ரியோர்களே... தாய்மார்களே...சகோதர சகோதரிகளே என்ற அரசியல்வாதிகளின் வரவேற்புரை வாசகத்தில் இனி・இணையத்தை பயன்படுத்தும் எமது இளைஞர் பெருமக்களே..!・என்ற வாக்கியமும் சேர்த்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அப்படியென்ன முக்கியத்துவம் இந்த இணையவாசிகளுக்கு?
தொழிநுட்பம் பெரிய அளவில் வளர்ந்திருக்கும் இந்த காலகட்டம் தமிழகத்தின் தேர்தல் வரலாற்றில் முக்கியமானதும் சற்று சிக்கலானதுமானதும்கூட. தேர்தல் சமயத்தில் ஒரு அரசியல் கட்சி தனது கடந்தகால செயல்பாடுகளையும் எதிர்கால திட்டங்களின் சிறப்புகளையும் சொல்லித்தான் வாக்கு கேட்க முடியும். அதிலும் கட்சிகளின் கடந்தகால வரலாற்றுப் பெருமைகளுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு.
ஆனால் கட்சிகள் இன்று தனது கடந்தகாலத் தவறுகளை மறைப்பதற்கே படாதபாடு படவேண்டியிருக்கிறது. பின்னர் எங்கேயிருந்து பெருமைகளைச் சொல்லி ஓட்டு கேட்பது? அப்படி இவர்களின் கடந்தகாலத்தை வெளிச்சப்படுத்துகிறவர்கள் யார்?
இனிவரும் தேர்தல்களில் எதிர்கட்சிகளைவிட எதிரணி வேட்பாளரைவிட, உள்குத்து செய்யும் சொந்த கட்சிக்காரர்களைவிட இந்த அரசியல்வாதிகள் இனி பெரிதும் போராட வேண்டியது யாரிடம் தெரியுமா... இணையவாசிகள் !
இணையம் என்னும் எதிர்கட்சி
மக்களின் மறதிதான் அரசியல்வாதிகளின் மாபெரும் ஆயுதம். சுந்ததிர இந்தியாவை ஆண்ட மொத்த அரசியல் கட்சிகளின் தேர்தல் வெற்றியிலும் மக்களின் மறதிக்கு முக்கிய பங்கிருக்கிறது, பாவம் அவர்களின் வயிற்றுப்பாட்டுக்கான போரட்டத்தில் ஒரு குறிப்பிட்ட கட்சியின் ஐந்தாண்டுகால நல்லதுகெட்டதுகளை அவர்களை ஞாபகம் வைத்துக்கொள்ள முடிவதில்லை. அப்படி நினைவில் பதிந்துவிட்ட விஷயங்களையும் மறக்கப்படிதற்கு உப்பு சப்பற்ற ஏதேனும் ஒரு விஷயத்தை பூதாகரமாக்கி மக்களின் நினைவாற்றல்களுக்கு குளோரோஃபார்ம் கொடுத்துவிடுவார்கள்.
ஆனால் இந்த தேர்தல் சற்று வித்தியாசமானது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு மக்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள். இந்த தலைமுறை, இணையம் என்னும் ஒரு மந்திரக்கோலை தன்னோடு வைத்திருக்கிறது. அது சர்வதேச அரசியலிலிருந்து தமிழக அரசியலின் சந்துபொந்துவரை நுழைந்து அரசியல் வரலாற்றின் நூற்றாண்டுகால நினைவுகளையும், வரலாற்றையும் கொண்டுவந்து கொட்டுகிறது அதை சமூக வலைதளங்கள் மக்களிடம் பொதுவில் வைக்கின்றன.
மேலும் அது ஒவ்வொரு நாளும் மீண்டும் மீண்டும் மக்களிடம் அதன் சாதகபாதகங்களை நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது. கேமராக்களால், இணையத்தால் இனி ஒருவர் பேசுவது, எழுதுவது யாவும் கல்வெட்டு போல அழிக்க முடியாத ஒன்றாக மாறிவிட்டிருக்கிறது. தனது ஒவ்வொரு தவறையும் ஓயாது சுட்டிக்காட்டும் துடிப்புள்ள எதிர்க்கட்சியைப் போலாகிவிட்டன இணையத்தை அடிப்படையாகக் கொண்ட சமூக வலைதளங்கள்.
