ஃபெக்குஜி ஹவே டில்லி மா...' என்ற பெயரில் பிரதமர் மோடியை விமர்சித்து எழுதிய புத்தகத்துக்கு தடை விதிக்க குஜராத் உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பல்வேறு வாக்குறுதிகளையும் அளித்தார்.
அந்த தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தது. நரேந்திர மோடியும் பிரதமராக பதவியேற்றார். பா.ஜ.க ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் ஆகியும் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக்கூறி, பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் வகையில், 'ஃபெக்குஜி ஹவே டில்லி மா' (பொய் வாக்குறுதி அளித்தவர் டெல்லியில் உள்ளார்) என்ற பெயரில் காங்கிரஸ் பிரமுகர் ஜெயேஷ் ஷா என்பவர் குஜராத்தி மொழியில் புத்தகம் ஒன்றை வெளியிட்டார்.
இதையடுத்து, இந்த புத்தகம் பிரதமர் மோடியின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. எனவே, இந்த புத்தக விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என குஜராத் மாநில உயர் நீதிமன்றத்தில், சமூக ஆர்வலர் நரசின்ஹ் சோலாங்கி என்பவர் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.எம்.தவே, ''ஜனநாயக நாடான இந்தியாவில் தங்களது கருத்துகளை புத்தகத்தின் மூலம் தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. மனுதாரர் கேட்பது போல், அந்த புத்தக விற்பனைக்கு தடை விதித்தால், இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கருத்து சுதந்திர உரிமையை மீறுவதாக அமைந்து விடும்'' எனக்கூறி, அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பல்வேறு வாக்குறுதிகளையும் அளித்தார்.
அந்த தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தது. நரேந்திர மோடியும் பிரதமராக பதவியேற்றார். பா.ஜ.க ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் ஆகியும் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக்கூறி, பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் வகையில், 'ஃபெக்குஜி ஹவே டில்லி மா' (பொய் வாக்குறுதி அளித்தவர் டெல்லியில் உள்ளார்) என்ற பெயரில் காங்கிரஸ் பிரமுகர் ஜெயேஷ் ஷா என்பவர் குஜராத்தி மொழியில் புத்தகம் ஒன்றை வெளியிட்டார்.
இதையடுத்து, இந்த புத்தகம் பிரதமர் மோடியின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. எனவே, இந்த புத்தக விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என குஜராத் மாநில உயர் நீதிமன்றத்தில், சமூக ஆர்வலர் நரசின்ஹ் சோலாங்கி என்பவர் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.எம்.தவே, ''ஜனநாயக நாடான இந்தியாவில் தங்களது கருத்துகளை புத்தகத்தின் மூலம் தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. மனுதாரர் கேட்பது போல், அந்த புத்தக விற்பனைக்கு தடை விதித்தால், இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கருத்து சுதந்திர உரிமையை மீறுவதாக அமைந்து விடும்'' எனக்கூறி, அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.

No comments:
Post a Comment