Monetize Your Website or Blog

Monday, 15 February 2016

தோசை மாஸ்டருக்கு சம்பளம் அதிகரித்துக் கொண்டே செல்வது ஏன்?

கொச்சியில் நேற்று  பெடரல் வங்கி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரகுராம் ராஜன் பங்கேற்றார். இதில் மாணவி ஒருவரின் தோசை பற்றிய கேள்விக்கு பதில் அளித்த ரகுராம் ராஜன் , 

 “தோசை தயாரிப்பில் இன்னும் போதிய  தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படவில்லை.  தோசை வார்ப்பவர் அதனை தவாவில் மாவை ஊற்றி வார்த்து எடுக்க வேண்டிய நிலைதான் இன்று வரை உள்ளது.  தோசை வார்ப்பதில் இன்னும் நவீன தொழில்நுட்ப முன்னேற்றம் ஏற்படவில்லை. நவீன தொழில் நுட்பம் இல்லாத காரணத்தினால்தான்  தோசை மாஸ்டருக்கு சம்பளம் அதிகரிக்கிறது.
வளர்ந்து வரும் ஒரு பொருளாதாரத்தில் என்ன நடக்கிறது என்றால்,  தொழில்நுட்ப வளர்ச்சியுடன் இணையாத துறைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலை வேகமாக அதிகரிக்கும். இதைத்தான்  தோசை விலையிலும் காணப்படுகிறது'' என்றார். 

கொச்சி நிகழ்ச்சியில்  தோசைகள் விலை பற்றிய சந்தேகம் எனக்கு இருக்கிறது. பணவீக்கம்  அதிகரிக்கும் போது தோசை விலை அதிகரிக்கிறது,''ஆனால் பணவீக்க விகிதம் குறையும் போது தோசை விலை ஏன் குறைவதில்லையே ஏன்?'' என்ற கேள்விக்கு அந்த மாணவி பதில் அளித்தார்.


No comments:

Post a Comment