நெருக்கமான குடியிருப்புப் பகுதிகளையும் விட்டுவைக்காமல் நாட்டின் எல்லா பகுதிகளிலும் செல்போன் கோபுரங்கள் வைத்துள்ள விவகாரம் தொடர்பாக,தொலைத்தொடர்பு மற்றும் சுகாதார அமைச்சகங்களுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
செல்போன் டவர்களில் இருந்து வெளியாகும் சக்தி மிகுந்த கதிர்வீச்சுகள் உடல்நலனைப் பாதிக்கிறது என்று ஆய்வுகள் சொல்லும் நிலையில்,விளக்கம் கேட்டு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது செல்போன் நிறுவனங்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு காரணம் செல்போன் கோபுரங்களும், அதிலிருந்து வரும் கதிர் வீச்சுக்களும்தான் என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,
"தற்போது செல்போன் தொழில்நுட்பம் எல்லா இடத்திலும் பரவியுள்ளது. அதனால் இன்றைய தலைமுறையினர் செல்பேசி கோபுரங்கள், டிஜிடல் கேபிள்கள், செல்பேசிகள் ஆகியவற்றின் மத்தியில் வாழ்கின்றனர். இந்த நிலைமையில், புகார் உண்மையாக இருந்தால் மனிதர்களின் வாழ்வுக்கான உரிமைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள என்று பொருள். செல்போன் கோபுரங்கள் வெளியிடும் கதிர்வீச்சு மனிதர்களை, குறிப்பாக நோயாளிகள், குழந்தைகள், முதியோர், தாயின் வயிற்றில் உள்ள கரு என்று எல்லோரின் உடல்நலனுக்கு ஆபத்தை விளைவிக்கும்.
இந்நிலையில், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் ஆகியவற்றிற்கு 500 மீட்டர் சுற்றளவில் செல்பேசி கோபுரங்கள் அமைக்கப்படவில்லை என்று உள்ளாட்சி அமைப்புகள் உறுதிசெய்ய வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் 21 அன்று அரசு ஆணை வெளியிடப்பட்டது. ஆனால் இது மனிதர்கள் வாழும் வீடுகளை குறிப்பிடவில்லை என்பதால் சரியான ஒன்றாக இல்லை. எனவே, இதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு செல்பேசி நிறுவனங்கள் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள குடியிருப்புப் பகுதிகளிலும் செல்போன் கோபுரங்களை அமைத்து வருகின்றன என்று புகார் அளித்துள்ளவர் தெரிவிக்கிறார்.
மேலும், தற்போது 3ஜி, 4ஜி என்று தொழில்நுட்பங்கள் பெருகிவிட்டதால் கதிர்வீச்சும் அதிகரிக்கும். கடந்த வருடம் மே 31 வரை, ரூபாய் 10.80 கோடி அபராதம் செல்போன் நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அந்நிறுவனங்கள் கதீர்வீச்சுக்களுக்கான பாதுகாப்பு பகுதியை அவ்வப்போது மீறி இருப்பது நிரூபணம் ஆகிறது. இத்துடன் மின் தடையில் செயல்பட முறையில்லாமல் அமைக்கப்பட்ட டீசல் ஜெனரேட்டர்களாலும் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.எனவே உரிய விளக்கம் அளிக்கவேண்டும்.'என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
செல்போன் டவர்களில் இருந்து வெளியாகும் சக்தி மிகுந்த கதிர்வீச்சுகள் உடல்நலனைப் பாதிக்கிறது என்று ஆய்வுகள் சொல்லும் நிலையில்,விளக்கம் கேட்டு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது செல்போன் நிறுவனங்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு காரணம் செல்போன் கோபுரங்களும், அதிலிருந்து வரும் கதிர் வீச்சுக்களும்தான் என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,
"தற்போது செல்போன் தொழில்நுட்பம் எல்லா இடத்திலும் பரவியுள்ளது. அதனால் இன்றைய தலைமுறையினர் செல்பேசி கோபுரங்கள், டிஜிடல் கேபிள்கள், செல்பேசிகள் ஆகியவற்றின் மத்தியில் வாழ்கின்றனர். இந்த நிலைமையில், புகார் உண்மையாக இருந்தால் மனிதர்களின் வாழ்வுக்கான உரிமைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள என்று பொருள். செல்போன் கோபுரங்கள் வெளியிடும் கதிர்வீச்சு மனிதர்களை, குறிப்பாக நோயாளிகள், குழந்தைகள், முதியோர், தாயின் வயிற்றில் உள்ள கரு என்று எல்லோரின் உடல்நலனுக்கு ஆபத்தை விளைவிக்கும்.
இந்நிலையில், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் ஆகியவற்றிற்கு 500 மீட்டர் சுற்றளவில் செல்பேசி கோபுரங்கள் அமைக்கப்படவில்லை என்று உள்ளாட்சி அமைப்புகள் உறுதிசெய்ய வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் 21 அன்று அரசு ஆணை வெளியிடப்பட்டது. ஆனால் இது மனிதர்கள் வாழும் வீடுகளை குறிப்பிடவில்லை என்பதால் சரியான ஒன்றாக இல்லை. எனவே, இதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு செல்பேசி நிறுவனங்கள் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள குடியிருப்புப் பகுதிகளிலும் செல்போன் கோபுரங்களை அமைத்து வருகின்றன என்று புகார் அளித்துள்ளவர் தெரிவிக்கிறார்.
மேலும், தற்போது 3ஜி, 4ஜி என்று தொழில்நுட்பங்கள் பெருகிவிட்டதால் கதிர்வீச்சும் அதிகரிக்கும். கடந்த வருடம் மே 31 வரை, ரூபாய் 10.80 கோடி அபராதம் செல்போன் நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அந்நிறுவனங்கள் கதீர்வீச்சுக்களுக்கான பாதுகாப்பு பகுதியை அவ்வப்போது மீறி இருப்பது நிரூபணம் ஆகிறது. இத்துடன் மின் தடையில் செயல்பட முறையில்லாமல் அமைக்கப்பட்ட டீசல் ஜெனரேட்டர்களாலும் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.எனவே உரிய விளக்கம் அளிக்கவேண்டும்.'என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment