Monetize Your Website or Blog

Wednesday, 16 March 2016

காளான் உற்பத்தி!!

காளான் உற்பத்தி செய்வது என்பது ஒரு கடினமான வேலையில்லைகாளான் உற்பத்திசெய்ய ஓரளவுக்கு படித்திருந்தாலே போதும்வருடம் முழுவதும் உற்பத்தி செய்யலாம்.ஆனால் கோடை காலத்தில் 30 -40% மகசூல் குறைவாக கிடைக்கும்.

சிப்பிக்காளான் கடல் சிப்பியின் தோற்றமுடையதாய் இருப்பதால்தான் இவற்றுக்கு இந்தபெயர் வந்ததுபொதுவாக சிப்பிக் காளானில் வைட்டமின் பீ அதிகமாக இருப்பதால் இதயம்சம்பந்தமான நோய்களை குணப்படுத்துகிறதுவைட்டமின் பீ-ல் உள்ள போலிக் ஆசிட் அதில்இருப்பதால் ரத்தசோகை நோய்க்கு நல்லதுநார்ச்சத்து உள்ளதால் நாம் உண்ணும்உணவுகள் நன்றாக செரிமானம் அடைய நிவாரணியாக செயல்படுகிறது.





வயிற்றுப்புண்களை குணப்படுத்துகிறதுவயோதிகப்பருவத்தில் ஏற்படும் கால்மூட்டுவலிகளை மிக அற்புதமாக சிப்பிக்காளான் குணப்படுத்துகிறதுசிறந்தகண்பார்வைக்கும் எலும்புகளின் வளர்ச்சிக்கும் பற்களின் உறுதிக்கும் தேவையான தாமிர,இரும்பு சத்துகளுடன் கூடிய கால்சியம்பாஸ்பரஸ்பொட்டாசியம் போன்ற தாதுக்களும்காளானில் உள்ளனஒரு மனித உடலுக்கு எவை எவை எநத எந்த அளவுக்குதேவைப்படுமோ அந்த அளவிற்கு சத்துப் பொருட்கள் சிப்பிக்காளானில் உள்ளதுஎனவேசிப்பிக்காளான் ஒரு முழுமையான உணவாகும்சிறியவர் முதல் பெரியவர் வரைசிப்பிக்காளானை வாரம் இருமுறை உணவில் சேர்த்து உண்ணலாம்சிப்பிக்காளானைஅடிக்கடி உணவில் சேர்த்து உண்பதால் வயோதிகப்பருவத்தை தள்ளிப்போடுகிறது.இளமையை அள்ளித்தருகிறது.

வைக்கோல் தயாரிப்பு:
 காளான் வளர்ப்பதற்கு நெல் வைக்கோலைக் கொண்டு உருளை படுக்கைகள் தயாரிக்கவேண்டும்புதிய நெல் வைக்கோலை 5 செ.மீநீளத்திற்கு வெட்டி, 4-5 மணி வரை நீரில்ஊறவைக்க வேண்டும்பிறகு வைக்கோலை நன்கு கொதிக்கும் நீரில் ஒரு மணிநேரம்வேகவிட வேண்டும்பின் வைக்கோலை அகற்றி உலர்த்திக் கொள்ள வேண்டும்.

காளான் படுக்கை தயாரித்தல்: 
2க்கு 1 அடி அளவுக்கு 80 காஜ் கனமுள்ள பாலிதீன் பைகளில் அடுக்கு முறையில் காளான்விதையிடப்பட்ட படுக்கைகள் தயாரிக்கப் படுகிறதுபாலிதீன் பையின் அடிப்பகுதியைசணலால் கட்டி அதை உள்பக்கமாக திருப்பிவிட வேண்டும்பையின் அடிப்பகுதியில் 5செ.மீஉயரத்திற்கு வைக்கோல் துண்டுகளை பரப்பி அதன் மேல் 30 கிராம் காளான் வித்தைதூவ வேண்டும்இதே போல் 4 அடுக்குகள் தயாரித்து மேல்பகுதியில் 5 எச்.மீவைக்கோல்பரப்பிபையின் வாய்பகுதியை சணலால் இறுக்க கட்டவேண்டும்பாலிதீன்மையப்பகுதியில் பென்சில் அளவுள்ள 5-10 துளைகள் போடவேண்டும்.

காளான் வித்து பரவும் முறை:

மேற்கூறிய முறையில் தயாரிக்கப்பட்ட உருளைப் படுக்கைகளை வயரில் கட்டிதொங்கவிட வேண்டும்படுக்கையில் பூசண விதைகள் பரவுவதற்கு 15 நாட்கள்ஆகும்பின்படுக்கைகளைக் காளான் தோன்றும் அறைக்கு மாற்ற வேண்டும்.

                                            


காளான் அறை: 

காளான் பூசணம் முழுமையாக பரவி ஒரு வாரத்திற்குள் பையைக் கிழித்துக்கொண்டுவெளியே வரும்காளான் மொட்டு தோன்றிய மூன்று நாட்களில் பெரியதாகிவிடும்.அவற்றை அறுவடை செய்த பின் பாலிதீன் பையை நீக்கிவிட வேண்டும்அறையின்வெப்பநிலைஈரப்பதத்தை தேவையான அளவு பராமரிக்க மணலில் தண்ணீர் தெளிக்கவும்.

காளான் அறுவடை:
காளான்களை அறுவடை செய்தபின் படுக்கைகள் மீது தண்ணீர் தெளிக்க வேண்டும்ஒருவார இடைவெளியில் மீண்டும் காளான் அறுவடைக்கு வரும்இதுபோல் 3 முறைஅறுவடை செய்யலாம்ஒரு படுக்கை தயார் செய்ய 500 கிராம் வைக்கோல்பயன்படுத்தினால் 900  கிராம் மகசூல் கிடைக்கும்மேற்கூறிய முறையில் காளான் வளர்ப்புசெய்து அதிக மகசூல் பெற்று விவசாயிகள் பயனடையலாம். 



No comments:

Post a Comment