சோப் பவுடர், சோப் ஆயில் போன்ற வை இருந்தாலும் பலர் துவைப்பதற்கு சோப்புகட்டிகளையே பயன்படுத்து கின்றனர். அதிக கிராக்கி இருக்கும் சலவை சோப்புகளைதயாரிக்க கற்றுக் கொண்டால் நல்ல லாபம் பார்க்கலாம் என்று கூறுகிறார்கோவை உடையாம்பாளையத்தில் பாண்டியன், சேரன் ஆகிய பெயர்களில் சலவை சோப்தயாரித்து வரும் லதா. அவர் கூறியதாவது: நகர பகுதிகளில் பெரும்பாலான மக்கள்வாஷிங் மெஷின் மூலம் வாஷிங் பவுடர் அல்லது சோப் ஆயில் பயன்படுத்தி சலவைசெய்கின்றனர்.
வாஷிங்மெஷினில் துவைத் தாலும் சட்டைகளின் காலர் போன்ற இடங்களில் உள்ளஅழுக்கு முழு வதுமாக போவதில்லை. இதனால் மீண்டும் சோப் போட்டுதுவைக்கின்றனர். கிராமங்களை பொறுத்தவரை மக்கள் துவைப்பதற்கு சோப் களையேஅதிகளவில் பயன்படுத்துகின்றனர்.தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட பிராண்ட்களில் சோப்கள் கிடைக்கின்றன. இதில்குறிப்பிட்ட பிராண்ட் கள் பிரபலமானவை. மீதமுள்ள பிராண்ட்கள் தயாரிக்கப்படும்பகுதியில் பிரபலமாக இருக்கும். நன்றாக விற்கும். இந்த அடிப்படையில்தான் நாங்கள்சோப் தயாரிக்கும் தொழிலை தொடங்கினோம்.எங்கள் தயாரிப்பு கொங்குமண்டலபகுதிகளில் நன்றாக விற்கிறது. போட்டி அதிகம் இருப்பதால் சோப் தயாரிப்பில் தரத்தைகடைபிடிப்பது முக்கியம்.
அதேபோல குறைந்த லாபத்தில் விற்க வேண்டும். அப்போதுதான், ஒருமுறைவாங்கியவர்கள் நம்மிடம் வாடிக்கையாக வாங்குவார்கள். பின்னர் விலையை சற்றுகூட்டினாலும் ஏற்றுக் கொள்வார்கள். 2002ல் தொழிலை துவக்கினேன். உற்பத்தி,கொள்முதல் மற் றும் விற் பனையை கணவர் பார்த்து கொள் கிறார். நிர்வாகத்தை நான்பார் த்து கொள் கிறேன். துவக்கத்தில் கணவரும் நானும் தொழிலாளியாக களத்தில்இறங்கி உழைத் தோம். இதனால் உற்பத்தி செலவு குறைந்தது. குறைந்த விலைக்குவிற்க முடிந்தது. இப்போது சோப் போடு சலவை பவுடர், பாத்திரம் துலக்கும் சோப்,பவுடர் ஆகியவை யும் தயாரித்து விற்கி றோம். புதிதாக தொழில் துவங்குபவர்கள்முதலில் குடும்பமாக உழைத்து, உற்பத்தி செலவை குறைத்து, குறைந்த விலையில்விற்றால்தான் இப்போதைய போட் டிக்கு தாக்கு பிடிக்க முடியும்.
தயாரிப்பது எப்படி?
சோப் தயாரிக்கும் இயந்திரம் கலவை, பிளாடர், கட்டிங் ஆகிய 3 பகுதிகளை கொண்டது.கலவை இயந்திரம் ஓட துவங்கியதும் அதில் வாஷிங் சோடா 12 கிலோ, சிலரி ஆயில்20 கிலோ, டினோபால் பவுடர் 50 கிராம், தண்ணீர் 2 கிலோ ஆகியவற்றை கொட்டவேண்டும், 10 நிமிடத்துக்கு பின், களிமண் பவுடர் 5 கிலோ, கால்சைட் (கல்மாவு) 48கிலோ, சிலிகேட் 5 கிலோ ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக 7 நிமிடஇடைவெளிகளில் கொட்ட வேண்டும். அதில் எஸ்டிபிபி 5 கிலோ, சென்ட் 200 மி.லி, நீலநிற பவுடர் 50 கிராம் ஆகியவற்றை கொட்டி 29 நிமிடம் கழித்து இயந்திரத்தின்இயக்கத்தை நிறுத்த வேண்டும். இப்போது கலவை இயந்திரத்தில் நீல நிறத்தில் பேஸ்ட்உருவாகியிருக்கும். அதை பிளாடரில் செலுத்தினால், அச்சு வழியாக நீளமான சோப்பார் வரும். அது தேவையான அளவு கட் செய்யப்பட்டு வெளியேறும். இவற்றைடிரேயில் அடுக்கி, லேபிள் மூலம் கவர் செய்தால் சோப் விற்பனைக்கு தயார். மணிக்கு100 கிலோ வீதம் உற்பத்தி செய்யலாம்.கட்டமைப்பு: 2500 சதுர அடி ஷெட் அட்வான்ஸ் ரூ.50 ஆயிரம், மின் இணைப்பு 5 எச்பிரூ.5 ஆயிரம், சோப் தயாரிக்கும் இயந்திரம் ரூ.5 லட்சம், சோப் கட்டி அடுக்க டிரே 50ரூ.2 ஆயிரம், 10 கேன் ரூ.2 ஆயிரம், இதர பொருட்கள் ரூ.1000. அடிப்படை கட்டமைப்புசெலவு ரூ.5.6 லட்சம், முதல் மாத உற்பத்தி செலவு ரூ.5.77 லட்சம், மொத்த முதலீடுரூ.11.37 லட்சம்.உற்பத்தி செலவு (மாதத்துக்கு): ஒரு நாளைக்கு 800 கிலோ சோப் வீதம் மாதம் 25 நாளில்20 டன் தயாரிக்கலாம். ஒரு டன் சோப் தயாரிக்க கெமிக்கல் செலவு ரூ.27 ஆயிரம்வீதம் 20 டன்னுக்கு ரூ.5.4 லட்சம். கட்டிட வாடகை ரூ.5 ஆயிரம், மின் கட்டணம் ரூ.2ஆயிரம், 6 பேர் சம்பளம் ரூ.30 ஆயிரம் என மாத நிர்வாக செலவு ரூ.37 ஆயிரம்.மொத்த உற்பத்தி செலவு ரூ.5.77 லட்சம். ஒரு டன் சோப் தயாரிக்க ரூ.28,850செலவாகிறது.
வருவாய்: ஒரு டன் சோப்பை ரூ.30 ஆயிரத்துக்கு டீலர்களுக்கு விற்கலாம். டன்னுக்குரூ.1150 வீதம் 20 டன்னுக்கு மாத லாபம் ரூ.23 ஆயிரம். நேரடியாக கடைகளுக்கு சப்ளைசெய்தால் லாபம் இரு மடங்காகும். உற்பத்தியை அதிகரித்தால் அதற்கேற்ப லாபம்கூடும்.
தேவையான பொருட்கள் : சோடா (டன் ரூ.21 ஆயிரம்), சிலரி ஆயில் (டன் ரூ.95ஆயிரம்), டினோபால் பவுடர் (கிலோ ரூ.1350), க்ளே (டன் ரூ.5 ஆயிரம்), கால்சைட் (டன்ரூ.3 ஆயிரம்), சிலிகேட்(டன் ரூ.8 ஆயிரம்), எஸ்டிபிபி பவுடர் (டன் ரூ.90 ஆயிரம்),சென்ட் (கிலோ ரூ. 1000), நீல நிற பவுடர் (கிலோ ரூ.100).
கிடைக்கும் இடங்கள் : சோடா – கோவை, சிலரி ஆயில் – புதுவை, டினோபால் பவுடர் –மும்பை, க்ளே – கேரளா, கால்சைட் – சேலம், சிலிகேட் – கோவை, எஸ்டிபிபி பவுடர்,சென்ட், புளூ கலர் பவுடர் – கோவை உள்ளிட்ட இடங்களில் கிடைக்கும். மொத்தமாகவாங்கினால் குறைந்த விலையில் கிடைக்கும்.
