பெங்களூருவில் வசிக்கும் அ.தி.மு.கவின் ஃபேஸ்புக் பிரபலம் பிரியா குருநாதனின் வெல்வெட் கேக் விளக்கம், சமூகவலைத்தளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. 'வெல்வெட் கேக் ஸ்டேட்டஸ் பணக்காரத்தன்மையின் வெளிப்பாடு' எனக் கொதிக்கிறார்நாஞ்சில் சம்பத்.
அ.தி.மு.கவின் தீவிர விசுவாசியான பிரியா குருநாதன் தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில், " யார் வீட்டுக்காச்சும் விருந்தாளியா போனா தயவு செஞ்சு சும்மா போங்க. இது என்னோட ஃப்ரீ அட்வைஸ். ஆர்வகோளாறுல ஸ்வீட் வாங்கிட்டு போறேனு தர்மசங்கடத்துல தள்ளிடாதீங்க. எங்க வீட்டுக்கு நேத்து ஒருத்தர் வந்தார் கல்யாண பத்திரிகை குடுக்க. வந்தவர் ஆறு கேக் வாங்கிட்டு வந்து குடுத்தார். எதுக்கு பணத்தை விரயம் பண்ணனும். என் பொண்ணு ஓபன் பண்ணி பாத்துட்டு நீயே ஆறும் சாப்பிடுனு சிரிச்சிட்டு போய்ட்டா. ஆர்டினரி கேக் எல்லாம் எல்லாம் இப்போ யார் தொண்டைலயும் இறங்கறதில்ல. எங்க வீட்டு ப்ரிஜ்ல எப்பவுமே ஒரு choco truffle or Black forest இருக்கும். அதெல்லாம் பழகி போய் இப்போ வேற எதுவும் திரும்பி பார்க்க முடியறது இல்ல. என் பொண்ணு இன்னும் ஒரு படி மேல. என் பையன் Bangalore la software engineer. அவன ஊருக்கு வா னு உயிர எடுத்திடுவா. வரும் போது ரெட் வெல்வெட் கேக் வாங்கிட்டு வரனும் அவன். ஒரு கேக் 250 ரூபாய்தான். காலம் இப்படி இருக்கு. ஆறு கேக்கும் என் வீட்ல வேலை செய்யும் அம்மணிக்கு பாசமா குடுத்தது தான் மிச்சம்…." என வெல்வெட் கேக் மகிமையை விளக்கியிருந்தார்.
அ.தி.மு.கவின் தீவிர விசுவாசியான பிரியா குருநாதன் தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில், " யார் வீட்டுக்காச்சும் விருந்தாளியா போனா தயவு செஞ்சு சும்மா போங்க. இது என்னோட ஃப்ரீ அட்வைஸ். ஆர்வகோளாறுல ஸ்வீட் வாங்கிட்டு போறேனு தர்மசங்கடத்துல தள்ளிடாதீங்க. எங்க வீட்டுக்கு நேத்து ஒருத்தர் வந்தார் கல்யாண பத்திரிகை குடுக்க. வந்தவர் ஆறு கேக் வாங்கிட்டு வந்து குடுத்தார். எதுக்கு பணத்தை விரயம் பண்ணனும். என் பொண்ணு ஓபன் பண்ணி பாத்துட்டு நீயே ஆறும் சாப்பிடுனு சிரிச்சிட்டு போய்ட்டா. ஆர்டினரி கேக் எல்லாம் எல்லாம் இப்போ யார் தொண்டைலயும் இறங்கறதில்ல. எங்க வீட்டு ப்ரிஜ்ல எப்பவுமே ஒரு choco truffle or Black forest இருக்கும். அதெல்லாம் பழகி போய் இப்போ வேற எதுவும் திரும்பி பார்க்க முடியறது இல்ல. என் பொண்ணு இன்னும் ஒரு படி மேல. என் பையன் Bangalore la software engineer. அவன ஊருக்கு வா னு உயிர எடுத்திடுவா. வரும் போது ரெட் வெல்வெட் கேக் வாங்கிட்டு வரனும் அவன். ஒரு கேக் 250 ரூபாய்தான். காலம் இப்படி இருக்கு. ஆறு கேக்கும் என் வீட்ல வேலை செய்யும் அம்மணிக்கு பாசமா குடுத்தது தான் மிச்சம்…." என வெல்வெட் கேக் மகிமையை விளக்கியிருந்தார்.
பிரியாவின் பதிவுக்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அதில் ஒருவர், ' உங்க தலைவி தமிழ்நாட்டு மக்கள அடிமை மாதிரி டீரிட் பண்றதான் நீங்க உங்க வூட்ல பண்ணிட்டு இருக்கீங்க…' எனக் கொதிக்க, இன்னொருவரோ, ' வீட்ல வேலை செய்யரவங்கள அடிமை மாதிரி நடத்தனும்.. நம்ம குடுக்கறததான் அவங்க தின்னனும்.. அப்பறம் பப்ளிசிட்டி தேட இந்த மாதிரி போஸ்ட் போட்டு நாங்க ஆர்த்தடாக்ஸ் அய்யோடக்ஸ்ன்னு பொங்கணும்…' என ஆவேசப்பட்டிருந்தார். பிரியாவின் ஸ்டேட்டஸுக்கு எதிராக பொங்கித் தீர்க்கின்றனர் நெட்டிசன்கள்.
இந்நிலயில், 'அ.தி.மு.ககாரங்களுக்கு வெல்வெட் கேக் மட்டும்தான் பிடிக்குமா?' என அ.தி.மு.கவின் நட்சத்திரப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்திடம் கேட்டோம்.
இந்நிலயில், 'அ.தி.மு.ககாரங்களுக்கு வெல்வெட் கேக் மட்டும்தான் பிடிக்குமா?' என அ.தி.மு.கவின் நட்சத்திரப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்திடம் கேட்டோம்.
" வெல்வெட் கேக்கைப் பற்றி நான் கேள்விப்பட்டதில்லை. கேக் சாப்பிட வேண்டும் என்று நினைப்பதுகூட கிடையாது. பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு வலுக்கட்டாயமாக சில இடங்களுக்குச் சென்றால் கேக்கை ஊட்டுவார்கள். அதை வாயில் வாங்கி வைத்துக் கொண்டு அடுத்த ஒரு நிமிடத்தில் அந்தக் கேக்கை துப்பி விடுவேன். பிளம் கேக் என்று சொல்வார்கள். பசி இருந்து, நான் விரும்புகிற உணவு கிடைக்காவிட்டால் பசியைத் தீர்த்துக் கொள்ள பிளம் கேக் சாப்பிடுவேன். இப்போது அதையும் சாப்பிடுவதில்லை. வெல்லா இருக்கறவர்கள் வெல்வெட் கேக் சாப்பிடுவாங்க.
பிரசாரத்திற்குப் போகும் இடங்களில் ரோட்டோர கடைகளில் சூடான தோசை சாப்பிடுவது மட்டும்தான் பிடிக்கும். பட்டினியும் பசியோடும் இருந்த ஒரு காலம் இருந்தது. பண்டிகை காலங்களில் இட்லி, தோசை சாப்பிடும் நிலைமை இருந்தது. இப்போது அந்த நிலைமை இல்லை. ஏழை வீட்டில்கூட தோசை, இட்லி வழக்கமான உணவாக மாறிவிட்டது. இன்றைக்கு ஏழைகள் என்று யாரும் இல்லை. அந்தப் பெண்மணியின் ஸ்டேட்டஸில் ஒரு பணக்காரத்தனம் இருக்கிறது. இதற்கும் கழகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஏழை மக்களின் நம்பிக்கையைப் பெற்ற இயக்கம் அ.தி.மு.க. விளிம்புநிலை மக்களுக்காகத்தான் அம்மா உழைக்கிறார். ஏதோ ஒரு கட்சிக்காரர் வெளியிடும் பதிவுகளையெல்லாம் பொருட்படுத்த வேண்டியதில்லை" என்றார் கொதிப்போடு.
வெல்வெட் கேக் சர்ச்சையின் மூலம் அ.தி.மு.க பணக்கார்களின் கட்சி என்ற விவாதம் இப்போதைக்கு முடிவுக்கு வருவது போல் தெரியவில்லை.

No comments:
Post a Comment