Monetize Your Website or Blog

Wednesday, 11 May 2016

உங்கள் உணவில் விஷம்! பூச்சிக்கொல்லி பயங்கரம்

ந்தப் பூமியை ஒரு நஞ்சுப்படலம்போல சூழ்ந்திருக்கின்றன பூச்சிக்கொல்லி மருந்துகள்பெயர்தான்'பூச்சிக்கொல்லி...’, அவை உண்மையில் அழிப்பது சுற்றுச்சூழலைத்தான்இதில் சமீபத்திய வரவுஐந்தாம் தலைமுறை பூச்சிக்கொல்லிகள்பூச்சிகளுக்கும் மனிதனுக்கும் நடக்கும் யுத்தத்தில்,பூச்சிகளின் தொடர் வெற்றியைச் சகித்துக்கொள்ள முடியாத மனிதன் கண்டுபிடித்த கொடிய நஞ்சுஇது.  

தற்போது தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லிகளில் வீரியம் குறைந்தது எண்டோசல்பான்இந்தப்பூச்சிக்கொல்லி ஏற்படுத்திய பேரழிவுக்கு உதாரணம்கேரளா மாநிலத்தில் உள்ள காசர்கோடு பகுதிஒருகாலத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக இருந்த காசர்கோட்டில் மாநில அரசுக்கு சொந்தமானமுந்திரித் தோப்புகளில், 1978-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை ஹெலிகாப்டர் மூலமாகஎண்டோசல்பான் தெளிக்கப்பட்டதுஅதன் பலன்இன்றைக்கும் அந்தப் பகுதியில் மனிதர்களும்கால்நடைகளும் நரம்பு மண்டலப் பாதிப்புமனநலப் பாதிப்புகளுடன் நடைபிணங்களாகத் திரிகிறார்கள்.வீரியம் குறைந்த எண்டோசல்பானுக்கே இப்படி என்றால்தற்போது பயன்படுத்தப்படும்பூச்சிக்கொல்லிகள் அதைவிட பல மடங்கு வீரியமானவைபசுமைப் புரட்சியின் விளைவாக கடந்தஅரை நூற்றாண்டுக்கும் மேலாகநாடு முழுவதும் அபரிமிதமாக அதிகரித்துவிட்ட ரசாயனப்பூச்சிக்கொல்லிகள் பயன்பாடுபல்வேறு நோய்களாக விகார விஸ்வரூபம் எடுக்கின்றன!


கோவில்பட்டியில் உள்ள மண்வளப் பரிசோதனை நிலையத்தின் வேளாண் அலுவலரும் பூச்சியியல்வல்லுநருமான நீ.செல்வம் இது தொடர்பாக விவரிப்பவை அனைத்தும் அதிரவைக்கும் உண்மைகள்...

''னித இனம் இன்றைக்கு சந்திக்கும் பெரும்பாலான நோய்களுக்கு பூச்சிக்கொல்லிகளும் ஒருகாரணம்பயிர்களில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி நஞ்சுகள் காற்றுமண்நீரில் எஞ்சிவிடுகின்றன.இந்த எஞ்சிய நஞ்சுபயிர்கள் மற்றும் உணவுப்பொருட்கள் வழியாக நம் உடலுக்குள் சென்று தங்கிமெள்ள மெள்ளக் கொல்லும் விஷமாக மாறுகின்றன. 100 மில்லி பூச்சிக்கொல்லியைக் குடித்தால்,உடனே மரணம்அதே பூச்சிக்கொல்லி பல்வேறு காரணிகள் வழியாகமனித உடலில் கொஞ்சம்கொஞ்சமாகப் படிந்து 10, 15 ஆண்டுகளில் 100 மில்லி அளவை எட்டும்போதுஉடனடி மரணம்நிகழாவிட்டாலும் உள்உறுப்புகள் கடுமையாகப் பாதிக்கப்படும்சிறுநீரகம்மூளைஎலும்புகள்ரத்தம்எனப் பல இடங்களிலும் இந்த நஞ்சு பரவும்போதுரத்த அழுத்தம்பார்வைக் குறைபாடுஆஸ்துமா,சிறுநீரகக் கோளாறு என நோய்கள் உருவாகத் தொடங்குகின்றனஇதையெல்லாம்விட தற்போதுசந்தையில் கிடைக்கும் ஐந்தாம் தலைமுறை பூச்சிக்கொல்லிகளால்மனித இனம் மிகப் பெரியஆபத்தை சந்திக்கப்போகிறது!'' என்கிறார்.

