Monetize Your Website or Blog

Thursday, 31 March 2016

விஜயகாந்த்தின் சபதம் என்ன தெரியுமா..? விளக்குகிறார் பிரேமலதா!

தல்வரான பின்தான் சட்டப்பேரவைக்குள் நான் கால் எடுத்து வைப்பேன் என்று கேப்டன் விஜயகாந்த் சபதம் ஏற்றுள்ளார் என்று தே.மு.தி.க. மகளிர் அணித் தலைவி பிரேமலதா தெரிவித்தார்.

தே.மு.தி.க. மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தே.மு.தி.க. மகளிர் அணித் தலைவி பிரேமலதா பேசும்போது, ''தமிழகத்தில் தே.மு.தி.க.வுக்கு இணையாக எந்த ஒரு கட்சியும் இல்லை. அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளுமே ஊழல் கட்சிகள் என மக்களால் முத்திரை குத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் பதவிக்கு கருணாநிதியை முன்னிறுத்துவதா, அல்லது மு.க.ஸ்டாலினை முன்னிறுத்துவதா என்று தி.மு.க.வில் குழப்பம் நிலவி வருகிறது

விஜயகாந்த் அன்று சட்டப்பேரவையில் எழுந்து பேசியவுடனேயே சபாநாயகர், அமைச்சர் பேசிய பிறகு நீங்கள் பேசுங்கள் என்றார். அப்போது விஜயகாந்த் அமைதியாக அமர்ந்தார். அப்போது பேசவேண்டியதைவிட்டுவிட்டு ஏதேதோ விஷயங்களை பேசியதால், கேப்டன் விஜயகாந்த் கொந்தளித்து எழுந்து, 'யோவ் உட்காருயா உங்களுக்கென்ன நான் பதில் வேண்டும்' என்றார்.


அப்போது நத்தம் விஸ்வநாதன் ஏதே பேசவந்த போது, ‘யோவ் நத்தம் உட்காருயா’ என்று கூறினார். இது தான் அன்றைக்கு நடந்தது. இது சட்டப்பேரவையில் இருந்த பாலபாரதிக்கு தெரியும். சட்டசபையில் இருந்த எல்லோருக்கும் தெரியும். அன்றையோடு சட்டசபைக்கு செல்லமாட்டேன். மீண்டும் முதல்வராகத்தான் சட்டப்பேரவைக்குள் கால் வைப்பேன் என்ற உறுதியோடு வெளியே வந்தார் கேப்டன்

மேலும், தே.மு.தி.க.வில் இருந்து அழைக்கப்படும் மாவட்ட செயலாளர்களுக்கு, தி.மு.க.வில் அதே பதவி வழங்கப்பட்டால், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்களை நான் அனுப்பி வைக்க தயாராக இருக்கிறேன்" என்றார் ஆவேசமாக.



No comments:

Post a Comment