Monetize Your Website or Blog

Wednesday, 11 May 2016

பாக்கு மட்டை தட்டுகள் தயாரிப்பு சுயதொழில்

பாக்கு மட்டையிலிருந்து தட்டுகள் தயாரித்து பணம் குவிக்கும் சிலர்தங்களின்தயாரிப்புவிற்பனை போன்ற தகவல்களை இங்கு சொல்கிறார்கள்.இத் தொழில்தொடங்க ஆவல் உள்ளவர்கள்திட்ட அறிக்கைவங்கி கடன் போன்ற தகவல்களைசம்பந்தப்பட்ட வங்கிதுறையினரிடம் கேட்டு தொடங்கவும்நான் இங்கு கோடு தான்போட்டிருக்கிறேன்நீங்கள் ரோடு போட்டு கொள்ளுங்கள்வாழ்த்துக்கள்



பணம் தரும் பாக்​கு​மட்டை!



இது பாஸ்ட் புட் காலம்நின்று கொண்டே சாப்பிட்டுவிட்டுசாப்பிட்ட தட்டையும்கழுவுவதற்கு நேரமில்லாமல் தட்டின் மீது பிளாஸ்டிக் தாளை வைத்துச் சாப்பிட்டுவிட்டுஓடிக்கொண்டிருக்கும் யுகம்சாப்பிட தட்டும் வேண்டும்அது ஒருமுறைபயன்படுத்திவிட்டுத் தூக்கி எறிந்து விடுமாறும் இருக்க வேண்டும்அது சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்காததாகவும் இருக்க வேண்டும்இந்த மூன்றுதேவைகளையும் நிறைவேற்றுவதாக இருக்கிறது பாக்கு மட்டை தட்டுகள்.


வீணாகக் குப்பையில் போடப்பட்டு வந்த பாக்குமட்டையிலிருந்துசுற்றுச்சுழலைப்பாதிக்காத இத் தட்டுகள் கோயில்களில் பிரசாதம் வழங்கவிசேஷங்களில்சிற்றுண்டிகள் வழங்க எனப் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறதுவிளைவுவீணானபொருள் விலைமதிப்புக்குரிய பொருளாக மாறிவிட்டது.
விருதுநகர் மாவட்டம்சிவகாசியில் பாபிருந்தாதேவி பாக்குமட்டையிலிருந்து தட்டுகள்தயாரிக்கும் தொழில் குறித்து நம்மிடம் பேசினார்.
இந்தத் தொழிலை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்?
நான் பிளஸ் 2 வரை படித்துள்ளேன்எனது கணவர் ஜிபாண்டியராஜன் மினி லாரிவைத்து தொழில் செய்துவருகிறார்நானும் ஏதாவது தொழில் செய்யவேண்டும் என்றஆர்வம் இருந்துவந்ததுஎன்ன தொழில் செய்யலாம் என தினசரி யோசித்துக்கொண்டிருந்தேன்.
எனக்கு நூலகத்துக்கு சென்று புத்தகங்கள் படிக்கும் பழக்கம் உண்டுஒருநாள்நூலகத்தில் தொழில் தொடர்பான புத்தகம் ஒன்றினை படித்தபோதுஅதில் பாக்குமட்டைதட்டு தயாரிப்பு குறித்து விளம்பரம் வந்திருந்ததுஅதை படித்ததும் எனக்குள் ஓர்ஆர்வம் பிறந்ததுஇந்தத் தொழில் நமக்கு சரியாக இருக்கும் என எனக்குத் தோன்றியது.விளம்பரம் கொடுத்திருந்த நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு பேசினேன்திருச்சியில்சென்று பயிற்சி பெற்றுசிவகாசியில் காலினால் இயக்கும் நான்கு இயந்திரங்களைவாங்கி, 3 ஆண்டுகளுக்கு முன்னர் இத் தட்டுகளைத் தயாரிக்கத் தொடங்கினேன்.
எவ்வளவு முதலீடு செய்தீர்கள்?
இயந்திரங்களின் விலை ரூ. 80 ஆயிரமாகும்சொந்த இடத்திலேயே இரு அறைகள்கட்டி இயந்திரத்தை அமைத்தேன்மாவட்டத் தொழில் மையத்தில் பதிவு செய்தேன்.அதன்மூலம்சிறுதொழில் எனச் சான்று பெற்றுமின் கட்டணச் சலுகை பெற்றேன்.இந்த இயந்திரம் வாங்குவதற்கும்மூலதனப் பொருள்கள் வாங்குவதற்கும் காதி போர்டுமூலம் கடன் பெற்றதால், 35 சதம் மானியம் கிடைத்ததுஇந்த மானியம் கிடைத்ததால்நான் உற்சாகம் அடைந்தேன்இந்தத் தொழிலில் எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும்என என்னுள் ஒரு தாக்கம் ஏற்பட்டதுமூன்று பெண் தொழிலாளர்களை வேலைக்குஅமர்த்திக் கொண்டுஅவர்களுடன் நானும் இரவு பகல் பாராது கடுமையாகஉழைத்தேன்.
பாக்குமட்டை தட்டில் நீங்கள் எத்தனை ரகங்கள் தயாரிக்கிறீர்கள்?

