Monetize Your Website or Blog

Tuesday, 23 August 2016

அட... 49 ரூபாய்க்கு லேண்ட் லைன் தொலைபேசி சேவை! - யார் கொடுப்பது?

வாடிக்கையாளர்களை கவரும் வகையில் 49 ரூபாய்க்குத் தரைவழித் தொலைபேசி சேவையைத் தொடங்கி உள்ளது பி.எஸ்.என்.எல். நிறுவனம்.



தன்னை விட்டுச் சென்ற வாடிக்கையாளர்களைத் திரும்ப வரவழைக்கும் விதமாக பல அதிரடி அறிவிப்புக்களை வெளியிட்டு வருகிறது பி.எஸ்.என்.எல். நிறுவனம். கடந்த ஜூன் 15-ம் தேதி முதல் ரோமிங் கட்டணத்தை ரத்து செய்தது. மேலும், தரைவழித் தொலைபேசி சேவையில் தினந்தோறும் இரவு 9 மணி முதல் காலை 7 வரை பேசிக்கொள்ள இலவசம் என்று அறிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பொதுமேலாளர் கலாவதி, ''சில குறைபாடுகள் காரணமாக பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை விட்டுச் சென்ற வாடிக்கையாளர்களைத் திரும்ப வரவழைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாகப் பல்வேறு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் ஒன்றாக, மாத கட்டணம் 49 ரூபாய்க்கு தரைவழித் தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த தரைவழித் தொலைபேசி சேவையில், தினந்தோறும் இரவு 9 மணி முதல் காலை 7 வரை இலவசமாகப் பேசிக் கொள்ளலாம்.
மேலும், பி.எஸ்.என்.எல். லேண்ட் லைன் இணைப்பு வாயிலாக நாட்டில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு இணைப்புகளுக்கும் இனி ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யும் உள்நாட்டு அழைப்புகள் இலவசம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சலுகையும், தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 49 ரூபாய்க்கு தரைவழித் தொலைபேசி சேவைக்கும் பொருந்தும்.



பி.எஸ்.என்.எல் சேவையை அதிகப்படுத்தும் வகையில், விரைவில் 300 தொலைத்தொடர்பு கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன. தற்போதைய சூழலுக்கு ஏற்றபடி அதிநவீன வசதி கொண்ட பிராட்பேண்ட் சேவை அளிக்கப்பட உள்ளது" என்றார்.

No comments:

Post a Comment