அது என்ன ஐந்தாம் தலைமுறை?  

தலைமுறை 1:
''ரண்டாம் உலகப் போரின் முடிவில்எஞ்சிய குண்டுகளில் இருந்த ரசாயனங்களைக்கொண்டு,உலகின் முதல் பூச்சிக்கொல்லி தயாரிக்கப்பட்டதுடி.டி.டீ (DDT- Dichloro Diphenyl Trichloro ethane) என்றஅந்த மருந்தைக் கண்டுபிடித்தவர் பால் முல்லர்அதற்காக அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது.கொசுவை அழிப்பதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட இதுதான்முதல் தலைமுறை பூச்சிக்கொல்லி.அதாவது அதற்கு முன்பு இந்தப் பூமியில் பூச்சிகளைக் கொல்வதற்கு என செயற்கை வேதி மருந்துகள்எதுவும் இல்லைஇந்த டி.டி.டீ, 'ஆர்கனோ குளோரைட்’ (organo chloride) என்ற வகையைச் சேர்ந்ததுஇதுபூச்சிகளின் மீது தொடு நஞ்சாகவும்ஊடுருவிப் பாயும் நஞ்சாகவும் செயல்படும்நம்மைப்போலபூச்சிகள் மூக்கின் வழியே சுவாசிக்காதுஉடல் முழுக்க இருக்கும் நுண்துளைகள் மூலமாகவேசுவாசிக்கும்அப்படி சுவாசிக்கும்போதுஇந்தப் பூச்சிக்கொல்லி விஷம்துளைகள் வழியாக அதன்உடலுக்குள் சென்று பூச்சியை அழிக்கும்இதைத்தான் 'தொடு நஞ்சு’ என்கிறோம்பயிர்களை உண்பதன்மூலம் பூச்சிகளின் உடலுக்குள் நஞ்சு செல்வதை 'ஊடுருவும் நஞ்சு’ என்கிறோம்இந்தஇரண்டுவிதமான தாக்குதலுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியைபூச்சிகள் சில ஆண்டுகளிலேயேபெற்றுவிட்டன.



தலைமுறை 2:
முதல் தலைமுறை பூச்சிக்கொல்லியான டி.டி.டீ-க்கு பூச்சிகள் பெப்பே காட்டியதைத் தொடர்ந்து,அதைவிட வீரியமான புதிய பூச்சிமருந்தைக் கண்டுபிடித்தார்கள்அப்படி அறிமுகமான 'ஆர்கனோபாஸ்பரஸ்’ (organo phosphorus) வகையைச் சேர்ந்ததுதான் இரண்டாம் தலைமுறை பூச்சிக்கொல்லி.இது பூச்சிகளின் நரம்பு மண்டலத்தைத் தாக்கி அழிக்கும்மனிதனுக்கு இருப்பதுபோல மூளை என்றஅமைப்பு பூச்சிகளுக்குக் கிடையாதுமுதுகுத் தண்டுவடத்தில் இருந்துதான் நரம்புகள் உடல் முழுக்கப்பரவும்அதனால் தண்டுவடத்தைத் தாக்கும் வகையில் இந்த இரண்டாம் தலைமுறை நஞ்சுகள்அறிமுகம் ஆயினஇதை எதிர்த்து உயிர் வாழும் ஆற்றலையும்ஒருசில ஆண்டுகளிலேயே பூச்சிகள்பெற்றுவிட்டன!

தலைமுறை 3:
'கார்பமேட்’ (carbamate) என்பது மூன்றாம் தலைமுறை பூச்சிக்கொல்லி வகைஇந்த நஞ்சு பயிர்களில்தெளிக்கப்பட்ட பிறகுபூச்சிகள் பயிரை உண்ணும்போதுஇது பூச்சியின் குடலுக்குள் சென்றுவிடும்.அங்கேயே தங்கியிருந்து பூச்சியை சாகடிக்கும்சில வருடங்களில் இதையும் சமாளிக்கும் எதிர்ப்புச்சக்தியை ஏகமாகப் பெற்றுவிட்ட பூச்சிகள்மனிதனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தன!

தலைமுறை 4:
பூச்சிகளுக்கு ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும் என்ற மனநிலையில் அறிமுகம் ஆனதுதான்'சிந்தடிக் பைரித்ராய்ட்ஸ்’ (synthetic pyrethroid) என்ற வகையைச் சேர்ந்த நான்காம் தலைமுறை நஞ்சு.புகை நஞ்சாகச் செயல்படும் இதன் வருகையும் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லைநாம்வீடுகளில் உபயோகிக்கும் ஆல் அவுட்குட்நைட் போன்ற கொசு விரட்டிகள் இந்த வகையைச்சேர்ந்தவைதான்உண்மையில் கொசுவத்திகளைப் பயன்படுத்திஅதன் மூலம் மயக்கம் அடையும்கொசுக்களைப் பிடித்து அழிக்க வேண்டும் என்பதுதான் கொசு விரட்டிகளின் அடிப்படைக் கோட்பாடு.ஆனால் நாம் என்ன செய்கிறோம்கொசு விரட்டிகளை எரியவிட்டுஅறைக் கதவுகளைஅடைத்துவிட்டுஉள்ளே படுத்து உறங்குகிறோம்இதனால்கொசுக்கள் மயக்கம் அடைகிறதோஇல்லையோ மனிதர்களுக்குள் செல்லும் புகை ஆஸ்துமாமூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்னைகளைஉருவாக்குகிறதுஅதிலும் கர்ப்பிணிப் பெண்கள் இந்தப் புகையை சுவாசிக்கும்போதுவயிற்றுக்குள்இருக்கும் குழந்தையையும் அது பாதிக்கிறது. 1985-ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை ஆதிக்கம்செலுத்தின இந்த நான்காம் தலைமுறை நஞ்சுகள். 'நாங்க எதையும் எதிர்த்து நிற்போம்’ என்ற ரீதியில்இதையும் தாண்டி தங்களது ஆதிக்கத்தைத் தொடர்ந்தன பூச்சிகள்!

தலைமுறை 5:
'நியோ நிக்கோடினாய்டு’ (neo nicotinoid) என அறிமுகம் ஆன ஐந்தாம் தலைமுறைபூச்சுக்கொல்லிகளால் பூச்சிகள் ஆடிப்போயினபூச்சிகளை முட்டை பொறிக்கவிடாமல் செய்வது,வளர்சிதை மாற்றத்தைத் தடுப்பதுஅதன் நரம்பு மண்டலத்தைக் கடுமையாகத் தாக்குவது எனப்பல்வேறு வகைகளில் இவை செயல்படுகின்றனஇத்தகைய கொடிய நஞ்சு நிறைந்த ஐந்தாம்தலைமுறை பூச்சிமருந்தைத் தெளித்து விளைவிக்கப்படும் உணவுப்பொருட்களை உட்கொள்ளும்போதுமனிதர்களுக்குள்ளும் இந்த நஞ்சு சென்று அதே பாதிப்பைக் கொடுக்கிறதுஉதாரணமாக ஐந்தாம்தலைமுறை நஞ்சுகள் அறிமுகம் ஆன பிறகுதேன் எடுக்கச் செல்லும் தேனீக்கள் பூக்களின் வாசனைமற்றும் தாங்கள் பறந்து வந்த பாதையை மறந்துவிடுகின்றனதங்கள் கூட்டுக்குச் சென்று சேரமுடியாமல் இடையிலேயே இறந்துவிடுகின்றனஇதனால் தேனீக்கள் எண்ணிக்கை மிக வேகமாகக்குறைந்துவருகிறதுஇதனால் இந்த வகை பூச்சிக்கொல்லிக்குஐரோப்பிய யூனியன் 2012ம் ஆண்டுதடை விதித்திருக்கிறது.''