                  


இதில் பல ரகங்கள் உள்ளனநான் நான்கு அளவுகளில் தயாரிக்கிறேன். 10, 8, 6 மற்றும்அங்குலங்களில் தட்டுகள் தயாரித்து வருகிறேன்.
இதற்கான மூலப்பொருள்களை எங்கிருந்து வாங்குகிறீர்கள்?
சேலம் மற்றும் தென்காசியிலிருந்து வாங்குகிறேன்அரசு இதற்கு வரிவிலக்குஅளித்துள்ளது வரவேற்கத்தக்கது.
தட்டுகளை எப்படி சந்தைப்படுத்துகிறீர்கள்?
சேலத்தில் உள்ள கிரீன் இண்டியா என்ற நிறுவனம்தான் இந்தத் தொழில் குறித்துஎனக்குப் பயிற்சி அளித்ததுஇந்த நிறுவனத்தார் மூலப்பொருள்களையும் கொடுத்து,தயாரிக்கப்பட்ட தட்டுகளையும் வாங்கிக் கொள்கின்றனர்இவர்கள் மூலமாகபலகண்காட்சிகளில் பங்குபெற்று சந்தைப்படுத்தி வருகிறோம்.
மேலும்தற்போது கோயில்கள்கல்லூரிகள்தொண்டு நிறுவனங்கள் என நேரடியாகஆர்டர்களைப் பெற்று விநியோகம் செய்து வருகிறோம்நாளுக்கு நாள் இதன்தேவைகூடிக்கொண்டே போகிறதுசுயதொழில் செய்ய விரும்பும் பெண்கள் பலர் இதனைச்செய்ய முன்வரவேண்டும்ஆண்கள் துணையின்றி வீட்டுப் பெண்களே செய்யக் கூடியதொழில் இது.
இந்தத் தொழில் குறித்து உங்கள் கருத்து என்ன ?
வருமானம் பெருக வாய்ப்புள்ள தொழில்நான் தற்போது மாதம் ரூ. 10 ஆயிரம்வருமானம் பெற்று வருகிறேன்பெண்களுக்கு ஏற்ற தொழில்இந்தத் தொழிலில்ஈடுபட்டால்சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் நாமும் பங்குகொள்கிறோம் என்ற உணர்வுஏற்படும்என்னிடம் பயிற்சி பெற்று பலர்திண்டுக்கல்நாகர்கோவில்தேவகோட்டைஉள்ளிட்ட பல ஊர்களில் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்இது எனக்கு மனநிறைவைத் தருகிறது.
உங்கள் எதிர்காலத்திட்டம் என்ன?
பாக்குமட்டையிலிருந்து தட்டுகள் தயாரிக்க தானியங்கி இயந்திரத்துக்கு ஆர்டர்கொடுத்துள்ளேன்இதன்மூலம் மேலும் வேகமாகவும் அதிக அளவிலும் தட்டுகளைத்தயாரிக்க முடியும்தற்போதுநான் மும்பை வரை தட்டுகளை அனுப்பிவருகிறேன்.எதிர்காலத்தில் ஏற்றுமதியிலும் ஈடுபட வேண்டும் என்பதே எனது லட்சியமாக உள்ளது.

