Monetize Your Website or Blog

Saturday, 23 July 2016

இரட்டை சதமடித்து 84 வருட சாதனையை நிகழ்த்தினார் கோலி, அஸ்வின் சதம்!


மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்திய அணி நேற்றைய ஸ்கோரான 302/4 என்ற ஸ்கோருடன் இரண்டாவது நாள் ஆட்டத்தை துவங்கியது. இந்திய கேப்டன் விராட் கோலியும், அஸ்வினும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அபாரமாக் ஆடிய கோலி 283 பந்துகளில் இரட்டை சதமடித்தார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அவரது முதல் இரட்டை சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

சரியாக 200 ரன்களில் கோலி வெளியேற, அஸ்வின் விச்வரூபம் எடுத்தார். தனது 3வது சதத்தை பூர்த்தி செய்தார் அஸ்வின். அமித் மிஸ்ரா அரைசதம் அடித்து ஆட்டமிழந்ததும் இந்திய அணி டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 566 ரன்கள் குவித்தது.


பின்னர் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 16 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 31 ரன்களை குவித்தது. ஆடுகளம் சுழற்பந்துக்கு சாதகமாக இருப்பதால் அஸ்வின், மிஸ்ரா பந்து வீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணி தடுமாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாம் நாள் புள்ளி விவரங்கள்:

84 வருட இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய கேப்டன் ஒருவர் இந்தியாவுக்கு வெளியே இரட்டை சதமடிப்பது இதுவே முதல் முறை.

கோலியின் முதல் இரட்டை சதம் இது தான். இன்னும் அவர் முதல் தர போட்டிகளில் கூட இரட்டை சதமடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மேற்கிந்திய தீவுககளில் தான் ஆடும் முதல் போட்டியிலேயே சதமடித்த 4வது வீரர் அஸ்வின்.

இந்திய அணி 2008ம் ஆண்டுக்கு பிற‌கு 2வது விக்கெட் முதல் 7வது விக்கெட் வரை தொடர்ந்து ஆறு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்தியுள்ளது.


No comments:

Post a Comment