Monetize Your Website or Blog

Friday, 8 April 2016

பத்தாயம்... குதிர்... கோட்டை- ஏங்கித் தவிக்கும் நெல்மணிகள்!

ண்ணும் கருத்துமாக விவசாயிகளின் நெல்மணிகளை நீண்ட நாட்களுக்கு தரம் குறையாமல்பாதுகாத்து கொடுக்கும் பெட்டகமாகவும்கருவூலமாகவும்  விளங்கியவை குதிர்பத்தாயம்போன்றவை.
தமிழர்களின் வாழ்வில் நீண்டநெடுங்காலமாக உணர்வுப்பூர்வமாகவும் விஞ்ஞான பூர்வமாகவும்தொன்றுதொட்டு அங்கம் வகித்து வந்தனநமது முன்னோர்களின் தொழில்நுட்ப அறிவும்,தொலைநோக்குப் பார்வையும் இவற்றில் மிளிர்கிறது 
உணவின் மகத்துவம் கருதிஅதை எந்த அளவிற்கு  முன்னெச்சரிக்கையோடும்மரியாதையோடும்பாதுகாத்தார்கள் என்பதற்கான பளிச்சிடும் வெளிப்பாடு இவை.


25 ஆண்டுகளுக்கு முன்புவரை கிராமப்புறங்களில் மட்டுமிலலாது டெல்டா மாவட்ட நகரங்களில் உள்ளபெரும்பாலான வீடுகளில் பத்தாயம்குதிர் உள்ளிட்டவைகள் பயன்பாட்டில் இருந்தனஆனால்இன்றுஇவை இருக்கும் இடங்களை தேடி அலையும் நிலை உருவாகியுள்ளதுஇவற்றின் மகத்துவம் அறிந்தசில விவசாயிகள்இப்பொழுதும் கூட இதனை பராமரித்தும்பாதுகாத்தும்பயன்படுத்தி வருகிறார்கள். 
பெரும் செல்வந்தர்கள் மட்டுமல்ல... நிரந்தர வருமானம் ஈட்டக்கூடிய நடுத்தர வர்க்கத்தினரும்,ஓரளவுக்கு வசதி படைத்தவர்களுமே கூட,  கடைகளில் அரிசி வாங்குவதையே கவுர குறைவாககருதிய கால கட்டம் அதுநெல்லை வாங்கி பத்தாயம்குதிர் உள்ளிட்டவைகளில் கொட்டி வைத்து,அவ்வப்போது தேவைக்கேற்பஆலைகளில் அரிசியாக அரைத்து பயன்படுத்துவதை வழக்கமாகவைத்திருந்தார்கள்.


