Monetize Your Website or Blog

Thursday, 17 March 2016

முயல் வளர்ப்பு

இறைச்சிக்கான கால்நடை வளர்ப்புத் தொழிலில் இறங்கி, கையைச் சுட்டுக் கொண்டவர்கள் பலர்  உண்டு. குறிப்பாக, முயல் வளர்ப்பில் இறங்கிய பல விவசாயிகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்ததால், முயல் வளர்ப்பு, என்றாலே பலரும், வேண்டாம் என்றுதான் துள்ளி ஓடுவார்கள் முயலைவிட வேகமாக. ஆனால், இவர்களுக்கு மத்தியில் மிகுந்த முனைப்புடன் முயல் வளர்த்து, அதில் நல்ல லாபமும் ஈட்டி வருகிறார், விழுப்புரம் மாவட்டம், வித்யா நகரைச் சேர்ந்த முரளிதரன். எங்கப்பா லேப் டெக்னீசியன் வேலை பார்த்தாலும்.. விவசாயத்தை விடாமல் செய்து கொண்டிருந்தார். அந்த வருமானத்தில்தான் என்னை இன்ஜினீயரிங் படிக்க வைத்தார். படிப்பை முடித்துவிட்டு,ஹரிகோட்டாவில் இருக்கும் ‘இஸ்ரோ’ நிறுவனத்தில்.. விஞ்ஞானியாக 16 வருடம் வேலை பார்த்தேன்.

பிறகு, சவுதி அரேபியாவில் ஏழு வருடம் வேலை பார்த்தேன் அதன் பிறகு இந்தியாவிற்கே திரும்பிவிட்டேன். மூன்று வருடமாக ஒரு தொண்டு நிறுவனத்தை நடத்தி கொண்டு வருகிறேன். அதன் மூலமாக, கல்வராயன் மலையில் இருக்கும் மலைவாழ் மக்களுக்கு, சில உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறோம். இதற்கு நடுவில் இணையதளம் மூலமாக முயல் வளர்ப்பைப் பற்றித்
  தெரிந்து கொண்டேன். அதற்காக, கொடைக்கானலில் இருக்கும் மத்திய செம்மறி ஆடுகள் மற்றும் ரோம ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி எடுத்து கொண்டேன். ஆரம்பத்தில், 10 முயல்களை வாங்கி வளர்க்க ஆரம்பித்தேன். மூன்று வருடத்தில் 1,500 முயல்கள் கிடைத்தது. அதில் ஆயிரம் முயலை விற்றுவிட்டேன். இப்போது 500 முயல்களை வைத்திருக்கிறேன் என்றார்.



இன விருத்தி அதிகம்!
சாப்பிடும் உணவை, கறியாக மாற்றும் திறனும், இன விருத்தியும்.. மற்ற விலங்குகளை விட முயலுக்கு அதிகம். முயலை நம்ம வசதியைப் பொருத்து, எந்த இடத்தில் வேண்டும் என்றாலும் வளர்க்கலாம். நான் என்னோட வீட்டைச் சுற்றிக் கூண்டு வைத்து வளர்க்கிறேன். முயல் கறி, சாப்பிட்ட உடனே ஜீரணமாயிடும். இந்தக் கறியில் குறைவான கொழுப்பு, அதிக புரதம், குறைந்த கலோரிதான் இருக்கு. முயல் கறி மிருதுவாக, சுவையாக இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் எல்லோருமே சாப்பிடலாம். இவ்வளவு இருந்தும், யாரும் இந்தத் தொழிலுக்கு வருவதில்லை என்பதுதான் ஆச்சரியம்.

இதை விற்க முடியாது என்றுதான் நிறைய பேர் காரணம் சொல்றாங்க. என்னோட அனுபவத்தில் விற்பனை ஒரு பிரச்சினையே இல்லை. தமிழ்நாட்டில் போதுமான அளவிற்கு முயல் இல்லை. எந்தப் புதுப்பொருளாக இருந்தாலும் அதைச் சாப்பிட்டு ருசி பார்த்தால்தான்.. அடுத்தடுத்து சாப்பிடத் தோன்றும். நம்ம ஊரில் ஆட்டுக்கறி, கோழிக்கறி கிடைக்கும் அளவிற்கு முயல் கறி கிடைப்பதில்லை. அதனால் மக்கள் வாங்கி சாப்பிடுவதில்லை. அதில்லாமல், முயல் மென்மையான, சாதுவான பிராணி. அதனால், அதைக் கொன்று சாப்பிடுவது பாவம் என்ற எண்ணமும் இருக்கு. அதனால்தான் பயன்பாடு குறைவாக இருக்கு. விழுப்புரத்தில் ஒரு ஹோட்டலில் நான் ஆர்டர் கேட்ட போது தினம் 5முயல் உங்களால் கொடுக்க முடிந்தால் நாங்க முயல்கறி பிரியாணி போடத் தயார் என்று சொன்னாங்க. ஆனால், அந்தளவிற்கு என்னால் கொடுக்க முடியாது என்பதுதான் உண்மை.

