Monetize Your Website or Blog

Friday, 26 August 2016

பச்சமுத்துவை விசாரித்தால் மதனை பிடித்துவிடலாம்..! - போத்ராவின் பகீர்!

மதன் ஓடிவிட்டாரா, ஒளித்து வைக்கப்பட்டு இருக்கிறாரா என்பது குறித்து பச்சமுத்துவிடம் விசாரணை செய்தால் உண்மை நிலவரம் தெரியும் என்று  ஃபைனான்ஷியர் போத்ரா கூறினார்.


ஏழாண்டுகளுக்கு முன்னாள் நடிகை ரோஜாவுக்கு பணம் கொடுத்து வழக்கு தொடுத்தவர் ஃபைனான்ஷியர் போத்ரா. அடுத்து இயக்குநர் கஸ்தூரி ராஜாவுக்கு படம் தயாரிக்க பணம் கொடுத்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் பச்சமுத்து பலகோடி ரூபாய் ஏமாற்றி விட்டதாக பகீர் புகார் கொடுத்துள்ள ஃபைனான்ஷியர் போத்ராவிடம் பேசினோம், ''நான் 25 ஆண்டுகளுக்கு முன்பே  பச்சமுத்துவுக்கு ஒரு லட்சம் பணம் கொடுத்தேன். மாதம் இருபதாயிரம் வீதம் ஐந்து மாதம் பணம் கட்டினார். அப்போது செக் மோசடி பிரச்னை வந்தபோது அவரது ஆடிட்டரை மாட்டிவிட, ஆடிட்டர் ஆறுமாசம் சிறைவாசம் அனுபவித்தார். அன்று ஆடிட்டர், இன்று மதன். எய்த பச்சமுத்துவை விட்டுவிட்டு, அம்பு மதனை போலீஸ் தேடி வருகிறது.
வேந்தர் ஃபிலிம்ஸ் மதனை காவல்துறை மாதக்கணக்கில் தேடி வருகிறது, இதுவரை அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. உண்மையில் மதன் வெறும் கருவிதான். அவரை முழுக்க முழுக்க இயக்கியது பச்சமுத்துதான். கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு மதனை எனக்கு அறிமுகம் செய்தார் பச்சைமுத்து. 'மதன் என் மகன் போன்றவர். வேந்தர்டிவி, வேந்தர் ஃபிலிம்ஸ் இரண்டும் வெவ்வேறு அல்ல. மதன் ஒழுக்கமானவர். நேர்மையானவர்' என்று என்னிடம் மதனுக்கு சர்டிஃபிகேட் கொடுத்தார். பச்சமுத்து முன்னிலையிலேயே, வேந்தர் ஃபிலிம்ஸ் தயாரித்து வரும் 'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்துக்கு ஆறுகோடி ரூபாய் பணம் கொடுத்தேன். இதுவரை திருப்பித் தரவில்லை.


நான் மதனிடம் கொடுத்த பணத்தை அவர் பச்சமுத்துவிடம் கொடுத்து விட்டார். நான் பச்சமுத்துவிடம் போன் செய்து பணம் கேட்டேன். 'ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு அமைக்கும்  அமராவதி நகரத்தில் ஒரு காலேஜ் கட்டப்போகிறேன். அதற்கு உங்கள் பணத்தை செலவு செய்துவிட்டேன். இப்போதைக்கு தர இயலாது' என்று சொல்லி விட்டார். அதன்பின் அவர் மீது பணம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். கடந்த 3 நாட்களாக வழக்கை வாபஸ் வாங்கச் சொல்லி அடியாட்களை வைத்து கொலைமிரட்டல் விடுத்து வருகிறார்.
மதன் முழுக்க முழுக்க பச்சமுத்துவின் ஆள். இப்போது மதன் எங்கே இருக்கிறார் என்கிற உண்மை பச்சமுத்துவுக்கு மட்டுமே தெரியும். மதன் ஓடிவிட்டாரா, பச்சமுத்துவால் ஒளித்து வைக்கப்பட்டு இருக்கிறாரா அல்லது தலைமறைவாக இருக்கிறாரா, மாதக்கணக்கில் மதனை தேடிவரும் போலீஸ், ஒருமுறை பச்சமுத்துவிடம் விசாரணை செய்தால் மதன் ஒளிந்திருக்கும் உண்மை நிலவரம் புரியும். மதன் கிடைக்காவிட்டால், ஐந்து வருஷம் ஆகியும் ஆறு கோடி பணம் கொடுத்த எனக்கு என்ன பதில். பச்சமுத்துவின் கல்லூரியில் கோடிக்கணக்கில் பணம் கட்டியிருக்கும் 104 மாணவர்களின் கதி என்ன?" என்று பச்சமுத்து மீது பகீர் புகார் பட்டியல்களை அடுக்குகிறார்.
போத்ராவின் புகாருக்கு பச்சமுத்து பதில் அளித்தால்தான் உண்மை வெளியே தெரியவரும்.



No comments:

Post a Comment