காலப்போக்கில் நவநாகரீக வாழ்க்கை முறையால் பத்தாயமும்குதிரும் விரட்டியடிக்கப்பட்டன. “இடத்தை அடைச்சிக்கிட்டு இருந்துச்சு... அதான் வேண்டாம்னு எடுத்துட்டோம்“ என சொல்பவர்களின்வாழ்விலும் பொருளாதாரத்திலும் பெரிய அளவில் வெற்றிடம் உருவானதுஅதிக விலை கொடுத்துஅரிசி வாங்கத் தொடங்கினர்.
அடுத்தக் கட்டமாகவெளிமாநிலங்களில் பணவெறியோடு அளவுக்கதிகமான ரசாயன உரங்களையும்பூச்சிக்கொல்லி மருந்துகளையும் கொட்டி  வியாபாரிகளே முன் நின்று உற்பத்தி செய்யக்கூடியபாலீஸ்செய்யப்பட்டசத்து இல்லாத சக்கை அரிசி தமிழ்நாட்டுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவி,தற்போது முழுமையாக எல்லோருடைய வீடுகளிலும் உலா வருகிறதுகிராமப்புறங்களிலும் கூடமைசூர் பொன்னிக்குதான் முழுமையான முதல் மரியாதை. 
இதெல்லாம் ஒருபுறமிருக்க... பத்தாயம்குதிர் இல்லாத விவசாயிகள்,  தங்களுடைய நெல்லை சாக்குமூட்டைகளில் வைப்பதால் பனி மற்றும் மழைக்காலங்களில் ஈரப்பதம் ஊடுருவி நெல்லின் தரத்தைசீர்குலைக்கிறதுகடுமையான கோடைகாலங்களில் வெப்பத்தின் தாக்கத்தால் கட்டு விடுதல் என்றபிரச்னை உருவெடுத்துநெல்லில் கோடுகள் உருவாகும்இதுபோன்ற நெல்லை அரைக்கும் போதுகுருணை அதிகரித்துஅரிசியின் அளவு குறையும்இதையெல்லாம் விட உச்சக்கட்ட பிரச்னை எலிதொந்தரவுசாக்கு மூடடைகளை ஓட்டைப் போட்டுருசி பார்த்து வேட்டையாடிவிடுகிறது. 
சாக்கு மூட்டைகளில் உள்ள நெல்மணிகள்அந்துப்பூச்சி களின் தாக்குதலுக்கும் ஆளாகிறது.இதுபோன்ற காரணங்களால் விவசாயிகள் தங்களுடைய உற்பத்தி நெல்லை இருப்பு வைத்துக் கொள்ளமுடியாமல்அவசர கதியில் விற்பனை செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.
விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழலைவியாபாரிகள் குறுக்கு வழியில்பயன்படுத்திவிவசாயிகளை சுரண்டுகிறார்கள்.  நெல் மணிகளை சேமித்து வைக்க முடியாததால்,விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதைநெல்லைபல மடங்கு கூடுதல் விலை கொடுத்துவெளியில் வாங்குகிறார்கள்உதாரணமாக, 60 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை நெல்லை சுமார் 900ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டுதரம் குறைவான 30 கிலோ விதை நெல்லை 900 ரூபாய்க்குவிலைக்கு வாங்கி விதைப்பு செய்கிறார்கள். 
பூச்சிபூஞ்சாணம்எலிபனிமழைவெயில் உள்ளிட்ட அனைத்துப் பிரசனைகளில் இருந்தும்விவசாயிகளை கைத்தூக்கி விடக்கூடிய உதவும் கரங்களாக... பத்தாயம்குதிர்கோட்டைஉள்ளிட்டவைகளை திகழ்கின்றனபத்தாயம்குதிர் இந்த இரண்டுமே பல அடுக்குகளாகஅமைக்கப்பட்டிருக்கும்இதற்கான காரணம்நம்மை வியக்க வைக்கிறதுபல அடி உயரம் கொண்டபத்தாயம் அல்லது குதிரின் உச்சத்திற்கு சென்று அனைத்து மூட்டைகளையும் அவிழ்த்து நெல்லைகொட்டுவதென்பது அத்தனை எளிதான காரியமல்லஒவ்வொரு அடுக்காக வைத்து நெல்லை நிரப்பிக்கொண்டே வந்தால் மிக எளிதாக வேலை முடியும்மரத்தால் செய்யப்பட்டவை பத்தாயம்.விவசாயிகள் தங்கள் தேவைக்கேற்பகுறைந்தபட்சம் 10, 20 மூட்டைகள் முதல் அதிகபட்சம் 100, 200மூட்டைகளுக்கு மேல் கொள்ளளவு கொண்ட பத்தாயம் வைத்திருந்தார்கள். 
மண்ணால் ஆன உறைகளை [உருளைகொண்டு செய்யப்பட்டவை  குதிர்ஒரு உருளைக்கும் அதன்மீதுள்ள இன்னொரு உருளைக்கும் இடையே உள்ள இடுக்குகளில் சேறு பூசப்படும்அனைத்து உருளைகளும் அமைக்கப்பட்ட பிறகு இதன் மீது முழுமையாக சாணம் பூசப்படும்இதனால் எலி கடிக்காது.அவ்வபோது தேவைக்கேற்ப கொஞ்சம் கொஞ்சமாக நெல்லை வெளியில் எடுக்ககுதிரின் கீழ்பகுதியில் திறந்து மூடும் அமைப்பு இருக்கும். 
முழுமையாக நெல் வெளியில் எடுக்கப்பட்ட பிறகுஉறைகளை லேசாக அசைத்தாலே தனிதனியாகபிரித்து எடுத்து விட்டுநெல்லை நிரப்பி மறுபடியும் அமைத்துக் கொள்ளலாம்குதிர்பத்தாயம்இவைகளில் உள்ள அடுக்குகளின் எண்ணிக்கை 3,5,7,9,12 என ஒற்றைப்படையில் தான் அமைப்பார்கள்.

விதைநெல்லின் முளைப்புத்திறன் நீண்டகாலத்திற்கு நீடித்து நிலைக்கவைக்கோலை தரையில் பரப்பி,அதனை சுற்றிலும் வைக்கோல் பிரிகளை கொண்டு கோபுரம் போல் கோட்டை கட்டப்படும்இதன் மீதுமுழுமையாக சாணம் பூசப்படும்விதைநெல் தேவைப்படும்போதுஇந்த கோட்டையை தண்ணீரில்மூழ்க வைத்துநன்கு ஊறியதும்அதனை அப்படியே நாற்றங்காலில் போடுவார்கள்வைக்கோல்,சாணம் இரண்டு மே உரமாக கைக்கொடுக்கும். 
இது எல்லாமே பழங்கதையாகிஅருங்காட்சியக பொருட்களாக மாறி வருகின்றன... புதிதாய்பிறப்பெடுக்கும் நெல்மணிகளோபாதுகாப்பான சூழல் தேடி ஏக்கத்தில் தவிக்கின்றனகுதிர்பத்தாயம்,கோட்டையின் தேவை இன்று அவசியமாகிறது. 



No comments:

Post a Comment