Monetize Your Website or Blog

Thursday, 25 August 2016

உங்கள் குழந்தைக்கான உரிமையை வீட்டில் கொடுக்கிறீர்களா?

குழந்தைகளுக்கான உரிமைகள் என்றதுமே பள்ளிக்கூடத்தில்,பொதுஇடத்தில் என்றுதான் யோசனை வரும்ஆனால் குழந்தைகளுக்கன உரிமைகள் அது கருவாக அம்மாவின் வயிற்றுக்குள் இருக்கும்போதிருந்தே தொடங்கிவிடுகிறது.  அவைப் பற்றிதோழமை குழந்தைகள் உரிமைகளுக்கான அமைப்பின் இயக்குநர் அ.தேவநேயன் கூறுகிறார்.

1. கர்ப்பத்தில் இருப்பது ஆண் குழந்தையாபெண் குழந்தையாமாற்றுத் திறனாளியா எனப் பார்த்து இனம் கண்டறிந்து கருக்கலைப்பு செய்துவிடாமல் காப்பது.

2. கர்ப்பக் காலத்தில் தாய்க்கு சரிவிகித உணவு

தேவையான தடுப்பூசிகள்
,மனதைப் பாதிக்காத சூழல் ஆகியவையும் அவசியம்.

3. குழந்தைப் பிறந்ததும் தாய்ப்பால் தரப்படுவதும் குறிப்பாக சீம் பால் கொடுக்கப்பதும் குழந்தையின் அடிப்படை உரிமை.

4. குழந்தைப் பிறந்த குறிப்பிட்ட தினங்களில் பிறப்புச் சான்றிதழ் பெறுவது மிக முக்கியமானதுதவறும்போது எதிர்காலத்தில் அதன்பொருட்டு ஏராளமான சிக்கல்களை குழந்தை எதிர்கொள்ளவேண்டிருக்கும்.

5. குழந்தையின் ஆரம்ப கால பராமரிப்பு கவனத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டும்தேவையான எடையுடன் தடுப்பூசிசத்தான உணவுகள் தரப்பட வேண்டும்.

6. குழந்தை பிறந்த 1000 நாட்களுக்குள்வழக்கமான உடல் திறனோடு இருக்கிறதா அல்லது ஏதேனும் குறைகள் இருக்கிறதா என்பதை இனம் கண்டு அதற்கு தகுந்த மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

7. குழந்தையைப் பராமரிப்பு மையத்தில் விடுவோர்குழந்தையின் பாதுகாப்பு குறித்து நூறு சதவிகிதம் திருப்தி அடைந்தால் மட்டுமே அங்கு குழந்தையை விட வேண்டும்.


8. குழந்தைகள் வீட்டில் தங்கள் கருத்துகளை அச்சமற்று பகிர்ந்துகொள்ள்ளும் சூழலும் கல்விஉடைத் தேர்வு உள்ளிட்டவற்றில் குழந்தையின் கருத்துகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

9. ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்திறன் இருக்கும்அதை இனம் கண்டு அங்கீகரிப்பதும் மற்றவரோடு ஒப்பிட்டு குறை சொல்லவும் கூடாது.

10. சிறு குறைகள் இருக்கும் (பேசும்போது திக்குவது போன்ற)குழந்தைகளைஎந்தச் சூழலிலும் புறக்கணிக்காமல் வளர்ப்பதும் அவர்களுக்கான வாய்ப்புகளைத் தவிர்த்துவிடாமல் ஊக்கப்படுத்தவும் வேண்டும்.

11. குழந்தைகளில் ஆண்பெண்மாற்றுத்திறனாளி எனப் பேதம் பார்க்காமல் சமத்துவத்துடன் நடத்தப்பட வேண்டும்அவர்களின் விருப்பங்களை நிராகரிக்கவோ புண் படுத்தவோ கூடாது.

12. குழந்தைகளின் முகத் தோற்றம்பழகும் இயல்பு ஆகியவற்றை வைத்து திட்டவோகுறைக்கூறவோ கூடாது.

(குரங்கு சேட்டையெல்லாம் செய்யறான் என்பதுபோல)

13. பெற்றோர்களே குழந்தைகளின் ரோல் மாடல் என்பதால் அவர்களின் முன் தகாத சொற்கள் பேசுவதுசண்டைப் போடுவது என்பதை தவிர்த்து குடும்பத்தில் ஜனநாயகத் தன்மை நிலவுவதை குழந்தைகள் உணரும் விதத்தில் குடும்பச் சூழலை உருவாக்கி தர வேண்டும்.

சின்ன விஷயங்களும் குழந்தைகளின் மனதில் பெரும் மாற்றங்களைத் தந்துவிடும்அந்த மாற்றம் நல்லதுகெட்டது என இரண்டு வகைகளிலும் அமைந்துவிடும்மேலே உள்ளவற்றை அவர்களின் உரிமைகள் என்பதாக நினைக்காமல் பெற்றோரின் கடமையாக நினைத்தாலே எந்தச் சிக்கலும் வராது.


No comments:

Post a Comment