முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டும் திட்டத்தில் எந்த மாற்றம் இல்லை என்று கேரள சட்டமன்றத்தில் முதல்வர் பினராயி விஜயன் திட்டவட்டமாகத் தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் தென் மாவட்டங்களின் நீராதாரமாகத் திகழும் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்துவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அணை பலமாக உள்ளது என ஆய்வு குழுவினர் அளித்த அறிக்கையின் பேரில் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது.
தமிழகத்தில் தென் மாவட்டங்களின் நீராதாரமாகத் திகழும் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்துவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அணை பலமாக உள்ளது என ஆய்வு குழுவினர் அளித்த அறிக்கையின் பேரில் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது.
கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாகக் கூறி, அதற்குப் பதிலாக புதிய அணை கட்டப்போவதாக முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு கூறி வந்தது. இந்நிலையில், கேரளாவின் புதிய முதல்வராகப் பொறுப்பு ஏற்ற பினராயி விஜயன், முல்லைப் பெரியாறு அணை பலமாக இருப்பதாக பேட்டி அளித்தார்.
இதனால், அவருக்குக் கேரளாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து, அவர் தனது நிலைப்பாட்டைத் திடீரென மாற்றி கொண்டார்.
இந்நிலையில், கேரள சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் நேற்று இந்த பிரச்னை மீண்டும் எழுப்பப்பட்டது. அப்போது, உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்து முதல்வர் பினராயி விஜயன் பேசும்போது,
''கேரளாவில் முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் அங்கு புதிய அணை கட்ட வேண்டும் என்பது தான் எங்கள் அரசின் கொள்கை. இதைக் கட்டுவதற்கான தொழில் நுட்ப சாத்திய கூறுகள், சட்ட விஷயங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து இத்திட்டத்தை நிறைவேற்றுவோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. மாநில மக்களின் நலனே எங்களுக்கு முக்கியம்.
முல்லைப் பெரியாறு அணை பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சமின்றி வசிக்கும் வகையில் அவர்களின் உயிருக்கும், உடமைக்கும் உத்திரவாதம் அளிக்கும் செயல்களில் இந்த அரசு உறுதியாகச் செயல்படும்" என்றார்.
முல்லைப் பெரியாறு அணை பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சமின்றி வசிக்கும் வகையில் அவர்களின் உயிருக்கும், உடமைக்கும் உத்திரவாதம் அளிக்கும் செயல்களில் இந்த அரசு உறுதியாகச் செயல்படும்" என்றார்.
No comments:
Post a Comment