 
பாக்குமட்டை தட்டு தயாரிப்பு


பாக்கு மட்டையை தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்த பிறகுஅதை நவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்ட இயந்திரத்தில் வைக்கப்படுகிறதுஇயந்திரம் மின்சாரஉதவியுடன் வெப்பமாகி பாக்கு மட்டை தட்டாக உருவாகிறதுவட்டம்சதுரம்,செவ்வகம்ஐங்கோணம்அறுங்கோணம் ஆகிய வடிவங்களில் அச்சு முறையில்வடிவமைக்கப்படுகிறதுமிகவும் குறுகிய நேரத்தில் சாதாரணமாக 100 தட்டு வரைதயாரிக்கலாம்ஏற்கனவே புழக்கத்தில் இருந்த சதுர வடிவ தட்டுகள் மக்கள் மத்தியில்வரவேற்பை பெறவில்லைஎனவேஉற்பத்தியாளர்கள் வடிவத்தை மாற்றி வட்டவடிவத்திலும்அறுங்கோண வடிவத்திலும் மாற்றி விற்பனை செய்கிறோம்சீஸன்சமயத்தில் நாளொன்றுக்கு 3000 தட்டு வரை உற்பத்தி செய்யலாம்.பாக்கு மட்டை உணவு தட்டுகளுக்கு வெளிநாடுகளிலும் நல்ல கிராக்கி
மரத்தில் இருந்து உதிர்ந்து விழும் மட்டைகளை பதப்படுத்தி உணவுத் தட்டுகள்தயாரித்து விற்பனை செய்வதிலும் பாக்கு விவசாயிகள் ஆர்வம் காட்டினர்இதனால்,தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மட்டுமின்றிவட மாநிலங்களிலும் பாக்குதட்டுகளுக்கு மவுசு ஏற்பட்டது.
ஏற்றுமதிக்கு தொடர்ந்து ஆர்டர் கிடைத்ததால்பாக்கு தட்டு தயாரிக்கும் குடிசைத்தொழிலகங்களின் எண்ணிக்கை அதிகரித்ததுசேலம்நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறுபகுதிகளில் பாக்கு தட்டு தயாரிக்கும் சிறு தொழில் அசுர வளர்ச்சி அடைந்தது. 400க்கும்மேற்பட்டோர் பாக்கு தட்டு தயாரிக்கும் தொழிலில் ஆர்வத்தோடு ஈடுபட்டனர்.
தற்போது பாக்கு தட்டுகள் மட்டுமின்றிபாக்கு மட்டைகளை பதப்படுத்தி டீ கோப்பைகள்,டம்ளர்கள்பல்வேறு வடிவ கிண்ணங்கள்சிற்றுண்டி பிளேட்டுகள் போன்றவற்றைதயாரிக்கும் புதிய முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்இந்த பாத்திரங்களுக்குஆஸ்திரேலியாஐரோப்பிய நாடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
உள்ளூரில் உலா வந்த பாக்கு மட்டை தட்டுகளுக்குவளர்ந்த நாடுகளில் கடும் கிராக்கிஏற்பட்டு ஏற்றுமதிக்கு ஆர்டர் குவிந்து வருவதால்விவசாயிகளும்வியாபாரிகளும்பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


பாக்கு மட்டை தட்டுகளின் செய்முறை
பாக்குமட்டை தட்டுகள் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் பாக்கு மரங்களின்
மட்டைகளில் இருந்து தயரிக்கப்படுகிறது இவை முற்றிலும் இயற்கையான
முறையில் தயாரிக்கப்படும் ஒரு பொருள் ஆகும் பாக்குமரங்களில் இருந்து
மட்டைகள் மிகவும் கவனமாகப் பிரித்தெடுக்கப்பட்டு அவை சிறந்த கண்கணிப்புக்கு
உட்படுத்தப்பட்டு சேமித்து பின் நன்னீரில் நனைத்து ஊறவைத்து அதனை முற்றிலும்
மனிதர்களால் இயக்கப்படும் ஒரு எந்திரத்தில் வைத்து தேவையான அளவுகளில்
வெட்டியும் பின் சுடச்செயதும் நமக்கு வேண்டிய வடிவத்தை தரும் வகையில்
உருவாக்கபப்டுகிறது இதில் எந்தொரு இடத்திலும் செயற்கையான வண்ணங்களோ
அல்லது மனமோ வேறு எந்த ஒரு ரசயனமோ இடப்படுவது இல்லை முற்றிலும்


இயற்கையான ஒன்றே ஆகும்.


1 comment: