அந்த அரங்குக்குள் ஒவ்வொருவராக நுழைந்தபோது, பெரும்பாலானவர்களின் முகங்களில் கவலைரேகை... 'ஏதோ சொன்னாங்க வந்திருக்கோம்... என்னத்த சொல்லப்போறாங்களோ... இவங்க சொல்றதுநம்மளோட கவலையைப் போக் கிடுமா...' என்று ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு விதமானஎண்ண ஓட்டங்கள்.
ஆனால், நான்கு மணி நேரத்துக்குப் பிறகு அரங்கை விட்டு அவர்கள் வெளியேறியபோது...ஒவ்வொருவரின் முகத்திலும் உற்சாக வெள்ளம்- நிச்சயமாக சாதிப்போம் என்றபடியே பலரும் வீரநடைபோட்டது ஆச்சர்யப்பட வைப்பதாக இருந்தது.
'உலுக்கி எடுக்கும் உரத் தட்டுப்பாடு... சமாளிப்பது எப்படி... வழிகாட்டுகிறார் நம்மாழ்வார்' என்றதலைப்பில் ஜூன் 17-ம் தேதியன்று திருவாரூரில் பயனுள்ள பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது. பசுமைவிகடன் மற்றும் திருவாரூர்-விஜயபுரம் வர்த்தகர் சங்கம் இணைந்து நடத்திய இக்கூட்டம், பைபாஸ்சாலையில் உள்ள வர்த்தகர் சங்க கட்டடத்தில் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரைநடைபெற்றது. திரளாக வந்திருந்த விவசாயிகள் அரங்கை நிறையச் செய்ய, அமைதியாகஆரம்பமானது பயிற்சிக் கூட்டம். வர்த்தகர் சங்கத் தலைவர் வி.கே.எஸ். அருள் தலைமை ஏற்க, அதைத்தொடர்ந்து பேசத் தொடங்கினார் நம்மாழ்வார்.
"மேட்டூர் அணை எப்ப திறப்பாங்கனு தினமும் செய்தித்தாள்களை பார்த்துக் கொண்டிருந்தனர்விவசாயி கள்.. ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப் பட்டுவிட்டது. என்றாலும் விவசாயிகள்சந்தோஷமாக இல்லை. காரணம், உரத் தட்டுப்பாடு. இதையே ஒரு நல்ல சந்தர்ப்பமாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ரசாயன உரங்களைப் போடப்போட மண்ணின் வளம் குறைந்துகொண்டே போகிறது. 15 ஆண்டுகளுக்குமுன் ஜக்கிய நாடுகள் சபையைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து, சோதனை செய்துவிட்டு, 'தஞ்சை மாவட்டநிலங்களில் நுண்ணுயிரிகளே இல்லை' என்றனர். அந்தளவுக்கு ரசாயன உரங்கள் மண்ணின்வளத்தையே அழித்துவிட்டன. மகசூலும் படிப்படியாக குறைந்துவிட்டது.
விவசாயிகள் கணக்கு பார்த்தால் செலவே அதிகம். அதனால்தான் விவசாயி ஏழையாகவேஇருக்கிறான். டி.ஏ.பி விற்பவன் கோடீஸ்வரன், யூரியா விற்பவன் கோடீஸ் வரன், சூப்பர் பாஸ்பேட்விற்பவன் கோடீஸ் வரன். ஆனால், விவசாயி கடனாளி.
விவசாயிகளிடமிருந்து நெல்லை வாங்கு பவன் கோடீஸ்வரன், தவிட்டில் இருந்து எண்ணெய்எடுப்பவன் கோடீஸ்வரன், மாட்டுத் தோலில் இருந்து செருப்பு தயாரிப் பவன் கோடீஸ்வரன்... ஆனால்,விவசாயி கடனாளி. இந்த இழிநிலை மாற வேண்டும்'' என்றெல்லாம் சொன்ன நம்மாழ்வார், ஏகப்பட்டதொழில்நுட்பங்களையும் எடுத்து வைத்துப் பேச, எல்லாவற்றையும் குறிப் பெடுத்துக் கொண்டனர்விவசாயிகள்.
அடுத்து, அனுபவ விவசாயிகளின் அணிவகுப்பு....
பள்ளத்தூர் முருகையன் "நாலு ஏக்கர்ல 300 தென்னை மரம் வெச்சிருக்கேன். நாலு வருஷத்துக்குமுன்னாடி வரைக்கும் யூரியா, சூப்பர் பாஸ்பேட், பூச்சிக்கொல்லினு பணத் துக்கு கேடா செலவழிச்சேன்.உரம் வைக்க, பூச்சி மருந்து அடிக்க, கூலி ஆளுக்கு, உரம், பூச்சிக்கொல்லி வாங்கனு எதுக்கெடுத்தாலும்செலவுதான். ஆனா, காய் ரொம்ப சின்ன தாவே இருக்கும். ஆறாயிரத்துல இருந்து ஏழாயிரம் காய்தான்காய்க்கும். ஒரு கட்டத்துல... பஞ்சகவ்யா, அமுதக் கரைசல், மூலிகை பூச்சிவிரட்டி இதையெல் லாம்பயன்படுத்தத் தொடங்கினதுமே ஏகப்பட்ட பணம் மிச்சமாக ஆரம்பிச்சிருச்சி. ஆள் செலவுகுறைஞ்சதோட... நோய் தாக்குதலும் காணாம போச்சி. அதேசமயம், விளைச்சலும் கூடிப் போச்சி.
