பேனர்களுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்வதற்கு எதிரான வழக்கில் பதில் அளிக்குமாறு, நடிகர் ரஜினிகாந்த்துக்கு நோட்டீஸ் அனுப்ப பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல நடிகர்களின் படங்கள் வெளியாகும் நாள்தான் ரசிகர்களுக்கு கொண்டாட்டம். அந்த அளவுக்கு நடிகர்களின் படங்களுக்கும், கட் அவுட்டுகளுக்கும் பாலாபிஷேகம், கும்பாபிஷேகம் உள்ளிட்டவை நடத்தி அமர்க்களப்படுத்தி விடுவார்கள் ரசிகர்கள்.
பிரபல நடிகர்களின் படங்கள் வெளியாகும் நாள்தான் ரசிகர்களுக்கு கொண்டாட்டம். அந்த அளவுக்கு நடிகர்களின் படங்களுக்கும், கட் அவுட்டுகளுக்கும் பாலாபிஷேகம், கும்பாபிஷேகம் உள்ளிட்டவை நடத்தி அமர்க்களப்படுத்தி விடுவார்கள் ரசிகர்கள்.

இதில் நடிகர் ரஜினிகாந்த்தின் படம் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வெளியாகும். அன்று அவரது ரசிகர்கள் ரஜினி பேனர்கள் மீது பாலை ஊற்றி அபிஷேகம் செய்வார்கள். இந்த நிலையில், பால் வீணாவதை பார்த்து வேதனை அடைந்த ஒருவர், பெங்களூரு நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், நடிகர் ரஜினிகாந்த் படங்கள் வெளியாகும் போது அவரது ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்து பாலை வீணாக்குவதாகவும், இதனை தடை செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த பொதுநல வழக்கை இன்று விசாரித்த பெங்களூரு நீதிமன்றம், இந்த வழக்கில் பதில் அளிக்க நடிகர் ரஜினிகாந்த்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
அதில், நடிகர் ரஜினிகாந்த் படங்கள் வெளியாகும் போது அவரது ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்து பாலை வீணாக்குவதாகவும், இதனை தடை செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த பொதுநல வழக்கை இன்று விசாரித்த பெங்களூரு நீதிமன்றம், இந்த வழக்கில் பதில் அளிக்க நடிகர் ரஜினிகாந்த்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

No comments:
Post a Comment