இப்படி வல்லுநர் நீ.செல்வம் விவரிப்பதைக் கேட்க... கேட்கநாம் ஒட்டுமொத்தமாக ஒரு விஷச்சூழலுக்குள் வாழ்ந்துகொண்டிருக் கிறோமோ என நடுக்கமாக இருக்கிறதுமுக்கியமான ஒருவிஷயத்தை நாம் கவனிக்க வேண்டும்தேனீக்கள்உயிர்ச்சூழல் கண்ணியில் மிகவும் முக்கியமான ஓர்உயிரினம்இந்த உலகில் சுமார் இரண்டு லட்சம் பூக்கும் வகை தாவரங்கள் இருக்கின்றனஇவற்றின்உற்பத்தி அயல் மகரந்தச் சேர்க்கை மூலமாகவே நடைபெறுகிறதுஇந்த அயல் மகரந்தச் சேர்க்கைநடைபெறுவது பெரும்பாலும் தேனீக்கள் மூலம்தான்தேனீக்கள் அழிந்தால் மகரந்தச் சேர்க்கைஇல்லைதாவரங்கள் இல்லைஉணவு இல்லைபிறகு மனிதகுலமே இல்லைஇதை பலஆண்டுகளுக்கு முன்னரே விஞ்ஞானி ஐன்ஸ்டீன் சொல்லியிருக்கிறார்.
'தேனீக்கள் இந்த உலகில் இருந்து முற்றிலுமாக அழிந்தால்தாவர இனமே அழியும்அதில் இருந்துஐந்து ஆண்டுகளில் மனித இனமும் அழிந்துபோகும்’ என்பது அவரது பகீர் எச்சரிக்கை!  

இப்போது நமக்கு ஒரு நியாயமான சந்தேகம் எழுகிறதுபூச்சிக்கொல்லி மருந்துகளை எதிர்த்துஉயிர்வாழும் ஆற்றலை பூச்சிகள் பெற்றுவிடுகின்றன என்றால்மனிதர்களும் இத்தகையஎதிர்ப்பாற்றலைப் பெற வேண்டும் அல்லவாஎன்ன விஷயம் எனில்மனிதர்களின் ஆயுட்காலம் 60ஆண்டுகள், 70 ஆண்டுகள்ஆனால்பூச்சிகளின் ஆயுட்காலம் ஒருசில வாரங்கள்தான்ஒரே ஒருவருடத்தில் பூச்சிகள் 20 தலைமுறைகளைக் கடந்திருக்கும்ஐந்து ஆண்டுகளில் 100தலைமுறைகளைக் கடந்துவிடும்இதனால் பூச்சிகள்இந்தப் பூச்சிமருந்துகளை எதிர்கொள்ளும்ஆற்றலை வெகுவிரைவில் பெற்றுவிடுகின்றனமனிதர்களால் அது முடியாமல் பாதிப்புகளைச் சுமக்கவேண்டியிருக்கிறது.

ஒரு காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த 'அல்சைமர்’ என்ற மறதி நோய் இன்றைக்கு 60வயதைக் கடந்த பெரும்பாலானவர்களுக்கு வந்துவிடுகிறதுபலர் ஏதோ ஒரு வேளையாகச்சென்றுவிட்டு, 'எதற்காக இங்கு வந்தோம்?’ என இடையில் நின்று யோசிப்பதைப் பார்க்கலாம்ஐந்தாம்தலைமுறை நஞ்சுகளால் நரம்பு மண்டலங்கள் பாதிக்கப்படுவதன் பக்கவிளைவு இதுமனிதஉடலுக்குள் செல்லும் நஞ்சுகளைச் செயல் இழக்கச் செய்யும் பணியைச் செய்வது ஈரல்அதற்கும் ஓர்எல்லை உண்டு அல்லவாதினமும் உணவின் மூலமாக உடலுக்குள் நஞ்சு தொடர்ந்து செல்லும்போது,ஈரலின் செயல்படும் திறன் வெகுவாகப் பாதிக்கப்படுவதாகச் சொல்லும் மருத்துவர்கள்இதனால்உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி வேகமாகக் குறைந்துஉடல் நோய்களின் கூடாரமாக மாறிவிடுகிறதுஎன்கிறார்கள்.

'எல்லாம் சரிதான்ஆனால்பூச்சிக்கொல்லி தெளிக்காவிட்டால் பயிர்களை பூச்சிகள் கபளீகரம்செய்துவிடுமே... அதற்கு என்ன செய்வது?’ எனக் கேள்வி எழும்ஆனால்பூச்சிக்கொல்லிகள்இல்லாமலேயே பூச்சி தாக்குதலைத் தடுக்க முடியும்.
''முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பதுபோலபூச்சிகளைக்கொண்டே பூச்சிகளை அழிக்கமுடியும்சில பூச்சிகள் பயிர்களை உண்பதுபோலசில பூச்சிகளுக்கு மற்ற பூச்சிகள்தான் உணவு.இவற்றை விவசாயிகளுக்கு நன்மை செய்யும் பூச்சிகள் என்கிறார்கள்இந்த நன்மை செய்யும்பூச்சிகளை நமது வயலுக்கு வரவழைத்துவிட்டால் போதும்பயிர்களைத் தாக்கும் பூச்சிகளின் பாடுதிண்டாட்டமாகி விடும்!''  என்கிறார் வல்லுநர் நீ.செல்வம்இந்த இடத்தில் நம்மாழ்வார் அடிக்கடிசொல்லும் ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது.

'ஒரு விளைநிலத்தில் 100 வகைப் பூச்சிகள் இருக்கின்றன என்றால்அதில் 10 பூச்சிகள் நமக்குஎதிரிகளாக இருக்கலாம். 90 பூச்சிகள் நமக்கு நண்பர்கள்அந்த 10 பூச்சிகளை அழிக்கிறோம் என 90பூச்சிகளையும் அழித்ததன் பாவத்தை நாம் இன்று அனுபவிக்கிறோம்கையில் தொடக்கூட அஞ்சும்எண்டோசல்பானையும்மோனோகுரோட்டோபாஸையும் சற்றும் குற்ற உணர்ச்சி இல்லாமல் பயிர்கள்மீது தெளித்துவிட்டுஅவை அனைத்து உயிர்களையும் கொன்ற பின்விளைச்சலில் ஊடுருவிக் கலந்தபின்அதை மேலோட்டமாகக் கழுவிவிட்டு தின்பதன் விளைவுதான் இத்தனை நோய்கள்ஒருகாலத்தில் வயல்வெளி முழுக்க தட்டான் பூச்சிகள் பறந்துகொண்டிருக்கும்உயிர்க்கொல்லிமருந்துகளினால் இன்று தட்டான் பூச்சிகள் காணாமல்போய்விட்டனதட்டான் பூச்சிகள் உணவாகஅதிகம் உண்டது கொசு முட்டைகளைத்தான்இன்றைக்கு தட்டான் பூச்சிகளை அழித்துகொசுக்களைப்பெருகச் செய்துஅதில் இருந்து தப்பிக்க மின்விசிறியைப் போடுகிறோம்அதற்குத் தேவையானமின்சாரத்துக்கு நிலக்கரியை எரிக்கிறோம்அணு உலை அமைக்கிறோம்ஆனால்எந்த மருந்தாலும்இன்னும் கொசுவை முற்றிலுமாக அழிக்க முடியவில்லை!’ என மனம் வெதும்பிச் சொன்னார்.
இப்போது நம் முன்னே இருப்பது 'இயற்கையா... செயற்கையா?’ என்ற எளிய கேள்விஉயிர்போகும்ஆபத்து நம்மைச் சூழ்ந்திருக்கிறது என்பதை உணர்ந்துஆகக்கூடிய அனைத்து வழிகளிலும்ரசாயனங்களைத் தவிர்ப்பதும்இயற்கைக்கு இசைவான வாழ்க்கைமுறைக்குத் திரும்புவதும்தான்இதற்கு சாத்தியமானநிரந்தரமான தீர்வு!


