கரூரில் அ.தி.மு.க பிரமுகர் அன்புநாதனின் வீடு மற்றும் குடோனில் பிடிபட்ட நோட்டுக் கட்டுகளால் பலத்த அதிர்வலைகளைக் கிளப்பி வருகிறது. பணம் பறிமுதல் செய்யப்பட்டதைவிடவும், அதை மறைப்பதற்கு அதிகாரிகள் செய்யும் தில்லுமுல்லுகளால் அதிர்ந்து போய் இருக்கிறார்கள் அரவக்குறிச்சி மக்கள்.
கரூர், அய்யம்பாளையத்தில் அன்புநாதன் என்பருக்குச் சொந்தமான குடோனில் இருந்து, ஆம்புலன்ஸில் பணம் எடுத்துச் செல்லப்படும் தகவல் வருவாய்த் துறை அதிகாரிகளுக்குக் கிடைக்கவே, நேற்று முன்தினம் மாலையில் கரூர் மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டே தலைமையிலான அதிகாரிகள் ரெய்டுக்குக் கிளம்பினர். தொடர்ந்து இரண்டு நாட்களாக தீவிர ரெய்டு நடந்து வருகிறது. தேர்தல் செலவு கணக்குப் பார்வையாளர் ஆசிஷ், வருமான வரித்துறை அதிகாரி மணிகண்டன், டி.ஆர்.ஓ அருணா ஆகியோரும் விசாரணையில் இறங்கியுள்ளனர். சோதனையில், 12 பணம் எண்ணும் இயந்திரங்கள், பணத்தைக் கட்டும் ரப்பர் பேண்டுகள், சரக்கு அடைக்கப்படும் காலி பெட்டிகள், நான்கு கார்கள், ஒரு ட்ராக்டர், ஒரு ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால், பிடிபட்டது வெறும் 10.3 லட்ச ரூபாய்தான் என தேர்தல் அதிகாரிகள் சொல்கின்றனர். "பத்து லட்ச ரூபாய்க்காக மூன்று நாட்கள் ஏன் விசாரணை நடத்த வேண்டும்?" எனவும் கேள்வி எழுப்புகிறார்கள் அரவக்குறிச்சி மக்கள்.
அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட அய்யம்பாளையத்தில் அன்புநாதனின் தோப்பு இருக்கும் தெருவுக்குள் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. குடோனுக்குள் நடக்கும் விஷயங்கள் மர்மமாகவே இருக்கின்றன. குடோனின் இரும்புக் கதவில் இருந்த இரண்டு ஓட்டைகள் வழியாக படம் எடுத்த போட்டோகிராபர்களும் விரட்டப்பட்டனர். இப்போது அந்த இரண்டு ஓட்டைகளையும் அடைத்துவிட்டனர். அன்புநாதனின் வக்கீல்கள் தொடர் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, 'மேலிடத்தின் உத்தரவின்பேரில்தான் சோதனை நடத்துகிறோம்' என அதிகாரிகள் தெரிவித்தனர். இன்னும் ரெய்டு முடியவில்லை. இந்த நிமிடம் வரையில் அதிகாரிகள் அன்புநாதனிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இதுபற்றி நம்மிடம் பேசிய கரூர் அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர், " அன்புநாதனின் குடோன் அமைந்துள்ள தோப்பில் அண்டர்கிரவுண்ட் அறை ஒன்று உள்ளது. அதற்குள் கட்டுக்கட்டாகப் பணக் குவியல் இருந்துள்ளது. 100 கோடி ரூபய் வரையில் பிடிபட்டுள்ளது என்கிறார்கள். இவ்வளவு தொகை பிடிபட்டது என்றால், வெறும் பத்து லட்ச ரூபாய் பிடிபட்டதாக அதிகாரிகள் ஏன் பொய் சொல்ல வேண்டும்? பத்து லட்சத்தை எண்ணுவதற்கு மூன்று நாட்கள் தேவைப்படுமா? அத்தனையும் பொய்யான தகவல்கள். அன்புநாதனின் அப்பா கரூரில் பாலிடெக்னிக் கல்லூரியை நடத்த வந்தவர். அன்புவின் தங்கை கணவர் மூலம்தான் அ.தி.மு.கவின் நெருங்கிய வட்டத்திற்குள் வந்தவர்.