சந்தை வாய்ப்பு
குறிப்பிட்ட பகுதிக்கு டீலர்கள் நியமித்து சோப்களை விற்கலாம். டீலர்களிடம் தொகைபெற்றுக்கொண்ட பின், ஆர்டரை தயாரித்து கொடுக்கும் அளவுக்கு கிராக்கி உள்ளது.சில்லரை கடைகளுக்கு வாகனங்கள் மூலம் கொண்டு சென்று விற்கலாம்.கடைகளில்வினியோகித்த சோப்களுக்கு, அடுத்த வினியோகத்தின் போது தொகை கிடைக்கும். இதுதாமதமானாலும் கூடுதல் லாபம் உள்ளது. புதிதாக தொழில் துவங்குபவர்கள் முதலில்சில்லரை கடைகளில் வியாபாரத்தை பெருக்கி, பின்னர் டீலர்களுக்கு விற்கலாம்.உற்பத்தி அதிகரித்தால் சலவை சோப்களை கைகளால் பேக்கிங் செய்வதற்கு பதிலாகபேக்கிங் மெஷினை பயன்படுத்தலாம். இதன்மூலம் குறைந்த நேரத்தில், அதிகளவில்உற்பத்தி செய்ய முடியும். பேக்கிங் மெஷினுக்கு மட்டும் கூடுதல் முதலீடு தேவை.
சலவை சோப் உற்பத்தியோடு சலவை பவுடரையும் தயாரிக்கலாம். சோப் உற்பத்திசெய்வதை விட சலவை பவுடர் உற்பத்தி எளிதானது. சலவை பவுடரை சாஷேஆட்டோமேடிக் பேக்கிங் இயந்திரம் மூலம் பேக்கிங் செய்து விற்கலாம். இதில் சாஷேபேக்கிங் இயந்திரத்துக்கு கூடுதல் முதலீடு தேவை. தற்போது பாத்திரம் துலக்கும் சோப்மக்களிடையே பிரபலமாகி வருகிறது. சலவை சோப் தயாரிக்கும் இயந்திரத்தில்பாத்திரம் துலக்கும் சோப்பும் தயாரிக்கலாம். அதற்குரிய கெமிக்கல்கள் மட்டும்மாறுபடும். தயாரிப்பு முறை சலவை சோப் தயாரிப்பது போன்றதுதான். பாத்திரம்துலக்கும் சோப்புடன் பாத்திரம் துலக்கும் பவுடரும் தயாரிக்கலாம்.
சோப் ஆயில் தயாரிப்பு
வீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் இயந்திரங்கள் எதுவும் இல்லாமல் சோப்ஆயில் தயாரிக்கலாம். இதன் மூலம் நன்றாக சம்பாதிக்கலாம் என்கிறார் கோவைகாளம்பாளையத்தில் ஹக் புராடக்ட்ஸ் சோப் ஆயில் தயாரிக்கும் ரமணன். அவர்கூறியதாவது: கோவையில் தேசிய பஞ்சாலை கழக தரக்கட்டுப்பாட்டு பிரிவில் உதவிஸ்பின்னிங் மாஸ்டராக 28 ஆண்டுகள் பணிபுரிந்தேன். 7 ஆண்டுக்கு முன்பு விருப்பஓய்வு பெற்றேன். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி விருப்பஓய்வு பெற்ற என் போன்றவர்களை, கோவையில் உள்ள சிறு தொழில் சேவைமையத்தினர் சுய தொழில் செய்வதற்கான பயிற்சிக்கு அழைத்தனர்.
அங்கு ஒரு மாதம் நறுமண சொட்டு நீலம், பினாயில், சோப் பவுடர் போன்றவைதயாரிக்க கற்றுக் கொடுத்தனர். ரூ.5ஆயிரம் முதலீட்டில் சோப் ஆயில் தயாரிப்பதற்கானதொழிலை துவக்கினேன். நானே முதலாளியாகவும்,தொழிலாளியாகவும் இருந்து மாதம்200 லிட்டர் சோப் ஆயில் தயாரித்து விற்கிறேன். சோப் ஆயில் தயாரித்து விற்பவர்கள்பலர் இருந்தாலும், தரமாக தயாரித்து விற்பதால் ஆர்டர் தொய்வு இல்லாமல்கிடைக்கிறது. தினசரி 5 மணி நேரம் உழைத்தால் 10 லிட்டர் சோப் ஆயில் தயாரிக்கமுடியும். 20நாள் உழைப்பு, 10 நாள் விற்பனை என்று செயல்படுகிறேன். லாபகரமாகபோகிறது.
ஊராட்சி, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களைசேர்ந்தவர்களுக்கு சோப் ஆயில் தயாரிப்பு குறித்து ஒருநாள் பயிற்சி முகாம்களைநடத்துகிறேன். என்னதான் தரமாக தயாரித்தாலும், அதை நம்ப வைக்க வேண்டும்.அதற்கு சோப் ஆயிலை சாம்பிள் கொடுத்து தரத்தை அறிய செய்யலாம். அப்படிகிடைக்கும் வாடிக்கையாளர்கள் நிரந்தரமாக ஆர்டர் கொடுப்பார்கள். இவ்வாறு ரமணன்கூறினார்.
பயிற்சிக்கு
பல்வேறு கிளீனிங் பவுடர், ஆயில்கள் தயாரிப்பு குறித்து மாவட்டங்களில் உள்ள சிறுதொழில் சேவை மையங்கள்,மாவட்ட தொழில் மையம், மகளிர் திட்டம், வாழ்ந்துகாட்டுவோம் திட்டம் மற்றும் வேளாண் பல்கலைக்கழகம் போன்றவற்றின் மூலம்தொழில் முனைவோர் பயிற்சியும்,சான்றிதழும் அளிக்கப்படுகிறது. தொழில் தொடங்கவங்கி கடனுதவிக்கும் பரிந்துரைக்கப்படுகிறது.
தயாரிப்பது எப்படி?
ஒரு பிளாஸ்டிக் வாளியில் 4 லிட்டர் வடிகட்டிய நல்ல தண்ணீரில் காஸ்டிக் சோடா 100கிராம் போட வேண்டும். தண்ணீர் சூடாகும். மற்றொரு வாளியில் 4 லிட்டர் வடிகட்டியநல்ல தண்ணீரில் சோடா ஆஷ் (வாஷிங் பவுடர்) ஒரு கிலோ போட வேண்டும். அதுவும்சூடாகும். இன்னொரு வாளியில் 2லிட்டர் நல்ல தண்ணீரில் யூரியா ஒன்றரை கிலோபோட வேண்டும். தண்ணீர் குளிர்ந்து போகும். 3 வாளி நீரையும் ஒரு மணி நேரம்அப்படியே வைக்க வேண்டும். அவை சம வெப்ப நிலையை அடையும். 3 வாளிகளில்உள்ள நீரை ஒரு கேனில் கொட்டி கலக்க வேண்டும்.
இன்னொரு வாளியில் சிலரி ஒரு கிலோ, ஒலிக் ஆசிட் 100கிராம் கலக்க வேண்டும்.அதை கேனில் உள்ள கலவையில் கொட்டி சில்வர் கரண்டியால் நன்கு கலக்கவேண்டும். நுரை பொங்கி வரும். 2 மணி நேரம் காத்திருந்தால் நுரை வற்றி,சோப்ஆயில் கிடைக்கும். அதில் நறுமண லிக்விட் 15 மிலி கலந்தால் சோப் ஆயில் தயார்.இதன் மூலம் 10 லிட்டர் சோப் ஆயில் கிடைக்கும்.
உபயோகிக்கும் முறை: 200 மிலி சோப் ஆயிலில் 10 லிட்டர் தண்ணீர் கலந்துபயன்படுத்த வேண்டும். 10 முதல் 15 துணி வரை அரை மணி நேரம் ஊறவைத்துகையாலோ,வாஷிங்மெஷின் மூலமோ துவைக்கலாம். துணி துவைக்க மட்டுமல்ல,பாத்திரம் கழுவ, தரை, கழிப்பறை, பாத்ரூம்,வாகனங்களை சுத்தம் செய்யவும்பயன்படுத்தலாம். இதை பயன்படுத்துவதால் சருமத்துக்கு எவ்வித கேடும் ஏற்படாது.