அரசியல் கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் இதுதான் பெரிய தலைவலியாகிவிட்டது. முன்னைப்போல் வாயில் வருவதையெல்லாம் மேடையில் அரசியல்வாதிகள் பேச முடிவதில்லை. அவர் பேசிவிட்டு மேடையைவிட்டு இறங்கும் முன்னரே அவர் முந்தைய தேர்தலில் பேசிய முரணான பேச்சின் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வைரலாக்கிவிடுகிறார்கள்.
மேலும் அது ஒவ்வொரு நாளும் மீண்டும் மீண்டும் மக்களிடம் அதன் சாதகபாதகங்களை நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது. கேமராக்களால், இணையத்தால் இனி ஒருவர் பேசுவது, எழுதுவது யாவும் கல்வெட்டு போல அழிக்க முடியாத ஒன்றாக மாறிவிட்டிருக்கிறது. தனது ஒவ்வொரு தவறையும் ஓயாது சுட்டிக்காட்டும் துடிப்புள்ள எதிர்க்கட்சியைப் போலாகிவிட்டன இணையத்தை அடிப்படையாகக் கொண்ட சமூக வலைதளங்கள்.
அரசியல் கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் இதுதான் பெரிய தலைவலியாகிவிட்டது. முன்னைப்போல் வாயில் வருவதையெல்லாம் மேடையில் அரசியல்வாதிகள் பேச முடிவதில்லை. அவர் பேசிவிட்டு மேடையைவிட்டு இறங்கும் முன்னரே அவர் முந்தைய தேர்தலில் பேசிய முரணான பேச்சின் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வைரலாக்கிவிடுகிறார்கள்.
கடந்தகாலத்தை கிளறி எடுப்பவர்கள்!
நேற்று வைகோ, கலைஞரின் குடும்பத்தொழில் குறித்து தவறாக பேசிவிட்டு மன்னிப்பு கேட்டிருக்கிறார். இன்று காலையிலிருந்து தீப்பொறி ஆறுமுகம், ஜெயலலிதா குறித்து தி.மு.க மேடைகளில் ஆபாசமாக பேசிய வீடியோக்கள் வைரலாகியிருக்கின்றன. பா.ம.க. கட்சியைச் சேர்ந்த காடுவெட்டி குரு பேசிய ஆபாச பேச்சுக்கள் இணையத்தில் உலவுகின்றன. கலைஞர், ஜெயலலிதா, விஜயகாந்த், திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சியாளர்கள், சீமான், சரத்குமார், காங்கிரஸ் காரர்கள், பா.ஜ.க. கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று ஒருவர் விடாமல் அனைவரின் கடந்த கால ஆடியோ மற்றும் வீடியோக்கள் கிடைக்கின்றன.
யாரும் நான் அப்படிச் சொல்லவில்லை இப்படிச் சொல்லவில்லை என்று மறுக்க முடியாதவாறு ஆதாரங்களை கைகளில் வைத்துக்கொண்டு எழுதுகிறார்கள், கேள்வி எழுப்புகிறார்கள். அன்று சொன்னதையும் இன்று சொல்வதையும் அருகருகேவைத்து ஒப்பிட்டு வீடியோ செய்து விமர்சிக்கிறார்கள். மீம்ஸ் செய்து சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறார்கள்.
காமெடி நடிகர்களின் பின்னணிக்குரலோடு அரசியல் தலைவர்களின் பேச்சுக்களை பகடி செய்கிறார்கள். பல நேரலை நிகழ்ச்சிகளில் விவாதங்களில் வீடியோவை ஒளிபரப்பி ஆதாரத்தோடு அரசியல்வாதிகளை நெளிய வைக்கிறார்கள், பல்லிளிக்கச் செய்கிறார்கள். இன்று பல அணிகளாக பிரிந்தும் ஒன்று சேர்ந்தும் தேர்தலை சந்திக்கும் தமிழக அரசியல் தலைவர்களின் 10 ஆண்டுகளுக்கு முந்தைய வீடியோக்களை பார்த்தால் உண்மையிலே தலை சுற்றுகிறது.