விற்பனைக்கு உதவி செய்வேன்!
வளர்ப்புக்கு இனப்பெருக்கத்திற்கு, சோதனைக் கூடங்களுக்கு கறிக்கு என்று பலவகையிலும் முயல்களுக்குத் தேவை இருந்துக் கொண்டுதான் இருக்கு. என்கிட்ட இருக்கும் ஆர்டருக்கே என்னால் சப்ளை செய்ய முடிவதில்லை. முயல் வளர்த்துக் கொண்டு இருப்பவங்களுகத் தேவையான ஆலோசனை கொடுக்கவும், விற்பனை செய்து கொடுக்கவும் நான் தயாராக இருக்கிறேன் என்றார்.

மூன்று மாதங்களில் 3 கிலோ!
முயலின் ஆயுட்காலம் 12 ஆண்டுகள். இன விருத்திக்காக வளர்க்கும் போது, 5 ஆண்டுகள் வரை வளர்ப்பதுதான் சிறந்தது. வெள்ளை ஜெயன்ட், சாம்பல் ஜெயன்ட், சோவியத் சின்சிலா, நியூசிலாந்து வெள்ளை ஆகிய ரகங்கள் வளர்ப்பிற்கு ஏற்றவை. இவை மூன்று மாதங்களில் 2 கிலோ முதல் 3 கிலோ அளவிற்கு வளரக் கூடியவை.


                   

வலை கவனம்!
கொட்டகைக்கு அதகிச் செலவு செய்யாமல், வீட்டைச் சுற்றி நிழலுள்ள இடங்களில் கூண்டுகளை அமைத்து முயல் வளர்க்கலாம். ஒரு முயலுக்கு நான்கு சதுரடி இடம் தேவை. அதாவது, இரண்டடிக்கு இரண்டடி என்ற அளவில் கூண்டு இருக்க வேண்டும். தனித்தனியாக
 கூண்டு செய்யாமல், பத்தடி நீளம். நான்கடி அகலம், அதை இரண்டு இரண்டு அடியாகப் பிரித்துக் கொண்டால்... செலவு குறையும். இது வளரும் முயல்களுக்கான கூண்டு.
குட்டி ஈனும் முயலுக்கு... இரண்டரை அடி சதுரம், ஒன்றரை அடி உயரத்தில் இதேபோல் கூண்டுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். கூண்டுக்கு 14 ‘கேஜ்’ கம்பிகளைப் பயன்படுத்தினால், முயலுக்கு காலில் புண்கள் உண்டாகாது. அதேபோல் தண்ணீருக்கு ‘நிப்பில்’ அமைப்பை அமைத்து விட்டால்.. தண்ணீர் வீணாகாது.

ஒரு யூனிட்டுக்கு 10 முயல்!
சினை முயல் ஒன்று, பருவத்திற்கு வந்த இரண்டு பெட்டை முயல்கள் (4 மாதம் வயதுடையவை), 6 மாத வயதுடைய ஒரு ஆண், ஒரு கிலோ அளவுடைய இரண்டு ஆண் முயல்கள், நான்கு பெட்டைக் குட்டிகள் என ஏழு பெண் முயல்கள், மூன்று ஆண் முயல்கள் என பத்து முயல்களை கொண்டது ஒரு யூனிட். முயல் வளர்ப்பில் இறங்குபவர்கள், ஒரே வயதுடைய முயல்களை வாங்கி வளர்க்கும் போது, வளர்ப்பு நிலை தெரியாமல் கஷ்டப்படுகிறார்கள். இந்த முறையில் வளர்க்கும் போது, 3 மாதங்களில் அனைத்து நிலைகளையும் கடந்து விடலாம். ஒரு யூனிட் முயல்களை, ஒரு கூண்டுக்கு ஒரு முயல் எனத் தனித்தனியாக விட்டுவிட வேண்டும்.

15 நாட்களுக்கு ஒரு முறை பருவம்!
முயல், ஐந்து மாத வயதில் பருவத்திற்கு வரும். பெண் முயலின் பிறப்புறுப்பு சிவந்து தடித்திருப்பதைப் பார்த்து பருவமடைந்ததைக் கண்டுபிடித்து விடலாம். அதன் பிறகு, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை தொடர்ந்து பருவத்துக்கு வரும். பருவம் வந்த பெண் முயலை, ஆண் முயல் இருக்கும் கூண்டுக்குள் விட வேண்டும். விட்ட ஓரிரு நிமிடங்களில் இனச்சேர்க்கை நடந்து விடும். பிறகு, பெண் முயலை அதனுடைய கூண்டில் விட்டுவிட வேண்டும். இன விருத்திக்காக ஆணுடன், பெட்டையைச் சேர்க்கும் போது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முயல்களாக இருக்கக் கூடாது. அப்படி இருந்தால், மரபு ரீதியான குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.ஆணுடன் சேர்ந்த 15 நாட்கள் கழித்து, பெண் முயலின் அடி வயிற்றைத் தடவி பார்த்தால் குட்டி தென்படும். உடனே, சினை முயலுக்கான கூண்டுக்கு மாற்றிவிட வேண்டும். குட்டி உருவாகவில்லையெனில், மீண்டும் அடுத்த பருவத்தில் இனச்சேர்க்கை செய்ய வேண்டும்.

