வேளாண் பெருமக்களை ஏற்றம் பெற வைக்க ஆயிரமாயிரம் திட்டங்கள் மத்திய, மாநில அரசுகளிடம் இருக்கின்றன. பெரும்பாலும் மூடி வைத்த புத்தகங்களாகவே இருக்கும் அவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு, முறையாக முயற்சிகளை முன்னெடுத்தால்.. நிச்சயம் பலன் பெற முடியும். அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம், முதலூர் கிராம மக்கள் நபார்டு வங்கியின் திட்டத்தை முறையாகப் பயன்படுத்தி, தற்போது வெற்றிக் கொடி பறக்கவிட்டுக் கொண்டுள்ளனர்.
சாத்தான்குளத்திலிருந்து பெரியதாழை செல்லும் வழியில், ஆறாவது கிலோ மீட்டரில் இருக்கிறது, முதலூர். வீட்ஸ் தொண்டு நிறுவனத்தில் தேனீ வளா்ப்பிற்கான பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பவர்கள்… அதை பாட்டிலில் நிரப்புவதில் மும்முரமாக இருப்பவர்கள் என்று எங்கு திரும்பினாலும் கூட்டம் கூட்டமாக பெண்கள்தான். பாட்டிலில் தேன் நிரப்பிக் கொண்டிருந்த பெண்களிடம் பேச்சுக் கொடுத்த போது, ‘விடியல் மகளிர் தேன் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு’ செயலாளர், வேதா நம்மிடம் பேசினார்.
எங்கள் கிராமம் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய கிராமம். வீட்ஸ் நிறுவனத்திடம் எங்கள் நிலைமையைச் சொன்னதும், நபார்டு வங்கிக்கு கூட்டி சென்றார்கள். வங்கியுடைய தூத்துக்குடி மாவட்ட மேலாளர் நடராஜன், எங்கள் பகுதிகளைப் பார்வையிட்டு, நீர்வடிப் பகுதிகள் மேம்பாட்டுத் திட்டத்தில் பண்ணைக் குட்டைகள் அமைக்க நிதி கொடுத்தார்.
எங்கள் கிராமம் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய கிராமம். வீட்ஸ் நிறுவனத்திடம் எங்கள் நிலைமையைச் சொன்னதும், நபார்டு வங்கிக்கு கூட்டி சென்றார்கள். வங்கியுடைய தூத்துக்குடி மாவட்ட மேலாளர் நடராஜன், எங்கள் பகுதிகளைப் பார்வையிட்டு, நீர்வடிப் பகுதிகள் மேம்பாட்டுத் திட்டத்தில் பண்ணைக் குட்டைகள் அமைக்க நிதி கொடுத்தார்.
இதை நாங்கள் நல்லபடியாக செய்து நிறைய மரங்கள் நட்டு வளர்க்க ஆரம்பித்தோம். அதனால் நபார்டு வங்கிக்கு எங்கள் மேல் நம்பிக்கை வந்தது.
சாத்தான்குளம் சுற்றுவட்டாரப் பகுதியில் முருங்கை, பனை மரங்கள் அதிகமாக நிற்கும். முழுக்க காடு மாதிரி இருப்பதால், கருவேல மரங்களும் அதில் பூவும் நிற்கும். இது, தேன் சாகுபடிக்கு ஏற்றதாக இருப்பதால்.. நபார்டு வங்கி அதிகாரிகள் எங்கள் பகுதியை ஆய்வு செய்து, ‘தேனீ வளர்ப்புப் பயிற்சி’க்கு என்று நிதி ஒதுக்கினார்கள். தொடர்ந்து பத்து நாள் பயிற்சி கொடுத்தார்கள். பயிற்சியில் கலந்துகொண்டவர்களுக்கு தினப்படி கூலியும் கொடுத்ததால் நிறைய பெண்கள் ஆர்வமாக வந்து கலந்து கொண்டார்கள். இப்போது எங்கள் பகுதியில் நிறைய பேர் பயிற்சி எடுத்து கொண்டு, தேன் உற்பத்தி செய்கிறார்கள். அதை விற்பனை செய்வதற்காகவே, ‘விடியல் மகளிர் தேன் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்’ என்று ஆரம்பித்திருக்கிறோம் என்றார்.