கரூர், அய்யம்பாளையத்தில் அன்புநாதன் என்பருக்குச் சொந்தமான குடோனில் இருந்து, ஆம்புலன்ஸில் பணம் எடுத்துச் செல்லப்படும் தகவல் வருவாய்த் துறை அதிகாரிகளுக்குக் கிடைக்கவே, நேற்று முன்தினம் மாலையில் கரூர் மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டே தலைமையிலான அதிகாரிகள் ரெய்டுக்குக் கிளம்பினர். தொடர்ந்து இரண்டு நாட்களாக தீவிர ரெய்டு நடந்து வருகிறது. தேர்தல் செலவு கணக்குப் பார்வையாளர் ஆசிஷ், வருமான வரித்துறை அதிகாரி மணிகண்டன், டி.ஆர்.ஓ அருணா ஆகியோரும் விசாரணையில் இறங்கியுள்ளனர். சோதனையில், 12 பணம் எண்ணும் இயந்திரங்கள், பணத்தைக் கட்டும் ரப்பர் பேண்டுகள், சரக்கு அடைக்கப்படும் காலி பெட்டிகள், நான்கு கார்கள், ஒரு ட்ராக்டர், ஒரு ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால், பிடிபட்டது வெறும் 10.3 லட்ச ரூபாய்தான் என தேர்தல் அதிகாரிகள் சொல்கின்றனர். "பத்து லட்ச ரூபாய்க்காக மூன்று நாட்கள் ஏன் விசாரணை நடத்த வேண்டும்?" எனவும் கேள்வி எழுப்புகிறார்கள் அரவக்குறிச்சி மக்கள்.
அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட அய்யம்பாளையத்தில் அன்புநாதனின் தோப்பு இருக்கும் தெருவுக்குள் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. குடோனுக்குள் நடக்கும் விஷயங்கள் மர்மமாகவே இருக்கின்றன. குடோனின் இரும்புக் கதவில் இருந்த இரண்டு ஓட்டைகள் வழியாக படம் எடுத்த போட்டோகிராபர்களும் விரட்டப்பட்டனர். இப்போது அந்த இரண்டு ஓட்டைகளையும் அடைத்துவிட்டனர். அன்புநாதனின் வக்கீல்கள் தொடர் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, 'மேலிடத்தின் உத்தரவின்பேரில்தான் சோதனை நடத்துகிறோம்' என அதிகாரிகள் தெரிவித்தனர். இன்னும் ரெய்டு முடியவில்லை. இந்த நிமிடம் வரையில் அதிகாரிகள் அன்புநாதனிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இதுபற்றி நம்மிடம் பேசிய கரூர் அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர், " அன்புநாதனின் குடோன் அமைந்துள்ள தோப்பில் அண்டர்கிரவுண்ட் அறை ஒன்று உள்ளது. அதற்குள் கட்டுக்கட்டாகப் பணக் குவியல் இருந்துள்ளது. 100 கோடி ரூபய் வரையில் பிடிபட்டுள்ளது என்கிறார்கள். இவ்வளவு தொகை பிடிபட்டது என்றால், வெறும் பத்து லட்ச ரூபாய் பிடிபட்டதாக அதிகாரிகள் ஏன் பொய் சொல்ல வேண்டும்? பத்து லட்சத்தை எண்ணுவதற்கு மூன்று நாட்கள் தேவைப்படுமா? அத்தனையும் பொய்யான தகவல்கள். அன்புநாதனின் அப்பா கரூரில் பாலிடெக்னிக் கல்லூரியை நடத்த வந்தவர். அன்புவின் தங்கை கணவர் மூலம்தான் அ.தி.மு.கவின் நெருங்கிய வட்டத்திற்குள் வந்தவர்.
இந்த ஆட்சியில் அன்புவின் திடீர் வளர்ச்சி அனைவரையும் அசர வைத்தது. போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜியின் உறவினர்தான் அன்புநாதன். கடந்த பதினைந்து நாட்களாகவே குடோனுக்குள் ஆம்புலன்ஸ் வந்து போய்க் கொண்டிருந்தது. யாரோ ஒருவர் சீரியஸாக இருப்பது போலக் காட்டிக் கொண்டு, ஆம்புலன்ஸ் சைரனை ஒலிக்கவிட்டு பணத்தைக் கடத்தியுள்ளனர். குடோனில் ரெய்டு நடந்த அன்றே, கரூர் பைபாஸ் சாலையில் ஆம்புலன்ஸ் ஒன்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த ஆம்புலன்ஸ் பற்றி எந்தத் தகவலையும் அதிகாரிகள் வெளியில் சொல்லவில்லை.
