கச்சத்தீவு குறித்து பேச தி.மு.க.,வுக்கு அருகதை கிடையாது என முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தில் குற்றம்சாட்டினார்.
தமிழக சட்டமன்றத்தில் இன்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
தமிழக சட்டமன்றத்தில் இன்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இதில், தி.மு.க. உறுப்பினர் பொன்முடிக்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் ஜெயலலிதா, " தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதுதான் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது. கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டபோது கருணாநிதி என்ன செய்து கொண்டிருந்தார்.

கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்க கருணாநிதி ஏன் அனுமதித்தார். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கச்சத்தீவை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் படும் துயரத்திற்கு தி.முக. தான் காரணம். எதிர்க்கட்சிகள் எவ்வளவு கூச்சல் போட்டாலும் கச்சத்தீவை தாரை வார்த்தது திமு.க. தான்.
கச்சத்தீவு குறித்த பேச தி.மு.க.வுக்கு அருகதை கிடையாது. கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற எண்ணம் தி.மு.க.வுக்கு இல்லை. உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கில், தி.மு.க. தன்னை இணைத்துக் கொள்ளாதது ஏன்? அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு கச்சத்தீவு தொடர்பான வழக்கில் அரசு இணைத்துக் கொள்ளப்பட்டது" என்றார் ஆவேசமாக.
இதற்கு பதிலளித்த தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், ''கச்சத்தீவை மீட்க வேண்டும் என கடந்த 1974 ம் ஆண்டு, அப்போதய பிரதமர் இந்திரா காந்திக்கு முதல்வராக இருந்த கருணாநிதி கடிதம் எழுதினார். அமைச்சரவையை கூட்டியும் கோரிக்கை விடுத்தோம். கச்சத்தீவு பிரச்னையில் மத்திய அரசின் முடிவை மாற்ற சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது" என்றார்.

No comments:
Post a Comment