
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் ஹிலாரி லூசியாணா உள்ளிட்ட மாகாணங்களில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றுள்ளார். இந்நிலையில் அவர் அமெரிக்க மக்களை கவரும் விதமாக இந்திய அரசியல்வாதிகளைப் போலவே இலவசம் எனும் விஷயத்தை கையில் எடுத்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் ''இரண்டே வார்த்தைகள்'' என பதிவிட்டு இலவச வைஃபை என்று கூறியுள்ளார்,
விமான நிலையங்கள், பொது இடங்கள், ரயில்வே நிலையங்களில் இலவச வைஃபை வசதியை மக்கள் பெற முடியும் என கூறியுள்ளார். ஹிலாரி க்ளின்டன். அதுமட்டுமின்றி 2020ம் ஆண்டுக்குள் அமெரிக்காவின் அனைத்து வீடுகளுக்கு பிராட்பேண்ட் இன்டெர்நெட் வசதி சென்றடையும் என்றும் கூறியுள்ளார்.
விமான நிலையங்கள், பொது இடங்கள், ரயில்வே நிலையங்களில் இலவச வைஃபை வசதியை மக்கள் பெற முடியும் என கூறியுள்ளார். ஹிலாரி க்ளின்டன். அதுமட்டுமின்றி 2020ம் ஆண்டுக்குள் அமெரிக்காவின் அனைத்து வீடுகளுக்கு பிராட்பேண்ட் இன்டெர்நெட் வசதி சென்றடையும் என்றும் கூறியுள்ளார்.
ஹிலாரி க்ளின்டன் இளைஞர்களை கவரும் விதமான அறிவிப்புகளையும், மிகுந்த தொழில்நுட்பம் தொடர்பான அறிவிப்புகளை மக்கள் மத்தியில் வலியுறுத்தி வருகிறார். அமெரிக்காவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்கவும், அதன் மேம்பாட்டுக்காகவும் புதுமையான விஷயங்களை வடிவமைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அரசின் சேவைகளை மக்கள் பயன்படுத்துவதில் டிஜிட்டலின் முக்கியத்துவத்தையும் அது எந்த அளவுக்கு மக்களுக்கு எளிமையாக உதவும் வகையில் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.



No comments:
Post a Comment