ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு மேல்முறையீடு வழக்கில், அன்பழகன் தரப்பு வாதத்தை அனுமதிக்க கூடாது என்றும் அவர் தரப்புக்கு அப்பீல் செய்யவே உரிமை இல்லை எனக் கூறி ஜெயலலிதாவின் வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள், நிராகரித்தனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. அதை எதிர்த்து, கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தி.மு.க.பொதுச் செயலாளர் க.அன்பழகனும் ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்தவாராய் ஆகியோர் அமர்வின் முன் நடைபெறுகிறது. இதில், கர்நாடக அரசு சார்பில் வழக்கறிஞர்கள் தவே, பி.வி.ஆச்சாரியா ஆகியோர் ஆஜராகின்றனர்.
இந்நிலையில், ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நாகேஷ்வரராவ், உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்தார். அதில், சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசும் தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகனும் தாக்கல் செய்துள்ள மனுக்களை தள்ளுபடி செய்யவேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். அந்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்துவிட்டது.
இதையடுத்து, கர்நாடக அரசின் வழக்கறிஞர்கள் தவே, பி.வி.ஆச்சாரியா ஆகியோர் தங்களின் வாதங்களை எடுத்துவைத்தனர். அவர்களின் இறுதிவாதம் நிறைவுபெற்ற நிலையில், நாளை அன்பழகனின் வழக்கறிஞர் அந்தி அர்ஜூனா தன்னுடைய வாதத்தை தொடங்க உள்ளார். இந்நிலையில், ஜெயலலிதாவின் வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ், மீண்டும் நீதிபதிகளிடம் அன்பழகன் தரப்பு வாதத்தை அனுமதிக்க கூடாது; அன்பழகன் தரப்புக்கு அப்பீல் செய்யவே உரிமை இல்லை எனக் கூறி ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். ஆனால் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஜெயலலிதா தரப்பின் கோரிக்கையை நிராகரித்துவிட்டனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. அதை எதிர்த்து, கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தி.மு.க.பொதுச் செயலாளர் க.அன்பழகனும் ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்தவாராய் ஆகியோர் அமர்வின் முன் நடைபெறுகிறது. இதில், கர்நாடக அரசு சார்பில் வழக்கறிஞர்கள் தவே, பி.வி.ஆச்சாரியா ஆகியோர் ஆஜராகின்றனர்.
இந்நிலையில், ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நாகேஷ்வரராவ், உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்தார். அதில், சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசும் தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகனும் தாக்கல் செய்துள்ள மனுக்களை தள்ளுபடி செய்யவேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். அந்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்துவிட்டது.
இதையடுத்து, கர்நாடக அரசின் வழக்கறிஞர்கள் தவே, பி.வி.ஆச்சாரியா ஆகியோர் தங்களின் வாதங்களை எடுத்துவைத்தனர். அவர்களின் இறுதிவாதம் நிறைவுபெற்ற நிலையில், நாளை அன்பழகனின் வழக்கறிஞர் அந்தி அர்ஜூனா தன்னுடைய வாதத்தை தொடங்க உள்ளார். இந்நிலையில், ஜெயலலிதாவின் வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ், மீண்டும் நீதிபதிகளிடம் அன்பழகன் தரப்பு வாதத்தை அனுமதிக்க கூடாது; அன்பழகன் தரப்புக்கு அப்பீல் செய்யவே உரிமை இல்லை எனக் கூறி ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். ஆனால் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஜெயலலிதா தரப்பின் கோரிக்கையை நிராகரித்துவிட்டனர்.

இதையடுத்து க. அன்பழகன் சார்பாக மூத்த வழக்கறிஞர் அந்தி அர்ஜூனா நாளை தனது வாதத்தைத் தொடங்க உள்ளார். அன்பழகன் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில், “சொத்துக்களை வாங்கியதற்கான வருமான வழிகளை ஜெயலலிதாவால் நிரூபிக்க முடியவில்லை. ஜெயா பப்ளிகேஷன்ஸ், நமது எம்.ஜி.ஆர், சசி எண்டர்பிரைசஸ் நிறுவனங்கள் மட்டுமே ஜெயலலிதா வசம் இருந்தன. இந்த நிறுவனங்கள் மூலம் எந்த வருமானமும் ஈட்டப்படவில்லை.
1988 முதல் 1989-ம் ஆண்டு வரை ராஜ்யசபா எம்.பி.யாக இருந்த ஜெயலலிதா, 9 லட்சத்து 12 ஆயிரத்து 129 ரூபாய்க்கு 4 கார்களை வாங்கினார்; அதேபோல் 1989-ல் ஒரு லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்க்கு ஜீப் ஒன்றை வாங்கினார். ஆனால் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்று, முதலமைச்சரான காலத்தில்தான் ஏராளமான சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளார். அவர் முதலமைச்சராக இருந்த காலத்தில் அவருக்கு வந்த வருமானத்துக்கும் அவர் சேர்த்த சொத்துக்களுக்கும் சம்பந்தமே இல்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.
1988 முதல் 1989-ம் ஆண்டு வரை ராஜ்யசபா எம்.பி.யாக இருந்த ஜெயலலிதா, 9 லட்சத்து 12 ஆயிரத்து 129 ரூபாய்க்கு 4 கார்களை வாங்கினார்; அதேபோல் 1989-ல் ஒரு லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்க்கு ஜீப் ஒன்றை வாங்கினார். ஆனால் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்று, முதலமைச்சரான காலத்தில்தான் ஏராளமான சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளார். அவர் முதலமைச்சராக இருந்த காலத்தில் அவருக்கு வந்த வருமானத்துக்கும் அவர் சேர்த்த சொத்துக்களுக்கும் சம்பந்தமே இல்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த விபரங்களின் அடிப்படையில், நாளை க.அன்பழகனின் வழக்கறிஞர் அந்தி அர்ஜூனா தனது வாதத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment