இரண்டு பக்கமும் பசுமையான வயல்கள். புத்தம் புதிதாக பூத்துக் குலுங்கும் மலர்களில் இருந்துபுறப்பட்டு வரும் வாசம் காற்றோடு சேர்ந்து நம்மைத் தழுவிக் கொள்கிறது. அதை உள்ளிழுத்துக்கொண்டே குண்டும் குழியுமான சாலையைக் கடந்து அந்த கிராமத்துக்குள் நுழைந்தோம். அது...திண்டிவனத்தை அடுத்திருக்கும் முட்டியூர் கிராமம்.
‘'எங்க ஊர்ல பெரும்பாலும் பூ சாகுபடிதான். அதுலயே பணக்காரங்களா ஆனவங்க பலர் இருக்காங்க.வயல் பக்கம் போயி பாருங்க'’ என்று கூடுதல் தகவலையும் தந்துவிட்டு கடந்து போனார் அந்தஇளைஞர். வயக்காட்டுப் பக்கம் போனபோது எதிர்ப்பட்டார் வீராசாமி என்ற விவசாயி. ‘'அதென்ன ஊர்லபெரும்பாலானவங்க பூ சாகுபடியில இருக்கீங்க?'’ என்று கேட்டோம்.
‘‘இந்தச் சாகுபடி மட்டும் செய்யாமப் போயிருந்தா... பல பேரு பஞ்சம் பொழைக்க ஊரை விட்டேகிளம்பியிருப்போம்'' என்று சற்றே உணர்ச்சி வசப்பட்டவராக ஆரம்பித்தவர்,
''நல்ல வடிகால் வசதியுள்ள நிலமாயிருந்தா பூச்செடி நல்லா வளரும். இந்தப் பகுதியில தனி நபருங்கஇந்த விதைச் செடிகளை உற்பத்தி செஞ்சி விக்கறாங்க. அதை வாங்கி, பார் போட்டு நடவு செய்யணும்.நட்ட மூணாவது மாசம் பூக்கத் தொடங்கும். நடவுக்கு முன்னாடி ஒரு வண்டி தொழு உரம், ஒரு மூட்டைடி.ஏ.பி. போடணும். நான் 40 சென்ட் நிலத்துல இந்தச் சாகுபடியைச் செய்றேன். இந்த நிலத்துல 4 ஆயிரம்செடி வரைக்கும் நடலாம். வாரம் ஒரு முறை பாசனம் செஞ்சா போதும். கோடையாயிருந்தா... 2நாளைக்கு ஒரு முறை பாசனம் செய்யணும். கனகாம்பரத்துல உள்ள ஒரு சௌகரியம் பூச்சி மருந்துஅதிகமா அடிக்கத் தேவையில்ல. ஒரு முறை நடவு செஞ்சுட்டா... மூணு வருஷத்துக்கு தொடர்ந்து பூபறிக்கலாம்.
கனகாம்பர சாகுபடியைப் பொறுத்தவரை ஆள் பலம் அதிகமா வேணும். காலையில 5 மணிக்கெல்லாம்பூ பறிக்க போயிடணும். டார்ச் லைட்டை குச்சியில கட்டிவிட்டுட்டுத்தான் பூ பறிப்போம். காலையில 8மணிக்கு முன்னாடி மார்க்கெட்டுக்கு கொண்டு போனாதான் நல்ல விலை கிடைக்கும்.
செடி வெச்சு மூணு மாசம் கழிச்சு தினமும் அரை கிலோ பூ கிடைக்கும். நாளாக நாளாக 25 கிலோவரைக்கும் கிடைக்கும். ஒரு கிலோ 75 ரூபாயி லிருந்து 100 ரூபாய் வரைக்கும் விலை போகும். ஏத்தஇறக்கத்தோட வித்தாலும் மாசம் 7 ஆயிரம் ரூபாய் லாபம் பார்த்துடலாம். இந்தச் சாகுபடியிலமுக்கியமான விஷயம், நேரம் தவறாம இருக்கறதுதான். என்ன வேலை எப்படி இருந்தாலும், அதைஅப்படியே போட்டுட்டு பூ பறிச்சிட்டுத்தான் மத்த வேலையைப் பார்க்கணும். இல்லனா... பூ வாடிப்போய்,நஷ்டத்துல தள்ளிடும். மழைதான் கனகாம்பரத்துக்கு எதிரி. பூவெல்லாம் அழுகி கொட்டிடும். ஆனா,மழை குறைஞ்சுட்டா மறுபடியும் பூத்துடும்'' என்று சொன்ன வீராசாமி,
''ரொம்ப கவனமாப் பார்த்துப் பார்த்து செய்றதால கையில கொஞ்சம் கொஞ்சமா பணம்சேர்ந்துகிட்டிருக்கு. கூடிய சீக்கிரமே மாடி வீடு கட்டிடுவேன்'’ என்று கண்களில் நம்பிக்கைப் பொங்கச்சொன்னார். அடுத்து, சம்பங்கி பூ சாகுபடி செய்யும் விவசாயி செந்தாமரையைச் சந்தித்தோம்.வீராசாமியோ மாடி வீடு கட்ட காசு சேர்த்துக் கொண்டிருக்கிறார். செந்தாமரை கட்டி முடித்துவிட்டவர்.
‘‘சம்பங்கி சாகுபடியில சம்பாதிச் சிதான் இந்த வீட்டையே கட்டினோம்'' என்று அதைப் பற்றிபெருமிதத்தோடு சொன்னவர், சாகுபடி விஷயங்களைச் சொல்ல ஆரம்பித்தார்.
''சம்பங்கி பயிர் செய்ய வைகாசி பட்டம்தான் ஏத்தது. நாலு மூலையும் நெலத்தை நல்லா ஓட்டிப்போடணும். நோய் படாத நல்ல கிழங்கா பார்த்து வாங்கி வந்து பார் போட்டு நடணும். எனக்கு 30 சென்ட்நிலமிருக்கு. எங்க அப்பா காலத்துல இருந்தே சம்பங்கிதான் பயிர் செய்றோம். பனியும் மழையும்தான்சம்பங்கிக்கு எதிரி. அந்தச் சமயத்துல விளைச்சல் குறைவா இருக்கும். வெயில் காலம்தான்சம்பங்கிக்கு ரொம்பப் பிடிக்கும். எந்த அளவுக்கு வெயில் அதிகமா அடிக்குதோ... அந்த அளவுக்குவிளைச்சல் இருக்கும். நடவு செஞ்சு மூணு மாசம் கழிச்சு பூக்கத் தொடங்கும். அப்போதைக்கு பூகொஞ்சமாதான் கிடைக்கும். ஆறு மாசத்துக்குப் பிறகுதான் அதிகரிக்கத் தொடங்கும். சராசரியா மாசம் 3ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும். ரெண்டாவது வருஷத்துல கொண்டாட்டம்தான். 30 சென்ட்நிலத்துல தினமும் 60 கிலோ பூ பறிக்கலாம். மாசம் 10 ஆயிரம் ரூபாய் கூட வருமானம் கிடைக்கும்.ஒரு முறை கிழங்கு போட்டா மூணு வருஷத்துக்கு தொடர்ந்து மகசூல்தான். வருஷம் முழுக்கபூத்துக்கிட்டே இருக்கும். மூணு வருஷம் முடிஞ்சதும் பழைய கிழங்கை எடுத்துட்டு, புதுசா நடணும்.
நெலத்தைக் காய விடாம தண்ணி காட்டணும். மாசம் ஒரு தடவை களை எடுத்த கையோட ஒருமூட்டை டி.ஏ.பி. உரம் போடறேன். கொத்துக் கொத்தா பூக்குது. உரத்துக்குதான் செலவு மத்தபடி பூச்சிமருந்து அடிக்கிற செலவே கிடையாதுனு சொல்லலாம். மூணாவது வருஷம் விளைச்சல் படிப்படியாகுறையும். பெரும்பாலும் இரண்டரை வருஷத்துலேயே செடியைப் பிடுங்கிட்டு புதுகிழங்கு நடுறதுதான்இந்தப் பகுதியில வழக்கமா இருக்கு.
ரொம்ப ஆறுதலான விஷயம்’’ என்ற செந்தாமரை, வரவு-செலவுக் கணக்கைச் சுருக்கமாக சொன்னார்.
‘‘மூணு வருஷத்துல முப்பது சென்ட்ல மொத்தம் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் வருமானம்கிடைக்கும். இதில் அதிக பட்சமா 20 ஆயிரம் ரூபாய் செலவு போனாலும், ஒரு லட்சத்து 50 ஆயிரம்ரூபாய் கிடைக்கும். தோட்டம் முழுக்க போடாட்டியும், ஒரு ஓரமா சம்பங்கி போட்டாலும் குடும்பத்துசெலவு, கல்யாணம் காட்சிக்குனு மத்தவங்ககிட்டப் போய் நிக்க வேண்டியதில்ல’’ என்று அடித்துசொன்னார். செந்தாமரையை 94429-10882 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டுமேற்கொண்டு விவரங்களைப் பெறலாம். சம்பங்கி மலருக்கு மற்ற இடங்களிலும் நல்ல வரவேற்பு இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளும் ஆவலுடன் திருச்சி மாவட்டம், துறையூருக்கு அருகே உள்ள வெங்கடாசலபுரத் துக்குப் பயணமானோம். காலை 4 மணிக்கு எழுந்து பூ பறித்து, 8 மணிக்கெல்லாம் கையில் காசு பார்த்து விடும் விவசாயி தனகோபாலன். அவரிடம் பேசியபோது, '‘பல வருஷமா சம்பங்கி சாகுபடிதான். 98-ம் வருஷம் இதுல புதுரகம் ஏதாவது இருக்கானு தேட ஆரம்பிச்சேன். அப்பதான் பெங்களூர்- காசர்கட்டாவுல இருக்கற இந்திய தோட்டக் கலை ஆராய்ச்சி நிலையம் சம்பங்கியில புது ரகம் வெளியிட்டு இருக்கிற தகவல் கிடைச்சுது. அங்க இருக்கற ராமச்சந்திரன்ங்கிற விஞ்ஞானிகிட்ட பேச வாய்ப்பு கிடைச்சுது. என்னோட நல்ல நேரம் அவருக்கு தமிழ் தெரிஞ்சிருந்துது. அவர்கிட்ட பேசி, வீரிய ரகமான ‘ப்ரஜ்வல்’ (Prajwal)சம்பங்கி கிழங்கை வாங்கினேன். இப்ப 2 ஏக்கர் வரைக்கும் பயிரிட்டிருக்கேன்.