ஆண்டுக்கு 8 முறை குட்டி!
குட்டி ஈனும் கூண்டில் தனிப்பெட்டி வைத்து, அவற்றில் தேங்காய் நார் கழிவுகளை வைக்க வேண்டும். முயலின் சினைக்காலம் முப்பது நாட்கள். ஆண்டுக்கு 6 முதல் 8 முறை குட்டி ஈனும். குட்டி ஈன்ற உடனே அடுத்த சினைக்குத் தயாராகி விடும். அடுத்தப் பருவத்திலேயே மீண்டும் இனச்சேர்க்கை செய்யலாம். முதல் ஈற்றில் மூன்று குட்டிகள் வரைதான் கிடைக்கும். அடுத்தடுத்து குட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்து, ஒரு ஈற்றில் 5 முதல் 9 குட்டிகள் வரை கிடைக்கும். பிறந்த குட்டியின் எடை 60 கிராம் இருக்கும். குட்டிகள் ஒரு மாதம் வரை தாயிடம் பால் குடிக்கும். அதன் பிறகு குட்டிகளைப் பிரித்து விட வேண்டும். முதலில் தாய் முயலைப் பிரித்து விட்டு, ஐந்து நாட்கள் கழித்து குட்டிகளை இடம் மாற்ற வேண்டும். பால் குடிக்கும் பருவத்தில் ஒரு குட்டி 750 கிராம் அளவிற்கு வந்துவிடும். தொடர்ந்து தீவனம் கொடுத்து வரும்போது, நான்கு மாதங்களில் இரண்டு கிலோ அளவிற்கு எடை வந்துவிடும்.

பசுந்தீவனமாக தட்டைச்சோளம்!
முயலுக்கு அருகம்புல், வேலிமசால், அகத்தி, மல்பெரி இலைகள், தட்டைச்சோளம் ஆகியவற்றைப் பசுந்தீவனமாகக் கொடுத்து வளர்க்கலாம். அடர் தீவனமாக கடையில் கிடைக்கும் தீவனங்கள் விலை அதிகமாகவும், தரமில்லாமலும் இருக்கின்றன. அதனால், நாமே அடர் தீவனத்தைத் தயாரித்துக் கொள்ளலாம். பருவமடைந்த முயல் ஒன்றுக்கு தினமும் 250 கிராம் பசுந்தீவனமும், 100 கிராம் அடர் தீவனமும் கொடுக்க வேண்டும். குட்டி ஈன்ற முயலுக்குத் தினமும் 150 கிராம் அடர் தீவனமும், 250 கிராம் பசுந்தீவனமும் கொடுக்க வேண்டும். குட்டிகளுக்கு 50 கிராம் அடர் தீவனமும், 100 கிராம் பசுந்தீவனமும் கொடுக்க வெண்டும். முயல்கள் பகல்வேளைகளில் தூங்கும் பழக்கம் கொண்டவை. அதனால், காலை ஏழு மணிக்கு மொத்தத் தீவனத்தில் கால் பங்கு, இரவு ஏழு மணிக்கு முக்கால் பங்கு என பிரித்துக் கொடுக்க வேண்டும்.

ஆண்டுக்கு 210 முயல்கள்!
ஒவ்வொரு முயலும் சராசரியாக வருடத்திற்கு ஆறு முறை குட்டி போடும். ஒவ்வொரு முறையும் சராசரியாக 5 குட்டிகள் என்று வைத்துக் கொண்டால், ஒரு யூனிட்டில் இருக்கும்
  ஏழு பெண் முயல்கள் மூலமாக வருடத்திற்கு 210 குட்டிகள் கிடைக்கும். நான்கு மாதம் கழித்து விற்கும்போது, ஒரு முயல் சராசரியாக இரண்டு கிலோ இருக்கும். சராசரியாக ஒரு கிலோவிற்கு 175 ரூபாய் விலை கிடைக்கிறது. ஒரு முயல் 350 ரூபாய் என்று 210 முயல்களையும் விற்கும்போது.. 73 ஆயிரத்து 500 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதில், தீவனம், மருத்துவச் செலவு, பராமரிப்புக்கு 52 ஆயிரத்து 800 ரூபாய் போக 20 ஆயிரத்து 700 ரூபாய் லாபம். இது, பத்து முயல்கள்  அடங்கிய ஒரு யூனிட்டிற்கான கணக்கு. ஆடு கோழி வளர்ப்பைவிட இதில் லாபம் குறைவாக இருப்பது போல் தோன்றலாம். ஆனால் இதில் பராமரிப்பு குறைவு. அதாவது, இதற்காக நீங்க செலவிடும் நேரம் மிகவும் குறைவாகத்தான் இருக்கும். பகுதி நேர வேலையாகவே இதைச் செய்யலாம். அதேபோல் நோய் தாக்குதலும் அதிகம் இருக்காது.

5 யூனிட்டால்... அதாவது 50 முயல்களைக் கொண்டு பண்ணையைத் தொடங்கினால், வருடத்திற்கு 1 லட்ச ரூபாய்க்கும் மேல் லாபம் கிடைக்கும். சினை முயலாக விற்றால், ஒரு முயல் 600 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய் வரை விற்பனை ஆகும். சோதனைக் கூடங்களுக்கு விற்றால், ஒரு முயலை 1,500 ரூபாய் வரைக்கும்கூட
  விற்க முடியும் என்றார்.

இப்படித்தான் அடர்தீவனம் தயாரிக்கணும்.
மக்காச்சோளம் – 20 கிலோ, கம்பு – 15 கிலோ, கேழ்வரகு – 3 கிலோ, அரிசி – 15 கிலோ, கோதுமை தவிடு – 12 கிலோ, கடலைப்பொட்டு – 20 கிலோ, தாது உப்பு ஒன்றரை கிலோ, உப்பு
  அரைகிலோ ஆகியவற்றை கலந்து அரைத்துக் கொள்ள வேண்டும். தீவனம் வைப்பதற்கு 12 மணி நேரம் முன்பு 13 கிலோ கடலைப் பிண்ணாக்கை ஊறவைத்து, இக்கலவையுடன் கலந்து முயல்களுக்கு கொடுக்க வேண்டும். இது 100 கிலோ தீவனம் தயாரிப்பதற்கான உதாரண அளவு. எவ்வளவு முயல் இருக்கின்றனவோ.. அதற்கு எற்ற அளவில் தீவனததைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.

முயல் கறியில் உள்ள சத்துக்கள்!
புரதம் - 21%, கொழுப்பு - 11%, நீர்ச்சத்து -68%. 100 கிராம் கறியில்.. 50 மில்லி கிராம் கொழுப்புச் சத்து, 20 மில்லி கிராம் சுண்ணாம்புச் சத்து 40 மில்லி கிராம் சோடியம், 350 மில்லிகிராம் பாஸ்பரஸ் சத்து ஆகியவை இருக்கின்றன.

10 முயல்கள் வளர்க்க முரளிதரன் சொல்லும் ஒரு வருடத்திற்கான செலவு – வரவு கணக்கு
விவரம்
செலவு
வரவு
நிரந்தரச் செலவுகள் (5 ஆண்டுகளுக்கு)


தாய் முயல்
10,000

கூண்டு
8,000

மொத்தம்
18,000

நடைமுறைச் செலவுகள்


அடர் தீவனம்
44,900

பசுந்தீவனம்
2,600

மருத்துவச் செலவு
5,300

முயல் விற்பனை மூலம் வரவு

73,500
மொத்தம்
52,800
73,500
நிகர லாபம்

20,700

வீட்டில் வளர்க்கப்படும் ஆடுமாடுகோழி வளர்ப்பது போல முயல் வளர்ப்பு தொழிலும்மிகுந்த லாபம் தரக் கூடியதுமுழுநேரமாகவோபகுதி நேரமாகவோ முயல் வளர்த்தால்முன்னேற்றம் நிச்சயம்முயல் குட்டியானது சுமார் ஒரு மாசம் வரை தாயுடன்கட்டாயம் இருக்க வேண்டும்.. அப்போதுதான் நல்ல ஆரோக்கியமான முயல்குட்டிகள்நமக்கு கிடைக்கும். 

நன்றாக வளர்ந்த முயல்களை கிலோ ஒன்றிற்கு தரத்திற்கு தகுந்தாற்போன்று 300முதல் 350,400,500,600 என ரூபாய் வரைக்கும் விற்கலாம்.. இதற்கு தேவையானமுதலீடு சுமார் 30,000 மட்டும் போதுமென்கிறார்கள் முயல் வளர்ப்பில்ஈடுபட்டுள்ளவர்கள்.. ஒரு முயல் ரூ.500 வீதம், 2 ஆண், 10 பெண் முயல்கள்கூண்டு,உணவு தானியம் என மொத்த முதலீடு ரூ.25 ஆயிரம்வீட்டு முற்றம்மொட்டை மாடி,தோட்டம்காலியிடத்தில் வளர்க்கலாம்

காற்றோட்டமான இடம் தேவைகூண்டு முறையில் வளர்க்க 50 செ.மீஉயரம், 60செ.மீஅகலத்துடன் கூண்டு இருக்க வேண்டும்கூண்டின் நீளம் தேவைக்கு ஏற்பஅமைத்து கொள்ளலாம்கூண்டின் அடிப்பாகம் எலிபாம்புகள் நுழையாதவாறு 90 செ.மீ.உயரத்தில் இருக்க வேண்டும்உற்பத்தி 5வது மாதம் முதல்பெண் முயல்கள்இனப்பெருக்கத்தை துவங்கும்ஒரு முயல் 3 ஆண்டு உயிர் வாழும். 6 மாதத்துக்கொருமுறை 6 முதல் 10 குட்டி போடும். 3 மாதத்தில் இருந்து இறைச்சிக்கு பயன்படுத்தலாம்.ரோமம்தோலையும் விற்கலாம். 


வகைகள்
இமாலயன்சோவியத் சின்சில்லாடச்சுஆல்பினோ வகை இனங்கள் 2 முதல் 3கிலோ எடை வரை வளரும்இறைச்சிக்காக பயன்படுத்தலாம்நியூசிலாந்து வெள்ளை,நியூசிலாந்து சிவப்புகலிபோர்னியா வகை 3 முதல் 4 கிலோ எடை வரை வளரும்.முயல்களில் வெள்ளை ஜெயின்ட்சாம்பல் நிற ஜெயின்ட்பிளமிஸ் ஜெயின்ட்இனங்கள் 4 முதல் 6 கிலோ எடை வரை வளரும்.

ரோமம் விற்றால் காசு
சிறந்த ரக முடி 9 மாதத்தில் இருந்து கிடைக்கும்ஆண்டுக்கு பெண் முயல் 1 கிலோமுடியும்ஆண் முயல் 750 கிராம் முடியும் கொடுக்கும்முயல் தோலை பதனிட்டுநல்ல விலைக்கு விற்கலாம்முயல் தோலில் பர்ஸ்கையுறைகுல்லாபொம்மைசெய்யலாம்முயல் இறைச்சியை பிரியாணிசில்லிரோஸ்ட்சூப்ஊறுகாய் தயாரிக்கபயன்படுத்தலாம்சந்தை வாய்ப்பு ஒரு கிலோ முயல் கறி ரூ.200க்கு விற்கலாம்.நடமாடும் ஊர்திகள்முயல்கறி ஸ்டால்மொத்தக் கொள்முதல் விற்பனைநிலையங்கள்விடுதிகள்ஓட்டல்களுக்கு சப்ளை செய்யலாம்.



கறியில் மருத்துவ குணம்
முயல் இறைச்சியில் அதிக எலும்புகள் இருக்காதுகுறைந்த அளவு கொழுப்புஅதிகபுரதம்உயிர்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் உள்ளனஉடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது.முயல் இறைச்சி சாப்பிட்டால் குடல்புண்ஜீரண பிரச்னை வராதுவாதம் குறையும்.உடல் பித்தம்காசநோய்இருமல்வாயு தொல்லைமலச்சிக்கல் ஏற்படாதுஇதயநோய் உள்ளவர்கள் கூட முயல் கறி சாப்பிடலாம்ஆடுகோழி இறைச்சியைவிட இதில்கொழுப்பு குறைவு.


தினமும் 2 மணி நேரம் போதும்
முயலுக்கு பச்சை தாவரங்கள்காய்கள்பழங்கள்குதிரை மசால்வேலி மசால்,முட்டைகோஸ்கேரட்முள்ளங்கிபீட்ரூட்புற்கள்பலா இலைமுள் முருங்கைபோன்றவற்றை கொடுக்கலாம்இளம் முயல்கள் வேகமாக வளர்ச்சி அடைய சத்துமிகுந்த கலப்பு தீவனம் அவசியம்கலப்பு தீவனத்தில் உடைத்த மக்காச்சோளம்,உடைத்த கம்புகடலை புண்ணாக்குகோதுமை தவிடுதாது உப்பு கலவைஆகியவற்றை கலந்து கொடுக்கலாம்ஒரு நாளைக்கு ஒரு முயலுக்கு 200 கிராம் முதல்500 கிராம் வரை உணவு கொடுக்க வேண்டும்வீட்டில் வீணாகும் காய்கறிகளைகொடுக்கலாம்முயல் வளர்க்க தினமும் 2 மணி நேரம் செலவழித்தால் போதும்நல்லலாபம் பார்க்கலாம்ரோமத்திற்காக வளர்க்கப்படும் அங்கோரா இனங்களைதனித்தனியாக கூண்டிலிட்டு வளர்க்க வேண்டும்கூண்டில் வைக்கோல் படுக்கை இட்டுவளர்ப்பதால் முயல்களுக்கு புண்கள் ஏற்படுவதை தடுக்கலாம்அதோடு 25 சதவீதம்அதிக ரோமம் கிடைக்கும். 3 மாதத்திற்கு ஒரு முறை முடியை வெட்டி எடுக்கலாம்.

பெண் முயல் அமைதியில்லாமல்வாயை தரையிலோ அல்லது கூண்டிலோ அடிக்கடிதேய்த்தால் சினை அறிகுறியாகும்சினை அறிகுறி தெரிந்தவுடன் பெண் முயலை ஆண்முயல் இருக்கும் கூண்டுக்கு எடுத்து சென்று இனச்சேர்க்கைக்கு விட வேண்டும்.கருவுற்ற நாளில் இருந்து 29 நாட்களுக்குள் பெண் முயல் குட்டிகளை ஈனும்.

குட்டி ஈனுதல்
பொதுவாக முயல்கள் இரவில் தான் குட்டி ஈனுகின்றனஅவை குட்டி ஈனும் போதுஎந்த ஒரு தொந்தரவையும் விரும்புவதில்லை. 7 - 30 நிமிடத்திற்குள் குட்டி ஈனுதல்நடைபெற்று முடிந்து விடும்சில சமயம் எல்லாக் குட்டிகளும் தொடர்ந்து வெளிவராமல்சில குட்டிகள் பல மணி நேரம் கழித்தும் வெளிவரலாம்அச்சமயத்தில்ஆக்ஸிடோசின் ஊசி போடப்பட்டு குட்டிகள் வெளிக்கொணரப்படும்குட்டி போட்டவுடன்தாய் முயல் குட்டிகளை நக்கி சினைக்கொடியை உண்டு விடும்பிறந்த குட்டிகள்தாயிடம் பாலூட்ட முயலும்அவ்வாறு பாலூட்ட இயலாத குட்டிகள் உடல் நலம் குன்றிகுட்டியிலேயே இறந்து விடும்தாய் முயலானது வேண்டுமளவு அதன் விருப்பத்திற்குஉணவு எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படவேண்டும்அப்போது தான் குட்டிகளுக்குத்தேவையான அளவு பால் கிடைக்கும்தாய் முயல் இரவில் தான் குட்டிகள் பால் குடிக்கஅனுமதிக்கும்ஒரு ஈற்றில் 6-12 குட்டிகள் வரை ஈனலாம்.

வளர்ப்பு முயல்கள் எங்கு கிடைக்கும்?முயல் பண்ணை அமைக்க விரும்புவோர் நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரியில்உள்ள முயல் பண்ணையில் மொத்தமாக முயல் வாங்கலாம்ஊட்டி சாந்தி நல்லாவில்உள்ள செம்மறி ஆடு ஆராய்ச்சி நிலையத்திலும் கிடைக்கும்முயல்களை 2 கிலோஉடல் எடை உள்ளபோது வாங்க வேண்டும்பெண் முயலுக்கு குறைந்த பட்சம் 8 பால்காம்புகள் இருக்க வேண்டும்பெண்ஆண் முயல்களை தனித்தனியே வெவ்வேறுபண்ணைகளில் இருந்து வாங்க வேண்டும்அல்லது முயல் வளர்ப்போரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

பல்கலையில் பயிற்சி

குறைந்த செலவுஇடம்முதலீடுகுறுகிய காலத்தில் கணிசமான வருவாய் ஈட்டும்தொழிலாக முயல் வளர்ப்பு உள்ளதுசாதாரண தீவனத்தை தின்று சிறந்த இறைச்சியாகமாற்றும் தன்மை முயலுக்கு உண்டுமுயலை இறைச்சிக்காகவும்தோல் மற்றும்ரோமத்திற்காகவும் வளர்க்கலாம்முயல் வளர்க்க கால்நடை பல்கலைக்கழக பயிற்சிமையம் பயிற்சி அளித்து வருகிறதுமுயலை காதைப்பிடித்து தூக்கக்கூடாதுமுதுகுபகுதியை பிடித்து தூக்க வேண்டும்வளர்ந்த முயல்களை முதுகு பகுதியை ஒருகையாலும்அதன் வயிற்று பகுதியை ஒரு கையாலும் தாங்கிப் பிடித்து தூக்கவேண்டும்.


                       




நோய்கள்

முயலுக்கு தோல் சிரங்குரத்த கழிச்சல்சுவாச நோய்குடல் அழற்சி போன்றநோய்கள் ஏற்படும்அப்படி வந்தால் கால்நடை மருத்துவரை அணுக வேண்டும்.

· முயல்களை வீட்டில் வளர்க்கக் கூடாது என்ற தவறான கருத்து மக்களிடையேநிலவுகிறது.
· முயல் வளர்த்தால் வீட்டில் சண்டை சச்சரவுகள் வரும் என்ற தவறான கருத்து.
· முயலினை இறைச்சிக்காக வெட்ட அஞ்சுவது / பரிதாபப்படுவது.
· முயல் பண்ணைத் தொடங்கிட போதுமான உதவிகள் கிட்டாமை.
· விற்பனை வசதிகள் திறம்பட இல்லாத நிலை.
· மானியத் திட்டங்கள் எதுவும் இல்லாத நிலை.
மேற்கூறிய காரணங்கள் களையப்பட்டால் சிறப்பம்சங்கள் நிறைந்த முயல் வளர்ப்புவெகு விரைவாக பிரபலம் அடையும்.
முயல் இனங்கள் மற்றும் சாதகமான சூழ்நிலை :
ஐம்பதிற்கும் மேற்பட்ட முயல் இனங்கள் இருக்கின்றனகுறிப்பிட்டு சொல்லக்கூடியஇனங்கள் வெள்ளை ஜெயண்ட்சாம்பல் ஜெயண்ட்நியூசீலாந்து வெள்ளை மற்றும்அங்கோரா இனங்கள்இவற்றில் அங்கோரா இன முயல்களை உயர்தர உரோமத்திற்காககுளிர்ந்த மற்றும் மலைப் பிரதேசங்களில் வளர்க்கலாம்.
இறைச்சி முயல்களை மலைப் பிரதேசங்களிலும்சமவெளிப் பகுதிகளிலும்வளர்க்கலாம்தட்பவெப்பநிலை 36  வரைக்கும் இருக்கலாம்ஈரப்பதம் காற்றில் 70சதவீதத்திற்கும் மேல் இருக்கக்கூடாதுஅங்கோரா இன முயல்களை வெப்பம் குறைந்த(15-20 C) மலைப் பிரதேசங்களில் மட்டும் வளர்க்கச் சிறந்தது.
முயல் இருப்பிடம் மற்றும் வளர்ப்பு :
முயல்களை கூண்டுகளில் வளர்ப்பதே சிறந்தது. (ஆழ்கூள முறையிலும் வளர்க்கலாம்).மூலதனம் குறைவான மரக்கூண்டுகளிலும் வளர்க்கலாம்வளர்ந்த ஆண் முயலுக்கு (1.5 x 1.5 x 1.5அளவுள்ள கூண்டும்பெண் முயலுக்கு (2.0 x 2.5 x 3.0அளவுள்ளகூண்டும் ஏற்றதுஇதில் தீவனம் மற்றும் தண்ணீர் கொடுப்பதற்கு சிறிய பாத்திரம்அல்லது கொள்கலன்களை கட்டிவிட வேண்டும்கூண்டுகளை தினந்தோறும் பிரஷ்கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்இரண்டு மாதத்திற்கு ஒரு முறை தீ உமிழிகொண்டு சுத்தம் செய்யலாம்முயல் சாணம் கூண்டுகளில் தங்காவண்ணம்பார்த்துக்கொள்ள வேண்டும்.

முயல் மிகவும் சாதுவான பிராணியாதலால்பள்ளி சிறுவர்கள்பெண்கள்,வயதானவர்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் வளர்க்க ஏதுவானதுமுயல் வளர்க்கஆரம்பிப்போர் முதலில் ஓர் ஆண் மற்றும் மூன்று பெண் முயல்கள் கொண்ட சிறுகுழுவாக ஆரம்பிக்கலாம்முயல் வளர்ப்பில் உள்ள தொழில்நுட்பங்களை அறிந்தபின்னரே அதிக அளவில் முயல் வளர்க்க எண்ண வேண்டும்கொல்லைப் புறத்தில்வளர்க்க 1 ஆண் மற்றும் 3 பெண் முயல்கள் போதும்இதிலிருநது வாரந்தோறும் ஒருகிலோ இறைச்சி கிடைக்கும்இது குடும்ப தேவைக்கு போதுமானதுகொல்லைப்புறத்தில் முயல் வளர்க்கும் சமையலறைக் கழிவுகள் மற்றும் பசுந்தீவனம் கொண்டேபராமரிக்கலாம்.

முயல் வளர்ப்பின் சிறப்பம்சம் :

பசுந்தீவனத்தை சிறந்ததொரு இறைச்சியாக மாற்றுவதில் முயலுக்கு நிகர் வேறெதும்இல்லைமுயல் இறைச்சி மருத்துவ குணங்கள் கொண்டதுகொலஸ்ட்ரால் மிக மிகக்குறைவுஇருதய நோயாளிகளும்முதியோர்களும் ஏற்கக் கூடிய இறைச்சி.முயல்களுக்கு தடுப்பூசிகள் ஏதும் தேவையில்லைகுறைந்த சினைக்காலம்அதிககுட்டிகள் ஈனும் திறன்துரித வளர்ச்சி அதிக தீவன மாற்றுத்திறன் ஆகிய குணங்கள்குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்கள்நிச்சயம் லாபகரமான பண்ணைத் தொழில்ஆரம்பத்தில்சிறிய அளவில் பண்ணை அமைத்துநல்ல அனுபவம் பெற்ற பின்னர் பெரிய அளவில்தொடங்கலாம்ஒரு நபர் 500 முயல்கள் வரைக்கும் பராமரிக்க முடியும்.

முன்னேற்றம் தரும் சிறந்ததொரு பண்ணைத் தொழில் முயல் வளர்ப்பு.

