Monetize Your Website or Blog

Monday, 27 June 2016

சித்தராமையா கன்னத்தில் முத்தம் கொடுத்த பெண்! -பெங்களூருவில் பரபரப்பு (வீடியோ)

பெங்களூருவில் நேற்று நடந்த விழா ஒன்றில், முதல்வர் சித்தராமையா கன்னத்தில் ஒரு பெண் திடீரென முத்தம் கொடுத்தார். இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில், கர்நாடக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது. 14 அமைச்சர்கள் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக புதிதாக 13 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சர் பதவியை இழந்த சீனிவாச பிரசாத், அம்பரீஷ் உள்பட அதிருப்தியாளர்கள் சித்தராமையாவுக்கு எதிராக பகிரங்கமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையாவை நீக்கியே தீர வேண்டும் என அதிருப்தியாளர்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளது சித்தராமையாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.



இந்த அரசியல் பரபரப்புக்கு இடையே, கர்நாடக குருபர சங்கம் சார்பில், அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ–மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியும், மாவட்ட, தாலுக்கா பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களுக்கு பாராட்டு விழாவும் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் உள்ள அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் முதல்வர் சித்தராமையா கலந்து கொண்டு குருபர சமுதாயத்தை சேர்ந்த மாணவ–மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கியும், மாவட்ட, தாலுக்கா பஞ்சாயத்துகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குருபர சமுதாயத்தை சேர்ந்த கவுன்சிலர்களை பாராட்டியும் பேசினார்.
விருதுகள் வழங்கும்போது மேடையில் இருந்த ஒரு பெண், நின்று கொண்டிருந்த சித்தராமையாவின் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். புகைப்படம் எடுத்து முடித்தவுடன் அந்த பெண், யாரும் எதிர்பாராதவிதமாக திடீரென சித்தராமையாவை கட்டி அணைத்து கன்னத்தில் ‘‘இச்’’ என்று ஒரு முத்தம் கொடுத்தார். அந்த முத்தத்தை நிராகரிக்காமல் சித்தராமையா புன்முறுவலுடன் ஏற்றுக்கொள்ள, முத்தம் கொடுத்த பெண் மகிழ்ச்சியில் மேடையில் இருந்து கீழே இறங்கிச் சென்றார்.

இந்த சம்பவத்தை மேடையில் இருந்தவர்கள் கவனித்து அதிர்ச்சி அடைந்தனர். அத்துடன், முதலமைச்சருக்கு பெண் ஒருவர் பொதுமேடையில் முத்தம் கொடுத்த விவகாரம் கன்னட தொலைக்காட்சிகளில் திரும்ப திரும்ப ஒளிபரப்பாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் சித்தராமையா, ''எனக்கு முத்தம் கொடுத்த பெண் என் மகளுக்கு சமமானவர். இதற்கு வேறு அர்த்தம் கற்பிக்க வேண்டாம்" என்றார்.

இதனிடையே த்தராமையாவுக்கு முத்தம் கொடுத்தவர், சிக்மங்களூரு மாவட்டம் தரிகெரே தாலுகா பஞ்சாயத்து உறுப்பினர் கிரிஜா சீனிவாஸ் என பின்னர் தெரியவந்தது. முதல்வருக்கு முத்தம் தந்தது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''நான் மைசூர் மாவட்டம் வருணா தொகுதியை (சித்தராமையாவின் தொகுதி) சேர்ந்தவள். முதல்வர் சித்தராமையாவை நேரில் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு நீண்ட நாளாக இருந்தது.

இன்று (நேற்று) அவரை நேரில் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சித்தராமையாவின் அருகில் இருந்த நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். இந்த மகிழ்ச்சியில் சித்தராமையாவின் கன்னத்தில் முத்தமிட்டேன். நானும் எனது குடும்பத்தினரும், சித்தராமையாவை அப்பா என்றுதான் அழைப்போம். நான் முன்கூட்டியே திட்டமிட்டு முத்தம் கொடுக்கவில்லை" என்றார்.

பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் சித்தராமையாவை தாலுகா பஞ்சாயத்து பெண் உறுப்பினர் கட்டி அணைத்து பகிரங்கமாக முத்தம் கொடுத்த சம்பவம் சர்ச்சையுடன் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.




No comments:

Post a Comment