
பீகார் மாநிலத்தில் கொளுத்தும் வெயில் காரணமாக அடிக்கடி ஏற்படும் தீ விபத்துக்களைத் தடுக்க, காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை சமைக்கவோ, யாகங்கள் செய்யவோ, மாநில அரசு தடை விதித்துள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து அனல் காற்று வீசுகிறது. பீகார், ஒடிசா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இயல்பைக்காட்டிலும் வெப்பம் அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து அனல் காற்று வீசுகிறது. பீகார், ஒடிசா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இயல்பைக்காட்டிலும் வெப்பம் அதிகரித்துள்ளது.

வட மாநிலங்களில் கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், தகிக்கும் வெயிலுக்கு பீகாரில் கடந்த இருவாரங்களில் மட்டும் 66 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். அதேபோல், 1,200க்கும் மேற்பட்ட விலங்குகளும் பலியாகியுள்ளன. இதற்கு தீர்வு காணும் வகையில், ஒரு வினோத தீர்வை பீகார் அரசு கண்டறிந்துள்ளது.
அதற்காக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, பகல் நேரங்களில் மக்கள் தங்கள் வீடுகளில் சமைக்க கூடாது என்பதாகும். அதாவது காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வீட்டில் யாரும் சமைக்க கூடாது. கோயில் மற்றும் எந்த வழிபாட்டுக்காகவும், யாகங்கள் நடத்துவதையும் தவிர்க்க வேண்டும்.
அதற்காக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, பகல் நேரங்களில் மக்கள் தங்கள் வீடுகளில் சமைக்க கூடாது என்பதாகும். அதாவது காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வீட்டில் யாரும் சமைக்க கூடாது. கோயில் மற்றும் எந்த வழிபாட்டுக்காகவும், யாகங்கள் நடத்துவதையும் தவிர்க்க வேண்டும்.

இந்த விதியை மீறுபவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடும் வெப்பத்தோடு பலத்த காற்றும் வீசுவதால், சமையல் செய்வதற்காக பயன்படுத்தும் தீ, குடிசைப்பகுதிகளுக்கு பரவி பெரும் விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால் இத்தகைய தடை விதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன், பெகுசாரி மாவட்டத்தில் 300 குடிசைகள் தீ விபத்தில் சிக்கியது. இதில் சிக்கி படுகாயம் அடைந்த 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தீ விபத்து எப்படி நடந்தது என்பதை பற்றி முழுமையாக ஆய்வு செய்த பின்தான் மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பீகார் மாநில அரசின் மூத்த அதிகாரி தெரிவித்து உள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன், பெகுசாரி மாவட்டத்தில் 300 குடிசைகள் தீ விபத்தில் சிக்கியது. இதில் சிக்கி படுகாயம் அடைந்த 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தீ விபத்து எப்படி நடந்தது என்பதை பற்றி முழுமையாக ஆய்வு செய்த பின்தான் மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பீகார் மாநில அரசின் மூத்த அதிகாரி தெரிவித்து உள்ளார்.

No comments:
Post a Comment