கடந்த தேர்தலின்போதும் ஆம்புலன்ஸில் மூலம்தான் பணத்தைப் பட்டுவாடா செய்தனர். இந்தத் தேர்தலிலும் இதேமுறையைக் கையாள்கின்றனர். இதுவரையில், குடோனில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தொகையின் மதிப்பு 100 கோடியைத் தாண்டும். இதுதவிர, ஏராளமான சொத்துப் பத்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலேயே அதிகப் பணம் புழங்கும் இடமாக அரவக்குறிச்சி உள்ளது. செந்தில்பாலாஜி இங்குதான் போட்டியிடுகிறார். ஆம்புலன்ஸ் மூலமே தொகுதியின் முக்கிய இடங்களுக்குப் பணத்தை பட்டுவாடா செய்து வந்தனர். இதைப் பற்றி நன்றாகத் தகவல் தெரிந்த அ.தி.மு.க பிரமுகர் ஒருவர்தான் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு போயிருக்கிறார்.
கடந்த தேர்தலின்போதும் ஆம்புலன்ஸில் மூலம்தான் பணத்தைப் பட்டுவாடா செய்தனர். இந்தத் தேர்தலிலும் இதேமுறையைக் கையாள்கின்றனர். இதுவரையில், குடோனில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தொகையின் மதிப்பு 100 கோடியைத் தாண்டும். இதுதவிர, ஏராளமான சொத்துப் பத்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலேயே அதிகப் பணம் புழங்கும் இடமாக அரவக்குறிச்சி உள்ளது. செந்தில்பாலாஜி இங்குதான் போட்டியிடுகிறார். ஆம்புலன்ஸ் மூலமே தொகுதியின் முக்கிய இடங்களுக்குப் பணத்தை பட்டுவாடா செய்து வந்தனர். இதைப் பற்றி நன்றாகத் தகவல் தெரிந்த அ.தி.மு.க பிரமுகர் ஒருவர்தான் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு போயிருக்கிறார்.
ரெய்டு நடந்த அன்று கலெக்டர் ராஜேஷ் சென்னையில் இருந்தார். மிகத் தாமதமாகத்தான் ரெய்டு குறித்த தகவலே அவருக்குத் தெரிய வந்துள்ளது. அதற்குள் முக்கிய அமைச்சர் ஒருவர், கார்டன் பெயரைச் சொல்லிக் கொண்டு சத்தம் போட்டிருக்கிறார். மூத்த அதிகாரிகள் சிலர் ரெய்டில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு சில குறிப்புகளைத் தந்துள்ளனர். அநேகமாக, ஓ.பி.எஸ் உள்ளிட்ட அமைச்சர்களின் சொத்துக்களை கார்டன் டீம் பறிமுதல் செய்தது போலவே, செந்தில்பாலாஜியின் நெருங்கிய வட்டங்களிலும் பறிமுதல் வேலை நடப்பதாக சந்தேகிக்கிறோம்" என்றார் விரிவாக.
அய்யப்பாளையத்தில் என்ன நடக்கிறது? என்ற ரகசியத்தை அவிழ்க்க ஆணையம் தயாராக இல்லை. அன்புநாதனை கையில் வைத்துக் கொண்டே அமைச்சர்கள் சிலரை நெருக்கும் முயற்சியில் கார்டன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிறது. 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தும் தேர்தல் ஆணையம், 100 சதவீத உண்மையை அரவக்குறிச்சி மக்களுக்கு விளக்குமா?
அய்யப்பாளையத்தில் என்ன நடக்கிறது? என்ற ரகசியத்தை அவிழ்க்க ஆணையம் தயாராக இல்லை. அன்புநாதனை கையில் வைத்துக் கொண்டே அமைச்சர்கள் சிலரை நெருக்கும் முயற்சியில் கார்டன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிறது. 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தும் தேர்தல் ஆணையம், 100 சதவீத உண்மையை அரவக்குறிச்சி மக்களுக்கு விளக்குமா?

No comments:
Post a Comment