அரிவாள் என்றாலே தமிழ் சினிமாவின் உபயத்தால் நமக்கு நினைவிற்கு வருவது மதுரைதான். இப்பொழுது அதே மதுரைக்கார்ரகள், அரிவாளை வைத்து ஒரு சாதனை படைத்துள்ளனர்.
ஆம்... 33 அடி நீளமும், 6 அடி அகலம் கொண்ட, 7 அடி நீளமுள்ள கைப்பிடியுடன் 800 கிலோ எடை கொண்ட பிரமாண்ட அரிவாளை தயாரித்துள்ளனர்.
மதுரை சுற்றுவட்டாரத்தில், கோயிலுக்கு அரிவாளை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். அதன்படி, மதுரையில் இருந்து சதுரகிரி செல்லும் வழியில் டி.கல்லுபட்டியில் உள்ள கருப்பண்ணசாமி கோயிலுக்கு காணிக்கையாக வழங்க இந்த அரிவாள் தயாரிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து கார்த்தி கூறும்போது, ''கோயில்களுக்கு அரிவாள் செய்யும்பொழுது, விரதம் இருந்தே செய்வோம். இந்த அரிவாள் 5 பேரைக் கொண்டு 21 நாட்களில் செய்யப்பட்டது. இதற்கு முன் மதுரை அழகர் கோயிலில் உள்ள பதினெட்டாம் படி கருப்பண சாமிக்கு 25 அடி அரிவாள் செய்து கொடுத்திருக்கிறேன். தற்பொழுது கணேசமூர்த்தி அடிகளாரின் விருப்பத்தின் பேரில் 33 அடி அரிவாள் செய்துள்ளேன். இந்தியாவிலே தற்போது, இதுதான் மிகப் பெரிய அரிவாள்" என்றார் பெருமையுடன்.
கோயிலின் முன் வைக்கப்பட்டு இருக்கும் இந்த பிரமாண்டமான அரிவாளை, சுற்று வட்டார மக்கள் வந்து பார்த்த வண்ணம் உள்ளனர்.
No comments:
Post a Comment