கேன்சர் ரயில்!
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள பிகானீரில்இலவசப் புற்றுநோய் மையம் ஒன்றுஇயங்கிவருகிறதுஜெயின் சமூகத்தவர்களால் நடத்தப்படும் இந்த மருத்துவமனைக்குவரும்நோயாளிகளில் 80 சதவிகிதம் பேர் பஞ்சாப் மாநிலத்தவர்கள்பசுமைப் புரட்சி தீவிரமாகச்செயல்படுத்தப்பட்ட முதல் மாநிலம் என்ற பெருமையுடைய பஞ்சாப்இன்றைக்கு புற்று நோயாளிகள்அதிகம் உள்ள மாநிலம்காரணம்இந்தப் பகுதியில் விவசாயிகள் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகள்என்கிறார்கள் ஆய்வாளர்கள்உதாரணமாகஆறு மாதப் பயிரான பருத்திக்கு ஏழு முறைபூச்சிக்கொல்லி தெளித்தாலே போதும் என விவசாயப் பல்கலைக்கழகம் பரிந்துரை செய்தபோதும்,இந்தப் பகுதி விவசாயிகள் 30 முறை தெளிக்கிறார்கள்சமீப ஆய்வுமுடிவின்படி பஞ்சாப் மாநிலத்தில்வாழ்பவர்களின் ரத்தத்திலும் தாய்ப்பாலிலும்கூட பூச்சிக்கொல்லிகளின் எச்சங்கள் படிந்திருப்பதுகண்டறியப்பட்டுள்ளதுபஞ்சாப் அபோஹரில் இருந்து செல்லும் 'அபோஹர்-பத்தீண்டா’ ரயிலில், 90சதவிகிதம் புற்றுநோயாளிகள் பயணிப்பதால்அதை 'கேன்சர் ரயில்’ என அழைக்கிறார்கள்!

பூச்சிக்கொல்லிகளும் விவசாயிகளும்!
ரே பூச்சிக்கொல்லியை தொடர்ந்து தெளிக்கும்போது பூச்சிகள் எதிர்ப்பு சக்தியைவளர்த்துக்கொள்கின்றனஇந்த அடிப்படையைப் புரிந்துகொள்ளாமல்பூச்சிகளை அழிக்க ஒவ்வொருமுறையும் மருந்து தெளிக்கும் அளவை அதிகரித்துக்கொண்டே செல்கிறார்கள்எந்தெந்தப்பூச்சிக்கொல்லியை எந்தெந்தப் பயிர்களுக்குப் பயன்படுத்த வேண்டும் என்ற வரைமுறை இருக்கிறது.உதாரணமாககாய்கறிப் பயிர்களில் தடைசெய்யப்பட்ட 'மோனோகுரோட்டோபாஸ்’ (Monocrotophos)என்ற பூச்சிக்கொல்லியை மற்ற பயிர்களில் பயன்படுத்திப் பழகிவிட்ட விவசாயிகள்காய்கறிபயிர்களுக்கும் தெளிக்கிறார்கள்ஒரு லிட்டர் தண்ணீருக்கு எத்தனை மில்லி பயன்படுத்த வேண்டும்என்ற பரிந்துரையையும் பின்பற்றுவது இல்லை.

கத்திரிதக்காளியைத் தாக்கும் 'வெள்ளை ’-க்கு எதிரான பூச்சிக்கொல்லியின் பரிந்துரை அளவு 20கிராம்ஆனால்விவசாயிகள் அதிகபட்சமாக 100 கிராம் வரைகூட பயன்படுத்துகிறார்கள்இப்படிப்பயன்படுத்தும் ரசாயனங்களின் நச்சுத்தன்மைநீண்ட நாட்களுக்கு அந்தப் பயிர்களிலேயே இருக்கும்.உதாரணமாகதென்னை மரங்களில் வரும் காண்டாமிருக வண்டைக் கட்டுப்படுத்த மரத்தின் வேரில்மோனோகுரோட்டோபாஸ் மருந்தைப் புகுத்துவார்கள்அப்படி மருந்து புகட்டிய நாளில் இருந்துகுறைந்தது 15 நாட்களுக்கு அந்த மரத்தின் இளநீரைப் பறிக்கக் கூடாதுநடைமுறையில் ஒருபக்கம்மருந்தைக் கொடுத்துக்கொண்டேமறுபக்கம் இளநீரையும் பறிக்கின்றனர்இதனால் நஞ்சுஇளநீரின்வழியே அதைக் குடிப்பவர்களின் உடலுக்குள் நேரடியாகச் சென்று கலக்கிறதுஇதைத்தான்காய்கறிகளிலும் பயன்படுத்துகின்றனர்கத்திரிக்காயில் முதல் நாள் மருந்து தெளிக்கிறார்கள்அடுத்தநாள்அது கடைக்கு வந்துவிடுகிறதுஅந்தக் காயில் உள்ள நஞ்சு எங்கே போகும்நம்வயிற்றுக்குள்தான்!

அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்?
பூச்சிமருந்துகளின் நச்சுப்பிடியில் இருந்து இந்தப் பூவுலகைக் காப்பாற்றவேண்டிய நெருக்கடி நம் முன்புஇருக்கிறதுஇதில் அரசாங்கத்தின் முக்கியமான பாத்திரம் என்னவேளாண் பொருளியல் நிபுணர்பாமயன் சொல்லும் ஆலோசனை இதோ...
''முதலில் உலக நாடுகள் பலவற்றிலும் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளைநம் நாட்டில்விற்பதை முழுமையாகத் தடுக்க வேண்டும்அவை தடை செய்யப்பட்டுள்ளன என்றால்,மனிதகுலத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஆபத்து என்றுதானே பொருள்அதைப் பயன்படுத்தஅனுமதிப்பது மிகவும் அபாயகரமானதுஎண்டோசல்பான் போன்ற பல பூச்சிமருந்துகள் இப்படி இங்கேவிற்கப்படுகின்றனஅதேபோல பூச்சிமருந்து பயன்படுத்துவது குறித்த குறைந்தப்பட்ச விழிப்புஉணர்வையாவது நமது விவசாயிகளுக்கு ஏற்படுத்த வேண்டும்பயிருக்குத் தண்ணீர்ப்பாய்ச்சுவதைப்போல பூச்சிமருந்து தெளிப்பது நமக்கு நாமே விஷம் வைத்துக்கொள்வதற்கு சமம்.எனினும் இது ஒரு தற்காலிகத் தீர்வு மட்டுமே.

நிரந்தரத் தீர்வு... ஒட்டுமொத்த மாநிலமும் இயற்கை விவசாயத்துக்கு மாறுவதுதான்அரசாங்கமேகொள்கை முடிவுகள் எடுத்து மாநிலம் முழுவதும் இயற்கை வழி வேளாண் முறைகளைஅறிமுகப்படுத்திபயிற்சி தந்துஊக்குவிக்க வேண்டும்இப்படிச் செய்வது இயலாத செயல் அல்ல.சிக்கிம் மாநில அரசு இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கிறதுஅங்கு பெரும்பகுதி நிலத்தில் இயற்கைவிவசாயம்தான்இப்போது கேரளாவும் இந்தப் பட்டியலில் இணைந்துஅங்கும் இயற்கை விவசாயக்கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளனதமிழக அரசும் இதில் இணைய வேண்டும்அரசாங்கமேமுன்னெடுத்துச் செய்தால் ஒருசில ஆண்டுகளில் அதிசயிக்கத்தக்க மாற்றங்களைக் காண முடியும்.இயற்கை விவசாயத்துக்கு மாறினால் விஷம் இல்லாத காய்கறிகள் மட்டும் அல்ல... நம் ஒட்டுமொத்தவாழ்க்கைமுறைஉடல் நலம்பொருளாதாரம் அனைத்துமே மேம்பாடு அடையும்!''