நேற்று வைகோ, கலைஞரின் குடும்பத்தொழில் குறித்து தவறாக பேசிவிட்டு மன்னிப்பு கேட்டிருக்கிறார். இன்று காலையிலிருந்து தீப்பொறி ஆறுமுகம், ஜெயலலிதா குறித்து தி.மு.க மேடைகளில் ஆபாசமாக பேசிய வீடியோக்கள் வைரலாகியிருக்கின்றன. பா.ம.க. கட்சியைச் சேர்ந்த காடுவெட்டி குரு பேசிய ஆபாச பேச்சுக்கள் இணையத்தில் உலவுகின்றன. கலைஞர், ஜெயலலிதா, விஜயகாந்த், திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சியாளர்கள், சீமான், சரத்குமார், காங்கிரஸ் காரர்கள், பா.ஜ.க. கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று ஒருவர் விடாமல் அனைவரின் கடந்த கால ஆடியோ மற்றும் வீடியோக்கள் கிடைக்கின்றன.
யாரும் நான் அப்படிச் சொல்லவில்லை இப்படிச் சொல்லவில்லை என்று மறுக்க முடியாதவாறு ஆதாரங்களை கைகளில் வைத்துக்கொண்டு எழுதுகிறார்கள், கேள்வி எழுப்புகிறார்கள். அன்று சொன்னதையும் இன்று சொல்வதையும் அருகருகேவைத்து ஒப்பிட்டு வீடியோ செய்து விமர்சிக்கிறார்கள். மீம்ஸ் செய்து சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறார்கள்.
காமெடி நடிகர்களின் பின்னணிக்குரலோடு அரசியல் தலைவர்களின் பேச்சுக்களை பகடி செய்கிறார்கள். பல நேரலை நிகழ்ச்சிகளில் விவாதங்களில் வீடியோவை ஒளிபரப்பி ஆதாரத்தோடு அரசியல்வாதிகளை நெளிய வைக்கிறார்கள், பல்லிளிக்கச் செய்கிறார்கள். இன்று பல அணிகளாக பிரிந்தும் ஒன்று சேர்ந்தும் தேர்தலை சந்திக்கும் தமிழக அரசியல் தலைவர்களின் 10 ஆண்டுகளுக்கு முந்தைய வீடியோக்களை பார்த்தால் உண்மையிலே தலை சுற்றுகிறது.
கடந்தகாலம்
இப்படி அரசியல்வாதிகளின் எதிர்காலத்தை பாதிக்கும் என்றும் அதற்கு ஒரு மொபைல் போனும் இண்டெர்நெட்டும்கூட போதும் என்று முற்போக்கு என்ற அடைமொழியோடு இயங்கும் எந்த கட்சியின் தலைமையும் முன்யூகித்திருக்கவில்லை!
கட்சிகளும் பிரச்சாரக் கம்பெனிகளும்
பல கட்சிகள் தங்கள் கட்சியின் விளம்பரத்திற்கு, புகழ் பரப்பல்களுக்கு, ஊடக வழியிலான தாக்குதல்கள்-குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதற்கு என இதுபோன்ற வேலைகளுக்காகவே பிரதானமாக இயங்கும் பல கார்ப்பரேட் கம்பனிகளை பல கோடி செலவுகளில் அமர்த்தியிருக்கின்றன. இணையத்தில் பரவும் செய்திகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவது, பாதகமானவற்றை நீக்குவது அல்லது பின்தள்ளுவது போன்ற பணிகளை இந்த கர்ப்பரேட் கம்பனிகள்தான் செய்துவருகின்றன. (ஆக கவர்மெண்ட்டையே பிரைவேட்தான் இயக்குதுன்னு புரிஞ்சிக்கங்க மக்களே!)
இப்படி அரசியல்வாதிகளின் எதிர்காலத்தை பாதிக்கும் என்றும் அதற்கு ஒரு மொபைல் போனும் இண்டெர்நெட்டும்கூட போதும் என்று முற்போக்கு என்ற அடைமொழியோடு இயங்கும் எந்த கட்சியின் தலைமையும் முன்யூகித்திருக்கவில்லை!
கட்சிகளும் பிரச்சாரக் கம்பெனிகளும்
பல கட்சிகள் தங்கள் கட்சியின் விளம்பரத்திற்கு, புகழ் பரப்பல்களுக்கு, ஊடக வழியிலான தாக்குதல்கள்-குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதற்கு என இதுபோன்ற வேலைகளுக்காகவே பிரதானமாக இயங்கும் பல கார்ப்பரேட் கம்பனிகளை பல கோடி செலவுகளில் அமர்த்தியிருக்கின்றன. இணையத்தில் பரவும் செய்திகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவது, பாதகமானவற்றை நீக்குவது அல்லது பின்தள்ளுவது போன்ற பணிகளை இந்த கர்ப்பரேட் கம்பனிகள்தான் செய்துவருகின்றன. (ஆக கவர்மெண்ட்டையே பிரைவேட்தான் இயக்குதுன்னு புரிஞ்சிக்கங்க மக்களே!)