சாத்தான்குளம் சுற்றுவட்டாரப் பகுதியில் முருங்கை, பனை மரங்கள் அதிகமாக நிற்கும். முழுக்க காடு மாதிரி இருப்பதால், கருவேல மரங்களும் அதில் பூவும் நிற்கும். இது, தேன் சாகுபடிக்கு ஏற்றதாக இருப்பதால்.. நபார்டு வங்கி அதிகாரிகள் எங்கள் பகுதியை ஆய்வு செய்து, ‘தேனீ வளர்ப்புப் பயிற்சி’க்கு என்று நிதி ஒதுக்கினார்கள். தொடர்ந்து பத்து நாள் பயிற்சி கொடுத்தார்கள். பயிற்சியில் கலந்துகொண்டவர்களுக்கு தினப்படி கூலியும் கொடுத்ததால் நிறைய பெண்கள் ஆர்வமாக வந்து கலந்து கொண்டார்கள். இப்போது எங்கள் பகுதியில் நிறைய பேர் பயிற்சி எடுத்து கொண்டு, தேன் உற்பத்தி செய்கிறார்கள். அதை விற்பனை செய்வதற்காகவே, ‘விடியல் மகளிர் தேன் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்’ என்று ஆரம்பித்திருக்கிறோம் என்றார்.
தொடர்ந்தவர், எங்கள் சங்கத்தில் 170 உறுப்பினர்கள் இருக்கிறோம். இதில் சேர்வதற்கு இரண்டாயிரம் ரூபாய் கட்டணம். அதை வங்கி கணக்கில் போட்டுவிடுவோம். உறுப்பினராகும் பெண்களுக்கு, பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள தேனீ வளர்ப்புப் பெட்டிகளை கடனாக கொடுப்போம். இதற்கான தவணையை பணமாக வாங்காமல், தேனாக வாங்கிக்கொள்வோம். குழு சார்பிலேயே தேன் எடுக்கும் இயந்திரம், தேன் வளர்ப்புக்குத் தேவையான கருவி எல்லாம் வைத்திருக்கிறோம். எங்க குழு தயாரிக்கும் தேனுக்கு ‘சாரல் தேன்’ என்று பெயர் வைத்திருக்கிறோம். தூத்துக்குடி கலெக்டர் ஆஷிஸ் குமார்தான் இதை அறிமுகப்படுத்தி வைத்தார். 2011-ம் வருடம் ஆரம்பித்த பயிற்சி, இப்போது வரைக்கும் சென்று கொண்டியிருக்கிறது. நிறைய பெண்கள் ஆர்வமாக வந்து கலந்து கொள்கிறார்கள் என்றார் வேதா.
வீட்டிற்கு பின் ஒரு ஏக்கர் நிலமிருக்கு. அதில் செடிமுருங்கை மரங்கள் நிற்கிறது. பயிற்சி எடுத்த கையோடு பத்து தேனீப் பெட்டிகளை அங்கே வைத்துவிட்டேன். இப்போது மாதம் 15 லிட்டருக்குக் குறையாமல் தேன் கிடைக்கிறது. முருங்கையிலும் மகசூல் கூடியது. பயிர்களில் பூ பூக்கும் காலத்தில்தான் தேன் மகசூல் நிறைய கிடைக்கும். பூ பூக்காத காலங்களில் தேனீப் பெட்டிக்குள் சீனியைக் கரைத்து வைப்பார்கள். இந்த சீனிதான், தேனீக்களுக்கு தற்காலிக உணவு. இது மூலமாகவும் தேன் கிடைக்கும். ஆனால், இது ஒரு வகையில் கலப்படம்தான். செயற்கை தேன் என்று கூட சொல்லலாம். இது சில பகுதிகளில் நடக்கிறது. அந்த மாதிரியெல்லாம் நாங்கள் செய்வதில்லை.
சாத்தான்குளம், தேனீப் பெட்டியைக் கழட்டிட்டு போய், கேரள மாநிலம் நெலம்பூர் பகுதியில் இருக்கும் தோட்டங்களில் வைத்திடுவோம். அதற்கு, வீட்ஸ் நிறுவனத்துக்காரர்களே உதவி செய்கிறார்கள். அந்தப் பகுதிகளிலும் எங்களுக்கு தேன் உற்பத்தி நடப்பதால்.. வருடம் முழுக்க வருமானம் கிடைத்துக்கொண்டே இருக்கிறது. கடந்த வருடம் சென்னையில் நபார்டு வங்கி நடத்திய கண்காட்சியில் ஆயிரம் லிட்டர் தேன் விற்பனை செய்திருக்கிறோம் என்று பூரிப்போடு சொல்கிறார், தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு வரும் அடையல் கிராமத்தை சேர்ந்த சாந்தி.
வீட்ஸ் நிறுவன இயக்குநர் சார்லஸ், எங்களது நிறுவனம் பெண்களின் வளர்ச்சியில் தனிகவனம் செலுத்தி வருகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வீட்ஸ் நிறவனமும், நபார்டு வங்கியும் சேர்ந்து உடன்குடி, சாத்தான்குளம் சுற்றுவட்டாரப் பகுதியின் பொருளாதார நிலையை உயர்த்தும் நோக்கத்தில் ஆய்வு செய்தோம். அப்போதுதான் இந்தப் பகுதியில் முருங்கை, பனை, வேம்பு என்று நிறைய பயிர்களில் பூ பூத்து தேன் உற்பத்திக்கு சாதகமான சூழல் நிலவுவதைப் பார்த்தோம். உடனே நபார்டு வங்கியும் தேன் வளர்ப்பு பயிற்சிக்கான நிதியை ஒதுக்கியது. இன்றைக்கு இந்தப்பகுதி பெண்கள் பொருளாதார தன்னிறைவு அடைந்து வருவதற்கு நபார்டு வங்கிதான் காரணம் என்றார். குட்டி மார்த்தாண்டம்..
இதுதான் லட்சியம்..!
மாவட்ட நபார்டு வங்கி மேலாளர் மெலட்டூர், இரா.நடராஜனிடம் பேசிய போது, “நபார்டு வங்கியின் குறுந்தொழில்கள் முன்னேற்றறத்திற்கான பயிற்சித் திட்டத்தின் (எம்.இ.டி.பி)கீழ், கிராம மக்களுக்கு உதவ எண்ணியிருந்தோம். அப்போதுதான் உடன்குடி, சாத்தான்குளம் சுற்றுவட்டாரப்பகுதியில் தேனீ வளர்ப்புக்குச் சாதகமான சூழல் இருப்பதுதெரிந்தது. அதனால், தேனீ வளர்ப்புக்கு முதலூரைத் தோந்தெடுத்தோம். இந்தப் பயிற்சியை, பெயருக்காக நடத்தாமல், உண்மையான பலன் அளிக்கும் பயிற்சியாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து… மார்த்தாண்டத்திலிருந்து ஒரு பயிற்றுநரையும் வரவழைத்து, சம்பளம் கொடுத்து, இப்பகுதி மக்களுக்கு தேனீ வளர்ப்புப் பயிற்சியைக் கொடுத்தோம்.
அடுத்தபடியாக, வங்கிக் கடனுக்கு வழி வகை செய்து, மார்த்தாண்டம் பகுதியிலிருந்து தேனீப் பெட்டிகள் வாங்கி கொடுக்க ஏற்பாடு செய்தோம். சந்தை வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தோம். இத்தகைய உதவிகளின் மூலமாக நாங்கள் வெறும் கோடுகள்தான் போட்டோம். முதலூர் மக்களின் விடாமுயற்சிதான் அவர்களை முன்னுக்குக் கொண்டு வந்திருக்கிறது என்றார்.
தொடர்புக்கு
சார்லஸ், செல்போன் : 94435 83458
வேதா, செல்போன் : 98421 84881
மெலட்டூர். இரா.நடராஜன், செல்போன் : 94433 – 80627



No comments:
Post a Comment