40 ஆண்டு நஞ்சு!
2010-ம் ஆண்டு, 'தேசிய அளவில் பூச்சிக்கொல்லி எச்சங்களைக் கண்காணிக்கும்’ (Monitoring of Pesticide Residues at National Level)  ஆய்வு ஒன்று இந்தியாவில் நடந்ததுஅதில் நாம் பயன்படுத்தும் காய்கறிகள்,பழங்கள்தானியங்கள்முட்டைகள்பால் போன்ற அனைத்து உணவுப்பொருட்களிலும்பூச்சிக்கொல்லிகளின் எச்சங்கள்அபாய வரம்பில் கலந்திருப்பது கண்டறியப்பட்டதுநிலத்தடி நீரிலும்பூச்சிக்கொல்லியின் எச்சங்கள் கலந்துவிட்டனஅதே 2010-ம் ஆண்டு புனேயில் உள்ள ஒரு தொண்டுநிறுவனம்கோலா குளிர்பானம் ஒன்றில் பூச்சிக்கொல்லிகளின் எச்சம் கலந்திருப்பதை ஆய்வில்கண்டுபிடித்ததுஇது நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுஅந்தக் குளிர்பானத்தில்இருந்ததாகக் கண்டறியப்பட்ட ரசாயனம் டி.டி.டீஎன்ன கொடுமை எனில்இந்தியாவில் 1970-களிலேயே டி.டி.டீ தடை செய்யப்பட்டுவிட்டதுஅதற்கு முன்பு பயன்படுத்திய நஞ்சின் எச்சம் நிலத்தடிநீரில் அப்படியே இருந்திருக்கிறதுஅதுதான் குளிர்பானத் தயாரிப்புக்காக நிலத்தடி நீரைஉறிஞ்சும்போதுதண்ணீருடன் கலந்திருந்திருக்கிறதுயோசித்துப் பாருங்கள்... கிட்டத்தட்ட 40ஆண்டுகளாக அதன் எச்சம் நீரில் கலந்திருக்கிறது எனும்போதுஉணவுப் பயிர்களில் நஞ்சைத்தெளித்து அடுத்த நாளே நாம் சாப்பிடுகிறோம்நன்றாகக் கழுவிவிட்டுச் சமைத்தால் பூச்சிமருந்துபோய்விடும் என்றும் நினைக்கிறோம்கழுவினால் போய்விடுவதற்குஅது தூசி அல்ல... விஷம்!
தனி மனிதர்கள் என்ன செய்ய முடியும்?
ல்லா காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களிலும் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்டுள்ளநிலையில் சாதாரண மக்கள் என்னதான் செய்வதுஇவற்றில் இருந்து எந்த அளவுக்கு தங்களைத்தற்காத்துக்கொள்ள முடியும்? - சித்த மருத்துவர் கு.சிவராமன் சொல்லும் ஆலோசனை என்ன?

''பளபளப்பான காய்கறிகளைத் தேடி வாங்குவதுதான் இன்றைய நுகர்வோரின் மனநிலைகாய்கறிபளபளப்பாக இருக்கிறது என்றால்அதில் ரசாயன மருந்து இருக்கிறது என்று அர்த்தம்உண்மையில்வாடிய சொத்தை காய்கறிகளிலும் கீரைகளிலும் பூச்சிக்கொல்லிகளின் எச்சம் இருக்காதுஅவற்றைவாங்கிசொத்தைப் பகுதியை நீக்கிவிட்டு மீதியைப் பயன்படுத்தலாம்தமிழகம் முழுவதும்ஆயிரக்கணக்கான விவசாயிகள் இயற்கை வழி விவசாய முறைக்கு மாறிவருகிறார்கள்.பெருநகரங்களில்கூட இன்று ஆர்கானிக் பொருட்கள் கிடைக்கின்றனநாம்தான் அவற்றைத்தேடிப்பிடித்து வாங்க வேண்டும். 'ஆர்கானிக் காய்கறிகள் எங்கு கிடைக்கின்றன என்பது தெரியாதே?’எனப் பலர் சொல்லக்கூடும்பிடித்த திரைப்படம் எந்தத் தியேட்டரில் ஓடுகிறதுஎன்ன டிசைன் துணிஎந்தக் கடையில் கிடைக்கும் என்பதை ஆர்வமாகத் தேடித் தெரிந்துகொள்வதைப்போலஇதையும்ஆர்வத்துடன் அணுகினால் எளிதில் கிடைத்துவிடும்.

இதுபோன்ற ஆர்கானிக் பொருட்களின் விலை அதிகமாக இருக்கிறது என்பது உண்மைதான்அதற்குக்காரணம் உற்பத்திக் குறைவேஅதிகம் பேர் இயற்கைப் பொருட்களுக்கு மாறும்போது தேவைஅதிகரிக்கும்விவசாயமும் அதிகரிக்கும்விலையும் குறையும்ஆகவேவிலை குறைய வேண்டும்என்றாலே அதிகம் பேர் ஆர்கானிக் பொருட்களை வாங்கும்போதுதான் அது நடக்கும்நச்சு நிறைந்ததாகமாறியிருக்கும் நமது இன்றைய சூழலைஆரோக்கியமான உணவின் மூலம்தான் மாற்ற முடியும்.அந்த நல்ல உணவைப் பெறுவதற்கான தடைகளை நம் முயற்சியில் நாம்தான் கடந்தாக வேண்டும்!''



No comments:

Post a Comment