இதைத் தொடர்ந்து மா, எலுமிச்சை, கடலை, கம்புனு எல்லாத்தையுமே இயற்கை யில செய்யதொடங்கிட்டேன்" என்று அவர் அடுக்கிக் கொண்டே போக... அத்தனை விவசாயிகளும் ஆச்சர்யம்விலகாமல் அவரை பார்த்தனர்.
கட்டிமேடு ஜெயராமன் "ரசாயன விவசாயம் செஞ்சப்ப ஒரு ஏக்கருக்கு 24 மூட்டைதான் நெல்கிடைச்சுது. இப்போ இயற்கையில, அதுவும் ஒற்றை நாற்று நெல் சாகுபடி செய்றேன். ஏக்கருக்குகிட்டதட்ட 45 மூட்டை நெல் கிடைக்குது. ரசாயன முறையில ஏக்கருக்கு ஒன்பதாயிரம் செலவாகும்.இப்போ வெறும் 4,800 ரூபாய்தான் செலவு" என்று சொல்லி தன் பங்குக்கு ஆச்சர்யம் கூட்டினார்.
முருகமங்கலம் 'லயன்ஸ்' சம்பந்தம் பிள்ளை "அடியுரம் போட டி.ஏ.பி. கிடைக்கலையேனு நீங்கள்லாம்தவிக்கி றீங்க. ஆனா, அதுக்கு டி.ஏ.பி. தேவையே இல்லங்கறதுதான் உண்மை. உங்க ஆறு, குளம்,வாய்க்கா, வரப்புனு தன் பாட்டுக்கு விளைஞ்சி கிடக்கற நெய்வேலி காட்டாமணக்கு மட்டுமே போதும்.நான் இதை மட்டுந்தான் அடியுரமா பயன்படுத் துறேன். விளைச்சலும் அமோகமா இருக்கு.
நாத்தாங்காலுக்கு ரெண்டு சால் உழவு ஒட்டி, நெய்வேலி காட்டாமணக்கை பரப்பி விட்டுட்டுட்டு, பிறகு,ரெண்டு சால் உழவு ஓட்டி, ஒரு வாரம் கழிச்சி விதைத் தெளிக் கணும். 15 நாள்லயே ஒரு சாண்உயரத்துக்கு நாத்து வளர்ந்துடும்.
சாகுபடி நிலத்துலயும் இதே மாதிரி உழவு ஓட்டி, நெய்வேலி காட்டாமணக்க பரப்பி, மறுபடியும் ரெண்டுசால் உழவு ஓட்டி, பிறகு 10 நாள் கழிச்சி நாத்து நட்டா... இலை பசுமையா இருக்கும். பூச்சி, நோய்,களையே இருக்காது. தழைச்சத்தும் நிறைய கிடைக்கும். ஏக்கருக்கு சுமாரா 2,000 கிலோ நெல் மகசூலாகிடைக்குது. ஏழு வருஷமா இதைத்தான் செய்துகிட்டிருக்கேன்.
இப்படிப்பட்ட நெய்வேலி காட்டாமணக்கை 'விஷச்செடி'னு சொல்றது அறியாமை. இது ஒருஅருமையான உரச்செடி.. இதை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்தணும்" என சொன்னதும்விவசாயிகளின் முகங்களில் ஏக மலர்ச்சி.
கீவளூர் தனபாலன் ''போன வருஷம் 40% ரசாயன உரங்களைக் குறைத்தேன். இந்தாண்டு 50%குறைத்திருக் கிறேன். படிப்படியாக இயற்கை விவசாயத்துக்கு மாறப் போகிறேன்" என்று ஆரம்பித்து,தன்னுடைய அனு பவத்தை எடுத்து வைக்க... அதைத் தொடர்ந்து மேடை யிலேயே... பஞ்சகவ்யா,அமுதக் கரைசல், மூலிகை பூச்சிவிரட்டி ஆகியவை நேரடியாக தயாரித்துக் காண் பிக்கப்பட்டன. பிறகு,அனுபவ விவசாயிகள் தயாரித் துக் கொண்டு வந்திருந்த பஞ்சகவ்யா, மூலிகை பூச்சிவிரட்டி ஆகியவைகுறைந்த விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
கவலையோடு வந்திருந்த விவசாயிகள், புறப்படும்போது மிகவும் கலகலப்பாகி, 'அருமையானபயிற்சிக் கூட்டம்... பசுமை விகடனுக்கு நிச்சயமா நன்றி சொல்லணும்' என்று பசுமைக் குழுவினரின்கைகளைப் பற்றிக் கொண்டது நெகிழ வைப்பதாக இருந்தது.

.jpg)
No comments:
Post a Comment