ரயில் விபத்துக்களை தவிர்க்க ஆளில்லா லெவல் கிராசிங்குகள் செயற்கைக்கோள் மூலம் கண்காணிக்கும் திட்டத்தின் பணிகள் நடைபெற்று வருவதாக இஸ்ரோ விஞ்ஞானியும், விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இணை இயக்குநருமான எஸ்.பாண்டியன் தெரிவித்தார்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கருக்காடிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர் கழகம் சார்பில் நேற்று கல்வித் திருவிழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற இஸ்ரோ விஞ்ஞானியும், விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இணை இயக்குநருமான எஸ்.பாண்டியன், 10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ' அண்மையில் 20 செயற்கைக்கோள்களை ஒரே ராக்கெட்டில் ஏவி, இந்தியா சாதனை படைத்திருக்கிறது. இதில், 13 செயற்கைக்கோள்கள் அமெரிக்காவுக்குச் சொந்தமானவை. 2014-ல் செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யான் அனுப்பப் பட்டது. 2018-ல் அனுப்பப்படும் சந்திரயான்- 2, நிலவில் இறங்கி, மாதிரிகளை எடுத்து அனுப்பும். அதேபோல, 2020-ல் வெள்ளி (வீனஸ்) கிரகத்துக்கு செயற்கைக் கோள் அனுப்பப்பட உள்ளது.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கருக்காடிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர் கழகம் சார்பில் நேற்று கல்வித் திருவிழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற இஸ்ரோ விஞ்ஞானியும், விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இணை இயக்குநருமான எஸ்.பாண்டியன், 10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ' அண்மையில் 20 செயற்கைக்கோள்களை ஒரே ராக்கெட்டில் ஏவி, இந்தியா சாதனை படைத்திருக்கிறது. இதில், 13 செயற்கைக்கோள்கள் அமெரிக்காவுக்குச் சொந்தமானவை. 2014-ல் செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யான் அனுப்பப் பட்டது. 2018-ல் அனுப்பப்படும் சந்திரயான்- 2, நிலவில் இறங்கி, மாதிரிகளை எடுத்து அனுப்பும். அதேபோல, 2020-ல் வெள்ளி (வீனஸ்) கிரகத்துக்கு செயற்கைக் கோள் அனுப்பப்பட உள்ளது.

மற்ற நாடுகள் பொறாமைப்படும் அளவு இந்தியாவின் வளர்ச்சி உள்ளது. இந்தியா சொந்தமாக ஐஆர்என்எஸ்எஸ் எனப்படும் நாவிகேஷன் சேவையை உருவாக்கி உள்ளது. இதற்காக, 7 செயற்கைக்கோள்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இன்னும் 2 ஆண்டுகளில் இது அமெரிக்காவின் ஜிபிஎஸ் சேவையை விஞ்சிவிடும். சார்க் நாடுகளுக்காகவே ஒரு செயற்கைக் கோளை உருவாக்க பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.
ஆளில்லா லெவல் கிராசிங்குகளை செயற்கைக்கோள் மூலமாக கண்காணிக்கும் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் விபத்துகள் தவிர்க்கப்படும்.
இந்தியாவிடம் 35-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் உள்ளன. இதன் மூலம், கனிமவளம், வானிலை, பருவ மழை, தொலைத்தொடர்பு, தொலைக்கல்வி, தொலை மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகள் மக்களுக்கு கிடைத்து வருகின்றன' என்றார்.

No comments:
Post a Comment