கடந்த 5 ஆண்டுகளாக பொதுமக்களின் கோரிக்கையை புறக்கணித்த தமிழக அரசு, தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் புதுக்கோட்டை மாவட்ட மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், 9 ஏ நத்தம்பண்ணை ஊராட்சியை சேர்ந்த பாலன் நகர் பகுதியில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தார் சாலை தற்போது போடப்படுகிறது.
கடந்த 5 ஆண்டுகளாக இந்த சாலையை போடுமாறு பொதுமக்கள் பலமுறை கூறியும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் நேற்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்தில் தார் சாலை அமைக்கும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த 5 ஆண்டுகளாக இந்த சாலையை போடுமாறு பொதுமக்கள் பலமுறை கூறியும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் நேற்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்தில் தார் சாலை அமைக்கும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதை 5 ஆண்டுகளுக்கு முன்னர் போட்டிருந்தால் இத்தனை வருடங்கள் அனுபவித்த கஷ்டங்கள் இருந்திருக்காது. இப்பொழுது அவர்களுக்கு ஓட்டு வேண்டும் என்பதற்கு சாலை போடுகின்றனர் என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.

No comments:
Post a Comment