Monetize Your Website or Blog

Thursday, 31 March 2016

ஜெ. சிறுதாவூர் பங்களாவில் இருந்த லாரிகள் ஒரே இரவில் மாயம்: பரபரப்புத் தகவல்கள்!

 தமிழக முதல்வர் ஜெயலலிதா,  அவ்வப்போது சென்று தங்கும் சிறுதாவூர் பங்களாவில் சர்ச்சைக்குரிய வகையில் நிறுத்தப்பட்டு இருந்த கன்ட்டெய்னர்  லாரிகள் இரவோடு இரவாக மாயமானதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுதாவூர் பங்களாவுக்குள் சந்தேகத்தை உண்டாக்கும் வகையில் கன்ட்டெய்னர் லாரிகள் சென்றன என்றும்,  அதில் கோடிக்கணக்கான ரூபாய் பதுக்கி எடுத்துச் செல்லப்பட்டது என்றும், எனவே அது குறித்து உரிய ஆய்வு செய்யவேண்டும் என்றும்  மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ தேர்தல் ஆணையத்திடம் புகார் கூறியிருந்தார்.

இந்த விஷயம் தமிழகம் முழுக்க அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

மேலும் இது தொடர்பாக,வைகோ உள்ளிட்ட மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் தங்களின் பிரசார கூட்டங்களில் கடுமையாகக் குற்றம் சாட்டிப் பேசி வந்தனர். ஊடகங்களிலும் இந்த விவகாரம் வெளியாகியிருந்தது. இது அதிமுக தரப்பை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கியது என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து நள்ளிரவு நேரத்தில் சிறுதாவூர் பங்களாவில் இருந்து லாரிகள் வெளியே கொண்டுசெல்லப்பட்டுவிட்டதாகவும், அவற்றில் எடுத்துச் செல்லப்பட்ட பணம் பங்களாவின் நிலவறைகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன என்றும்  செய்திகள் வெளியாகியுள்ளன.
 



No comments:

Post a Comment