Monetize Your Website or Blog

Friday, 26 August 2016

ப்ளீஸ் ஹெல்ப்!' நில நடுக்க மணிப்பூரிலிருந்து இசையமைப்பாளர் ஜிப்ரான்


சென்னை 2 சிங்கப்பூர் என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார் ஜிப்ரான். படத்தின் தலைப்பிற்கு ஏற்றவாறு படத்தில் இருக்கும் ஆறு பாடல்களையும் காரில் பயணித்தவாறே வெளியிட திட்டமிட்டு இருந்தார்கள்.அதன்படி சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில் இருக்கும் வங்காளதேசம், மியான்மர்,தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் காரில் பயணித்தவாறு பாடல்களை வெளியிட இருக்கிறார்கள்.



ஆகஸ்டு மாதம் ஆரம்பித்த பயணத்தில், தற்போது மணிப்பூர் தலைநகர் இம்பாலில் ஜிப்ரான் குழு இருக்கிறது. கடந்த 23-ம் தேதி மணிப்பூரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நில அதிர்வுகள் தொடர்ந்து அங்கு இருப்பதால், மணிப்பூரில் சிக்கிக் கொண்டுள்ளார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.

அது பற்றி ஜிப்ரான் தனது ஃபேஸ்புக் தளத்தில் வீதியில் நடந்தபடி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியதாவது "மணிப்பூரில் நாங்கள் சிக்கிக்கொண்டோம்.மியான்மர் செல்வதற்கு நாங்கள் மோரே பார்டரை கடக்க வேண்டியுள்ளது.சில முறை அங்கு செல்ல முயன்ற போது, எங்களது பெர்மிட்டை ரத்து செய்துவிட்டதாக அறிவித்து இருக்கிறார்கள்.அங்கே நிகழ்ந்த நிலநடுக்கத்தில் , நிலச்சரிவுகள் ஏற்பட்டு இருக்கிறது.ஒவ்வொரு நாட்டிற்கும் காரில் செல்ல, கார்னெட் என்னும் பெர்மிட் அவசியம்.எங்களிடம் அந்த பெர்மிட் இருந்தாலும், மியான்மர் அரசு அதற்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டார்கள். சென்னைக்கு திரும்பி விடுங்கள் என பலர் அழைப்பு விடுக்கிறார்கள். ஆனால், அடுத்த பாடலான 'போகாதே'வை எப்படியும் வெளியிடும் திட்டத்தில் இருக்கிறோம். எவ்வளவு முயன்றாலும் செப்டம்பர் 2-ம் தேதி தான் மியான்மருக்குள் நுழைய அனுமதி கிடைக்கும் என்கிறார்கள். ஆனால், எங்களது விசா செப்டம்பர் 5-ம் தேதியுடன் முடிவடைகிறது. இன்னும் 3 நாட்களில் 1800 கிலோமீட்டர்களை நாங்கள் கடக்க வேண்டும். பல இடங்களில் உதவிகள் கேட்டு வருகிறோம். நாகாலாந்து பழங்குடியினருக்கும் , மியான்மர் ராணுவத்தினருக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது.அதனால் , மோரே பார்டர் வழியாக மீண்டும் பயணிக்க முயற்சிக்காதீர்கள் என சொல்கிறார்கள்.ஒவ்வொரு நாட்டிற்குள்ளும், எங்கள் கார் நுழையும் போதும் பாடல் வெளியாகும் என உறுதியளித்துவிட்டோம். அதனால், இதை தொடரப் போகிறோம்.இங்குள்ள சூழ்நிலை மோசமானதாக இருக்கிறது.ஆனால், உதவிகள் கிடைக்கும் என நம்புகிறோம்" என்றார்




No comments:

Post a Comment