Monetize Your Website or Blog

Wednesday, 24 August 2016

கமல்ஹாசனை தெரிகிறதா முதல்வர் அவர்களே!' -சீறிப் பாயும் சீமான்

டிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘செவாலியர்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ' கமல் நடிகர் மட்டுமல்ல. சமூகப் பற்றுள்ள மாபெரும் கலைஞன். அவருக்கு வாழ்த்து சொல்வதற்குக்கூட முதல்வருக்கு நேரமில்லையா?' எனக் கொந்தளிக்கிறார் நாம் தமிழர் கட்சியின் சீமான். 





தமிழ்நாட்டில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்குப் பிறகு, செவாலியர் விருதுக்குத் தேர்வாகியிருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். இதற்காக, திரையுலகப் பிரமுகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள ட்விட்டர் வாழ்த்துச் செய்தியில், ' எங்கள் தலைமுறையின் நடிகர் திலகம் செவாலியர் அருமை நண்பர் கமல்ஹாசன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்'  எனத் தெரிவித்துள்ளார். கமல்ஹாசனும் தன்னுடைய ட்விட்டர் தளத்தில், ' இந்திய அறிஞர்களும், இந்த விருதைப் பெற்று இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் இதை விளம்பரப்படுத்துவதில்லை. பணிவுக்கும் புகழுக்கும் இடையே, நான் சிறுபிள்ளைத்தனமாக புகழைத் தேர்வு செய்து இருக்கிறேன். என் நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி" என அறிவித்துள்ளார். " ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாக மாற்றிய முதல் நடிகர் கமல்ஹாசன். செவாலியர் விருது பெற்றமைக்காக, ஒரு வார்த்தையைக்கூட முதல்வர் சொல்லவில்லையே ஏன்?" எனக் கொந்தளிக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அவர் நம்மிடம்,
" செவாலியர் விருதுக்கு கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டதற்கு எந்த ஒரு பரிசையும் தமிழக அரசு அறிவிக்கவில்லை. இந்த தேசமும் அவரைக் கொண்டாடவில்லை. திரையுலகைச் சேர்ந்தவர்கள் அவரைச் சந்தித்துப் பாராட்டுகிறார்கள். தமிழக அரசிடம் இருந்து மனதார ஒரு வாழ்த்துச் செய்தி வந்ததா? செவாலியர் விருதுக்காக ஏன் பத்








No comments:

Post a Comment