Monetize Your Website or Blog

Saturday, 25 June 2016

ஆபரணங்கள் அணிவதால் பெண்களுக்கு கிடைக்கும் பலன்கள்!


பொட்டு:

நெற்றியில் பொட்டு வைப்பது பெண்களுக்கு அழகு சேர்ப்பதோடு, பொட்டு வைக்கும் பெண்களை அவ்வளவு சீக்கிரம் மெஸ்மரிசம் செய்ய முடியாது என்கின்றனர் பலர். மேலும், ஒரு பெண்ணின் முகத்தைப் பார்த்து பேசும்போது, பேசுபவர்களின் கவனமானது  நெற்றியில் வைத்திருக்கும் பொட்டின் மீதுதான் குவியும். இதனால் தவறானப் பார்வையிலிருந்தும் பொட்டுத் தடுக்கின்றது.

காதணி:

காதணி அணியும் இடத்தில் இருக்கும் நரம்பானது மூளையுடன் இணைந்திருக்கிறது. காதணி அணியும் போது மூளையின் செயல்திறன் அதிகரிப்பதோடு, கண்பார்வை திறனும் அதிகரிக்கும்.



நெற்றிச்சுட்டி:

நெற்றிச்சுட்டி தலைவலி, சைனஸ் பிரச்னையை சரி செய்கிறது.

மோதிரம்:
செக்ஸுவல் ஹார்மோன்களை தூண்டும் புள்ளிகள் மோதிர விரலில் இருப்பதால்தான் பெரும்பாலும் நிச்சயதார்த்தம் மற்றும் திருமணங்களில் மோதிரம் அணிவிக்கப்படுகிறது. மோதிர விரல் மட்டுமின்றி பிரேஸ்லெட், வாட்ச், காப்பு போன்றவையும் தாம்பத்தியத்திற்கு பெரிதும் உதவுகின்றன.

நெக்லஸ்:
கழுத்தில் ஆரம் மற்றும் நெக்லஸ் அணியும்போது உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள சக்தி ஓட்டம் சீராகும்.

வங்கி:

பெண்களின் கையின் புஜப் பகுதியில் இறுக்கமான அணிகலன்கள் அல்லது கயிறுகள் அணியும் போது உடலில் ரத்த ஓட்டம் சீராகி பதற்றம், படபடப்பு, பயம் குறைகிறது. மார்பக புற்று நோய் வருவது தவிர்க்க படுவதாக ஆய்விலே உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. லம்பாடி பெண்களுக்கு மார்பக புற்று நோய்
வருவது இல்லை என்கிறார்கள். காரணம் கையின் மணிக்கட்டில் இருந்து முழங்கைக்கு மேல் வரை நெருக்கமாக வளையல்களை அணிவதால் மார்பு பகுதியின் ரத்த ஓட்டம் சீராக வைத்திருக்க உதவுகிறது.

வளையல்:
வளையல்கள் அந்த பகுதியின் புள்ளிகளை அழுத்துவதன் மூலம் வெள்ளையணு உற்பத்தி உடலில் அதிகரிக்கிறது. முக்கியமான ஹார்மோன்கள் சுரப்பும் ரெகுலேட் செய்யப்படுகிறது.இதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும் நோய் எதிர்ப்பாற்றல் கூடும்.

ஒட்டியாணம்:


ஒட்டியாணம் அணியும்போது இடுப்புப் பகுதி நன்றாக தூண்டப்பட்டு ஆரோக்கியம் கூடும். வயிற்றுப் பகுதிகள் வலுவடையும்.

மூக்குத்தி:

மூக்கில் இருக்கும் சில புள்ளிகளுக்கும் பெருங்குடல் மற்றும் சிறுகுடலுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. அந்தப் புள்ளிகள் தூண்டப்படும்போது அது சம்பந்தமான நோய்கள் குணமாகும். மூக்குத்தி அணியும் பெண்களுக்கு சில நாட்களில் மாதவிடாய் சிக்கல் சரியாகி வருவதை உணரலாம் .

கொலுசு:

கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, சிறுநீரகம், சிறுநீர்ப்பை, வயிறு போன்ற மிக முக்கிய உறுப்புகளின் செயல் திறனை தூண்டிவிடும் அற்புதமான அணிகலன் கொலுசு. கர்ப்பப்பை இறக்க பிரச்னையை தடிமனான கொலுசு அணிவதன் மூலம் தீர்க்கலாம்.

மெட்டி:



மெட்டி அணிவது கர்ப்பப்பையை பலப்படுத்தும். செக்ஸுவல் ஹார்மோன்களைத் தூண்டும். 'பில்லாலி' என்பது குழந்தை பிறந்தவுடன் 3 வது விரலில் அணிவது. இதனால் சில புள்ளிகள் தூண்டப்பட்டு பால் சுரப்பு அதிகரிக்கும்.


No comments:

Post a Comment