கிடைக்குமிடம் :

கொடைக்கானல் தாலுக்காமன்னவனூரில் இயங்கிவரும் மத்திய அரசுப் பண்ணையில்இனவிருத்திக்கான முயல்கள் விற்பனை செய்யப்படுகின்றனமுன்பதிவின் பேரில்பெற்றுக் கொள்ளலாம்இறைச்சியின முயல்கள் வெள்ளை ஜெயண்ட்சோவியத்சின்சில்லா மற்றும் உரோம இன முயல் அங்கோரா ஆகியன உள்ளனமுயல்வளர்ப்பதற்கான பயிற்சியும்தொழில்நுட்ப உதவிகளும் வழங்கப்படுகின்றனநீலகிரிமாவட்டம்சாண்டிநல்லா என்ற இடத்தில் இயங்கிவரும் ஆட்டின இனவிருத்திஆராய்ச்சி நிலையத்திலிருந்தும்காஞ்சிபுரம் மாவட்டம்காட்டுப்பாக்கம் என்ற இடத்தில்செயல்பட்டு வரும் கால்நடை ஆராய்ச்சி நிலையத்திலிருந்தும் கூட முயல்களை இனவிருத்திக்காக வாங்கலாம்.
வங்கியில் கடன் உதவி :

அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் முயல் வளர்க்க கடன் உதவிபெறலாம்கடன் பெறுவதற்கு முன்வளர்ப்பதற்கான செலவுகள் மற்றும் நிகர லாபம்அடங்கிய திட்டத்தை சமர்ப்பித்து கடன் பெறலாம்ஆயுள் காப்பீடு வசதியும்முயல்களுக்கு உள்ளது.

விற்பனை வாய்ப்புகள் :
முயல்களை இனவிருத்திக்காக விற்பனை செய்யலாம்உபரியான முயல்களைஇறைச்சிக்குப் பயன்படுத்தலாம்உயிர் எடையில் குறைந்தபட்சம் 50ரூ இறைச்சிகிடைக்கும்முயல் தோலை பதப்படுத்திகைவினைப் பொருட்கள் செய்யலாம்இதில்தொப்பிமேலாடைகள்பர்ஸ்சாவிக் கொத்துகவர் முக்கியமானவைமுயல் எருசிறந்த எருவாக கருதப்படுகிறதுஇதிலிருந்து மண்புழு உரம் தயாரிக்கலாம்சொந்தநிலம்தண்ணீர் வசதிபசுந்தீவன வசதியுடைய விவசாயிகள்முயல் வளர்ப்பைஆரம்பித்தால் நிச்சயம் கூடுதல் வருவாய் கிடைக்கும்நமது நாட்டின் இன்றையஇறைச்சித் தேவையை பூர்த்தி செய்யலாம்.
முயல் வளர்ப்பு  ஆதாயம் :
இரண்டு ஆண் முயல்கள் மற்றும் பத்து பெண் முயல்களடங்கிய சிறிய முயல்பண்ணை அமைக்க ஆகும் செலவினங்கள் மற்றும் வருவாய் விவரங்கள் கீழேகொடுக்கப்பட்டுள்ளன.
அனுமானங்கள் :
· கூண்டுகளில் அடைக்கப்பட்ட முயல்கள் 500 எண்ணிக்கை வரையில் ஒரே நபர்அன்றாடம் பராமரிக்க முடியும் என்பதால் கூலிக்கு தனியாக ஆள் தேவையில்லை.
· ஒவ்வொரு பெண் முயலிடமிருந்து வருடத்திற்கு 30 குட்டிகள் பெறலாம்.
· இரண்டு ஆண் முயல்கள் மற்றும் பத்து பெண் முயல்களடங்கியது ஒரு குழுவாகும்.
· சராசரியாக பத்து பெண் முயல்களை இனச்சேர்க்கை செய்தால் எட்டு முயல்கள்ஒவ்வொரு முறையும் சினையாகும்.


குறிப்பு :ஒரு நபரின் முழு நேர வேலை வாய்ப்பிற்கு குறைந்தபட்சம் 20 ஆண்முயல்கள் +100 பெண் முயல்கள் வளர்க்கும் பொழுது ஒரு ஆண்டிற்கு நிகர லாபம்ரூ.93,250.00 கிடைக்கும்.
தொடர்பு கொள்ள :
தென் மண்டல ஆராய்ச்சி மையம்
மத்திய செம்மறியாடு உரோம ஆராய்ச்சி நிலையம்
(
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம்)மன்னவனூர்
கொடைக்கானல்  624 103திண்டுக்கல் மாவட்டம்


தொடர்புக்கு

முரளிதரன், செல்போன் :94431 82960
செம்மறி ஆடுகள் மற்றும் ரோம ஆராய்ச்சி மையம், கொடைக்கானல் : 04542 -276414
வேளாண் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம் : 044 – 27452371


No comments:

Post a Comment