியலில் முதல் இடம்​,​ எலுமிச்சைக்குதான். எலுமிச்சையில்  ​'​வைட்டமின் சி​'​ ​  சத்துக்கள் நிறைந்துள்ளன. வைட்டமின் சி நி​றைந்த அனைத்து உணவுகளுமே, கொழுப்பைக் கரைக்க கூடியவை. காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில்​,​ எலுமிச்சை ஜூஸ்​ கலந்து​ குடித்தால், உடலிலுள்ள ​கழிவுகளை அகற்றும்​.​ வைட்டமின் சி​ சத்து,​ கொழுப்பை கரைக்கும் வேலையை செய்யும்.  இது​ ​மட்டுமல்லாமல், தொடர்ந்து எலுமிச்சை சாறு அருந்தி வந்தால், இருமல், ​சளி, தலைவலி, அஜீரண கோளாறு ஆகியவை ​வராமல் தடுக்கும்.
2. சோம்பு
சோம்பில் ​தாதுக்கள் நிறைந்துள்ளன. ​மேலும், இதில் கலோரி​களும்​ குறைவு​தான்​. ​உடலில் ​செரிமான சக்தியை அதிகப்படுத்து​ம்​. இரவு உறங்குவதற்கு முன்பு​,​ சோம்பை வெதுவெதுப்பான நீரில் ஊர வை​த்து, காலையில்​ அந்த நீரைக் குடிக்க​ வேண்டும். அதேபோல, ​​ஹெவியான உணவுகளை சாப்பிட்ட பிறகு சிறிதளவு சோம்பை மென்று திண்ணலாம்.
3. கிரீன் டீ
கிரீன் டீயில், வேறு எந்த உணவிலும் காண முடியாத அளவு ஆண்டிஆக்ஸிடண்ட்​ சத்துக்களை​ காணலாம். இதில்​ பாலிஃபினால்​ ​(​polyphenol​)​ ​ ​எனப்படும் ​சத்துக்களும் நிறைந்துள்ள​ன. சர்க்கரை இல்லாமல் தினமும் கிரீன் டீ பருகி வருவது உடலிலுள்ள கொழுப்பை உருக செய்யும். இதிலுள்ள ​இதர சத்துக்கள்​ ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தக் கூடியது. தினமும் கிரீன் டீ பருகுவதால்,  கொழுப்பைக் கரைப்பதோடு, நம் உடலையும் பாதுகாக்கும்.
br />
4. தர்பூசணி
தர்பூசணி முழுக்க முழுக்க நீர்ச்சத்து நிரம்பியது. இதுதவிர, தர்பூசணியில் ஏராளமான அளவு வைட்டமின்களும் ​தாதுக்களும் உள்ளன. இது உடல் எடையைக் குறைக்க உதவும். தர்பூசணி கொழுப்பை நம் உடலில் சேர விடாமல் ​தடுக்கும்​.​ தொப்பையைக் குறைக்க விரும்புபவர்கள்​,​ உடற்பயிற்சி​,​ டயட்டோடு​ அவசியம்​ சேர்த்து​ கொள்ள வேண்டிய உணவு​ தர்பூசணி​.​
5.​ குறுக்காக வெட்டி பயன்படுத்த கூடிய​  காய்கறிகள்
இதை ஆங்கிலத்தில்​ க்ருசிஃபெரஸ் (cruciferous vegetables​)​ என்று அழைப்​பர்​. அதாவது, குறுக்காக வெட்டினால்​ இந்த  காய்கறி வகைகளைப் பயன்படுத்த முடியும்.​ ​ காலிஃபிளவர், முட்டைக்கோஸ், பிராக்கோலி போன்ற ​காய்கறிகள் இவ்வகையை சேர்ந்தது. இதில் ​நார்ச்சத்து​களும் அதிகம். இதிலுள்ள ஆண்டிஆக்ஸிடண்ட்​,​ கொழுப்பைக் குறைப்பதோடு​,​ நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்​கும்.​
இனிமேல், உங்கள் உணவில் ​இந்த ஐந்து உணவுகளும் இடம் பெறட்டும்!​
br />



Thursday, 18 August 2016

வெகுநேரம் அமர்ந்து பணி புரிந்தால், ஆயுள் குறையாது.. ஆனால்...?!