நல்ல வடிகால் வசதி உள்ள நிலம் இதுக்கு அவசியம். மத்த ரகத்தைக் காட்டிலும் இது நிறையபூக்கும். எப்ப வேணும்னாலும் நடவு செய்யலாம். பார் போட்டுத்தான் நடவு செய்றேன். இப்போ ரசாயன உரம் போடறதை குறைச்சிக்கிட்டு இருக்கேன். சீக்கிரமே முழுக்க இயற்கை உரத்துக்கு மாறிடுவேன். சம்பங்கியில பிரச்சனை நூற்புழுதான். இத கட்டுப்படுத்த ஏக்கருக்கு 5 கிலோ உயிர் பூஞ்சாணமான விரிடியை எருவில் கலந்து போடவேண்டும்.
சாதாரண ரகம் பயிரிட்டா ஏக்கருக்கு தினமும் 50 கிலோ கிடைக்கும்னா... 'ப்ரஜவல்' ரகத்துல 150 கிலோ கூட கிடைக்கும். ஆக மூணு மடங்கு விளைச்சல் அதிகமா கிடைக்குது. விக்கறதுலயும் பிரச்னை கிடையாது. துறையூர் மார்க்கெட்டுலயே வித்துடறேன். பத்து ஏக்கர் நிலத்தை வெச்சிக்கிட்டு என்னென்னவோ பயிர் செய்றவங்களே லாபம் எடுக்க முடியாம தவிக்கறாங்க. ஆனா, ரெண்டு ஏக்கர் நெலத்துல சம்பங்கி போட்டதும் என்னோட பிரச்னை எல்லாம் தீர்ந்து போயிடுச்சி. ஏதாவது பிரச்னையோட சம்பங்கி தோட்டத்துக்குள்ள போனா கொஞ்ச நேரத்துல மனசு லேசாயிடுது. அது கொடுக்கிற வாசமும், வருமானமும் உடம்புக்கு புது தெம்புதான்’’ என்று சொல்லி முடித்தபோது தனகோபாலனின் முகத்தில் அப்படியரு திருப்தி. (இவரை, 98423- 28752 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்).
பூமியின் புன்னகை மலர்கள் என்பார்கள். இங்கே மலர் சாகுபடி செய்து வெற்றிப் புன்னகை புரிகிறார்கள் இந்த விவசாயிகள்!
'ப்ரஜ்வல்' சம்பங்கி பற்றி, காசர்கட்டாவிலிருக்கும் இந்திய தோட்டக் கலை ஆராய்ச்சி மைய விஞ்ஞானியான டாக்டர். ராமச்சந்திரன், அலங்கார பயிர்கள் துறை தலைவர் மீனாட்சி சீனிவாஸ் ஆகியோர் நம்மிடம் கூறும் போது, ‘‘நாட்டு ரகத்தை காட்டிலும் பெரிய பூக்களாக இருப்பதால் மலர்க் கொத்துக்களில் பயன்படுத்தவும், சென்ட் எடுக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது. ஆரம்பத்தில் டெல்லி, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இருந்துதான் விவசாயிகள் விதை கிழங்கு வாங்கிச் சென்றனர். இப்போது தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில விவசாயிகள் தொடர்ந்து பயிரிட்டு வருகிறார்கள். எங்களுடைய ஆராய்ச்சி நிலையத்தில் தற்சமயம் விவசாயிகளுக்குக் கொடுக்கும் அளவுக்கு விதை கிழங்கு இருப்பு இல்லை. மற்றபடி சாகுபடி குறித்த தகவல்களைச் சொல்வதற்கு தயாராகவே இருக்கிறோம்’’ என்றனர். தொடர்புக்கு: 080-28466420
|

No comments:
Post a Comment