சந்தை வாய்ப்பு
ஓட்டல்கள், லாட்ஜ்கள், மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரி விடுதிகள், வீடுகளுக்குநேரில் விற்கலாம். இதன் மூலம் தினசரி 50 லிட்டர் எளிதில் விற்று விடலாம். சோப்ஆயில் தரத்தை வாடிக்கையாளர் அறிந்துவிட்டால், தொடர்ந்து ஆர்டர் கொடுப்பார்கள்.மார்க்கெட்டில் பிராண்டட் சோப் ஆயில்களை விட பல மடங்கு விலை குறைவாகவும்,பிராண்டட் சோப் ஆயில்களை போல் தரமானதாகவும் இருப்பதால் அதிகமானோர்வாங்குகிறார்கள்.
மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு ஒரு ஆண்டுக்கு தேவையானசோப் ஆயில் உள்ளிட்ட கிளீனிங் பொருள்கள் கொள்முதல் செய்ய டெண்டர்விடுவார்கள். அதிலும் விண்ணப்பித்து டெண்டர் பெற்று சப்ளை செய்யலாம். அதற்கேற்பஉற்பத்தி அளவையும் பெருக்கி கொள்ளலாம். சோப் ஆயிலோடு பினாயில், சோப்பவுடர், சொட்டு நீலம்,கிளீனிங் பவுடர் உள்ளிட்ட பொருட்களை சப்ளை செய்தால் லாபம்அதிகரிக்கும்.
என்னென்ன தேவை?
சிலரி, காஸ்டிக் சோடா, சோடா ஆஷ், யூரியா, ஒலிக் ஆசிட்,பெர்ப்யூம், தண்ணீர். இவைஅனைத்தும் கெமிக்கல் கடைகளில் கிடைக்கிறது. ரூ.10 ஆயிரம் போதும் இந்த தொழில்செய்ய பெரிய அளவில் இடம் தேட வேண்டிய அவசியம் இல்லை. மூலப் பொருட்கள்,தயாரித்த சோப் ஆயில்கள் இருப்பு வைக்க வீட்டுக்குள் பாதுகாப்பான சிறு இடம், சோப்ஆயில் தயாரிக்க வீட்டு பின்புறம் அல்லது ஒதுக்குப்புறமான சிறு இடம் போதுமானது.ரூ.10 ஆயிரம் முதலீட்டில் தளவாட சாமான்கள்,ஒரு மாத சோப் ஆயில் உற்பத்திக்குதேவையான கெமிக்கல்களை வாங்கி விடலாம்.
தளவாட சாமான்கள்
50 லிட்டர் கேன் 1, 25 லிட்டர் பிளாஸ்டிக் வாளி 1, 20 லிட்டர் வாளி 3, மக் 2, தண்ணீர்வடிகட்டி 1, சில்வர் கரண்டி, புனல் 1,பாட்டில் கழுவும் பிரஷ் 1, மற்றும் 2, 5 லிட்டர்காலி பாட்டில்கள், கேன்கள்.
உற்பத்தி செலவு
சிலரி ஒரு கிலோ ரூ.120, காஸ்டிக் சோடா 100 கிராம் ரூ.4,சோடா ஆஷ் ஒரு கிலோரூ.30, யூரியா ஒன்றரை கிலோ ரூ.12, ஒலிக் ஆசிட் 100 கிராம் ரூ.10, பெர்ப்யூம் 15 மில்லிரூ.25, லேபிள் 200 ரூ.10, காலி பாட்டில்கள் ரூ.10 என ரூ.221செலவாகும். இதர செலவுகள்உட்பட 10 லிட்டர் தயாரிக்க ரூ.230 வரை செலவாகும்.
வருவாய்
ஒரு லிட்டர் தயாரிக்க ரூ.23 செலவாகிறது. அதை உள்ளூரில் ரூ.35க்கும், வெளியூர்களில்ரூ.45க்கும் விற்கலாம். இதன் மூலம் ஒரு லிட்டருக்கு லாபம் ரூ.12க்கு குறையாமல்கிடைக்கிறது. ஒரு நாளில் 50 லிட்டர் வரை தயாரிக்கலாம் என்பதால் ரூ.12 வீதம் 50லிட்டருக்கு ரூ.600 லாபம் கிடைக்கும். மாதம் 25 நாள் வேலை செய்தால் ரூ.15 ஆயிரம்லாபம் கிடைக்கும். வெளியூர்களில் விற்கும்போது போக்குவரத்து செலவு ஏற்படும்.ஆனால் லாபம் அதிகமாக இருக்கும்.


No comments:
Post a Comment