ஒரு நாளில் அதிக நேரம் உட்கார்ந்திருந்தால் இடுப்புவலி, முதுகுவலி வருவதோடு மட்டுமல்லாமல் வாழ்நாளைக் குறைக்கும் என்ற ஆராய்ச்சி முடிவு சில  மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்தின்  நேஷனல் ஹெல்த் சர்வீஸ் (NHS) மருத்துவமனை ஆராய்ச்சியாளர்களால் வெளியானது. அது அப்போது சமூக வலை தளங்களில் வைரலாகப் பரவ, அலுவலகத்தில் பல மணிநேரம் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள் மனதில் பயம் பரவியது. ஆனால் தற்போது எஸ்சிடர் பல்கலைக்கழகமும், லண்டன் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆராய்ச்சியில் ஓர் உண்மை வெளியாகியுள்ளது. உலகில் நீண்டகாலம் (16 வருடங்கள்)  நடைபெற்ற ஆராய்ச்சிகளில் இதுவும் ஒன்று. இதற்காக 5000 பேர் தேர்வு செய்யப்பட்டனர். 'NHS- இன் முடிவுகள் தவறானது. நெடுநேரம் உக்கார்ந்திருப்பதால் உடலில் கொழுப்பு சேர்ந்து சர்க்கரை நோய் வர சாத்தியக்கூறுகள் உள்ளன. ஆனால் ஆயுள் குறையாது’ என தெரிவித்துள்ளனர். எபிடெர்மியாலஜி சர்வதேச மருத்துவ இதழில் இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.


லண்டன் பல்கலைக்கழக பேராசிரியர் மெல்வின் ஹில்சிடன் கூறுகையில், 'நெடுநேரம் அசையாமல் ஒரே நிலையில் இருப்பது உடற்பருமன் , டைப் 2 சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், திடீர் மாரடைப்பு, கல்லீரல் பாதிப்பு உள்ளிட்ட பல உடல் உபாதைகளைத் தரக்கூடியது என கூறுகிறார். அமர்ந்திருப்பது மட்டுமல்லாமல் நிற்பதோ, படுப்பதோ எதுவாக இருந்தாலும் பலமணிநேரம் ஒரே நிலையில் இருக்கக் கூடாது. நிலையை குறைந்தது அரை மணி நேரத்துக்கொருமுறை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். ஆனால் மனிதனின் சராசரி ஆயுள் குறைவதற்கும், அதிகரிப்பதற்கும், ஒரே நிலையில் அமர்ந்திருப்பதற்கும் சம்பந்தம் இல்லை என இந்த ஆராய்ச்சி மூலம் நிரூபணமாகிறது. சாப்பிட்டு விட்டு நெடுநேரம் நிற்கும்போது 30 சதவிகித உடல் கொழுப்பை இழக்க வாய்ப்புள்ளது. அதுவே அமர்ந்திருக்கும்போது கொழுப்பு கரைய தாமதமாகிறது.
பொதுவாக அலுவலகத்தில் குறைந்தது 8 மணிநேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அவ்வப்போது எழுந்து நிற்கவோ, நடக்கவோ செய்ய வேண்டும். அப்படிச் செய்யாமல் தொடர்ந்து பலமணிநேரம் உட்கார்ந்துவிட்டு , தினமும் காலையில் மட்டும் கடுமையான உடற்பயிற்சி செய்வதால் எந்தவித பயனும் இல்லை,


சர்க்கரை அளவு மதியம் சாப்பிட்டு விட்டு பலமணிநேரம் அமர்ந்து வேலை செய்வதால் அதிகரிக்கும் என்கிறார், பேராசிரியர் ரிச்சர்ட் பல்ஸ்போர்ட்.  10 மணிநேரம் தொடர்ந்து உட்கார்ந்து வேலை செய்வதால் 50 வயதுக்கு மேற்பட்ட பருமனான ஆண்களுக்கு இதயக்குழாய் அடைப்பு ஏற்படலாம். மேலும் முதுகு தண்டுவடத்திற்கு இடையே உள்ள டிஸ்க் அழுத்தப்பட்டு தேய்மானம் அல்லது வீக்கம் உண்டாகலாம். மெனோபாஸ் முடிந்த 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஸ்பாண்டிலைடிஸ் என்னும் எலும்பு வலு இழக்கும் தன்மை உண்டாகலாம்.
4 முதல் 5 மணி நேரம் வரை நின்று வேலை செய்பவர்கள் (லிஃப்ட் ஆபரேட்டர்கள், வாட்ச்மேன்)  அவ்வப்போது நடக்கவோ, உட்காரவோ வேண்டும். சிலர் படுத்தவுடன் களைப்பு மேலிட ஆழ்ந்த தூக்கத்துக்கு சென்று விடுவார். இதனால் மல்லாந்த நிலையிலேயே பலமணிநேரம் தூங்குவார். இதனால் பின்மண்டை, முதுகு, தொடை அழுத்தப்பட்டு உடற்பாகங்களில் ரத்த ஓட்டம் நின்று மரத்துப் போகலாம். ஆகவே அவ்வப்போது படுத்திருக்கும் நிலையை மாற்றப் பழக வேண்டும். துவக்கத்தில் சிரமமாக இருந்தாலும் போகப் போக பழகிவிடும்.



Tuesday, 16 August 2016

ஆன்லைனில் எக்ஸ்சேஞ்ச்... விலையாக உயிரைக் கொடுத்த நபர்!

முன்பெல்லாம் நாம் ஒரு வண்டியை எக்ஸ்சேஞ்ச் செய்துவிட்டு, புதிதாக ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால், ஏதேனும் ஒரு ஏஜென்சிக்கு செல்ல வேண்டும். இல்லையெனில், குறிப்பிட்ட கம்பெனியிலேயெ எக்ஸ்சேஞ்ச் செய்துவிட்டு, அதே நிறுவனத்தில் வேறொரு வண்டியை வாங்குவோம். தற்போது எல்லாமே, OLX, குயிக்கர்தான். அது போன்று தளங்கள் இல்லையென்றால், சமூக வலைதளங்களிலேயே விற்பதுதான் லேட்டஸ்ட் ஸ்டைல். அதைத்தான் 35 வயதான சோகன் ஹல்டார் செய்து இருக்கிறார். ஆனால், அது இவ்வளவு பெரிய ஆபத்தில் அவரைக் கொண்டு சேர்க்கும் என அவர் நினைத்திருக்க மாட்டார்.



Second to None என்ற ஃபேஸ்புக் பக்கத்தில், தனது KTM Duke 390 பைக்கின் விளம்பரத்தை வெளியிட்டு இருக்கிறார். அந்த பைக்கை விற்றுவிட்டு, வேறு பைக் வாங்கலாம் என்பது அவரது எண்ணம். சோகன்,  அவரது மொபைல் எண் போன்றவற்றை வெளியிட்டு, பைக் விபரங்களை அறிய, அவரைத் தொடர்பு கொள்ளுமாறும் கூறி இருக்கிறார். இதைப் பார்த்த கார்த்தி டௌலத் என்பவர், சோகனைத் தொடர்பு கொண்டிருக்கிறார். கார்த்திக்கிடம், தனது அபார்ட்மென்ட் முகவரியைக் கொடுத்து, அங்கு வர சொல்லி இருக்கிறார் சோகன்.

வண்டியின் பேப்பர் வேலைகளை முடிக்க வேண்டும் என்பதால், அலுவலகத்திற்கு விடுப்பு சொல்லிவிட்டு, வீட்டில் இருந்திருக்கிறார் சோகன். செவ்வாயன்று சோகனின் வீட்டுக்கு சென்ற கார்த்தி, அங்கு வண்டியை டெஸ்ட் டிரைவ் செய்துவிட்டு, வண்டியை வாங்க விருப்பமும் தெரிவித்துள்ளார்.பணம் எடுத்து வருவதாக சொல்லிவிட்டு,  கடைக்குச் சென்று 100 கிராம்  பொட்டாசியம் சயனைடு வாங்கியுள்ளார்.


மறுநாள் புதன் அன்று சோகனுடன் இணைந்து, கார்த்திக்கும்  மது அருந்தி இருக்கிறார். மது மயக்கத்தில் சோகன் இருந்தபோது, கார்த்திக்  சிறு அளவு சயனைடை எடுத்து, சோகனின் வாயில் போட்டு இருக்கிறார். சோகன் மூச்சுவிட கடினப்பட்டு நிலை தடுமாற, தண்ணீர் எடுத்து வருவதாகக் கூறி, ஒரு டம்ளர் தண்ணீரில், சர்க்கரையை கலந்து கொடுத்து இருக்கிறார் கார்த்திக். மயங்கி விழுந்த சோகனை, அங்கு இருந்த ஒரு துணியில் சுற்றி வைத்துவிட்டு, சோகனின்  மொபைல், ஏடிஎம் கார்டு போன்றவற்றை எடுத்துக்கொண்டு, பார்க்கிங்கில் இருந்த சோகனின் பைக்கிலேயே, சென்றுவிட்டார் கார்த்திக்.
இரண்டு நாட்களாக, அறைக்குள்ளேயே, பிணமாக கிடந்தார் சோகன். அவரது அறைத் தோழர்கள், அறையில் ஏதோ வாசனை அடித்தும், அதை கண்டுகொள்ளாமல் , அலுவலகத்திற்கு சென்று வந்துள்ளார்கள். சோகனை காணவில்லையென என வெள்ளியன்றுதான், அவரது அறையை திறந்து பார்த்து இருக்கிறார்கள். அபார்ட்மென்ட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில், கார்த்திக் வண்டியை எடுத்துச் செல்வது படமாகி இருந்ததால், காவல் துறையினரிடம் மாட்டிக்கொண்டார் கார்த்திக்.
நம்மிடம் இருக்கும் ஒரு பொருளை சமூக வலைதளங்களிலோ, அல்லது பிற தளங்களிலோ விற்பனைக்கு விளம்பரம் செய்யும் போது, பொதுவான ஒரு இடத்திற்கு வரச் சொல்வது நல்லது என அறிவுறுத்துகிறார்கள் காவல்துறையினர்.




ஆன்லைனில் எக்ஸ்சேஞ்ச்... விலையாக உயிரைக் கொடுத்த நபர்!

முன்பெல்லாம் நாம் ஒரு வண்டியை எக்ஸ்சேஞ்ச் செய்துவிட்டு, புதிதாக ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால், ஏதேனும் ஒரு ஏஜென்சிக்கு செல்ல வேண்டும். இல்லையெனில், குறிப்பிட்ட கம்பெனியிலேயெ எக்ஸ்சேஞ்ச் செய்துவிட்டு, அதே நிறுவனத்தில் வேறொரு வண்டியை வாங்குவோம். தற்போது எல்லாமே, OLX, குயிக்கர்தான். அது போன்று தளங்கள் இல்லையென்றால், சமூக வலைதளங்களிலேயே விற்பதுதான் லேட்டஸ்ட் ஸ்டைல். அதைத்தான் 35 வயதான சோகன் ஹல்டார் செய்து இருக்கிறார். ஆனால், அது இவ்வளவு பெரிய ஆபத்தில் அவரைக் கொண்டு சேர்க்கும் என அவர் நினைத்திருக்க மாட்டார்.



Second to None என்ற ஃபேஸ்புக் பக்கத்தில், தனது KTM Duke 390 பைக்கின் விளம்பரத்தை வெளியிட்டு இருக்கிறார். அந்த பைக்கை விற்றுவிட்டு, வேறு பைக் வாங்கலாம் என்பது அவரது எண்ணம். சோகன்,  அவரது மொபைல் எண் போன்றவற்றை வெளியிட்டு, பைக் விபரங்களை அறிய, அவரைத் தொடர்பு கொள்ளுமாறும் கூறி இருக்கிறார். இதைப் பார்த்த கார்த்தி டௌலத் என்பவர், சோகனைத் தொடர்பு கொண்டிருக்கிறார். கார்த்திக்கிடம், தனது அபார்ட்மென்ட் முகவரியைக் கொடுத்து, அங்கு வர சொல்லி இருக்கிறார் சோகன்.

வண்டியின் பேப்பர் வேலைகளை முடிக்க வேண்டும் என்பதால், அலுவலகத்திற்கு விடுப்பு சொல்லிவிட்டு, வீட்டில் இருந்திருக்கிறார் சோகன். செவ்வாயன்று சோகனின் வீட்டுக்கு சென்ற கார்த்தி, அங்கு வண்டியை டெஸ்ட் டிரைவ் செய்துவிட்டு, வண்டியை வாங்க விருப்பமும் தெரிவித்துள்ளார்.பணம் எடுத்து வருவதாக சொல்லிவிட்டு,  கடைக்குச் சென்று 100 கிராம்  பொட்டாசியம் சயனைடு வாங்கியுள்ளார்.


மறுநாள் புதன் அன்று சோகனுடன் இணைந்து, கார்த்திக்கும்  மது அருந்தி இருக்கிறார். மது மயக்கத்தில் சோகன் இருந்தபோது, கார்த்திக்  சிறு அளவு சயனைடை எடுத்து, சோகனின் வாயில் போட்டு இருக்கிறார். சோகன் மூச்சுவிட கடினப்பட்டு நிலை தடுமாற, தண்ணீர் எடுத்து வருவதாகக் கூறி, ஒரு டம்ளர் தண்ணீரில், சர்க்கரையை கலந்து கொடுத்து இருக்கிறார் கார்த்திக். மயங்கி விழுந்த சோகனை, அங்கு இருந்த ஒரு துணியில் சுற்றி வைத்துவிட்டு, சோகனின்  மொபைல், ஏடிஎம் கார்டு போன்றவற்றை எடுத்துக்கொண்டு, பார்க்கிங்கில் இருந்த சோகனின் பைக்கிலேயே, சென்றுவிட்டார் கார்த்திக்.
இரண்டு நாட்களாக, அறைக்குள்ளேயே, பிணமாக கிடந்தார் சோகன். அவரது அறைத் தோழர்கள், அறையில் ஏதோ வாசனை அடித்தும், அதை கண்டுகொள்ளாமல் , அலுவலகத்திற்கு சென்று வந்துள்ளார்கள். சோகனை காணவில்லையென என வெள்ளியன்றுதான், அவரது அறையை திறந்து பார்த்து இருக்கிறார்கள். அபார்ட்மென்ட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில், கார்த்திக் வண்டியை எடுத்துச் செல்வது படமாகி இருந்ததால், காவல் துறையினரிடம் மாட்டிக்கொண்டார் கார்த்திக்.
நம்மிடம் இருக்கும் ஒரு பொருளை சமூக வலைதளங்களிலோ, அல்லது பிற தளங்களிலோ விற்பனைக்கு விளம்பரம் செய்யும் போது, பொதுவான ஒரு இடத்திற்கு வரச் சொல்வது நல்லது என அறிவுறுத்துகிறார்கள் காவல்துறையினர்.




உசேன் போல்ட்டின் பிரத்யேக ஸ்டைலுக்கான காரணம் தெரியுமா?

உலகின் அதிவேக மனிதர் உசேன் போல்ட் ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்று ஹாட்ரிக் ஒலிம்பிக் சாதனை படைத்துள்ளார். உசேன் போல்ட் என்றதுமே அவரது ஃபேவரைட் மூவ் தான் அனைவருக்கும் நினைவில் வரும் அதற்கு பின்னால் உள்ள‌ காரணம் தெரியுமா? 
2008ம் ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற போது இந்த ஃபேவரை மூவ்வுடன் போஸ் கொடுத்தார். அடுத்த இரண்டு முறை வென்ற போதும் இதே போஸ் கொடுத்து மக்களை குதூகலத்தில் ஆழ்த்தினார். 


இந்த மூவ் குறித்து அவர் கூறியிருப்பது ஜமைக்காவின் பிரபல மியூஸிக் ஆல்பமான டான்ஸ்ஹாலின் ''To Di World'' -ல் இடம் பெற்ற மூவ். அது எனக்கு பிடித்திருந்ததால் அதை நான் செய்தேன். நான் எப்படி செய்யும் போது உலக மக்களுடன் இணைந்திருப்பதாய் உணர்கிறேன் என்றும், மக்கள் இதனை விரும்பாவிட்டால் இதனை நான் நிறுத்திவிடுவேன் என்றும் கூறியுள்ளார். 


இதற்கு சமூக வலைதளங்களில் இதனை நாங்கள் பெரிதும் விரும்புகிறோம். நீங்கள் இதனை தொடர வேண்டும் என்று பலர் பகிர்ந்துள்ளனர். 




Saturday, 13 August 2016

பெண்கள் தங்கள் மொபைலில் பதிந்திருக்க வேண்டிய 10 ஆப்ஸ்!

1. சேஃப்டி பின்:
இந்த ஆப் முழுவதும் பர்சனல் செக்யூரிட்டியை மனதில் வைத்து உருவாக்கப்பட்டது. இது அவசர எண் பதிவு, திசை வழிகாட்டல் என பல அம்சங்களை உள்ளடக்கியது. இதில் பாதுகாப்பான இடங்களைப்  பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். இந்த ஆப் ஆங்கிலம், ஹிந்தி, ஸ்பானிஷ் என மூன்று மொழிகளில் கிடைக்கிறது. நமக்கு ஏற்ற மொழிகளை இதில் பதிவிறக்கம் செய்யலாம்.


2. ரக்‌ஷா:
இதில் உங்களுக்கு நெருங்கியவரின் எண்ணை பதிந்து வைத்து விட வேண்டும். நீங்கள் ஆபத்தான தருணத்தில் இருந்தால், கொடுக்கப்பட்டிருக்கும் பட்டனை அழுத்தினால் போதும், அவர்களுக்கு அலர்ட் மெசேஜ் செல்லும். அதாவது அந்த குறிப்பிட்ட நபருக்கு தகவல் சென்று சேர, வால்யூம் பட்டனை மூன்று நொடிகள் அழுத்தினால் போதும், அவருக்கு அலர்ட் சென்று சேரும்.
3. ஹிம்மாட்:
டெல்லி போலீஸாரால் அறிமுகப்படுத்தப்பட்டது, இந்த ஆப். இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்தவுடன் டெல்லி போலீஸ் வெப்சைட்டில் தேவைப்படும் தகவல்களைப் பதிய வேண்டும். பதிவு நிறைவு செய்தவுடன் உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP எண் வரும். இந்த எண்ணை டைப் செய்து உங்களுடைய பதிவை உறுதி செய்து கொள்ளலாம். 
எதிர்பாராத விதமாக பிரச்னைகள் ஏற்படும் போது SOS Alert இந்த ஆப் வழியாக, இருக்கும் இடத்தின் விபரத்தோடு, ஆடியோ மற்றும் வீடியோ பதிவானது டெல்லி போலீஸாருக்கு தெரிவிக்கப்படும்.
4.பெண்கள் பாதுகாப்பு:
நீங்கள் ஆபத்தான ஒரு இடத்திலோ அல்லது சூழ்நிலையிலோ மாட்டிக் கொண்டால், நீங்கள் ஏற்கெனவே பதிவு செய்திருக்கும் எண்ணுக்கு, நீங்கள் இருக்கும் இடத்தின் முகவரியானது கூகுள் மேப் மூலம்  டைப் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுவிடும். மேலும், உங்களின் எதிரில் இருக்கும் இரண்டு படங்களையும் எடுத்து, சர்வருடன் தானாக இணைப்பட்டு குறிப்பிட்டுள்ள நபருக்கு அனுப்பிவிடும். இதில், மூன்று பட்டன்கள் இருக்கின்றன. சூழல்களைப் பொறுத்து அந்த பட்டன்களை அழுத்துவதன் வாயிலாகச் செய்தியானது உங்களின் நெருங்கியவருக்குச் சென்று விடும். அதைப் பொறுத்து உங்களைக்  காப்பாற்றும் முயற்சியினை அவர்கள் முடிவு செய்து கொள்ளலாம்.
5. ஸ்மார்ட் 24X7


