Monetize Your Website or Blog

Tuesday, 23 August 2016

சிந்துவின் பயிற்சியாளரை மாற்றுவோம்: தெலுங்கானா துணை முதல்வர்

ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிவி சிந்துவுக்கும், அவரது பயிற்யாளர் கோபிசந்திற்கும், ஐதராபாத்தில் சிறப்பானதொரு வரவேற்பு வழங்கப்பட்டது.
இன்று காலை பிரேசிலில் இருந்து , ஐதராபாத் விமான நிலையம் வந்தடைந்தார் சிந்து.அமைச்சர்கள், ரசிகர்கள், பத்திரிக்கையாளர்கள் என பலர் அவரின் வருகைக்காக காத்திருந்தனர். மும்பையில் இருந்து வந்த திறந்தவெளி டபுள்டெக்கர் பேருந்தில், சிந்து கோபிசந்துடன் வலம் வந்தார். 



அங்கு இருந்து அவர் கச்சிபவுளி ஸ்டேடியத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். தெலுங்கானா துணை முதல்வர் மஹ்மூத் அலி அவரை அங்கு வரவேற்றார். 

பயிற்சியாளர் கோபி சந்த் பேசும் போது , " எங்கள் அகாடெமியில் இருந்து பலர் முன்னேறி வருகிறார்கள். அவர்கள் உடன் வருபவர்களுக்குத் தொடர்ந்து ஊக்கமளிப்பார்கள்.ஸ்ரீகாந்த் கட்டம்பி மிகவும் சிறப்பாக விளையாடினார். தேவையான ஒரு சூழலில், இந்தியாவிற்காக சிறப்பானதொரு ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்துவுக்கு நன்றி" என்றார்.
அதில் பேசிய துணை முதல்வர் மஹ்மூத் அலி, " கோபிசந்த் சிறப்பான பயிற்சியாளர் தான். ஆனாலும், சிந்துவின் பயிற்சியாளரை மாற்ற இருக்கிறோம். அதனால்,அவர் அடுத்து நடக்க இருக்கும் போட்டிகளில் வென்று தங்கம் வெல்வார் " என பேட்டியளித்து இருக்கிறார். 
சாய்னா நேவால், பிவி சிந்து என இந்தியாவின் பேட்மின்டன் சாதனையாளர்கள் பலருக்கு கோபிசந்த் தான் பயிற்சியாளராக இருந்துள்ளார் என்பதால், துணை முதல்வர் பேசியது அவசியமற்றது என கருத்துக்கள் எழுந்துள்ளது. 
 



No comments:

Post a Comment