Monetize Your Website or Blog

Thursday, 30 June 2016

மழைக்கால கூட்டத்தொடர் : மத்திய அரசின் டார்கெட் 25 மசோதாக்கள்

மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ம் தேதி துவங்கவுள்ளது. இதில் முதற்கட்டமாக ஜி.எஸ்.டி மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இது தொடர்பான அமைச்சர்கள் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு, பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வெங்கையா நாயுடு ''ஜூலை 18ம் தேதி துவங்கி 20 நாட்கள் நடைபெறும் மழைக்காலக் கூட்டத் தொடரில் ஜி.எஸ்.டி. மசோதா உள்ளிட்ட 25 மசோதாக்களை நிறைவேற்ற விரும்புவதாகவும், அதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. இதில் ஒருமனதான நிலை எட்டப்படவில்லை என்றாலும் அதை இந்த கூட்டத் தொடரில் நிச்சயம் நிறைவேற்றுவோம். அதற்கான போதிய ஆதரவு எங்களிடம் உள்ளது என்று தெரிவித்தார்.

ஓட்டெடுப்பு என்பது இறுதியான விஷயமாக இருக்கும். கூடிய வரைக்கும் அதனை தவிர்க்கவே மத்திய அரசு விரும்புகிறது என்று கூறியுள்ளார். ஜி.எஸ்.டி. மசோதா தவிர, மருத்துவ மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு குறித்த அவசர சட்டம் ஆகியவையும் மத்திய அரசு நிறைவேற்ற நினைக்கும் 25 மசோதாக்களில் அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏற்கெனவே பாராளுமன்றத்தில் 11 மசோதாக்களும், டெல்லி மேல்-சபையில் 45 மசோதாக்களும் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளன. இந்த மழைக்கால கூட்டத்தொடரில் நிலுவையில் உள்ளவற்றில் 25 மசோதாக்களையாவது நிறைவேற்றிவிட வேண்டும் என அமைச்சகங்களுக்கு இலக்கு நிர்ணயித்துள்ளது மத்திய அரசு.

உலகப் பொருளாதாரம் ஏற்ற இறக்கத்துடன் இறுக்கும் போது ஜி.எஸ்.டி மசோதாவை நிறைவேற்றுவது அவசியம். அதற்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழிப்பு அளிக்க வேண்டும். இது குறித்து அனைத்து கட்சிகளிடம் விவாதிக்க தயாராக  உள்ளதாகவும் வெங்களையா நாயுடு தெரிவித்தார்.




No comments:

Post a Comment