வந்தாச்சு,கடலையைப் பிரிக்கும் கருவி…ஆள் பற்றாக்குறைக்குஅருமையானத் தீர்வு…!
விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாகி விட்டசூழ்நிலையில், பயறு, உளுந்து போல… கடலை விவசாயத்தையும் பல்வேறுசிரமங்களுக்கிடையே விவசாயிகள் விவசாயத்தை தொடர்ந்து கொண்டுதான்இருக்கின்றனர்.இந்தப் பிரச்சனையை சமாளிக்க புதுச்சேரியைச் சேர்ந்த தலைமைஆசிரியர் அந்தோணி, தீவிரமாக முயற்சி எடுத்து, செடியில் இருந்து கடலைக்காய்களைப் பிரித்தெடுக்கும் இயந்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
“நானும் ஒரு காலத்துல விவசாயிதான். ஆனா, ஆசிரியர் வேலைக்கு வந்த பிறகு, அதையெல்லாம் விட்டாச்சு. என்கூட வேலை பார்க்கிற ஆசிரியர் ஒருத்தர்,அவரோட தோட்டத்துல கடலை அறுவடை பண்றப்பெல்லாம் மூட்டைக் கணக்குலபள்ளிக்கூடத்துக்குக் கொண்டு வந்து எல்லா வாத்தியார்களுக்கும் பிரிச்சுக்கொடுப்பார். ஆனா… ரெண்டு, மூணு வருஷமா அவர் கடலை கொண்டு வரலை.காரணம் கேட்டப்போ… ‘வேலைக்கு ஆள் கிடைக்கலைன்னு சோகமா சொன்னார்.அந்த விஷயம் என்னை ரொம்பவே பாதிச்சுடுச்சு. ‘ இதுக்கு ஏதாவது ஒரு வகையிலநாம தீர்வைக் கண்டுபிடிச்சாகணும்’னு அப்பவே உள்ளுக்குள்ள ஒரு தீர்மானம்போட்டேன்.
எங்கள் வீட்டில் விவசாயம் செய்த காலத்தில் கடலைக் கொடியில் இருந்துகடலையைப் பிரித்து எடுப்பதற்காக ஒரு சின்னக் குழியை வெட்டி அதில் கடலைக்கொடிகளைப் போட்டு, நடுவில் ஒரு குச்சியை வைத்து அடிப்போம். கடலைக்காயெல்லாம் தனியாக வந்துவிடும். அதை வைத்தே கடலைப் பிரிக்கறதுக்கானகடலையை வடிவமைத்தேன்.
சொந்த ஊர், கள்ளக்குறிச்சி அருகில் உள்ள அழகாபுரம் ஆசிரியர் படிப்புபடித்துவிட்டு, குடும்பத்துக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் பார்த்து வந்தேன்.ஆசிரியர் பணி கிடைக்கவே விவசாயத்துக்கு விடைகொடுத்தேன். இருந்தாலும்அப்போதிருந்தே விவசாயக் கருவிகளின் மீது இருந்த ஈடுபாடு காரணமாக அவைபற்றிய விவரங்களைச் சேகரித்து வந்தேன்.
முக்கால் அங்குலத்தில் ‘எல் ஆங்கில்’ பட்டையில் படத்தில் காட்டியுள்ளது போலநான்கு புறமும் சட்டம் அமைத்து, கீழ்பகுதியில் கால்கள், மோட்டார்பொருத்துவதற்கான அமைப்பு ஆகியவற்றை செய்து கொள்ள வேண்டும். அதன்நீளவாக்கில் இருபுறமும் அரை வட்டத்தில் சட்டத்தை இணைத்து, மேல்புறம்திறந்திருப்பது போல முன், பின் பக்கங்களில் தகடை இணைக்க வேண்டும்.கருவியின் கீழ் மோட்டார் பொருத்தி, மேல்புறம் இரண்டு பக்கமும் ஒவ்வொருபேரிங் அமைத்து, அதன் நடுவே, ‘புல்லி’யுடன் கூடிய உருளையை தயார் செய்துகொள்ள வேண்டும்.
உருளையின நான்கு பக்கங்களிலும் செவ்வக வடிவில் தயார் செய்யப்பட்டஇரும்புப் பட்டையைப் பொருத்தி, பேரிங் மற்றும் மோட்டாருடன் பெல்ட் மூலம்இணைக்க வேண்டும். கீழ்ப்பகுதியில் சரியாக சல்லடைத் தகடைப் பொருத்தி,பின்புறம் மற்றும் இடப்பக்கம் ஆகிய பகுதிகளை பலகையால் அடைத்துக் கொள்ள வேண்டும். மேற்புறமிருந்து கடலைக் கொடியை உள்ளே காட்டக் காட்ட,பட்டைகள் சுழன்று கொடியிலிருந்து ‘தட்தட்’ டென்று கடலைகள் தனித்தனியேபிரித்து வந்து விழுந்தன.
கையில் ஆயும் போது நாள் முழுக்க ஒருத்தர் ஆய்ஞ்சாலும், ஒரு மூட்டையைஆய்வதே கஷ்டம். ஆனா, இந்தக் கருவி மூலமா ஒரு மணி நேரத்துல ஒருமூட்டைக்கு ஆய்ஞ்சுடலாம். இந்தக் கருவியை வடிவமைக்க நாலாயிரம்ரூபாய்தான் செலவாகும். பட்டை, மோட்டார்னு சொல்லும் போதுதான் புரிஞ்சுக்ககஷ்டமா இருக்கும். ஒரு தடவை நேர்ல பார்த்துட்டா… சுலபமா புரிஞ்சுடும். பெரியதொழில்நுட்பம் எதுவும் கிடையாது. தேவைப்படுறவங்க நேர்ல வந்தாலும்சொல்லித் தர்றதுக்கு தயாரா இருக்கிறேன் என்று கூறுகிறார்.
கையில் ஆயும் போது நாள் முழுக்க ஒருத்தர் ஆய்ஞ்சாலும், ஒரு மூட்டையைஆய்வதே கஷ்டம். ஆனா, இந்தக் கருவி மூலமா ஒரு மணி நேரத்துல ஒருமூட்டைக்கு ஆய்ஞ்சுடலாம். இந்தக் கருவியை வடிவமைக்க நாலாயிரம்ரூபாய்தான் செலவாகும். பட்டை, மோட்டார்னு சொல்லும் போதுதான் புரிஞ்சுக்ககஷ்டமா இருக்கும். ஒரு தடவை நேர்ல பார்த்துட்டா… சுலபமா புரிஞ்சுடும். பெரியதொழில்நுட்பம் எதுவும் கிடையாது. தேவைப்படுறவங்க நேர்ல வந்தாலும்சொல்லித் தர்றதுக்கு தயாரா இருக்கிறேன் என்று கூறுகிறார்.
தொடர்புக்கு
தலைமை ஆசிரியர் அந்தோணி
புதுச்சேரி
தலைமை ஆசிரியர் அந்தோணி
புதுச்சேரி


No comments:
Post a Comment