Monetize Your Website or Blog

Thursday, 30 June 2016

' வைகோவின் ராஜதந்திரம் எங்களுக்குப் பொருந்தாது!' -கொதிகொதிக்கும் திருமாவளவன்

க்கள் நலக் கூட்டணியின் தலைவர்களிடையே ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவின் கருத்து, சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ' தி.மு.க ஆட்சியில் அமர முடியாமல் போனதற்கு நானே காரணம் என்று வைகோ சொல்வது எங்களுக்குப் பொருந்தாது' என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். 

திருச்சியில் நடைபெற்ற ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய வைகோ, ''என்னை ராஜதந்திரம் இல்லாதவர் என கருணாநிதி நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால், எனது ராஜ தந்திரத்தால்தான், ஆட்சி அமைக்க வேண்டிய வாய்ப்புகள் இருந்தும்கூட தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியாமல் போனது என்பதை  மறுக்க முடியாது. இந்த நிமிடம் வரை நமது இயக்கத்தை அழிக்க நினைத்து நிர்வாகிகளை இழுத்து வருகின்றனர். நம்மை அழிக்க நினைத்தார்கள், அவர்கள் அழிந்து போய்விட்டார்கள். எனக்காக நீங்கள் இருக்கிறீர்கள். உங்களுக்காக நான் இருக்கிறேன். இதுதான் நமது இயக்கத்தின் பிணைப்பு.


நான் எப்போதும் கட்சிக்கு உண்மையாக இருப்பவர்களைக் கைவிடமாட்டேன். வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக நாம் பாடுபடுவோம். வெற்றி கிடைக்காவிட்டாலும் காத்திருப்போம்" என பேசியிருந்தார். அதிலும், தி.மு.கவை ஆட்சிக்கு வரவிடாமல் என்னுடைய ராஜதந்திரத்தால் தடுத்தேன் என வைகோ கூறிய கருத்துக்கள், மக்கள் நலக் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்திவிட்டன. 

இதுகுறித்து நம்மிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், "சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளுக்கு மாற்றாகத்தான் மக்கள் நலக் கூட்டணியை பிரகடனப்படுத்தினோம். தி.மு.க, அ.தி.மு.கவுக்கு மாற்று என்ற கொள்கையை முன்வைத்து அரசியல் கூட்டணியாக நாங்கள் தேர்தலைச் சந்தித்தோம். ஆறு கட்சிகள் எங்களோடு இணைந்தன. இதில், ' தி.மு.கவை அழிக்க என்னுடைய ராஜதந்திரத்தைப் பயன்படுத்தினேன்' என அவர் சொன்னது உண்மையாக இருந்தால், அது எந்த வகையிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குப் பொருந்தாது.


சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவுக்கு எதிரான செயல்திட்டத்தை மட்டும் நாங்கள் முன்வைக்கவில்லை. மக்கள் நலக் கூட்டணி உருவானதில் எந்த உள்நோக்கமும் கிடையாது. அதைத்தான் தேர்தல் பிரசாரங்களில் பிரகடனம் செய்தோம். இதுகுறித்து, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவிடம் இன்னும் நாங்கள் பேசவில்லை. அவரிடம் இதுபற்றிப் பேசுவோம்" என்றார் அமைதியாக. 

திராவிடக் கட்சிகளுக்கு மாற்றான கருத்து விதையை, மக்கள் நலக் கூட்டணி மூலம் விதைத்தது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதான். கூட்டணிக் கட்சித் தலைவர்களைக் கலந்து ஆலோசிக்காமல், வைகோ பேசிய பேச்சால் அதிர்ந்து போய் இருக்கிறார்கள் மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள்.  




No comments:

Post a Comment