பல மாநிலங்களின் போலீஸாருடன் இணைக்கப்பட்டிருக்கிறது இந்த ஆப். முக்கியமாகப் பெண்கள் மற்றும் முதியோருக்கு இது பெருமளவில் உதவுகிறது. இந்த ஆப் வாயிலாக பேனிக் அலர்ட்டானது அவரச காலத்தில் அனுப்பப்படும். இந்த ஆப்பில் பேனிக் பட்டனுடன், வாய்ஸ் மற்றும் அந்த இடத்தின் படங்கள் என அனைத்து தகவல்களும், ஒரு சேர குறிப்பிட்டுள்ள நபருக்குச் சென்றுவிடும். எந்த மாதிரியான உதவிகள் வேண்டும் என்பதைப் பொறுத்து பட்டன்களை தட்டி, சப்மிட் கொடுத்து விட்டால் உங்களுக்கான உதவியானது உங்களைச் சார்ந்தவரிடமிருந்து வரும்.
6. ஷேக் 2 சேஃப்டி:
மிகவும் சுலபமாகப் பயன்படுத்தக் கூடிய ஆப் இது. அவசர காலத்தில் ஸ்மார்ட்போனை ஷேக் செய்தால் போதும் அல்லது பவர் பட்டனை நான்கு முறை அழுத்தினாலே நீங்கள் பதிவு செய்துள்ள நபருக்கு உங்களுடைய 'உதவி தேவை' என்ற செய்தியானது சென்று விடும். லாக் ஸ்கிரீனுடன் இதனை பதிவு செய்து கொள்ளலாம். உங்களைத் தவிர மற்றவரும் இந்த எண்ணைப் பார்த்துவிட்டு அவருக்குப் பதிலளிக்கலாம். இதற்கு இன்டர்நெட் கனெக்‌ஷன் தேவையில்லை. விபத்து, பாலியல் தொந்தரவு, கொள்ளை, இயற்கை சீரழிவு போன்ற காலங்களில் பெரும் உதவியாக இருக்கும்.
7. என் பில்:
குழந்தைப்பேறுக்காக காத்திருக்கிறீர்களா?... உங்களுக்கே உங்களுக்கான ஆப் தான் இது. மாதவிடாயின் போது எவ்வளவு உதிரப்போக்கு ஏற்பட்டிருக்கிறது. எப்பொழுது நீங்கள் மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். எப்பொழுது, நீங்கள் மருத்துவரைப் பார்க்க வேண்டும். எந்தெந்த நாட்களில், என்னென்ன மாதிரியான சிம்டம்ஸ் இருக்கும் என அவ்வப்போது உங்களுக்கு தகவல் சொல்லிவிடும் இந்த ஆப்.
8. சிடோர் ஸ்குவாட்:
பெண்களுக்குப் பெரிய பிரச்னையே டாய்லெட் பிரச்னைதான். பயணம் செய்யும் இடங்கள் அல்லது புது இடங்களில் ரெஸ்ட் ரூம் எங்கே இருக்கிறது என்பதைத் தெள்ளத்தெளிவாகக் காட்டிவிடும், இந்த ஆப். உங்களுக்கு அருகாமையில் உள்ள ரெஸ்ட் ரூம்களை பயன்படுத்தியவர்களின் கமெண்ட்ஸ் அனைத்தையும் காண்பித்து விடும் என்பதால் உங்களுக்கு சிரமம் கொடுக்காமல் நல்ல ரெஸ்ட்ரூம்களை உங்களுக்குக் கண்டுபிடித்து தந்து விடும். ஸோ, கூலாகப் பயணம் செய்யலாம்.  
9.ஒ.பி.ஐ:
எந்த கலர் நெயில் பாலிஷ் உங்களது உடல் நிறத்திற்கு ஏற்றவாறு இருக்கும் என்பதை உங்களுக்குக் காட்டிவிடும் இந்த ஆப். இந்த ஆப்பின் கேமரா வாயிலாக உங்கள் விரலை படம் எடுத்தால்,  எந்த கலர் உங்களுக்கு கச்சிதமாக இருக்கும் என்பதற்கான ஆப்ஷன்களை காட்டிவிடும். அதற்கு பிறகு என்ன...? உங்களுக்கு ஏற்ற நெயில் பாலிஷ்களை தேர்ந்தெடுக்கும் நேரத்தை மிச்சப்படுத்தலாமே..?
10. மிண்ட்:


பட்ஜெட்டை எப்படி மெயின்டெயின் செய்வது என்று தெரியவில்லை. எழுதி வைக்கவோ, நினைவில் வைக்கவோ நேரம் இல்லை என்பவர்களுக்கு இந்த ஆப் ஒரு வரப் பிரசாதம். இதில் உங்களுடைய பேங்க் அக்கவுன்ட் மற்றும் கிரடிட் கார்ட் போன்ற தகவல்களைப் பதிவு செய்து, உங்களுடைய செலவுகளை டைப் செய்து பதிவு செய்து கொண்டே வந்தால், ஒவ்வொரு மாதத்திலும் நீங்கள் செய்திருக்கும் செலவு கணக்கினை துல்லியமாக காண்பிக்கும். கடந்த மாதம் எவ்வளவு செலவாகியிருக்கிறது. இந்த மாதம் எவ்வளவு செலவு என்பதையும் உங்களுக்கு கம்பேர் செய்து காண்பித்து விடும்.



Wednesday, 10 August 2016

ரயிலின் மேற்கூரையை உடைத்து வங்கிப் பணம் கொள்ளை..! - அதிர்ச்சி க்ளைமாக்ஸ்


சேலத்தில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில், ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகே இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து வங்கி அதிகாரிகளுக்கு தெரியவந்த நிலையில், இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து சேலத்திற்கும், சேலத்தில் இருந்து சென்னைக்கும் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று தினசரி இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சென்னையில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு, சேலத்திற்கு காலை 6.35 மணிக்கு சென்றடைகிறது. பின்னர் சேலத்தில் இருந்த இரவு 9 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டு, அதிகாலை 4.45 மணிக்கு வந்தடைகிறது.



இந்த நிலையில், சேலத்தில் இருந்து நேற்றிரவு 9.45 மணிக்கு இந்த எக்ஸ்பிரஸ் ரயில் சென்னைக்கு புறப்பட்டுள்ளது. இந்த ரயிலின் பார்சல் பெட்டியில்,  228 பெட்டிகளில் ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.342 கோடி என்று கூறப்படுகிறது. இந்த ரயில் அயோத்தியாபட்டினம், வாழப்பாடி, ஆத்தூர், சின்னசேலம், விருத்தாசலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம்  வழியாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை அதிகாலை 4 மணிக்கு வந்தடைந்தது. பயணிகள் இறங்கிச் சென்ற பிறகு, துப்புரவு பணியாளர்கள் ரயிலில் ஏறி, ஒவ்வொரு பெட்டிகளையும் சுத்தம் செய்துள்ளனர். ஆனால், பார்சல் பெட்டியை மட்டும் அவர்கள் சுத்தம் செய்யவில்லை என்று தெரிகிறது.

இதனிடையே, நண்பகல் 12 மணி அளவில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ரயில் பெட்டியில் இருந்த பணத்தை ஆய்வு செய்ய சென்றுள்ளனர். அப்போது, ரயிலின் மேற்கூரை உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து, அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ரயில்வே காவல்துறையினருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். தடயவியல் நிபுணர்களுடன் விரைந்து வந்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தினர். ரயிலில் 23 டன் ரூபாய் நோட்டுகள் கொண்டு வரப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதில் எவ்வளவு பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து எழும்பூர் ரயில்வே ஐ.ஜி ராமசுப்பிரமணியன் நேரில் விசாரணை நடத்தினார்.



கொள்ளை நடந்தது எங்கே ?
சேலம் பகுதிகளில் உள்ள வங்கிகளில் 5 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை பணம் சேகரிக்கப்பட்டுள்ளது. சேலம் டிஐஜி நாகராஜ் தலைமையில் துப்பாக்கி ஏந்திய 10 காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்திருக்கிறார்கள். பார்சல் பெட்டிக்கு அடுத்த பெட்டியில் இவர்கள் பயணித்துள்ளனர். கொள்ளையர்கள் ரயிலின் மேற்கூரையை வெல்டிங் மிஷின் மூலம் ஒரு ஆள் செல்லும் அளவுக்கு துளை போட்டுள்ளனர். இந்த சத்தம் அடுத்த பெட்டியில் இருந்து காவல்துறையினருக்கு தெரியவில்லை. சேலத்தில் இருந்து விருத்தாசலம் வரை ரயில் டீசல் என்ஜின் மூலமே இயக்கப்பட்டுள்ளது. விருத்தாசலத்தில் ரயிலை நிறுத்தி இன்ஜின் மாற்றப்பட்டுள்ளது. அங்கிருந்து சுமார் ஒரு மணி நேரம் கழித்து ரயில் இங்கிருந்து புறப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட இடங்களில்தான் கொள்ளை நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

இதனிடையே, கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், சென்னை, சேலம், விருத்தாசலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ரயில்வே பாதுகாப்புப்படை பாதுகாப்பு ஆணையர் அஸ்ரா தெரிவித்துள்ளார்.


அதே சமயம் இதில் கொள்ளையர்கள் எதிர்பார்க்காத அதிர்ச்சி க்ளைமாக்ஸ் ஒன்று உள்ளது. அது, 'கொள்ளையடிக்கப்பட்ட அந்தப் பணம் அனைத்தும் செல்லாதவை’ என்பதுதான்.

இருப்பினும் ரயிலின் மேற்கூரையை உடைத்து வங்கிப்பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கும் சம்பவம் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே காவல்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காவல் நிலையமும் ஏ.டி.எம்மும் எப்படி இயங்குகிறது?' -அசர வைக்கும் சிவகங்கை அரசுப்பள்ளி


'ர் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் எப்படிச் செயல்பட வேண்டும்' என்பதை விளக்குகிறது பள்ளிக் கல்வித்துறையின் யூ டியூப் வீடியோ காட்சி ஒன்று. ' கள ஆய்வுகள், வாரத் திருவிழா, அதிகாரிகளுடன் கலந்துரையாடல்' என மாதிரிப் பள்ளியை அடையாளம் காட்டுகிறார்கள் அதிகாரிகள்.

தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில், புதுமையான கற்றல் வீடியோக்களை யூ ட்யூப்பில் பதிவேற்றியுள்ளனர். இதில் ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனில், வித்தியாசமான முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது ஒருபுறம் என்றால், பள்ளியின் தலைமை ஆசிரியர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதையும் விளக்குகிறார்கள். குறிப்பாக, சிவங்கை மாவட்டம், தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியின் செயல்பாடுகள் வியக்க வைக்கின்றன. இம்மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1,320 பள்ளிகளில் இந்தப் பள்ளி மட்டுமே, கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் யூ டியூப் வீடியோ பதிவுக்காக தேர்வாகியுள்ளது. ' மாணவர்களின் பங்களிப்புடன் வகுப்பறையை சிறப்பானதாக மாற்றும் முயற்சிகள் வெற்றி பெற்றதையும்' முன்வைக்கிறார் இப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம். கூடவே, தாங்கள் கற்றுத் தேர்ந்த விஷயங்களைப் பற்றியும் யூ டியூப்பில் பேசுகின்றனர் மாணவர்கள்.


தலைமை ஆசிரியர் சொக்கலிங்கத்திடம் பேசினோம்.
" மாணவர்களை நான்கு சுவர்களுக்குள் பூட்டி வைத்துவிடக் கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறேன். இங்கு படிக்கும் மாணவர்கள் அனைவரும் கிராமப்புறப் பின்னணியில் இருந்து படிக்க வருபவர்கள். வகுப்பறை நேரம் போக, மற்ற நேரங்களில் மாணவர்களின் எதிர்காலத்திற்கும் எது தேவையோ, அதைக் கற்றுக் கொடுப்பதில் நேரத்தைச் செலவிடுகிறோம். ஒவ்வொரு வாரமும் பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப் போட்டி என மாணவர்களை உற்சாகப்படுத்துகிறோம். ஒரு வாரம் வெற்றி பெற்ற மாணவர், அடுத்த வாரம் பார்வையாளனாகத்தான் அமர்ந்திருக்க வேண்டும்.
அனைத்து மாணவர்களும் போட்டியில் பங்கெடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். வகுப்பறைகளில் பேச்சுப் போட்டி நடந்து முடிந்ததும், தேர்வான மாணவர்கள் அனைத்து மாணவர்கள் முன்னிலையிலும் பேச வேண்டும். இதன்பின்னர் நடக்கும் மாதத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குகிறோம். இது ஒருபுறம் தொடர்ந்து நடந்து வருகிறது. மற்ற நேரங்களில் வங்கிகளுக்கு அழைத்துச் செல்கிறோம். கிரீன் கார்டு என்றால் என்ன? ஏ.டி.எம் இயந்திரங்கள் எப்படி இயங்குகின்றன? ஏ.டி.எம் அட்டைகளைப் பயன்படுத்துவது எப்படி? வங்கி செலான்களை எப்படிப் பூர்த்தி செய்வது என வங்கி அதிகாரிகளின் துணையோடு செயல் விளக்கம் அளிக்கிறோம்.

கடந்த வாரம் தேவகோட்டை தாலுகா காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றோம். காவல்துறை மீதான பயத்தைப் போக்குவது மட்டுமல்லாமல், ஒரு காவல்நிலையம் எவ்வாறு இயங்குகிறது எனவும் உயர் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். மாணவர்களும் அவர்களிடம், ' படத்தில் காட்டுவது போல ஒரு பிஸ்டலை அழுத்தினால் ஐம்பது தடவை சுட முடியுமா' என்றெல்லாம் கேள்வி கேட்டார்கள். தொடக்கக் கல்வியிலேயே மாணவர்கள் எதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதைப் பட்டியலிட்டு, கள ஆய்வுகளுக்கு அழைத்துச் செல்கிறோம்.


தவிர, அரசின் உயர் அதிகாரிகளை அழைத்து வந்து மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம். அனைத்து மாணவர்களும் கேள்வி கேட்கும் வகையில் தயார்படுத்தியுள்ளோம். இதுவரை எங்கள் பள்ளிக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான இறையன்பு, ராஜேந்திரன், ஆல்பி ஜான், நந்தகுமார் ஐ.ஆர்.எஸ்  உள்ளிட்ட அதிகாரிகள் வந்துள்ளனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, களஆய்வு, மாணவர் பங்களிப்பு என அனைத்து நிலைகளிலும் மனதளவில் சிறப்பாகப் பணியாற்றி வருகிறோம். எங்களின் முயற்சிக்கு கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் அதிகாரிகள் மிகுந்த உறுதுணையாக இருக்கின்றனர்" என்றார் உற்சாகமாக.