Monetize Your Website or Blog

Monday, 22 August 2016

சுங்கச்சாவடிகளில் இனி கட்டணம் செலுத்தமாட்டோம்! - வேல்முருகன் அதிரடி

தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் இனிமேல் வாழ்வுரிமை கட்சியினர் கட்டணம் செலுத்த மாட்டார்கள் என்று வேல்முருகன் அதிரடியாக தெரிவித்து உள்ளார்.
br />

வாழ்வுரிமை கட்சியின் தென்மண்டல பொறுப்பாளர்கள் கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள மதுரை வந்திருந்த அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கக்கூடாது என வாழ்வுரிமை கட்சி சார்பில் பல்வேறு கட்ட போராட்டம் நடத்தினோம்.
ஆனால் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. அதனால், எங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளுக்கு கட்டணம் செலுத்த மாட்டார்கள். குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் மக்கள் போராட்டம் எதிரொலியாக சுங்க வரியை அரசே ஏற்று கொண்டு செலுத்தி வருகிறது.
தமிழகத்தில் இந்தி, சமஸ்கிருதம் உள்பட பல மொழிகளை மாணவர்கள் விரும்பி படித்தால் தவறில்லை. ஆனால் வலுக் கட்டாயமாக மொழியை திணிக்கக்கூடாது. மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை மற்றும் நீட் நுழைவு தேர்வு பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிலை உள்ளதால் அதை ரத்து செய்ய வேண்டும்.
br />
தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் வருகை அதிகரித்துள்ளதால் குற்றங்களும் அதிகரித்து வருகிறது. இதை கண்காணித்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகிற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுப்போம்.
காவிரி, முல்லை, பெரியாறு மற்றும் பாலாறு பிரச்னையில் பக்கத்து மாநிலங்கள் தமிழகத்தை வஞ்சித்து வருகின்றன. இந்நிலையில் செம்மரம் கடத்துவதாக கூறி ஆந்திர அரசு தமிழர்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்வது வேதனை அளிக்கிறது. இந்த தவறான நடவடிக்கையை ஆந்திர அரசு கைவிட வேண்டும். இல்லை என்றால் அந்த அரசின் தமிழக நிறுவனம் மற்றும் அம்மாநில தனியார் நிறுவனங்கள் செயல்படாத வகையில் எங்களின் நடவடிக்கை அமையும்" என்றார்.
br />


No comments:

Post a Comment