ஆனாலும் சிலநபர்களால் மட்டுமே இயங்கும் கார்ப்பரேட்கள் பலகோடி மக்களுடன் போட்டிபோட முடியுமா? சமீபத்தில் பலகோடி செலவில் திமுக, பா.ம.க போன்ற கட்சிகள் செய்த விளம்பரத்தை இணையவாசிகள் ஒரே நாளில் கிண்டல் செய்து காலி செய்தார்கள். பத்திரிக்கையும் டி.விக்களும் மட்டுமே ஊடகமாக இருந்த காலம்போய் இன்டெர்நெட்டை பயன்படுத்தும் ஒவ்வொரு குடிமகனும் ஓர் ஊடகம் என்று ஆனதை உண்மையிலேயே எதிர்கொள்ள முடியாமல் தவிக்கின்றன அரசியல் கட்சிகள்.
எல்லாம் சரி, அரசியல்வாதிகள் இதிலிருந்து என்ன கற்றுக்கொள்ள வேண்டும்?
அரசியல் தலைவர்கள் தன்னைச் சுற்றி எப்பொழுதுமே கேமரா இருப்பதை உணர்ந்து உண்மையைப் பேச வேண்டும். தனது ஓவ்வொரு வார்த்தைகளும் கல்வெட்டாக பதியப்போகிறது இனி அழிக்க முடியாது என்கிற பொறுப்புணர்வோடு பேச வேண்டும். கொள்கை ரீதியான தவறுகளை, ஊழல்களை, இனி மறைக்க முடியாது நூறு வருடத்திற்கு பிறகு வரப்போகிறவனும் தனது கல்லறையில் வந்து நியாயம் கேட்பான் என்பதை உணர வேண்டும்.
எல்லாம் சரி, அரசியல்வாதிகள் இதிலிருந்து என்ன கற்றுக்கொள்ள வேண்டும்?
அரசியல் தலைவர்கள் தன்னைச் சுற்றி எப்பொழுதுமே கேமரா இருப்பதை உணர்ந்து உண்மையைப் பேச வேண்டும். தனது ஓவ்வொரு வார்த்தைகளும் கல்வெட்டாக பதியப்போகிறது இனி அழிக்க முடியாது என்கிற பொறுப்புணர்வோடு பேச வேண்டும். கொள்கை ரீதியான தவறுகளை, ஊழல்களை, இனி மறைக்க முடியாது நூறு வருடத்திற்கு பிறகு வரப்போகிறவனும் தனது கல்லறையில் வந்து நியாயம் கேட்பான் என்பதை உணர வேண்டும்.
மக்கள்?
தங்கள் கையிலிருக்கும் இணைய ஊடகம் என்பது எவ்வளவு பெரிய சக்தி என்பதை இன்னும் அழுத்தமாக உணரவேண்டும். ஆபாசம் பகிர்வதிலும், சாதிமத குழுக்களை அமைத்து சண்டையிட்டுக் கொள்வதையும் விடுத்து தங்கள் கைகளிலிருக்கும் கருவியின் மதிப்பை உணர வேண்டும். தன் சுட்டுவிரலில் படியவிருக்கும் ஒரு சொட்டு நீல மையின் அதிகாரம் தங்களை எந்த உயரத்திற்கு கொண்டுசெல்லும் என்பதை உணர்ந்து அதற்கேற்றவாறு தனது இணைய சுதந்திரத்தை பயன்படுத்தவேண்டும்.
தங்கள் கையிலிருக்கும் இணைய ஊடகம் என்பது எவ்வளவு பெரிய சக்தி என்பதை இன்னும் அழுத்தமாக உணரவேண்டும். ஆபாசம் பகிர்வதிலும், சாதிமத குழுக்களை அமைத்து சண்டையிட்டுக் கொள்வதையும் விடுத்து தங்கள் கைகளிலிருக்கும் கருவியின் மதிப்பை உணர வேண்டும். தன் சுட்டுவிரலில் படியவிருக்கும் ஒரு சொட்டு நீல மையின் அதிகாரம் தங்களை எந்த உயரத்திற்கு கொண்டுசெல்லும் என்பதை உணர்ந்து அதற்கேற்றவாறு தனது இணைய சுதந்திரத்தை பயன்படுத்தவேண்டும்.
No comments:
Post a Comment